search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "interest"

    • கடன் பெற்றவர் உயிரிழந்து விட்டால் மீத முள்ள தவணைகளை காப் பீட்டு நிறுவனம் செலுத்த வேண்டும்.
    • அவர்களுக்கு நஷ்ட ஈடாக ரூ.50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று உத்தர விட்டனர்.

    அரியலூர், அக்.27-

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நக்கம் பாடி கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். மனைவி லலிதா (46).

    கடந்த 2020-ம் ஆண்டு இவர், அரியலூர் ஒரு வங்கியில் ரூ.4.66 லட்சம் வீட்டுக் கடன் பெற்றிருந்தார். அதற்கு அடமானமாக தன்னுடைய வீட்டுப் பத்திரத்தை கொடுத்துள் ளார்.

    வங்கியின் சார்பில் அந்த வீட்டுக் கடன் தொகையி லிருந்து லலிதாவுக்கு ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ.11,398 செலுத்தி காப்பீடு செய்து கொடுத்திருந்தனர்.

    கடன் தவணையை முறை யாக செலுத்தி வந்த லலிதா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி உயிரிழந்தார்.

    கடன் ஒப்பந்த விதிகள் மற்றும் காப்பீட்டு விதிக ளின்படி கடன் பெற்றவர் உயிரிழந்து விட்டால் மீத முள்ள தவணைகளை காப் பீட்டு நிறுவனம் செலுத்த வேண்டும்.

    ஆனால் அந்த இன்சூ ரன்ஸ் நிறுவனம் காப்பீடுத் தொகையைச் செலுத்த வில்லை.

    ஆனால் வாங்கி தரப்பில் கொளஞ்சிநாதன் மற்றும் அவரது மகன்களை மீதி தவணைகளைக் கட்டுமாறு கேட்டு தொடர்ந்து கட்டாயப் படுத்தியதால் அவர்கள் கடந்த மார்ச் மாதம் வரை 11 மாதத் தவணை தொகையை செலுத்தி விட்டனர்.

    இதுகுறித்து லலிதாவின் கணவர் கொளஞ்சிநாதனும், அவரது மகன்களும் அரிய லூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்து வந்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் தமிழ் செல்வி, உறுப்பினர்கள் பாலு மற்றும் லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

    இதில் வங்கியும், காப்பீட்டு நிறுவனமும் சேர்ந்து லலிதா பெயரில் செய்திருந்த அடமான ஒப்பந்தத்தை ரத்து செய்து, அவரது வீட்டுப் பத்திரங்களை 30 நாட்களுக்குள் திருப்பி கொடுக்க வேண்டும்.

    சட்டவிரோதமாக பெற்ற 11 மாத தவணை தொகை ரூ.1.35 லட்சத்தை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு நஷ்ட ஈடாக ரூ.50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று உத்தர விட்டனர்.

    • பிரதான சாகுபடியாக தென்னை 18,252 ெஹக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • பழப்பயிர் சாகுபடியில், ஈடுபடும் விவசாயிகளுக்கு துறை சார்பில் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

    உடுமலை:

    உடுமலை வட்டாரத்தில் விளைநிலங்களில் கிணறு மற்றும் போர்வெல் அமைத்து பல ஆயிரம் ெஹக்டேரில், நீண்ட கால பயிரான தென்னை மற்றும் இதர காய்கறி சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.அவ்வகையில் உடுமலை வட்டாரத்தில் பிரதான சாகுபடியாக தென்னை 18,252 ெஹக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னைக்கு அடுத்தபடியாக காய்கறி சாகுபடி பரப்பு இந்த வட்டாரத்தில் அதிகமுள்ளது.

    குறிப்பாக ஆண்டு முழுவதும் தக்காளி, கத்தரி, பச்சை மிளகாய் சாகுபடியாகிறது. மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய தக்காளி உற்பத்தியில் உடுமலை வட்டாரம் முன்னிலை வகிக்கிறது.கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 171 ெஹக்டேர் பரப்பில் தக்காளி சாகுபடிக்கு நாற்று நடவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக சின்னவெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் நடவு செய்துள்ளனர்.இவ்வாறு காய்கறி சாகுபடி ஆதிக்கம் செலுத்தி வந்த பகுதியில் தற்போது படிப்படியாக பழப்பயிர் சாகுபடி பரப்பு மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது.காய்கறி சாகுபடியில் நடவு, களையெடுத்தல், மருந்து தெளித்தல், குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை அறுவடை என தொழிலாளர்கள் தேவை அதிகமாகும்.

    சீசன் சமயங்களில் போதிய தொழிலாளர்கள் கிடைக்காமல் பல்வேறு பணிகள் பாதித்து விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். அறுவடையின் போது விலை வீழ்ச்சி ஏற்பட்டு நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

    எனவே மாற்றி யோசிக்க துவங்கியுள்ள விவசாயிகள், தற்போது பழப்பயிர் சாகுபடியில் ஈடுபட துவங்கியுள்ளனர்.அவ்வகையில் உடுமலை வட்டாரத்தில் மா சாகுபடி, 690 ெஹக்டேர், மரநெல்லி 82.68, கொய்யா 31.38,சப்போட்டா 25.98, மாதுளை 2.69, எலுமிச்சை 10;48, பேரீட்சை 2.69 என 962 ெஹக்டேர் பழங்கள் உற்பத்திக்கான செடி மற்றும் மரங்கள் சாகுபடி செய்யப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இச்சாகுபடி பரப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    பழப்பயிர் சாகுபடிக்கு தொழிலாளர் தேவை குறைவு. சொட்டு நீர் பாசனம் அமைத்துக்கொள்வதால் தண்ணீரை சிக்கனப்படுத்துவதுடன் எளிதாகவும் பாய்ச்சி க்கொள்ளலாம். சந்தை வாய்ப்புகளை உள்ளூரிலேயே ஏற்படுத்திக்கொடுத்தால் இன்னும் பழப்பயிர் சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என்றனர்.

    உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகனரம்யா கூறுகையில், பழப்பயிர் சாகுபடியில், ஈடுபடும் விவசாயிகளுக்கு துறை சார்பில் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

    மேலும் அரசின் சிறப்புத்திட்டங்களின் கீழ் தோட்டக்கலைத்துறை நாற்றுப்பண்ணை வாயிலாக விவசாயிகளுக்கு நாற்றும் வினியோகிக்கப்பட்டு வருகிறது என்றார்.தென்னைக்கு மாற்றாக

    பழப்பயிர் சாகுபடியில் ஆர்வம் காட்டும் உடுமலை விவசாயிகள் 

    • காட்டு கருவேல மரங்களை அகற்றி மிளகாய் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • விவசாயி களுக்கு மானியம் வழங்கப் படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்தான் நாங்கள் மிளகாய் பயிர் செய்து வருகிறோம் என்றார்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சி, வானம் பார்த்த பூமி. காட்டு கருவேல மரங்கள் நிறைந்த பகுதி என்ற நிலை, இன்றளவும் இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் கமுதி வட்டம்.அபிராமம் பகுதியில் காட்டு கருவேல மரங்களை அகற்றிவிட்டு மிளகாய் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    கடந்த ஆண்டு போதிய மழை இல்லததால் நெல் விவசாயிகள் விரக்தியடைந் தனர். இந்த நிலையில் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் மிளகாய் பயிர் செயய்பவர்களுக்கு அதிலும் குறிப்பாக காட்டு கருவேல மரங்களை அகற்றி மிளகாய் பயிர்செய்யும் விவசாயி களுக்கு மானியம் வழங்கப் படும் என்று அறிவிக்கப் பட்டது.

    இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அபிராமம் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட் கிரா மத்தை சேர்ந்த விவசாயிகள் காட்டு கருவேல மரங்களை அகற்றிவிட்டு மிளகாய் விவசாயத்தில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர்.

    இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள விவசாயி கூறுகையில், அபிராமம் பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாகும். முழுக்க முழுக்க வானம் பார்த்த பூமியாக இருப்பதால் விவசாய நிலங்களில் காட்டு கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது . கடந்த சில நாட்களுக்கு முன் வேளாண்மை தோட்ட கலைத்துறை மூலம் கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு மானியம் வழங்கப் படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்தான் நாங்கள் மிளகாய் பயிர் செய்து வருகிறோம் என்றார்.

    • தலைதூக்கும் கந்துவட்டி கும்பலால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்படைகின்றனர்.
    • அடாவடி வட்டி தொழில் செய்யும் கந்துவட்ட கும்பலிடம் இருந்து பொது மக்களை காப்பாற்ற வேண்டும் என் றார்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் கிராமங்கள் அதி–கம் நிறைந்த பகுதி என்பதா–லும், விவசாயிகள் அதிக–மாக வாழ்ந்துவருவதாலும் அவர்களின் குடும்ப வறு–மையை பயன்படுத்தி தனியார் நிதி நிறுவனங்கள், தனிநபர்கள் ஏராளமா–னோர் கடன் கொடுத்து வருகிறார்கள்.

    பெண்களிடம் அதிலும் குறிப்பாக கிராமப்புற பெண்களிடம் பணத்தை கொடுத்து அதை தினந்தோ–றும், வாரம்தோறும், மாதந் தோறும் என அடவடியாக வசூல் செய்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி விவசாயி–கள், மீனவர்கள், பனை தொழிலாளர்கள் என அவர்களின் ஏழ்மை நிலையை தங்களுக்கு சாதக–மாக்கிக் கொண்டு ஒரு கும்பல் வசூலில் ஈடுபட்டுள் ளது.

    கடன் கொடுக்கும் போது அரவணைப்பாக பேசும் இந்த கந்துவட்டி கும்பல் காலப்போக்கில் தங்களது மற்றொரு முகத்தை காட்டு–கிறது. தின வட்டி, வார வட்டி, மாத வட்டி என பட்டியலிட்டு பல்வேறு வழிமுறைகளில் ஏழை, எளி–யோரை மேலும் கடனாளி–யாக்கி வீதியில் நிற்க செய்து விடுகிறார்கள்.

    வாங்கிய பணத்தை விட பல மடங்கு திருப்பிச் செலுத்தும் நிலைக்கு தள் ளப்பட்டுள்ள இந்த கிராம–வாசிகள் பலர் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் நிலம் உள்ளிட்ட சொத்துக்களை இழக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. அதேபோல் குடும்பம், குழந் தைகள் உள்ளிட்டோ–ரின் நலன் கருதியும், கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு அடிபணிந்தும் யாரும் போலீசில் புகார் அளிப்ப–தில்லை.

    இந்த நிலை தொடராமல் இருக்க கந்துவட்டி கும்பலி–டம் இருந்து பொதுமக்களை காப்பாற்றும் வகையில் மாவட்ட காவல்துறையும், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும் கந்துவட்டி கும்பலை கண்டறிந்தும், கண்காணித்தும் அவர்களி–டம் உரிய விசாரணை செய்து கடுமையான நடவ–டிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.இதுபற்றி அந்த பகுதி–யைச் சேர்ந்த சமுக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ராமநா–தபுரம் மிகவும் பின்தங்கிய பகுதியாக இருப்பதால் மக்களின் வறுமையை பயன் படுத்தி வட்டி தொழில் செய்யும் கும்பல் கிராமப்புற பெண்களை குறி வைத்து வட்டிக்கு பணம் கொடுக்கி–றார்கள். அவ்வாறு வாங்கிய பணத்தை கட்ட முடியாத நபர்களின் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு கந்து–வட்டி கும்பல் அபகரித்து விடுகிறது. போலீசில் புகார் கொடுக்க முடியாதபடி கந்துவட்டி கும்பலால் மிரட்டப்படுகின்றனர். கந்துவட்டி கும்பலால் நிறைய பொதுமக்கள் பாதிக் கப்படுகின்றனர். இருந்த–போதிலும் போதிய ஆதா–ரங்கள் இல்லததால் நடவ–டிக்கை எடுக்க முடிய–வில்லை என்று கூறுகிறார் கள்.

    பொதுமக்களின் நிலையை கருத்தில் கொண்டு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அடாவடி வட்டி தொழில் செய்யும் கந்துவட்ட கும்பலிடம் இருந்து பொது மக்களை காப்பாற்ற வேண்டும் என்றார்.

    • கடந்த செப்டம்பர் மாதம் விசைத்தறிக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு ரூ. 1.40 உயர்த்தப்பட்டது.
    • முதல் 1000 யூனிட் வரை சலுகை வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.ஏற்ற, இறக்கத்துடன் கூடிய சந்தை நிலவரம், மூலப்பொருட்களான பஞ்சு, நூல் ரகங்கள் விலையில் தினமும் ஏற்படும் மாற்றங்கள், உரிய ஒப்பந்தக்கூலி கிடைக்காமை, உதிரி பாகங்கள் விலை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது விசைத்தறி தொழில்.

    கடந்த செப்டம்பர் மாதம் விசைத்தறிக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு ரூ. 1.40 உயர்த்தப்பட்டது. அதிர்ச்சி அடைந்த விசைத்தறியாளர்கள் மின் கட்டணத்தை செலுத்துவதை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் மின் கட்டணம், 50 சதவீதம் குறைக்கப்பட்டது. முதல் 1000 யூனிட் வரை சலுகையும் வழங்கப்பட்டது. இதையடுத்து விசைத்தறியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு விசைத்தறிகளை இயக்கினர்.

    கடந்த 9 மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாததால், ஒவ்வொரு விசைத்தறி கூடங்களுக்கும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை பில்கள் வந்துள்ளன.அதில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்துடன் அபராதத்தொகை மற்றும் வட்டியும் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது.குறைக்கப்பட்ட மின் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்த தயாராக உள்ளதாகவும், நிலுவைத் தொகையை கட்ட தவணை வேண்டும்.வட்டியை ரத்து செய்ய வேண்டும் என விசைத்தறியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 6 தவணைகளில் நிலுவைத்தொகையை செலுத்தலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

    வட்டி குறைப்பு குறித்து முறையான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதனால் விசைத்தறியாளர்கள் மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து விசைத்தறி சங்க நிர்வாகிகள் கூறுகையில், குறைக்கப்பட்ட மின் கட்டண அடிப்படையில் நிலுவைத் தொகையை செலுத்த தயாராக உள்ளோம். ஆனால், அதுகுறித்தும் வட்டியை ரத்து செய்வது குறித்தும் எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை. இதனால் ஒவ்வொரு விசைத்தறியாளர்களுக்கும் மின் கட்டண தொகை சுமையாக மாறியுள்ளது.மின் துறை அமைச்சர், மின் வாரிய சேர்மன் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. என்ன செய்வது என புரியவில்லை என்றனர்.

    • கூடுதல் வட்டிகேட்டு பெண் மீது தாக்குதல் நடத்தினர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் சேனைத்தலைவர் திருமண மண்டபம் தெருவை சேர்ந்தவர் சித்தாயி (வயது 45), இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் அதே பகுதியைச் சேர்ந்த இசக்கியம்மாள் என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். அதனை வட்டியுடன் திருப்பி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சித்தாயியிடம் இசக்கியம்மாள் மேலும் வட்டி கேட்டுள்ளார். ஆனால் சித்தாயி தரவில்லை. இந்த நிலையில் இசக்கியம்மாள் கூடுதல் வட்டி கேட்டு சித்தாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் சித்தாயி புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஒவ்வொரு வர்ணஜாலங்களில் கோலமெட்டு வருவதை அவ்வழியே செல்பவர்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
    • கோலம் போடுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்து வருகிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ரெயில்வே சாலையை சேர்ந்தவர் கயல்விழி வினோதினி.

    இவர் மார்கழி மாதம் பிறந்த நாளிலிருந்து தினந்தோறும் வகை வகையான வண்ண வண்ண கோலங்கள் போட்டு அவ்வழியே செல்பவர்களை கவரும் வகையில் கோலமிட்டு வருகிறார்.

    மார்கழி மாதம் தொடங்கிய முதல் நாள் அதிகாலை மார்கழி மாதத்தை வரவேற்கும் விதமாக வரைந்திருந்த கோலம் அனைவரையும் கவர்ந்தது.

    இதே போல் ஒவ்வொரு நாளும் அதிகாலை வேளையில் ஒவ்வொரு வர்ணஜாலங்களில் கோலமெட்டு வருவதை அவ்வழியே செல்பவர்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

    தொடர்ந்து அதிகாலை வேளையில் கோலமிட்டு வரும் கயல்விழி வினோதினி புத்தாண்டை வரவேற்கும் விதமாக வாசலில் அழகிய கோலமிட்டு இருந்தார்.

    இதேபோல் தைப்பொங்கல் அன்று வாசல் முன்பு போட்ட கோலமும் பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்ததாக அமைந்தது.

    இந்நிலையில் மாட்டுப்பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று காலை கயல்விழி வினோதினி போட்ட கோலம் வித்யாசமாக அமைந்திருந்தது.

    பட்டுப் புடவையை தரையில் விரித்து வைத்தது போல் போடப்பட்ட கோலம் அதில் அந்தப் புடவையின் விலையையும் குறிப்பிட்டு இருப்பது அனைவரையும் கவர்ந்தது.

    இதை பார்ப்பவர்கள் கோலம் என்பதற்கு பதிலாக பட்டுப் புடவை தரையில் கிடப்பதாக எண்ணி ஏமாந்து பின்னர் தான் அது கோலம் என்று கண்டுபிடித்தனர்.

    அந்த அளவுக்கு பட்டுப் புடவை கோலம் அமைந்திருந்தது.

    இதுகுறித்து கயல்விழிவினோதினி கூறுகையில், கோலம் போடுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்து வருகிறது.

    எனது கோலங்கள் அழகாக இருப்பதால் அரசு விழாக்கள் நடக்கும் இடங்களுக்கும் நான் சென்று கோலம் போட்டு வருகிறேன். தொடர்ந்து வருடத்தில் உள்ள அனைத்து நாட்களிலும் கோலம் போடுவதற்கு ஆசை தான்.

    ஆனால் விருப்பம் இருந்தாலும் அந்த முழு கலை திறனை மார்கழி மாதத்தில் மட்டுமே சிறப்பாக வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு அமைந்துள்ளது.

    இதனால் கோலங்களை ஆர்வத்துடன் வாசலில் போட்டு வருகிறேன்.

    இந்த கோலத்தை பார்ப்பவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்தி விட்டுச் செல்கின்றனர். வாசலில் கோலம் போடுவது ஒரு கலையாக இருந்து வருகிறது.

    • மாணவர்கள் ஆர்வத்தோடு அச்சோதனைகளை செய்து பார்த்தனர்.
    • கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் புதிர் கணக்கு கொடுக்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் பட்டதாரி ஆசிரியர்கள் அருளானந்தம், துரைராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வானவில் மன்ற ஒன்றிய தன்னார்வலர் லாவண்யா, காற்றுக்கு அழுத்தம் உண்டு என்பதற்கும், காற்று இடத்தை அடைத்துக்கொள்ளும் என்பதற்கும் பல எளிய சோதனைகளை மாணவர்களிடையே செய்து காட்டினார்.

    அப்போது மாணவர்கள் ஆர்வத்தோடு அச்சோதனைகளை செய்து பார்த்தனர்.

    மேலும், கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் புதிர் கணக்கு கொடுக்கப்பட்டது. வானவில் மன்ற தன்னார்வ லரோடு மாணவர்கள் உற்சாக த்தோடும், ஆர்வத்தோடும் கலந்துரையாடினர்.

    தன்னார்வலர் செய்து காட்டியவை அனைத்தும் பயனுள்ளதாக அமைந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

    முன்னதாக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் உமாராணி அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் முருகையன் நன்றி கூறினார்.

    • ‘செல்வ மகள்’ சேமிப்பு திட்டத்துக்கான வட்டியில் மாற்றம் இல்லை.
    • மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி, 0.4 சதவீதம் உயர்ந்து 8 சதவீதம் ஆகிறது.

    புதுடெல்லி

    சிறுசேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் மாற்றி அமைத்து வருகிறது.

    இந்தநிலையில், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதத்தை நேற்று மாற்றி அமைத்தது. அதன்படி, வட்டி விகிதம் 1.1 சதவீதம்வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி, 0.4 சதவீதம் உயர்ந்து 8 சதவீதம் ஆகிறது. கிசான் விகாஸ் பத்திரத்துக்கு, 123 மாதங்களில் முதிர்வடையும்வகையில் 7 சதவீத வட்டி வழங்கப்பட்டு வந்தது. அது, 120 மாதங்களில் முதிர்வடையும்வகையில், 7.2 சதவீத வட்டியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    மாதாந்திர வருவாய் திட்ட வட்டி, 0.4 சதவீதம் உயர்ந்து 7.1 சதவீதம் ஆகிறது. தேசிய சிறுசேமிப்பு சான்றிதழ் வட்டி விகிதம் 0.2 சதவீதம் உயர்ந்து 7 சதவீதம் ஆகிறது.

    அஞ்சலகங்களில் ஓராண்டு டெபாசிட் திட்ட வட்டி 6.6 சதவீதமாகவும், 2 வருட டெபா சிட் வட்டி 6.8 சதவீதமாகவும், 3 ஆண்டு டெபாசிட் வட்டி 6.9 சதவீதமாகவும், 5 ஆண்டு டெபாசிட் வட்டி 7 சதவீதமாக வும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் வட்டி, 1.1 சதவீதம்வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு வருமானவரி சலுகை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே சமயத்தில், பெண் குழந்தைகளுக்கான 'செல்வமகள்' சேமிப்பு திட்ட வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அது, 7.6 சதவீதமாக நீடிக்கும். அதுபோல், பொது வருங்கால வைப்புநிதிக்கான வட்டியும் 7.1 சதவீதமாக நீடிக்கும்.

    வங்கி சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாக நீடிக்கும்.

    தொடர்ந்து 2-வது காலாண்டாக சிறுசேமிப்பு வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது.

    பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை தொடர்ந்து 5 தடவை உயர்த்தி உள்ளது. அதை பின்பற்றி டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தி உள்ளன.

    அந்த வரிசையில், சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

    • தேங்காய் பூ கிடைக்க முற்றிய தேங்காயை மண்ணில் புதைத்து வைக்க வேண்டும்.
    • வாகனங்களை நிறுத்தி தேங்காய் பூவை சர்க்கரையுடன் வாங்கி சாப்பிட்டு விட்டு செல்கின்றனர்.

    உடுமலை :

    தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கரு வளர்ச்சி ஆகும். தேங்காய் பூவில் தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதைவிட அதிக சத்துக்கள் உள்ளது. இளநீரில் இருக்கும் சதை பற்றினை போல ருசி இருக்கும் என்பதால் இதை சர்க்கரை உடன் கலந்து விற்பனை செய்கின்றனர்.மேலும் தேங்காய் பூவில் அதிகமான ஊட்டச்சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும்.

    தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை கட்டுப்படுத்த இயல்கிறது. ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த மருத்துவமாகவும் பயன்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். தேங்காய் பூ கிடைக்க முற்றிய தேங்காயை மண்ணில் புதைத்து வைக்க வேண்டும்.

    பின்னர் 20 நாட்களுக்கு பின்னரே தேங்காய் குருத்து வளர ஆரம்பிக்கும். அந்தப் பக்குவத்தில் தேங்காய் உடைத்தால் தேங்காய் பூ கிடைக்கும். தென்காசியை சேர்ந்த கணேசன்என்பவர் கடந்த நான்கு, ஐந்து மாதங்களுக்கு மேலாக உடுமலை தாராபுரம் ரோட்டில் கோட்டமங்கலம்பகுதியில் தேங்காய் பூ விற்பனை செய்து வருகிறார் .

    அவர் இது குறித்து கூறுகையில், ஆரம்பத்தில் அதிகப்படியான விற்பனை இல்லாமல் இருந்தது. தற்போது தேங்காய் பூவின் மகத்துவம் தெரிய வந்துள்ளதால் வாகனங்களில் செல்வோர் அங்கு வாகனங்களை நிறுத்தி தேங்காய் பூவை சர்க்கரையுடன் வாங்கி சாப்பிட்டு விட்டு செல்கின்றனர் என்று தெரிவித்தார்.

    • சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை 0.3 சதவீதம் வரை மத்திய அரசு உயர்த்தியது.
    • விவசாயிகள் கடன் அட்டைக்கான காலவரம்பும், வட்டி விகிதமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    அஞ்சலகங்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு (3 மாதங்கள்) ஒரு தடவை மத்திய அரசு வட்டி விகிதங்களை மாற்றி அமைத்து வருகிறது.

    இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டான அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3 மாதங்களுக்கு வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் நேற்று மாற்றி அமைத்தது.

    அதன்படி, 3 ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 5.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 0.3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

    மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 7.4 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாக உயருகிறது. இது, 0.2 சதவீத உயர்வு ஆகும்.

    விவசாயிகள் கடன் அட்டைக்கான காலவரம்பும், வட்டி விகிதமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    கடந்த மே மாதத்தில் இருந்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 1.4 சதவீதம் உயர்த்தியுள்ளது. 3 தவணைகளாக இவை உயர்த்தப்பட்டன. அதற்கேற்ப முதலீட்டுக்கான வட்டி விகிதங்களையும் மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

    • பி.ஏ தமிழ் மற்றும் ஆங்கிலம், பிபிஏ, பி.காம்., பி.எஸ்சி, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றிருந்தது.
    • வகுப்புகள் தொடங்கிய நிலையில் மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்தனர்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் புதிதாக கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி திருக்காட்டுப்பள்ளி கலை அறிவியல் கல்லூரி தற்காலிகமாக பூதலூரில் உள்ள பழைய ஊராட்சி ஒன்றிய கட்டிடவளாகத்தில் செயல்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

    இந்த கல்லூரியில் சேர்வதற்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று முடிந்தது. தமிழக உயர்கல்வித்துறை அறிவிப்பின் பேரில் திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டன. கல்லூரியில் பி.ஏ தமிழ் மற்றும் ஆங்கிலம், பிபிஏ, பி.காம்., பிஎஸ்சி, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று இருந்தது.

    நேற்று வகுப்புகள் தொடங்கிய நிலையில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்தனர்.கல்லூரிக்கு வந்த மாணவ மாணவிகளை கல்லூரி முதல்வர் ராஜா வரதராஜா இனிப்பு கொடுத்து வரவேற்றார்.

    பேராசிரியர்கள் ஆகாஷ், பாலு, முருகானந்தம், பாலாஜி, கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் தேவிகலா ஆகியோரும் மாணவர்களை வரவேற்றனர். இதனை தொடர்ந்து அனைத்து மாணவ மாணவிகளையும் ஒருங்கே அமர வைத்து கல்லூரி நடைமுறை மற்றும் நல்லொழுக்க அறிவுரைகள் கூறப்பட்டன.

    மாணவ-மாணவிகள் தங்கள் பகுதியிலேயே கல்லூரி அமைவது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.

    ×