search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "invites"

    • மாணவர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிக்க பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவிய போட்டிகள்-அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
    • போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா–வது:- தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் திருச்சி மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே, சிலம்பம் போன்ற கலைப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட அளவில் 5-8, 9-12, 13-16 வயதிற்குட்பட்ட மாணவர்க–ளுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும், கலை விழிப்புணர்வுவை ஏற்ப–டுத்திடவும், பரதநாட்டியம், கிராமிய நடனம் (நாட்டுப்புறக்கலை) குரலிசை, ஓவியம் ஆகிய கலைகளில் கலைப் போட்டிகள் நடத்திடவும், இக்கலைப் போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்களும் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்க–ளுக்கான நடனங்கள் (கர் நாடக இசை பாடல்க–ளுக்கான திரைப்பட நடனங்கள் நீங்கலாக) மேற்கத்திய நட–னங்கள் மற்றும் குழு நட–னங்கள் அனுமதியில்லை. பக்க வாத்தியங்களையோ, ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ள–லாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும். அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனும–திக்கப்படும். தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமியக் கலை நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நட–னம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்க–ளுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்க–ளுக்கான திரைப்பட நடனங்கள் நீங்கலாக) மற்றும் குழு நட–னங்கள் அனுமதியில்லை. பக்க வாத்தியங்களையோ, ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ள–லாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்துக் கொள்ள வேண்டும். அதிகபட்சம் 5 நிமிடங் கள் நடனமாட அனுமதிக்கப்படும். குரலிசைப் போட்டியில் கர்நாடக இசை, தேசியப் பாடல்கள், சமூக விழிப்பு–ணர்ச்சிப் பாடல்கள், நாட் டுப்புறப் பாடல்கள் ஆகிய–வற்றில் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே பாடவேண்டும். பக்க வாத்தியக் கருவி–களை, பாடுபவர்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ள–லாம். மேற்கத்திய இசை, திரையிசைப் பாடல்கள், குழப்பாடல்கள் அனுமதியில்லை. அதிகபட்சம் 5 நிமிடங்கள் பாடலாம். ஓலி பெருக்கியைப் பயன்படுத்தக் கூடாது. ஓவியப் போட்டிக்கு 40x30 செ.மீ. அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த–வேண்டும். பென்சில், கிரையான், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர், பெயிண்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமை–யலாம். ஓவியத்தாள் வண்ணங்கள் தூரிகைகள் உள்பட தங்களுக்குத் தேவை–யானவற்றைப் போட்டியா–ளர்களே கொண்டு– வருதல் வேண்டும். குழு–வாக ஓவியங்கள் வரைய அனுமதியில்லை. ஒவ்வொரு வயது வகைக்கும் தனித்தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும்போது அறிவிக்கப்படும். இப்போட்டிகளில் வெற்றி பெரும் மாணவியர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்போட்டியில் கலந்து கொள்கின்றவர்கள் அரிய–லூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5-8, 9-12, 13-16 ஆகிய வயதுப் பிரிவுகளில் உள்ள–வர்கள் தங்களது வயதுச் சான்றிதழ் மற்றும் பள்ளிப்படிப்புச் சான்றி–தழ்களுடன், அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு 26.02.2023 (ஞாயிற் றுக்கிழமை) அன்று காலை 9.00 மணிக்கு வருகை தர–வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


    • எடப்பாடி பழனிசாமிக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது.
    • 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரளாக வந்து வரவேற்பு அளிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் திருப்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அவைத்தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், என்.எஸ்.என்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசியதாவது:- இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது. வருகிற 8-ந் தேதி திருப்பூர் மாவட்டம் காங்கயத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகிறார். அவருக்கு திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரளாக வந்து வரவேற்பு அளிக்க வேண்டும். பொதுச்செயலாளராக பொறுப்பேற்று முதன் முறையாக திருப்பூர் மாவட்டத்துக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அம்மா பேரவை மாநில துணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், துணை செயலாளர் பூலுவப்பட்டி பாலு, பகுதி செயலாளர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், பி.கே.எம்.முத்து, பாலசுப்பிரமணியம், காங்கயம் நகர செயலாளர் வெங்கு என்கிற மணிமாறன், சார்பு அணி செயலாளர்கள் கண்ணபிரான், சிட்டி பழனிசாமி, ஆண்டவர் பழனிசாமி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.
    • நெல்லையில் இருந்து தமிழ்மகன் உசேன், ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு சென்று வழிபட்டார்.

    நெல்லை:

    சென்னையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று காலை ரெயில் மூலம் நெல்லை வந்தார். அவருக்கு ரெயில் நிலையத்தில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சுதாபரமசிவம், அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், பகுதி செயலாளர்கள் சிந்துமுருகன், காந்திவெங்கடாசலம், திருத்து சின்னத்துைர, சக்திகுமார், நிர்வாகிகள் சீனிமுகமது சேட், அங்கப்பன், முத்துக்குட்டி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் தமிழ்மகன் உசேன், ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு சென்று வழிபட்டார்.

    அடுத்த ஆண்டு ஜனவரி 26-ந்தேதி நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந்தேதி நடைபெறும் குடியரசு தினவிழாவில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.

    அடுத்த ஆண்டு ஜனவரி 26-ந்தேதி நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

    டிரம்ப்புக்கு முன்பு அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா டெல்லி வந்து இந்தியாவின் குடியரசு தினவிழாவில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார். தற்போது டிரம்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் மூலம் அமெரிக்காவுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. பல சுற்றுக்களாக கடிதப்பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.

    இந்தியாவின் அழைப்பை ஏற்பது பற்றியோ, டிரம்ப் வருகை பற்றியோ இன்னும் அமெரிக்கா அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை. என்றாலும் டிரம்ப் இந்தியா வருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.


    டிரம்ப் அமெரிக்க அதிபரான பின்பு அவருடன் பிரதமர் மோடி நல்லுறவு வைத்திருந்தார். பல முறை அமெரிக்காவுக்கு சென்று டிரம்ப்பை சந்தித்து பேச்சு நடத்தி இருக்கிறார். வெளிநாடுகளில் பல்வேறு மாநாடுகளில் சந்தித்த போதும் இருவரும் நட்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    எனவே அதிபர் டிரம்ப் இந்தியா வருகைக்கான சாதகமான முடிவை எடுப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. #DonaldTrump  #RepublicDay
    ×