search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jack Dorsey"

    கடந்த சில மாதங்களுக்கு முன் டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதாக முன்வந்தார்.
    கலிபோர்னியா:

    கடந்த 2006-ஆம் ஆண்டு ஜாக் டோர்ஸி டுவிட்டர் நிறுவனத்தை உருவாக்கியதில் இருந்து அதன் சி.இ.ஓ-ஆக செயல்பட்டு வந்தார். 

    இநிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் தனது சி.இ.ஓ பொறுப்பை துறந்தார். அதன்பின் இந்தியரான பராக் அகர்வால் டுவிட்டரின் புதிய சி.இ.ஓ.வாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் முன்வந்தார். 

    ஆனால் எலான் மஸ்கிற்கும், டுவிட்டர் சி.இ.ஓ பராக் அகர்வாலுக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வந்தது. பராக் அகர்வால் டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்து உண்மையை மறைத்து வருவதாக குற்றம்சாட்டிய எலான் மஸ்க், டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். 

    இந்நிலையில் பராக் அகர்வாலுக்கு பதில், ஜாக் டோர்ஸி மீண்டும் சி.இ.ஓ பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியது. 

    இந்த நிலையில் டுவிட்டர் இயக்குனர் குழுவில் இருந்து விலகுவதாக ஜாக் டோர்ஸி தெரிவித்துள்ளார். இனி மீண்டும் சிஇஓ பொறுப்புக்கு மீண்டும் வரமாட்டேன் என்பதையும் டோர்ஸி தெளிவு படுத்தியுள்ளார். 
    பின்தொடர்வோர் எண்ணிக்கை குறைந்ததால் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சேவை, வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து டிரம்ப் சந்தித்து பேசினார். #DonaldTrump #JackDorsey #Twitter
    வாஷிங்டன்:

    உலக அளவில் டுவிட்டரில் அதிக பின்தொடர்பவர்களை (பாலோயர்) வைத்திருக்கும் தலைவர்களில் முக்கியமானவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். ஆனால் சமீபகாலமாக டுவிட்டரில் தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாகவும், டுவிட்டர் நிறுவனம் தனக்கு எதிராக செயல்படுவதே இதற்கு காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டி வந்தார்.



    மேலும், டுவிட்டர் நிறுவனம் பழமைவாதிகளுக்கு எதிரான போக்கை கையாண்டு வருவதாகவும், தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து ஏராளமானவர்களை நீக்கியதோடு, தனது ஆதரவாளர்கள் டுவிட்டரில் இணைவதற்கான வழிமுறைகளை கடினமாக்கிவிட்டதாகவும் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் டிரம்பின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் டுவிட்டர் நிறுவனம் மறுத்து வந்தது.

    இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சேவை, வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து டிரம்ப் சந்தித்து பேசினார். அப்போது டிரம்ப், டுவிட்டரில் தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் டுவிட்டரின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.   #DonaldTrump #JackDorsey #Twitter 
    சமீபத்தில் இந்தியா வந்த ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜேக் டார்சி ஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக் கானை சந்தித்த நிலையில், இந்தியாவின் ட்விட்டர் ஆலோசகராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. #ARRahman #JackDorsey
    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்டரில் தொடர்ந்து இயங்குபவர். ட்விட்டரில் அவரை 2 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இதனால் ட்விட்டர் நிறுவனத்தின் முக்கியமான நபராக ஏ.ஆர்.ரஹ்மான் இருக்கிறார்.

    இந்த நிலையில் இந்தியா வந்துள்ள ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேக் டார்சி, ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்து பேசினார். இந்தியாவில் ட்விட்டர் எந்த அளவிற்கு பொதுமக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், மாணவர்களுக்கும், கலைஞர்களுக்கும் பயன்படுகிறது.

    அதில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து இங்குள்ள முக்கிய பிரபலங்களிடம் கருத்து கேட்கவே வந்திருக்கிறார் ஜேக். கலைத்துறையில் அவர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஷாருக் கானை சந்தித்து பேசியுள்ளார். ரஹ்மானுடனான அவரது சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்துள்ளது.

    ட்விட்டர் நிறுவனம் ஒவ்வொரு நாட்டிலும் தங்களின் ஆலோசகர்களை நியமிக்க இருப்பதாகவும், இந்தியாவில் கலைத்துறையின் சார்பில் ஆலோசகராக பணியாற்ற ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஷாருக் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜேக் டார்சி, தன்னை சந்தித்த புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் “ஜேக் டார்சிவுடனான சந்திப்பு ஊக்கம் அளிப்பதாக உள்ளது” என்று குறிப்பிட்டிருக்கிறார். #ARRahman #JackDorsey

    ×