search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Inspected"

    • பண்ணையில் தடுப்புச்சுவர் மற்றும் மின் பணிகள் போன்ற பணிகள் நடை பெற்று வருகிறது.
    • கலெக்டர் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குந்தா வட்டம் அவலாஞ்சி டிரவுட் மீன் பண்ணையில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அவலாஞ்சி பகுதியில் செயல்பட்டு வரும் டிரவுட் மீன் பண்ணையில் மீன் வளம் மற்றும் நீர் வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பண்ணையில் 30 மீட்டர் அளவில் இணைப்பு பாலம், சாலை, தடுப்பணை, 9 சினை மீன் தொட்டிகள், டிரவுட் மீன் குஞ்சு பொரிப்பகம், தடுப்புச்சுவர் மற்றும் மின் பணிகள் போன்ற பணிகள் நடை பெற்று வருகிறது.

    இதனை மாவட்ட கலெக்டர் அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் மீன் வளத்துறை உதவி இயக்குனர் ஜோதி லட்சுமணன், ஊட்டி மீன் துறை ஆய்வாளர் ஷில்பா, மீன் துறை சார் ஆய்வாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பழங்குடியினா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.49.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 10 வீடுகளை கலெக்டர் அம்ரித் நேரில் ஆய்வு செய்தார்.
    • தோட்டமூலா பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்கு உட்பட்ட அல்லூா் பகுதியில் பழங்குடியினா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.49.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 10 வீடுகளை கலெக்டர் அம்ரித் நேரில் ஆய்வு செய்தார்.

    பின்னர் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.தொடர்ந்து கலெக்டர் அம்ரித் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் பழங்குடிகளுக்கான பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 2022-2023 நிதியாண்டில் கூடலூா் நகராட்சியில் 74 வீடுகளும்,நெல்லியாளம் நகராட்சியில் 126 வீடுகளும், 2023-2024 நிதியாண்டில் கூடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 25 வீடுகளும் கட்ட நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தோட்டமூலா பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

    கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.35.50 லட்சம் மதிப்பில் சமையல் கூடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

    அத்திப்பாளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.32.65 லட்சம் மதிப்பில் வகுப்பறைகள், ஸ்ரீமதுரை ஊராட்சியில் கூடூா் பழங்குடியினா் காலனியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.64.42 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாட்டுப் பணிகளும், தேவா்சோலை கொட்டமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.33.05 லட்சம் மதிப்பில் வகுப்பறைகள் கட்டுமானப் பணியும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, கூடலூா் நகராட்சி ஆணையா் பிரான்சிஸ் சேவியா், நகா்மன்றத் தலைவா் பரிமளா, அரசுப் போக்குவரத்துக் கழக பொதுமேலாளா் நடராஜன், உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரபிரபு, கூடலூா் தாசில்தாா் ராஜேஸ்வரி, ஓவேலி பேரூராட்சித் தலைவா் சித்ராதேவி, துணைத் தலைவா் சகாதேவன், ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவா் சுனில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அண்ணாதுரை, குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • முதல்கட்டமாக 3,59,315 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • விண்ணப்பபதிவு முகாம்கள் பொது மக்களின் வசதிக்கேற்ப அந்தந்த பகுதியில் உள்ள நியாய விலைக்கடை அருகில் செயல்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 59 ஆயிரத்து 315 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மற்றும் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பம் பதிவு மையங்களை ஆய்வு மேற்கொண்டார்.

    இது குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு விண்ணப்பதிவு முகாம்கள் 2 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக நடைபெறும் முகாம்களுக்கு கடந்த 20ம் தேதி முதல் 23 ம் தேதி வரை 4 நாட்கள் விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று வழங்கப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக கடந்த 24ம் தேதி முதல் தொடங்கி 4 ம் தேதி வரை திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-1 மற்றும் மண்டலம்-2 ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 30 வார்டுகளிலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 265 ஊராட்சிகளில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

    முதல்கட்டமாக 3,59,315 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 1,135 நியாயவிலைக் கடைகளில் 8,18,344 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 827 நியாய விலை கடைகளுக்குட்பட்ட 5,34,460 குடும்ப அட்டைதாரர்களுக்கான விண்ணப்ப பதிவு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    2ம் கட்டமாக, 308 நியாய விலை கடைகளுக்குட்பட்ட 2,83,884 குடும்ப அட்டைதாரர்களுக்கான விண்ணப்ப பதிவு செய்யும் பணிகள் வருகிற 5ம் தேதி முதல் 16 ம் தேதி வரை திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-3 மற்றும் மண்டலம்-4 ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 30 வார்டுகளிலும், 6 நகராட்சி பகுதிகளிலுள்ள 147 வார்டுகளிலும் மற்றும் 15 பேரூராட்சிகளுக்குட்பட்ட 233 வார்டுகளிலும் 2 வது கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும்.

    இந்த விண்ணப்பபதிவு முகாம்கள் பொது மக்களின் வசதிக்கேற்ப அந்தந்த பகுதியில் உள்ள நியாய விலைக்கடை அருகில் உள்ள அரசு அலுவலக கட்டடங்கள், சமுதாய நலக்கூடங்கள் மற்றும் பள்ளிகளில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
    • வகுப்பறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    காங்கயம் :

    திருப்பூா் மாவட்டம், காங்கயம் ஒன்றியம், படியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கனிமங்கள் மற்றும் குவாரிகள் சிறு கனிம திட்டத்தின் கீழ் ரூ.19.60 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கட்டும் பணிகள், கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.08 கோடி மதிப்பீட்டில் எஸ்.என்.எம். சாலை முதல் படியூா் வரை சாலை மேம்படுத்துதல், சிவன்மலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.9.59 லட்சம் மதிப்பீட்டில் நாற்றாங்கால் அமைத்தல், ரூ.3.13 கோடி மதிப்பீட்டில் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமானப் பணிகள் என ரூ.7.11 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேற்கண்டப் பணிகளை கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். இதையடுத்து, காங்கயம் வட்டாட்சியா் அலுவலகம், காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராகவேந்திரன், விமலாதேவி ஆகியோா் உடனிருந்தனா்

    • தமிழ்நாடு முதலமைச்சர் திருப்பூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார்.
    • திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.84.70லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் திருப்பூர் மாவட்டத்திற்குபல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டப்பணிகள்பொதுமக்களுக்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை பார்வையிட்டுஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அந்த வகையில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சியில் தூய்மை இந்தியா இயக்கத்தின் சார்பில் ரூ.1.52 லட்சம் மதிப்பீட்டில்கணக்கம்பாளையம் மீனாட்சி நகரில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியினையும்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ்ரூ.6.31 லட்சம் மதிப்பீட்டில் பெரியார் காலணி முதல் பி.என் சாலை வரை கான்கிரீட் கற்கள் பதிக்கும் பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.6.86 லட்சம் மதிப்பில் கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டிநிறுத்துக்கூடம் அமைக்கும் பணியினையும், ரூ.1.57 லட்சம் மதிப்பீட்டில் கழிவறைகட்டும் பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் ரூ.2.32 லட்சம் மதிப்பீட்டில் தண்டக்காரம்பாளையம் ரோடு முதல் பெரியபள்ளம்வரை சங்கன்பிட் அமைக்கும் பணியினையும்,

    விரிவான பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்கணக்கம்பாளையம் பொன்விழா நகரில் ஊரட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.41.25லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கட்டும் பணிகளையும், கனிமங்கள் மற்றும்குவாரிகள் சிறு கனிம திட்டத்தின் கீழ் ரூ.0.79 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளியில் சமையலறை பழுதுபார்க்கும் பணிகளையும், பள்ளி உள்கட்டமைப்புமேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2.08 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டடம் பழுதுபார்க்கும் பணிகளையும்,

    நாதம்பாளையத்தில் மாவட்ட ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.11லட்சம்மதிப்பீட்டில் நாதம்பாளையம் விநாயகர் கோவில் முதல் சமத்துவபுரம் வரை நடைபெற்றுவரும் சாலை பணிகளையும், ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் வாவிபாளையம் ரோடுமுதல் விக்னேஷ்வரா நகர் பிரிவு வரை நடைபெற்று வரும் சாலை பணிகளையும் எனமொத்தம் ரூ.84.70 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் ஆய்வுமேற்கொள்ளப்பட்டன. திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள்பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து, திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும்திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன்,திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதி, ஸ்ரீதர்,உதவிப் பொறியாளர் கற்பகம், மேற்பார்வையாளர் லதா மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தலைமையில் 26-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பள்ளி வாகனங்களும் ஒரே நாளில் ஆய்வு மேற்கொள்ளபட உள்ளது
    • இந்த ஆய்விற்கு வராத பள்ளி வாகனங்களின் அனுமதிச் சீட்டினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்மூலம் தெரிவி க்கப்படுகிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் வாகனங்களும், ஒரே நாளில் ஒரே இடத்தில், மாவட்ட கலெக்டர் தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு, மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் 26ம் தேதி காலை 10 மணிக்கு பள்ளி வாகனங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட உள்ளன.

    எனவே, ஆய்விற்கு கொண்டு வரப்படும் வாகனங்களோடு, பதிவுச்சான்று, காப்புச்சான்று, அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், ஊர்தி இயக்கப்பதிவேடு, நடப்பில் உள்ள முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி ஆகியவற்றுடன், ஓட்டுநர் பெயர்வில்லை பொருத்திய உரிய சீருடையுடன் வரவேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி உரிமை யாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இந்த ஆய்விற்கு வராத பள்ளி வாகனங்களின் அனுமதிச் சீட்டினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்மூலம் தெரிவி க்கப்படுகிறது என்று அதில் தெரிவித்துள்ளார்.

    • அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த்மீனா நேரில் ஆய்வு மேற்கொண்டார்
    • பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவை யான சான்றிதழ்களை தொடர்ந்து விரைவாக வழங்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவ லகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை பார்வையிட்டு, பணிகள் தொடர்பான பதிவேடுகள் மற்றும் பிற பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். பொதுமக்களுக்கான அத்தியாவசிய பணிகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றவும் சம்மந்தப்பட்ட அலுவல ர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அரியலூர் வட்டாட்சியர் அலுவல கத்தினை பார்வையிட்டு, அலுவலகத்தில் பராமரிக்க ப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்தும், ஆன்லைன் பட்டா மாறுதல் மற்றும் பிற சேவைகள் உள்ளிட்ட அனைத்து பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவை யான சான்றிதழ்களை தொடர்ந்து விரைவாக வழங்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் மற்றும் அதன்மு ன்னேற்றம் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு, அரசின் திட்டங்கள் அனைத்து பொதும க்களையும் விரைவாக சென்று சேரும் வகையில் அலுவலர் கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

    • புதுக்கோட்டை திருவரங்குளம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் ஆய்வு மேற்கொண்டார்
    • பொது கிணற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்படி திருவரங்குளம் ஒன்றியம், குப்பக்குடி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் போடப்பட்ட பேவர்பிளாக் சாலை, சிமெண்ட் சாலை ஆகியவற்றை ஆய்வு செயதார்.குப்பக்குடி கிராம அங்காடியினையும், பொட்டத்திக்கொல்லை கிராமத்தில் நடப்பட்டுள்ள வேப்பம், நாவல், புங்கை உள்ளிட்ட மரங்களின் பராமரிப்பையும் அவர் ஆய்வு செய்தார். .

    பின்னர் கே.வி.கோட்டையில் ரூ.3.65 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட சிமெண்ட் சாலையை அவர் ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அங்குள்ள பொதுகிணற்றை சரிசெய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.அதனை தொடர்ந்து ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டதோடு, கல்லுகுண்டு ஊரணி குளம் ரூ .58 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்டு மேம்பாடு செய்யப்பட்டுள்ளதையும், திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடுகளையும் அவர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர் ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எஸ்.பாலகிருஷ்ணன், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, இணை இயக்குநர் (ஊரக நலப் பணிகள்) மரு.ராமு, வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • அன்னவாசல் ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
    • மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறுவதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், ரெங்கம்மாள் சத்திரம் கிராமத்தில் நரிக்குறவர் சமூக பொதுமக்களை மாவட்ட கலெக்டர்கவிதா ராமு நேரில் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து நேரில் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ரெங்கம்மாள் சத்திரத்தில் ரூ.7.43 லட்சம் மதிப்பில் சமையல் கூடம் கட்டும் பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து தரமானதாக முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் வெள்ளனூர்ஊராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 528 வீடுகள் கொண்ட 22 கட்டிடங்கள் ரூ.54.15 கோடி மதிப்பில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பணிகளை நல்லமுறையில் முடிக்குமாறு அறிவுறுத்தினார். அதேபோல் வடசேரிப்பட்டி வலையங்குளம் வரத்து வாய்க்கால் ரூ.7 லட்சம் மதிப்பில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறுவதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வெள்ளனூர்தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் வடசேரிப்பட்டி கிராம அங்காடியை பார்வையிட்டு ஆய்வு செய்து கலெக்டர், உணவுப் பொருட்களின் தரம், இருப்பு குறித்து ஆய்வு செய்தார். கருப்பையா, வீரப்பன் பயனாளிகளுக்காக வீடுகள் கட்டும் பணிகள் நடைபெறுவதையும் வடசேரிப்பட்டி அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகள் நடைபெறுவதையும், தாவூத்மில் ஜலஜீவன்மிசன் திட்டத்தின்கீழ் 95 பயனாளிகளுக்கு குடிநீர்வழங்கும் திட்ட ப்பணிகள் நடைபெறுவதையும் கலெக்டர் கவிதா ராமு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிச்சாமி, மாவட்ட சமூக நல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் சகிலாபானு, குளத்தூ ர்வட்டாட்சியர் சக்திவேல், அன்னவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுநடுவலூர் கிராம ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
    • ராஷ்ட்ரிய கிராம சுராஜ் அபியான் திட்டத்தின் கீழ் ரூ.23.56 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் ஒன்றியத்துக்குட்பட்ட புதுநடுவலூர் கிராம ஊராட்சி சிறப்பாக தூய்மை பணிகளை மேற்கொண்டதற்காகவும், சிறப்பு திட்டங்களை செயல்ப டுத்தியமைக்காகவும் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறந்த முன் மாதிரி கிராம ஊராட்சிக்கான விருது வழங்கப்பட்டது.இதற்கிடையே புதுநடுவலூர் கிராம ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கற்பகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஊராட்சியில் கழிவு நீரினை உறிஞ்சி குழிகள் அமைத்து நல்ல நீராக மாற்றி நீர் நிலைகளில் விடும் திட்டத்தின் கீழ் 437 வீடுகளில் தனிநபர் உறிஞ்சி குழிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதையும்,உறிஞ்சி குழி அமைக்க இடம் இல்லாதவர்களின் வீடுகளில் இருந்து வரும் கழிவு நீரினை கழிவு நீர் வாய்க்காலில் கொண்டு சென்று கிடைமட்டமான உறிஞ்சி குழி அல்லது செங்குத்தான உறிஞ்சி குழிகள் அமைத்து கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் நல்ல நீராக மாற்றி நீர்நிலைகளில் விடப்பட்டு வருவதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.40.15 லட்சம் மதிப்பில் திறந்த வெளி கிணறு அமைத்து அனைவருக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.24 லட்சம் மதிப்பில் நூலக கட்டிடத்தினை பழுது நீக்கம் செய்து புதுப்பிக்க ப்பட்டுள்ளதையும், ராஷ்ட்ரிய கிராம சுராஜ் அபியான் திட்டத்தின் கீழ் ரூ.23.56 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, ஆர்.டி.ஓ. (பொறுப்பு) சத்திய பால கங்காதரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அருளாளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • சேதமடைந்த சாலையை சரி செய்து தரும்படி மேயரிடம் இஸ்லாமிய பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • சாலை அமைக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

    திருப்பூர் :

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டு சி.டி.சி கார்னர் கபஸ்தான் சாலையில் மக்கள் பயன்பாடு அதிக அளவில் உள்ளதால் சேதமடைந்த அந்த சாலையை சரி செய்து தரும்படி மேயர் தினேஷ்குமாரிடம் இஸ்லாமிய பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று புதிய தார் சாலை அமைக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார். அதன்படி அங்கு புதிய தார் சாலை அமைக்கப்பட்டு அதனை இன்று மக்கள் பயன்பாட்டிற்கு மேயர் அர்ப்பணித்தார்.மேலும் முடிவுற்ற தார் சாலை பணிகளை இன்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது தி.மு.க. பகுதி செயலாளர் உசேன், வட்ட கழக செயலாளர்கள் ரபீக், முகமது அலி, பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

    • உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி மக்கள்பயன்பாட்டிற்கு வழங்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
    • கால்வாயினை  தூர்வாரி சுத்தம்செய்ய உத்தரவிட்டார்.

    திருப்பூர் :

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் அமைத்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார்மண்டலம் -1, வார்டு -22 , பகுதியில் அமைந்துள்ளஉழவர் சந்தை பூங்காவை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, மறுசீரமைப்புசெய்து கம்பி வேலிகள் அமைத்து, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி மக்கள்பயன்பாட்டிற்கு வழங்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து கழிவுநீர் செல்ல தடை ஏற்பட்டிருந்த கழிவு நீர் கால்வாயினைபார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக கால்வாயினை  தூர்வாரி சுத்தம்செய்ய உத்தரவிட்டார்.

    மேலும், உழவர் சந்தையில் உள்ள கழிவறைகள், குப்பை கொட்டும் பகுதிகள்மற்றும் பயன்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, "மக்களுடன் மேயர்" திட்டத்தின் கீழ் 29-வது வார்டு பகுதியில்உள்ள பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வில் 22வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு.வெ.ராதாகிருஷ்ணன்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×