search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Internet"

    • 22,217 தேர்தல் பத்திரங்கள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு.
    • 187 பத்திரங்கள் பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு.

    எஸ்.பி.ஐ வழங்கிய தேர்தல் பத்திரத் தரவுகள், இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

    2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2024ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி வரையில் மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    337 பக்க ஆவணத்தில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் விபரங்களும், 426 பக்கங்களில் அதனை பணமாக மாற்றிய கட்சிகளின் விபரங்களும் அடங்கியுள்ளன.

    இதில், 22,030 தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 187 பத்திரங்கள் பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    • ஜியோ ஏர் ஃபைபர் சேவை முதற்கட்டமாக குறைந்த நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • தமிழகத்தின் 21 மாவட்டங்களில் தற்போது ஜியோ ஏர் ஃபைபர் சேவை வழங்கப்படுகிறது.

    ஜியோ நிறுவனத்தின் ஏர் ஃபைபர் சேவை கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. பிராட்பேண்ட்-போன்ற இணைய சேவையை ஜியோ 5ஜி கனெக்டிவிட்டி மூலம் வழங்குவதே ஜியோ ஏர் ஃபைபர் சேவை ஆகும். முதற்கட்டமாக குறைந்த நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்ட ஏர் ஃபைபர் சேவை தற்போது நாடு முழுக்க 115 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    அதன்படி ஜியோ ஏர் ஃபைபர் சேவை மேற்கு வங்காளம், தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, குஜராத் மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் கிடைக்கிறது. இந்த மாநிலங்களில் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் மட்டுமே இந்த சேவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆம்பூர், மதுரை, கரூர், நாமக்கல், நெய்வேலி, பொள்ளாச்சி, சேலம், கோயம்புத்தூர், ஓசூர், கும்பகோணம், திருச்சி, திருப்பூர், ஸ்ரீரங்கம் மற்றும் வேலூர் போன்ற பகுதிகளில் ஜியோ ஏர் ஃபைபர் சேவை வழங்கப்படுகிறது.

    விலையை பொருத்தவரை ஜியோ ஏர் ஃபபைர் சேவைக்கான கட்டணம் மாதம் ரூ. 599 என துவங்குகிறது. 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த சலுகையில் 30Mbps வரையிலான இணைய வேகம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, சோனிலிவ் உள்பட 11 ஒ.டி.டி. சேவைக்கான சந்தா, 550 டி.வி. சேனல்கள் வழங்கப்படுகின்றன.

    இதுதவிர ஜியோ ஏர் ஃபைபர் சேவை ரூ. 899, ரூ. 1199, ரூ. 1499, ரூ. 2499 மற்றும் ரூ. 3999 விலைகளில் வழங்கப்படுகின்றன. ரூ. 3999 சலுகை 30 நாட்களுக்கான வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் 1Gbps வேகம் கொண்ட இணைய சேவை, அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ் மற்றும் 13-க்கும் அதிக ஒ.டி.டி. சேவைக்கான சந்தா மற்றும் 550 டி.வி. சேனல்கள் வழங்கப்படுகின்றன.

    • அதிவேக இணைய சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்தார்.
    • அதிவேக இணைய சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு (டான்பி நெட்) நிறுவனம் பாரத்நெட் திட்டம் பகுதி 2 மூலம் இணையதள சேவை வழங் கும் திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த பணிகள் 2 மாதங்க ளில் முழுமையாக நிறைவ டையும். சிவகங்கை மாவட் டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 445 கிராம ஊராட்சிகளில் இந்த சேவை வழங்கப்பட உள்ளது. இதற்காக அமைக்கப்படும் கண்ணாடி இழை கேபிள், தரை வழி யாகவும், மின்கம்பங்கள் மூலமாகவும் இணைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.

    இத்திட்டத்திற்கான உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளில் உள்ள கிராம ஊராட்சி சேவை மையக் கட்டிடம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. அங்குள்ள அறை ஊராட்சி மன்ற தலைவரால் பராமரிக் கப்படுகிறது.

    அதேபோல் உப கரணங்களை பாது காக்கவும், தடையில்லா மின்வசதியை உறுதி செய்ய வும் ஊராட்சி செய லாளர்க ளுக்கு பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது. இந்த திட்டம் முழுமையாக செயல் படுத்தப்படும்போது ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்கள் அனைவரும் அவர்கள் வசிக்கும் இடத்தி லேயே அதிவேக இணைய சேவையை பெற முடியும்.

    ஒவ்வொரு ஊராட்சி யிலும் அமைக்கப்பட்டுள்ள மின்கலன், இன்வெர்ட்டர், ரூட்டர், கண்ணாடி இழை உள்ளிட்ட உபகரணங்கள் தமிழ்நாடு அரசின் உடை மையாகும். இவைகளை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபா்கள்மீது இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கேபிள் ஆபரேட்டர்களால் தொகை செலுத்தப்பட வேண்டும்.
    • சர்வீஸ் ஏரியா விபரங்களுடன் அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை பகுதியில் தாறுமாறாக அமைக்க ப்பட்டுள்ள கேபிள் வயர்கள் மற்றும் இன்ட ர்நெட் இணைப்பு நிறுவ னங்களை கட்டுப்படுத்தும் வகையில்நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதுகுறித்து உடுமலை நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    உடுமலை நகராட்சி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான தெருக்கள் மற்றும் இதர தெருக்களில் தமிழ்நாடு நகராட்சிகள் தொலைக்காட்சி வடங்கள் நிறுவுதல் வரையறை விதிகள் 2000 ல் திருத்தப்ப ட்ட விதிகளின் படி நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தளவாடகை ஒவ்வொரு வருடமும் கிலோமீட்டர் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கேபிள் ஆபரேட்டர்களால் தொகை செலுத்தப்பட வேண்டும்.மேலும் தனியார் தொலை த்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் தனியார் இன்டர்நெட் இணைப்பு வழங்குபவர்கள் நகராட்சி மற்றும் இதர சாலைகளில் எடுத்துச் செல்வதற்கான தள வாடகை ஆண்டொ ன்றுக்கு கிலோமீட்டர் கணக்குப்படி செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு செலுத்தப்படாத கேபிள் டிவி ஆபரேட்டர்கள், தனியார் தொலைத் தொ டர்பு நிறுவனங்கள் மற்றும் தனியார் இன்டர்நெட் இணைப்பு வழங்குபவர்கள் உடனடியாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்த வேண்டும்.மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றிருந்தால் அதற்கான கடிதத்தை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.இது சம்பந்தமான கலந்தா ய்வுக் கூட்டம் வருகிற 17 -ந் தேதி மாலை 4 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற உள்ளது.எனவே அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் மற்றும் இதர இன்டர்நெட் இணைப்பு வழங்கும் நிறுவனங்கள் தங்களுடைய சர்வீஸ் ஏரியா விபரங்க ளுடன் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.நகராட்சிக்கு கட்டணம் செலுத்த தவறும் பட்சத்தில் அனுமதி பெறாத கேபிள் வடங்கள், தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் கேபிள் வடங்கள் மற்றும் தனியார் இன்டர்நெட் கேபிள்கள் ஆகியவை முன் அறிவிப்பு ஏதும் இன்றி நகராட்சியால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    அனுமதிக்கு மாறாக போக்குவரத்துக்கும் மழைநீர் செல்ல இடையூறா கவும் மற்றும் மின்கம்ப ங்களில் உரசும் நிலையில் நிறுவப்பட்டுள்ள கம்பங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு பொள்ளாச்சி சாலை,தளி சாலை,சதாசிவம் சாலை, வடக்கு குட்டை தெரு மற்றும் நெல்லு கடை வீதி ஆகிய தெருக்களில் சாலையில் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள கம்பி வடங்களை தேர் பவனிக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அகற்றிக் கொள்ளுமாறு அறிவிக்க ப்படுகிறது என்று உடுமலை நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • அரசு கேபிள் இணைப்பு எண்ணிக்கையை உயர்த்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
    • 3 மடங்கு அதிக வேகத்துடன் பைபர் நெட் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    மத்திய, மாநில அரசு திட்டம் வாயிலாக அரசு கேபிள் டி.வி., நிறுவனம் சார்பில், பைபர் நெட் இணைப்பு வழங்கப்பட உள்ளது. கேபிள் வாயிலாக இணையதள சேவை வழங்கும் திட்டத்தில் ஒரு இணைப்பு பெற்ற சந்தாதாரர், டி.வி., தொலைபேசி மற்றும் இணையதளம் என 3 சேவைகளையும் பெறலாம். இணையதள சேவை வேண்டாம் எனில் டி.வி., ஒளிபரப்பு சேவையை மட்டும் பெற்றுக்கொள்ளலாம்.

    அரசு கேபிள் இணைப்பு எண்ணிக்கையை உயர்த்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. திருப்பூர் கேபிள் தாசில்தார் ரவீந்திரன், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தாலுகாக்களில் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து கலந்தாய்வு நடத்தினார்.

    இது குறித்து தாசில்தார் கூறியதாவது:- நடைமுறையில் உள்ளதை காட்டிலும் 3 மடங்கு அதிக வேகத்துடன் பைபர் நெட் இணைப்பு வழங்கப்பட உள்ளது.புதிய பைபர் நெட் சேவையை பெற அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் பயன்படுத்துபவராக இருக்க வேண்டும். பைபர் நெட் திட்டம் வந்த பிறகு அரசு கேபிள் இணைப்புகளை அதிகரிக்க சிரமம் ஏற்படும்.

    எனவே நெட் இணைப்பு சேவை வழங்க விரும்பும் கேபிள் ஆபரேட்டர்கள் முன்கூட்டியே அரசு செட்டாப் பாக்ஸ் பெற்று ஒளிபரப்பை துவக்க வேண்டும். பயன்படுத்தாமல் உள்ள செட்டாப் பாக்ஸ்களையும், முழு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.அரசு கேபிள் சேவை கிடைக்காத பகுதியில் புதிய நெட் சேவை தேவைப்பட்டால் புதிய ஆபரேட்டரை உருவாக்கி சேவையை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் குறைதீர்க்கும் முகாம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • பணியாளர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பணிபுரிய அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை நகர்ப்புறக் கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கே.டி.சி. நகரில் செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறி யாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துகுட்டி மற்றும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

    நிகழ்ச்சியில் நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியா ளர்களும் கலந்து கொண்டனர். மக்கள் குறைதீர்க்கும் முகாம் முடிந்தவுடன், அனைத்து பிரிவு அலுவலகத்திலும் பாதுகாப்பு வகுப்பு தொடர்ச்சியாக நடத்தி பணியாளர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பணிபுரிய அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.மின் நுகர்வோர்கள் மின் கட்டணத்தை இணைய வழி மூலமாக செலுத்தும் வசதி மற்றும் சேவைகள் குறித்து பொதுமக்களிடம் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டது. மேலும் பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மின்னகம் மின்நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது மின்சாரம் சம்பந்தமாக அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

    • 4 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது.
    • வழக்குகள் அனைத்தும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

    தாராபுரம் :

    தாராபுரம் சர்ச் வீதியில் நீதிமன்றம் அமைந்துள்ளது. இங்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், மாவட்ட கூடுதல் சார்பு நீதிமன்றம் , தாலுகா அலுவலகம் அருகில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என 4நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்ற ஆணையின் படி நீதிமன்ற பணிகள், தினசரி வழக்குகள் அனைத்தும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த பதிவு செய்யப்பட்ட விபரங்களை வழக்கறிஞர்களும் பொதுமக்களும் தினசரி பார்த்துக் கொள்ளும் வசதிகள் உள்ளன. இந்தநிலையில் நீதிமன்ற வளாக இணையதள சேவையில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இதனால் பணி , வழக்கு விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே இணையதள சேவையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என தாராபுரம் வக்கீல் ராஜேந்திரன் மற்றும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • மாணவ மாணவிகள் பலரும் செல்போன்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
    • செல்போனை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் அருகே உள்ள ஏ.வி.பி. பள்ளியில் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நவீன காலத்திற்கு ஏற்ப செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக மாணவ மாணவிகள் பலரும் செல்போன்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். நாம் செல்போனை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம். நமது தேவைகளுக்கு மட்டும் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு இணையதளம் மூலமாக தெரியாத நபர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். மேலும் தங்களது செல்போன் எண்களை கொடுக்கக் கூடாது. மாணவிகள் தெரியாத நபர்களை நம்பி புகைப்படங்களை அனுப்பக்கூடாது. அவ்வாறு புகைப்படங்களை அனுப்பினால் அவை தவறாக பயன்படுத்தக்கூடும் வாய்ப்புள்ளது. எனவே மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தேவைக்கு மட்டும் செல்போன்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுபோல் வீடுகளில் உள்ள தங்களது பெற்றோர்களிடமும் தற்போது நடந்து வருகிற மோசடிகள் குறித்து தெரிவிக்க வேண்டும். வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏடிஎம் அட்டை எண்களை பெறுகிறவர்கள், நமக்கு தெரியாமலே பணத்தை எடுக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே மாணவ மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம், வங்கி விவரங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டால் தெரிவிக்கக் கூடாது என அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சையது ரபிக் சிக்கந்தர், வடக்கு மகளிர் அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கனகவல்லி மற்றும் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு உரையாற்றினர்.

    • ‘வாட்ஸ்-ஆப்’ ஸ்டேட்டஸ் வைப்பது பல பெண்களுக்கு வழக்கமாக உள்ளது.
    • இன்டர்நெட் என்பது கூர்மையான கத்தியைப் போன்றதாகும்.

    போடிப்பட்டி

    ஒருவரிடம் 'ஸ்மார்ட் போன்' இல்லை என்பது இன்றைய நிலையில் மிகப்பெரிய அவமானமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளைஞிகளிடையே 'ஸ்மார்ட் போன்' பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. ஆனால் இந்த போன்களை பயன்படுத்தி அறிவை வளர்த்துக் கொள்பவர்கள் மிக சொற்ப அளவிலேயே உள்ளனர். ஆக்க சக்தியாக பயன்படுத்தப்பட வேண்டிய விஞ்ஞான வளர்ச்சியை அழிவு சக்தியாக பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் 'இன்டர்நெட்' மூலம் சக கல்லூரி மாணவிகளையே பாலியல் பேரம் பேசிய அவலம் அரங்கேறியுள்ளது.

    எல்லோரிடமும் நட்பாக பழகக் கூடிய நல்ல பெண் என்பதே கல்லூரியில் அந்த பெண்ணின் அடையாளமாக இருந்தது. எல்லோரிடமும் வலிய சென்று பழகும் அந்த மாணவி அவர்களிடம் செல்போன் எண்களைப் பரிமாறிக் கொள்வது சாதாரணமாக நடக்கும் தினசரி நிகழ்வாக இருந்தது.

    இந்த நிலையில் தான் அந்த அதிர்ச்சி சம்பவம் அனைவரையும் கதிகலங்க வைத்தது. அந்த கல்லூரியின் சீனியர் மாணவிகள் இருவரின் புகைப்படத்துடன், அவர்களுக்கு ஒரு விலை வைத்து 'இன்டர்நெட்' மூலம் பாலியல் தொழிலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த தகவல் கிடைத்து அதிர்ந்தனர். அந்த சீனியர் மாணவிகளின் புகாரின் பேரில் கல்லூரி நிர்வாகம் விசாரணையை தொடங்கியது. அப்போதுதான் வலிய சென்று தோழியான ஜூனியர் மாணவியின் வேலை அது என்பது தெரிய வந்தது. அந்த மாணவிக்கு பல ஆண் நண்பர்கள் இருந்துள்ளனர். பல மாணவிகளிடம் செல்போன் எண்ணை பகிர்ந்து கொண்ட அந்த மாணவி அவர்களின் 'ஸ்டேட்டசில்' வைக்கும் புகைப்படங்களை எடுத்து ஆண் நண்பர்களுக்கு அனுப்பி அந்த பெண்களை விலை பேசியுள்ளார்.

    ஒருசில ஆண்களிடம் பணமும் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த பெண்ணிடமிருந்து 'ஸ்மார்ட் போனை' கைப்பற்றி ஆய்வு செய்தபோது நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களை சேமித்து வைத்திருப்பது தெரிய வந்தது. சக தோழிகளுக்கே தெரியாமல் அவர்களின் புகைப்படங்களை எடுத்து அதனை ஆண் நண்பர்களுக்கு அனுப்பி பணம் பார்க்கும் கேவலமான வேலையை அந்த மாணவி செய்துள்ளார்.

    உடனடியாக கல்லூரி நிர்வாகம் அந்த பெண்ணை கல்லூரியை விட்டு நீக்கி வீட்டுக்கு அனுப்பி விட்டது. அத்துடன் அந்த பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டதாக நிர்வாகம் நம்புகிறது. ஆனால் அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த ஆண்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? இதுவரை இந்த மாணவியால் அனுப்பப்பட்ட சக மாணவிகளின் புகைப்படங்கள் அவர்களிடம் உள்ளதா? அதனை அவர்கள் எப்படி பயன்படுத்தப் போகிறார்கள்? இந்த வலையில் தங்களுக்கே தெரியாமல் சிக்கியிருக்கும் மாணவிகளின் கதி என்ன? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் நம் முன் இருக்கிறது.

    நிச்சயமாக சக தோழிகளையே விலை பேசிய அந்த மாணவி குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட வேண்டியது அவசியமாகும். சைபர் கிரைம் போலீசார் அந்த மாணவியின் 'ஸ்மார்ட் போனை' கைப்பற்றி முழுமையான ஆய்வு செய்ய வேண்டியதும் அவசியமாகிறது. உல்லாச வாழ்க்கை வாழ்வதற்கு ஆசைப்பட்டு தடம் மாறும் ஒருசில பெண்கள் குறித்து அன்றாடம் செய்திகளில் படிக்கிறோம்.

    அவர்களை தடம் மாற்றுவதில் 'ஸ்மார்ட் போன்'களின் பங்கு பெருமளவு உள்ளது. மேலும் விதம் விதமாக ஆடை அலங்காரங்களுடன் 'வாட்ஸ்-ஆப்' ஸ்டேட்டஸ் வைப்பது பல பெண்களுக்கு வழக்கமாக உள்ளது. அந்த படங்கள் இதுபோன்ற ஒரு சில விஷமிகளால் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது. இன்டர்நெட் என்பது கூர்மையான கத்தியைப் போன்றதாகும். அது நமது பாதுகாப்புக்குப் பயன்படும் அதேநேரத்தில் பாதிப்பு ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

    • சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சியில் இணையதள செயலிழப்பால் பணிகள் பாதிப்படைந்தனர்.
    • இணையதள சர்வர் சரிவர இயங்காததால் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சியில் சில தினங்களாக வரைபடப் பிரிவு, பிறப்பு-இறப்பு சான்றிதழ் பிரிவு, வரி வசூல் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் இணையதள சர்வர் சரிவர இயங்காததால் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.

    இதனால் பிறப்பு-இறப்பு சான்றிதழ் கேட்டு மனு செய்தவர்கள், வீடு கட்டுவதற்காக வரைபட அனுமதி கேட்டு காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு தாராளமாக பொதுமக்களிடம் புழங்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தனர். பொதுமக்களின் தேவைகளை அறிந்து உடனடி தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பெற்றோருக்கு தெரியாமல் தனியாக வரக்கூடாது என்று சிறுமிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
    • பஸ் நிலையத்தில் தனியாக நின்ற சிறுமியை கண்டறிந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

    மதுரை:

    மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் கடந்த 17-ந் தேதி அதிகாலை நேரத்தில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அந்த சிறுமியை அழைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் சென்னையை சேர்ந்தவர் என்பதும், சமூக வலைதளம் மூலம் பழகிய ஒரு வாலிபரை பார்ப்பதற்காக தனியாக மதுரை வந்திருப்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரித்த போது, கடந்த ஒரு வருடமாக அந்த வாலிபரிடம் ஷேர்சாட் மூலம் பழகி வந்ததாகவும், அவரை பார்க்க பெற்றோருக்கு தெரியாமல் வந்ததாகவும் தெரிவித்தார்.

    சிறுமி கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் மேலும் விசாரணை நடத்தியதில், அவர் மாயமானது குறித்து அவரது பெற்றோர் சென்னை பாண்டி பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து சென்னை போலீசார் உதவியுடன் சிறுமியின் பெற்றோர் மதுரைக்கு வந்தனர். பின்பு பெற்றோருக்கு தெரியாமல் இப்படியெல்லாம் தனியாக வரக்கூடாது என்று சிறுமிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    பஸ் நிலையத்தில் தனியாக நின்ற சிறுமியை கண்டறிந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர். இதுகுறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறியதாவது:-

    தற்போதைய அறிவியல் வளர்ச்சியின் காரணமாக செல்போன் மற்றும் கணினி போன்ற சாதனங்களால் அனைவரும் அனைத்தும் எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் அந்த சாதனங்கள் மூலம் பயன்படுத்தும் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் முகம் தெரியாத நபர் மூலம் அறிமுகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கைப்பேசி மற்றும் கணினி ஆகியவற்றை பயன்படுத்த கொடுக்கும்போது அவ்வப்போது அவர்களை கண்காணிக்க வேண்டும். அவர்கள் தேவையில்லாத நபர்களுடன் தொடர்பு கொள்வது தெரியவந்தால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை எடுத்துக்கூற வேண்டும்.

    மேலும் அவர்கள் பயன்படுத்தும் செயலிகள் மூலம் யாரேனும் அவர்களுக்கு பாலியல் தொந்தரவு செய்கிறார்களா? என்பதையும் விசாரிக்க வேண்டும். அந்த செயலிகள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வது தெரியவந்தால் உடனே போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும்.

    இது தவிர போலீஸ் செயலியான எஸ்.ஓ.எஸ்., சிறப்பு கட்டுப்பாட்டு அறை எண் 1098, 1091, 181 மற்றும் மதுரை மாநகர் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 0452-2530070, 2530100, வாட்ஸ்அப் எண் 83000 21100 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமேசான் நிறுவனம் செயற்கைகோள் உதவியுடன் மலிவு விலையில் இணைய வசதியை வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Amazon



    அமேசான் நிறுவனம் பிராஜெக்ட் குய்பர் என்ற திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உலகம் முழுக்க அதிவேக இணைய வசதியை வழங்க அமேசான் முடிவு செய்துள்ளது.

    அதிவேக இணைய வசதியை வழங்க அமேசான் 3000 செயற்கைக்கோள்களை அமேசான் பயன்படுத்த இருக்கிறது. இவற்றின் உதவியுடன் உலகம் முழுக்க இடையூறின்றி இணைய சேவையை வழங்க முடியும் என அமேசான் நினைக்கிறது. 3000 செயற்கைக்கோள் மூலம் உலக மக்கள் தொகையின் 95 சதவிகிதம் பேருக்கு இணைய வசதியை வழங்க முடியும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை அமேசான் ஆண்ட்ராய்டு போலீஸ் நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறது. புதிய திட்டத்தின் மூலம் உலகம் முழுக்க செயற்கைக்கோள்களை நிறுவ அமேசான் திட்டமிட்டுள்ளது. குய்பர் நீண்ட கால திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் திட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கும் அதிகமாக இணைய வசதியை வழங்க முடியும்.



    அனைவருக்கும் இணைய வசதியை வழங்கும் நோக்கம் கொண்ட மற்ற பிராண்டுகளுடன் கைகோர்க்கவும் அமேசான் திட்டமிட்டுள்ளது. அமேசான் நிறுவனம் மொத்தம் 3236 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலக மக்கள் தொகையில் 95 சதவிகிதம் பேருக்கு இணைய வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் இத்திட்டத்தை வெற்றியடைய வைக்க அமேசான் நிறுவனம் பெரும் தொகையை முதலீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் அமேசான் நிறுவனம் துவக்கத்தில் இணைய கட்டணத்தை குறைவாக நிர்ணயம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

    இதேபோன்று ரிலையன்ஸ் ஜியோவும் தனது ஜிகாஃபைபர் திட்டத்தை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இவை நாடு முழுக்க அதிவேக பிராட்பேண்ட் இணைய வசதியை மலிவு விலையில் வழங்க இருக்கிறது. 
    ×