search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Intensification of"

    • ரிங்ரோடு சாலை விரி வாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • சோலார் பஸ் நிலையம் திறப்பதற்கு முன்பு, சாலை விரிவாக்கம் செய்யும் பணி விரைவாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மொடக்குறிச்சி:

    சோலாரில் புதிய பஸ் நிலையம் உதயமாவதை அடுத்து ரூ.6 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் ரிங்ரோடு சாலை விரி வாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஈரோடு நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் கனரக வாகனங்கள் நகருக்குள் செல்லாமல் ரிங் ரோடு வழியாக செல்வதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெருந்துறை ரோடு, திண்டல் அடுத்த வேப்பம்பாளையத்தில் தொடங்கி சென்னிமலை ரோடு ரங்கம்பாளையம், அவல்பூந்துறை ரோடு ஆனைக்கல்பாளையம், முத்தூர் ரோடு லக்காபுரம், கரூர் ரோடு வழியாக கொக்கராயன் பேட்டை மற்றும் திருச்செங்கோடு ரோட்டை இணைக்கும் புறவழிச்சாலை ரிங் ரோடு அமைக்கப்பட்டது.

    இதில் ஆனைக்கல்பாளை யத்தில் இருந்து திண்டல் செல்லும் ரோட்டில் ரிங்ரோட்டிற்காக நிலம் எடுக்கப்பட்டது. ஆனால் இழப்பீடு வழங்குவதில் பிரச்சனை நீடித்ததால் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

    இதனால் ரிங் ரோட்டில் இணைப்பு சாலை ஒரு பகுதி மட்டும் இணைக்கப்படாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பணிகளை முடித்து இணை க்கப்படாத சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் இணைத்து போக்குவரத்தை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.

    இதனையடுத்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் ரிங் ரோடு வழியாக நகருக்குள் செல்லாமல் திருச்செங்கோடு, நாமக்கல் போன்ற ஊர்களுக்கு சென்று வருகிறது.

    அதே போல் தென் மாவட்டங்களில் இருந்து கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் வாகனங்கள் ஈரோடு நகருக்குள் செல்லாமல் ரிங் ரோடு வழியாகவும் சென்று வருகிறது.

    மேலும் ஈரோடு மாவட்டம் - நாமக்கல் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து வானங்கள் பெரும்பாலும் ரிங் ரோடு வழியாக சென்று வருகிறது.

    இந்நிலையில் ரிங் ரோடு அமைத்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டதால் சாலையை சீரமைக்கவும், மேலும் சோலாரில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி யும் நடைபெற்று வருவதால் பஸ் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் நிலை உள்ளது.

    அப்போது ரிங் ரோடு வழியாக அதிகளவில் போக்குவரத்து இருக்கும் என்பதாலும், கரூர் ரோட்டில் இருந்து முத்தூர் ரோட்டில் உள்ள லக்காபுரம் ரிங் ரோடு வரை உள்ள சாலை இரு வழிச்சாலையாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    இதனையடுத்து ரிங் ரோட்டில் சாலை விரி வாக்கம் செய்யும் பணி செய்ய முடிவு செய்து, அதன்படி நெடுஞ்சாலை துறையின் சார்பில் ரூ.6 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடை பெற்று வருகிறது.

    இதற்காக கரூர் சாலை யிலிருந்து சாலையின் இரு புறமும் அகலப்படுத்து வதற்காக ராட்சத ஜே.சி.பி. எந்திரம் மூலம் சாலைகள் அகலப்படுத்தி தற்போது இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் சாலையின் இரு புறமும் எதிரெதிரே வரும் வாக னங்கள் முந்தி செல்ல முடியாதபடி இருந்த சாலையை கணக்கில் எடுத்து சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் ஏற்கனவே லக்காபுரம் ரிங் ரோட்டில் இருந்த ஆனைக்கல்பாளை யம் ரிங் ரோடு வரை 3 வழி சாலையாக உள்ளது. அதே போல் திண்டல் ரிங் ரோட்டில் இருந்து சென்னி மலை ரோடு வரை இருவழிச் சாலையாக உள்ளது.

    லக்காபுரம் ரிங் ரோடு பணிகள் 4 வழிச் சாலை அமைக்கும் பணிகள் நிறை வடைந்த பின்னர் லக்காபுரம் ரிங் ரோட்டில் இருந்து திண்டல் ரிங்ரோடு வரை 4 வழிச்சாலையாக அமைக்கப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சோலார் பஸ் நிலையம் திறப்பதற்கு முன்பு, சாலை விரிவாக்கம் செய்யும் பணி விரைவாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மாநகரில் பல்வேறு இடங்களில் உள்ள முக்கிய பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகளில் சுத்தம் செய்யப்பட்ட கழிவு பொருட்கள் குவியல், குவியலாக கொட்டப்பட்டுள்ளது.
    • மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று ஆயுதபூஜை கழிவுகள், குவித்து வைக்கப்பட்டிருந்த வாழைக்கன்று கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகரில் கடந்த 4-ந் தேதி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாட ப்பட்டது. முன்னதாக மாநகரில் உள்ள வணிக நிறுவனங்கள், தொழிற்சா லைகள், அலுவலகங்கள், கடைகள், வீடுகள், வாகன ங்கள் என அனைத்தையும் சுத்தம் செய்து, தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தினர்.

    மேலும் குப்பை கழிவுகளை நேரடியாக பெற மாநகராட்சி சார்பில் வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் மாநகரில் பல்வேறு இடங்களில் உள்ள முக்கிய பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகளில் சுத்தம் செய்யப்பட்ட கழிவு பொருட்கள் குவியல், குவியலாக கொட்டப்பட்டுள்ளது.

    மேலும் மாநகரில் பல்வேறு இடங்களில் ஆயுத பூஜைக்காக சாலையோரம் தற்காலிக கடை அமைத்த வியாபாரிகள் சிலர் விற்பனையாகாத வாழைக்கன்று, பூசணிக்காய், மா இழை போன்றவற்றை அப்படியே சாலையோ ரங்களில் வீசி சென்றுள்ளனர்.

    இதையொட்டி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று ஆயுதபூஜை கழிவுகள், குவித்து வைக்கப்பட்டிருந்த வாழைக்கன்று கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

    இது தொடர்ந்து இன்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நான்கு மண்டங்களிலும் குவிக்க ப்பட்டு இருந்த குப்பைகளை அகற்றி வருகின்றனர். டன் கணக்கில் குவிந்துள்ள கழிவுகளை அகற்றி வருகின்றனர்.

    ×