search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inferiority complex"

    • தொழிலில் வெற்றி பெற உழைப்பு மட்டுமே போதாது.
    • திறமையான கணிப்பும், யூகங்களும் மிக மிக அவசியம்.

    எந்த ஒரு தொழிலில் ஈடுபட விரும்பினாலும் கண்டிப்பாக யோசனை செய்ய வேண்டியது தான். யோசனையே இன்றி கண்ணை மூடிக்கொண்டு காரியத்தில் இறங்கினோம் என்றால் அதில் எந்தவிதமான நியாயமும் இல்லை. ஆனால் நமது எண்ணம் வெறும் யோசனையாகவே இருந்து விட்டால் எந்தவித பயனும் இல்லை.

    தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பு நன்றாக யோசனை செய்த பின்னர் அதை ஆக்கபூர்வமாக செயல்படும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அபரிமிதமான ஆர்வத்தை முன்வைத்து களத்தில் இறங்க வேண்டும்.

    சாதாரணமாக எந்த ஒரு செயலோ அல்லது தொழிலோ புரிய வேண்டுமானால், அதில் நிறையவே சிரமங்கள் உண்டு. கஷ்டப்படாமல் எதிலும் வெற்றி பெறவும் இயலாது. ஏன், செயல்படவும் இயலாது.

    எனவே மிக அதிக அளவு யோசனை மற்றும் ஆராய்ச்சியில் இறங்கினால் அதில் ஏராளமான பிரச்சினைகள், கஷ்டங்கள், பாதகங்கள் தென்படும். முடிவில் அந்த முயற்சியை கைவிட வேண்டிய நிலை ஏற்படும். ஆகையால் பெண்கள் ஓரளவு சிந்தித்து விட்டு தொழில்முனைவில் ஈடுபடவேண்டும். பிறகு அதில் வரும் சவால்களை எதிர்கொண்டு, அவற்றை சாதுர்யமாக சமாளிக்க வேண்டும். சாதாரணமாக மாத வருமானம் பெறுபவர்களுக்கும், தொழில் மூலம் சம்பாதிப்பவர்களுக்கும் தூரத்தில் இடைவெளி உண்டு.

    சமான்யமானவர்கள், மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வீடு, ஒரு வாகனம் என்ற அளவிலேயே இருப்பது கண்கூடாக காணும் உண்மை. ஆனால் தொழில் மூலம் சம்பாதித்து பல வீடுகள், பல வாகனங்கள், ஏராளமான பணியாட்கள் என பொருளாதாரத்தில் மிகவும் மேன்மையுடன் திகழ்கின்றனர்.

    இது தானாகவோ, வெகு எளிதாகவோ வந்ததாக நிச்சயம் இராது. இரவு, பகல் பாராது உழைத்து எண்ணற்ற சிரமங்களை சமாளித்து அவற்றை தக்க வைப்பது மிகவும் கடினமான காரியம். தொழிலில் வெற்றி பெற உழைப்பு மட்டுமே போதாது. திறமையான கணிப்பும், யூகங்களும் மிக மிக அவசியம். யோசனை ஆக்கப்பூர்வமாக இருத்தல் வேண்டும். தடைக்கல்லாக இருத்தல் கூடாது.

    ஒரு ஆற்றை கடக்க வேண்டுமானால் அதன் பரப்பளவு முழுவதிலும் உள்ள ஆழத்தை எப்படி கண்டறிவது? ஆற்றில் இறங்கி மெதுவாக தடவித்தடவி செல்ல வேண்டியது தான்! கடக்க இயலாத அளவு ஆழம் இருப்பின் மாற்று வழி தேட வேண்டியது தான். இல்லாவிடில் ஆற்றையே பார்த்துக்கொண்டு கரையிலேயே உட்கார வேண்டியது தான்.

    • தகுதியான நபர்கள் மூலம் இலக்குகளை அடைவதே சிறந்த தலைமைப்பண்பாகும்.
    • தன்னம்பிக்கை மற்றும் தலைமை பண்புடன் உழைப்பவர்கள் வெற்றியை பரிசாக பெறுகிறார்கள்.

    சுயதொழில் அல்லது வியாபாரத்தை தொடங்கும் இளம் பெண் தொழிலதிபர்கள் அதை வெற்றிகரமாக நடத்தி செல்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் மன அழுத்தத்திற்கும் ஆளாகி விடுவதுண்டு. அதுபோன்ற சந்தர்ப்பத்தில் சூழ்நிலையை புரிந்து கொண்டு தமக்குள் இருக்கும் தலைமை பண்பை வெளிப்படுத்தி எவ்வாறு வெற்றி அடைவது என்பது இக்கட்டுரை விளக்குகிறது.

    தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் அனைத்து துறை சார்ந்த செய்திகளும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் வெற்றி பெறுவதற்கான அடிப்படை தகவல்கள் என்பது அனுபவம் வாய்ந்த மனிதர்களிடம் தான் உள்ளது. அப்படிப்பட்டவர்களை தொழில் அல்லது வர்த்தகத்தில் ஒருங்கிணைந்து வழிநடத்தி செல்வது தான் தொழில் முனைவோர்களுக்கான அடிப்படை தகுதியாக உள்ளது. அதாவது குறைந்த ஆற்றலை பயன்படுத்தி குறுகிய காலகட்டத்தில் தகுதியான நபர்கள் மூலம் இலக்குகளை அடைவதே சிறந்த தலைமைப்பண்பாகும்.

    தனது பலம் மற்றும் பலவீனம் ஆகியவை பற்றி தலைமை பொறுப்பில் உள்ளோர் நன்றாக அறிந்திருக்க வேண்டும். அப்போது தான் எந்த சூழ்நிலையிலும் தொழிலை நடத்தி செல்வதற்கான மனத்தெளிவு கிடைக்கும். தம்மைப்பற்றி பெருமையாகவோ அல்லது தாழ்வாகவோ நினைப்பவர்கள் எளிதாக சூழ்நிலை கைதிகளாக மாறுகிறார்கள். எனவே தம்முடைய பலம் மற்றும் பலவீனம் குறித்த விழிப்புணர்வு கொண்டவர்கள் ஒரு செயலை செய்ய முடியுமா அல்லது முடியாதா என்பதில்லை தெளிவாக சொல்வதன் மூலம் மற்றவர்களது நம்பிக்கையை எளிதாக பெறுகிறார்கள்.

    தொழில் முனைவோர்கள் எப்போதுமே தன்னம்பிக்கையுடன் முடிவுகளை எடுத்து அதை செயல்படுத்தும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பது அவசியம். அதற்கு தொழில் அல்லது வர்த்தகத்தில் தங்களுக்குரிய இடத்தை கச்சிதமாக அறிந்திருப்பதுடன் சக போட்டியாளர்கள் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான் முடிவெடுக்கும் திறன் மேம்படும்.

    திறமையான தொழில் முனைவோர்கள் தங்கள் செயல் திட்டங்களை சரியாக திட்டமிடுகிறார்கள். அவற்றில் மிக முக்கியமானவை, உடனடியாக செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை ஆகிய தகவல்களை தெளிவாக அட்டவணைப்படுத்தி வைத்திருப்பார்கள். குறிப்பாக தினமும் டைரியில் எழுதி வைத்துக்கொள்ளப்படும் குறிப்புகள் கூட வெற்றிக்கு அடிப்படையாக அமையக்கூடும். மேலும் எண்ணங்கள் குறிப்புகளாக எழுதப்படும் போது அவை ஒருவரது நிறை குறைகளை வெளிக்காட்டும் கண்ணாடியாக அமைகிறது. தினமும் டைரியில் அன்றைய தினத்தில் நடந்தவை பற்றி குறிப்பாக எழுதுவதன் மூலம் ஒருவரது நினைவாற்றல் மேம்படுகிறது. வெற்றிக்கு அது அவசியம்.

    தலைமை பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டுமானால் சொந்த அனுபவங்கள் மூலமாகவும், சரியான நபர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் திறனை பெற வேண்டும். தன்னம்பிக்கை மற்றும் தலைமை பண்புடன் உழைக்கும் பெண்கள் வெற்றியை பரிசாக பெறுகிறார்கள்.

    • உடை தேர்வு மற்றும் அலங்கார விஷயங்களில் கவனமாக இருங்கள்.
    • ஆடம்பரமான மேக்கப்பை தவிர்த்துவிடுங்கள்.

    தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களில் வளர்ந்த பெண்களும், படித்து முன்னேறி பெருநகரங்களுக்கு வேலைக்கு செல்கிறார்கள். அப்படி உங்களுக்கும், பெருநகர ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால், உடை தேர்வு மற்றும் அலங்கார விஷயங்களில் கவனமாக இருங்கள்.

    அதுநாள் வரை, மேக்கப் விஷயங்களில் ஆர்வம் இல்லாமல் உங்களுக்கு என ஒரு பிரத்யேக 'ஸ்டைல்'-ஐ கடைப்பிடித்திருக்கலாம். ஆனால் அது பெருநகர வாழ்க்கைக்கு பொருந்தாது. முடிந்தவரை, நகர சூழலுக்கு ஏற்ப சின்னச்சின்ன மேக்கப் மற்றும் உடை அலங்கார நுணுக்கங்களை கற்றுக்கொள்ளுங்கள். பணிச்சூழல், உடன் பணிபுரிபவர்களை பற்றி அறிந்த பிறகு, அலுவலகத்திற்கு அணிந்து செல்லக்கூடிய ஆடை, அலங்கார பொருட்களை வாங்கலாம்.

    எல்லோருடைய கவனத்தையும் சட்டென ஈர்க்கும் நிறங்களிலான உடைகளையும், உதட்டு சாயங்களையும், அலங்கார பொருட்களையும் தவிர்ப்பது நல்லது. ஆடம்பரமான மேக்கப்பை தவிர்த்துவிடுங்கள். அதற்காக மேக்கப் இல்லாமலும், பணிக்கு செல்லாதீர்கள். அதேபோல, அணியும் உடைக்கு ஏற்ற காலணி அல்லது ஷூ தேர்வும் முக்கியம்.

    சுடிதார், குர்த்தி, ஜீன்ஸ், லெக்கின்ஸ், பலாசோ, பிளேசர்ஸ்... இவை எல்லாம் ஐ.டி. கலாசாரத்தில் பொதுவானவை. அதனால் இத்தகைய உடைகளை தேர்ந்தெடுத்து உடுத்தலாம். பணியிடம் பழக்கமானதற்கு பிறகு, உங்களுக்கான 'ஸ்டைலை' மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

    உங்களுக்கு மேக்கப் விஷயங்களில் ஈடுபாடு இல்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் முகப்பொலிவை தக்க வைக்கும் சிறுசிறு விஷயங்களிலாவது ஆர்வம் செலுத்துங்கள். அதாவது, முகத்தை சுத்தமாக பராமரிப்பது; நக பூச்சு பூசவில்லை என்றாலும் நகங்களை சுத்தமாக பராமரிப்பது, முகம் கருக்காமல் இருக்க 'சன்ஸ்கிரீன்' போடுவது, யாரும் குறை சொல்லாதபடி தலை முடிகளை பராமரிப்பது போன்ற சின்னச் சின்ன விஷயங்களில் கவனமாக இருங்கள்.

    • உடன்பிறந்தவர்களைப்போல நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புவதை நிறுத்துங்கள்.
    • உடன்பிறந்தவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துங்கள்.

    ஒவ்வொரு சூழலிலும் தன்னை தாழ்த்தியும், பிறரை உயர்த்தியும் பார்க்கும் மனோபாவம் நமக்குள் வளர்வதை 'தாழ்வு மனப்பான்மை' என்கிறோம். ஒரு குழந்தை வளரும்போது, தன்னை சுற்றியுள்ளவர்களைப் போல தானும் ஆக வேண்டும் என்று விரும்பும். அந்த இடத்தில் இருந்தே தாழ்வு மனப்பான்மை ஆரம்பிக்கிறது. அது ஒருவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

    உடன் பிறந்தவர்களுக்கு இடையில், ஒருவரை விட மற்றொருவர் செய்யும் காரியங்கள் சிறப்பாக இருக்கும்போதும், அதை ஒப்பிட்டு, ஒருவர் மற்றவரை விமர்சிக்கும்போதும் அல்லது தங்கள் மீது அதிகாரத்தை நிலைநாட்டும்போதும் 'தாழ்வு மனப்பான்மை' ஏற்படும். இது அதிகமாகும்போது, 'வெற்றி அடைவோம்' என்ற எண்ணம் குறைந்து கொண்டே சென்று, மனதளவில் விரக்தி அடையச்செய்யும். இதன் மூலம், தொடர்ந்து தோல்வியும், முயற்சி செய்ய விரும்பாத மன நிலையும் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் மீதான பாசம் குறையும். அவர்களுடன் தன்னை ஒப்பிட்டு கொண்டிருப்பதிலேயே வாழ்க்கை ஓடும். இதில் இருந்து மீள்வதற்கு கீழ் உள்ளவற்றை செய்யலாம்.

    உடன்பிறந்தவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துங்கள். ஒரே தாய் வயிற்றில் பிறந்திருந்தாலும் அழகு, நிறம், படிப்பு, உடல் தோற்றம் போன்றவற்றில் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை இருக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். உங்களிடம் உள்ள குறைகளை மட்டுமே பார்த்துக்கொண்டு இருப்பது, உங்கள் நிறைகளை பார்க்க முடியாமல் செய்துவிடும்.

    உடன்பிறந்தவர்களைப்போல நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புவதை நிறுத்துங்கள். மற்றவரைப் போல இருக்க வேண்டும் என்று நினைப்பது தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும். நீங்கள் நீங்களாகவே இருக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய இயல்பான தன்மையை நேசியுங்கள். எந்த விஷயத்திற்காக நீங்கள், உடன்பிறந்தவர்களுடன் தாழ்வு மனப்பான்மை கொள்கிறீர்கள் என்று நிதானமாக யோசித்து எழுதுங்கள்.

    அவர்களை விட, நீங்கள் எவற்றில் எல்லாம் உயர்வாக இருக்கிறீர்கள் என்று சிந்தியுங்கள். ஒவ்வொருவரும் நேர்மறை பண்புகள் மற்றும் குறைபாடுகளின் வெவ்வேறு கலவையாகும். இந்தக் கருத்தைப் புரிந்துகொள்வது, உங்களை யதார்த்தமாக யோசிக்க வைக்கும். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்.

    கடந்த கால தவறுகளைப் பற்றி சிந்திப்பதற்கோ அல்லது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதற்கோ இடம்கொடு்க்காமல், தற்போதைய தருணத்திற்கு உங்களை மீண்டும் கொண்டு வர தியானம் உதவும். இதனால் உங்கள் தாழ்வு மனப்பான்மை குறையும். உங்களுடைய தனித்திறமை எதுவெனக் கண்டுபிடியுங்கள். அவற்றை வளர்த்து வாழ்வில் முன்னேறும்போது, உங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

    • தனது நிறத்தை பற்றி ஆண்களை விட, பெண்கள்தான் அதிகமாக கவலைப்படுகின்றனர்.
    • தன்னை அழகாக காட்டிக்கொள்ள நினைப்பவர்கள், முதலில் 'தான் அழகு' என்பதை நம்ப வேண்டும்.

    'சிவப்பழகுதான் அனைவரையும் ஈர்க்கும். கருப்பாக இருப்பது அழகு அல்ல' என்று சருமத்தின் நிறத்தை தங்களின் அடையாளமாக எண்ணி, தாழ்வு மனப்பான்மை கொள்ளும் பெண்கள் பலர் உள்ளனர். தனது நிறத்தை பற்றி ஆண்களை விட, பெண்கள்தான் அதிகமாக கவலைப்படுகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு, அங்கு இருப்பவர்களின் சரும நிறமும் வேறுபடுகிறது.

    நமது நாடு வெப்பம் நிறைந்தது என்பதால், இங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்றதாகவே நம்முடைய நிறம் அமைந்துள்ளது. தனது ஆளுமையை உயர்த்திக் காட்ட நினைக்கும் பெண்களில் பலர், தங்களின் திறமையை முழுமையாக வெளிக்கொணர முடியாமல் போவதற்கு நிறம் ஒரு தடையாக உள்ளது என்று நினைக்கின்றனர். அவ்வாறு கருதுவதால் அவர்களை அறியாமலே தாழ்வு மனப்பான்மை அதிகரிக்கிறது. அதுவே அவர்கள் நினைத்த இலக்கை எட்ட முடியாதவாறு தடுத்துவிடுகிறது.

    அதிகமான நிறங்களை வகைப்படுத்துவதில் ஆண்களை விட, பெண்கள் சிறந்தவர்கள் என்பது நாம் அறிந்ததே. ஆனால் பல வண்ணங்களில் ஆடை அணிய வேண்டும் என்று விரும்பும் பெண்கள் கூட, 'தன் நிறம் கருப்பு, அதனால் இந்த நிறம் பொருந்தாது, அந்த நிறம் பொருந்தாது' என்று தானாகவே ஒரு வரையறையை வகுத்துக்கொண்டு, குறிப்பிட்ட நிறங்களையே மீண்டும் தேர்ந்தெடுத்து அணிகிறோம். இது பல இடங்களில் நமக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது.

    தன்னை அழகாக காட்டிக்கொள்ள நினைப்பவர்கள், முதலில் 'தான் அழகு' என்பதை நம்ப வேண்டும். நம் தோற்றம், நம்மை விட மற்றவருக்கு 20 சதவீதம் கூடுதல் அழகாகத் தெரியும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

    அழகான தோற்றத்துக்கான ஆலோசனைகள்:

    1. நிறத்திற்கு தகுந்த ஆடை அணிவதைத் தவிர்த்து, உங்களுக்குப் பிடித்த நாகரிகமான ஆடையை அணிய பழகுங்கள். அவ்வாறு அணியும்போது உங்களை அறியாமலே மகிழ்ச்சி கூடும். அது தானாகவே உங்கள் முகத்தில் புன்முறுவலையும், மனதில் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். மற்றவர்களிடம் இருந்தும் பாராட்டு பெறுவீர்கள்.

    2. அதிகமான அலங்காரத்தை தவிர்த்து, எளிய முறையில், அணியும் ஆடைக்குப் பொருந்தும் வகையில் அணிகலன்களை தேர்வு செய்யுங்கள். அது பார்ப்பவரை முகம் சுளிக்க வைக்காது, உங்களுக்கும் அசவுகரியம் ஏற்படாது.

    3. எப்பொழுதும் புன்னகையை முகத்தில் தவழ விடுங்கள். புன்னகையே பல சமயம் சிறந்த அலங்காரமாகும்.

    4. நிறத்தை பற்றிய கவலையை விடுத்து, உங்களிடம் இருக்கும் திறமையைக் கண்டறிந்து, அதை முழுமையாக வளர்த்து, தன்னம்பிக்கையுடன் மற்றவர்களிடம் பழகத் தொடங்குங்கள்.

    5. தனிமையை தவிர்த்து நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவது நல்லது. உங்கள் நிறத்தைப் பற்றிய விமர்சனத்தை யாராவது முன் வைக்க நேர்ந்தால், சற்றும் தளராமல் 'அது ஒரு குறை அல்ல' என்று ஆணித்தரமாக உணர்த்துங்கள். நாளடைவில் உங்களை விமர்சித்த கூட்டம் குறைந்து, உங்களை முன்மாதிரியாக பின்பற்றும் நண்பர்கள் கூட்டம் அதிகரிக்கும்.

    தாழ்வு மனப்பான்மை தேவையற்றது. இது மனிதர்களை சோர்வடையச் செய்துவிடும். மேலும் அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளி வராமல் தடுத்துவிடும்.
    1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான் நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்..

    2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள். இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

    3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும் அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித்தனமாய் முயற்சி செய்யுங்கள்..

    4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை….



    5. உங்களுக்கு எதுவும் தெரியாது எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்… இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது..

    6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

    7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

    8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை. நிராகரித்தவருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்..
    ×