search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "involved"

    • மதுரை அருகே 4 பேர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர்.
    • திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    மதுரை

    திருப்பரங்குன்றம், தேவி நகரை சேர்ந்தவர் கண்ணன் (43). இவர் லாரி செட் நடத்தி வருகிறார். இவரது சகோதரர் மணிவண்ணன். இவர் பாலாஜி நகரில் வசிக்கும் திருமணமான பெண்ணுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி தொந்தரவு கொடுத்தாராம்.

    இந்த நிலையில் பாலாஜி நகர், காமராஜர் தெரு, ஜெயச்சந்திரன் என்ற கோட்டை காளை (58), அவரது மகன் மாயபாண்டியன் (28), தேவி நகர் இளையசாமி (43) மற்றும் கார்த்திக், விக்கி, அலெக்ஸ் உள்பட 6 பேர் லாரி செட்டுக்கு வந்து கண்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார் கண்ணாடி உடைத்து நொறுக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் பசுமலை, முனியாண்டிபுரம் மணிவண்ணன் வீட்டுக்கும் சென்று அங்கிருந்த மனைவி ஜெயலட்சுமியை (25) தாக்கினர். இதுகுறித்து திருநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெயச்சந்திரன், இளையசாமி, மாய பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர்.

    இதே வழக்கில் ஜெயசந்திரன் மகள் ரதி லட்சுமி (32) கொடுத்த புகாரின்பேரில், மணிவண்ணனை போலீசார் கைது செய்தனர்.

    • வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கத்தியை காட்டி மிரட்டி, ரூ.210-ஐ பறித்து சென்றார்.

    மதுரை

    மதுரை சோலை அழகுபுரம், திருப்பதி நகரச் சேர்ந்தவர் செண்பகமூர்த்தி (வயது 39). இவர் நேற்று கருப்பாயூரணி, பாரதிபுரம் தெருவில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர், கத்தி முனையில் ரூ.10 ஆயிரத்தை பறித்து சென்றனர்.

    இது தொடர்பாக செண்பகமூர்த்தி, மாட்டுத்தாவணி போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பாயூரணி சீமான் நகர், நூல் பட்டறை தெரு ஜான் பிரிட்டோ, கே.புதூர் சங்கர் நகர் சதாம் உசேன் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மதுரை அழகப்பன் நகர், காந்திஜி தெருவை சேர்ந்தவர் முருகன் (51). இவர் நேற்று ஜெய்ஹிந்த்புரம் எல்.எல். ரோடு சந்திப்பு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த சதீஷ்குமார் என்ற பிரதர்ஸ் சதீஷ், கத்தியை காட்டி மிரட்டி, ரூ.210-ஐ பறித்து சென்றார். இது தொடர்பாக முருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஜெய்ஹிந்த்புறம் போலீசார், சதீஷ்குமாரை கைது செய்தனர்.

    கஞ்சா போதையில் பெண்ணிடம் பணப்பையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் மாஞ்சாலை ரோடு பகுதியை சேர்ந்தவர் அருள்பிரகாசம். இவரது மனைவி கலைவாணி (வயது 40).

    இவர் புதுவை புஸ்சி வீதியில் உள்ள தனியார் ரெஸ்டாரெண்ட் ஓட்டலில் துப்புரவு ஊழியராக பணி செய்து வருகிறார். இவர் தினமும் சைக்கிளில் வேலைக்கு சென்று திரும்புவது வழக்கம்.

    அதுபோல் கடந்த 7-ந் தேதி மாலை வேலை முடிந்து சம்பள பணம் ரூ.10 ஆயிரத்தை வாங்கி லெதர் பேக்கில் வைத்து அதனை சைக்கிளின் முன் பக்க கூடையில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    நைனார் மண்டபத்தில் வந்த போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென கலைவாணியை வழிமறித்து சைக்கிள் கூடையில் இருந்த பணப்பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார்.

    அந்த பையில் ரொக்க பணம் ரூ.10 ஆயிரத்துடன் தனது செல்போன், ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவற்றையும் கலைவாணி வைத்திருந்தார்.

    இதுகுறித்து கலைவாணி முதலியார் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பணப்பையை பறித்து சென்ற இடத்தில் பொறுத்தி இருந்த சி.சி.டி. கேமராவை ஆய்வு செய்த போது பணப்பையை பறித்தவரின் மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை கண்டுபிடித்தனர்.

    இதன் மூலம் விசாரணை நடத்தியதில் அந்த மோட்டார் சைக்கிள் புதுவை சண்முகாபுரத்தை அடுத்த சொக்கநாதன் பேட்டையை சேர்ந்த ஈஸ்வரன் என்ற மவுலி (20) என்பவருக்கு சொந்தமானது தெரியவந்தது.

    இதையடுத்து மவுலியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பணப்பையை பறித்து சென்றதை ஒப்புக் கொண்டார். கஞ்சா போதையில் பணப் பையை பறித்து சென்றதாக போலீசாரிடம் மவுலி தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து மவுலியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கலைவாணிக்கு சொந்தமான ரூ.10 ஆயிரத்துடன் கூடிய லெதர் பேக், செல்போன், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #HighCourt #TamilnaduGovernment #CooperativeUnionElection
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.  இந்த தேர்தல் நடைமுறையில் முறைகேடுகள் நடப்பதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டது.

    சென்னை புதுப்பேட்டை கூட்டுறவு சங்கம், சென்னை மாநகர போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாக சென்னை ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

    அதில், தேர்தலின்போது, போலி வாக்காளர் அட்டைகளை தயாரித்து, பலர் கள்ள ஓட்டு போட்டதாகவும், கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் இல்லாதவர்களை கொண்டு தேர்தல் நடத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் நேற்று காலையில் விசாரித்தார்.

    பின்னர், ‘கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் தொடர்பாக ஏராளமான வழக்குகள் தினமும் தொடரப்படுகின்றன. ஏராளமாக முறைகேடுகள் நடப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றன. எனவே, இந்த வழக்குகளின் விசாரணையை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைக்கிறேன். அப்போது கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்தும் மாநில தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

    இதன்படி, பிற்பகலில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்தபோது, ஆணையர் ராஜேந்திரன் ஆஜராகவில்லை. அவருக்கு பதில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் கூடுதல் செயலாளர் வாசுகி ஆஜரானார்.

    அப்போது கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையத்தின் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ‘கூட்டுறவு தேர்தலில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. சட்டத்துக்கு உட்பட்டுத்தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. விதிகளை மீறி செயல்படவில்லை. விண்ணப்பங்கள் எல்லாம் தேர்தல் விதிகளின்படி பரிசீலிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்படுகிறது’ என்று வாதிட்டார்.

    மனுதாரர்கள் சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் வாதிட்டார்கள். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    அரசின் நலத்திட்டங்கள் எல்லாம் ஏழை, எளிய பொதுமக்களுக்கு கொண்டு செல்வதில் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏழை, எளிய மக்களுக்காக இந்த கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டன.

    ஆனால், அப்படிப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் எல்லாம் அழியும் நிலையில் உள்ளது. இது வேதனை அளிக்கிறது. அழியும் நிலையில் உள்ள இந்த சங்கங்களை மேம்படுத்தவேண்டும். அதற்காக அந்த கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும். சரியான முறையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் விதிகளை உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும்.

    ஆனால், கூட்டுறவு சங்க தேர்தலில் பல முறைகேடுகள் நடக்கிறது. சில தேர்தல் அதிகாரிகள் தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களுடன் கூட்டுச் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். விதிகளை மீறி, சட்டவிரோதமாக செயல்படுகின்றனர் என்று மனுதாரர்கள் தரப்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.

    எனவே, இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடும் தேர்தல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த தேர்தல் அதிகாரிகள் மீது தேர்தல் நன்னடத்தை விதிகளின் படியும், கிரிமினல் நடவடிக்கை, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் தன்னுடைய கடமையில் இருந்து தவறும்போது, அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விடும்.

    எனவே, கூட்டுறவு சங்க தேர்தலில் நடந்த முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்கள், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்தும் ஆணையத்திடம் புதிய புகாரை உடனே கொடுக்கவேண்டும். அந்த புகாரை பெற்றுக்கொண்ட பின்னர், தேர்தல் ஆணையம் வெளிப்படையான, நேர்மையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

    தேவைப்பட்டால், புகார் கொடுத்தவரை நேரில் அழைத்து விசாரிக்கலாம். இதன்பின்னர், அந்த புகார் மனு மீது 8 வாரத்துக்குள் இறுதி முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும்.

    முடிவு எடுக்கப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் தேர்தல் முடிவை வெளியிடலாம். இவ்வாறு எடுக்கப்படும் முடிவுகளாலும், தேர்தல் முடிவு வெளியிட்டதாலும், யாராவது பாதிக்கப்பட்டால், அவர்கள் தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டம், பிரிவு 90(1)ன் கீழ் தமிழக அரசிடம் புகார் மனு கொடுத்து முறையிடலாம்.

    இந்த புகார் மனுவை 6 வாரத்துக்குள் தமிழக அரசு பரிசீலித்து, தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி தன் உத்தரவில் கூறியுள்ளார்.  #CooperativeUnionElection #HighCourt #Tamilnews 
    ×