search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Independance day"

    • பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 60 காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    நாடு முழுவதும் இன்று சுதந்திர தினவிழா கோலா கலமாக கொண்டாடப்பட்டது.

    கலெக்டர் தேசிய கொடியேற்றினார்

    தூத்துக்குடி மாவட்டம் சார்பில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவில் 71 பயனாளி களுக்கு ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கி சிறப்புரையாற்றி பேசினார்.

    மேலும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த அதிகாரிகளுக்கு நற்சான்றி தழ்களை கலெக்டர் செந்தில் ராஜ் வழங்கினார். மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 60 காவல்துறை யினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    போலீசாருக்கு சான்றிதழ்

    அந்த வகையில் தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம், தூத்துக்குடி டி.எஸ்.பி. சுரேஷ், திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு டி.எஸ்.பி. சம்பத், கோவில்பட்டி மேற்கு குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுகாதேவி, எட்டையாபுரம் இன்ஸ் பெக்டர் ஜின்னா பீர்முகமது உட்பட 60 காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கூடுதல் கலெக்டர் தாக்ரே சுபம் ஞானதேவ் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட னர்.

    • 37 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
    • 24 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

    திருப்பூர் :

    திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் திருப்பூர் நகரம், காங்கயம், தாராபுரம், உடுமலை பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் தேசிய பண்டிகையான சுதந்திர தினத்தன்று ஆய்வு மேற்கொண்டனர்.

    சுதந்திர தினத்தன்று தொழில் நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தியுள்ள தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். அல்லது சம்பளத்துடன் கூடிய மாற்றுவிடுமுறை அளிக்க வேண்டும். இதுதொடர்பாக தொழிலாளர்களின் சம்மதத்துடன் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே விவரம் தெரிவிக்க வேண்டும். நேற்று தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது தொடர்பாக, 37 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். இதில் 24 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்தபோது 51 முரண்பாடுகளும் என மொத்தம் 48 நிறுவனங்களில் 75 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தெரிவித்துள்ளார்.

    • நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது
    • காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி 66 பேருக்கு சான்றிதழை வழங்கினார்.

    கோவை

    நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் சமீரன் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். வண்ண பலூன்களையும் அவர் பறக்க விட்டார். தொடர்ந்து காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி 66 பேருக்கு சான்றிதழை வழங்கினார். இதேபோல் அரசு டாக்டர்கள், சுகாதா–ரத்துறை பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கும் பாராட்டு சான்றிதழை வழங்கி கவுரவித்தார்.

    பின்னர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி, வனத்துறை, உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட விளையாட்டு துறை, தென்னை ஆராய்ச்சி மையம், கோவை அரசு கலைக் கல்லூரியில் உள்ள தேசிய மாணவர் படை மாணவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் துறை, மாவட்ட ஆலோசனை மையம் ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றிய 176 பேருக்கு மாவட்ட நிர்வாகத்தின் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஆரோக்கிய யோஜனா திட்டத்தில் சிறப்பாக சேவை செய்த கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, சவுரிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மாவட்ட முன்மாதிரி கிராம விருது கேடயம் மற்றும் ரூ. 7.5 லட்சம் பரிசு தொகையை கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் பெற்றது. முன்னதாக, கொரோனா நோய் தொற்று காரணமாக சுதந்திர தின விழாவில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். கலை நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    விழாவில் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், டி.ஐ.ஜி முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், துணை போலீஸ் கமிஷனர்கள், சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு, துணை கமிஷனர்கள், மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ், அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி டீன் ரவீந்திரன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்செல்வன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

    சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு வீடுகளுக்கு சென்று சான்றிதழ் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல், கோவை மாநகராட்சி வளாகத்தில் மேயர் கல்பனா தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். உடன் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.சுதந்தி தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • விழா நடக்கும் இடங்களில் போலீசார் கேமராக்கள் மூலம் கண்காணித்தனர்.
    • முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    திருப்பூர் :

    சுதந்திர தினவிழாவையொட்டி திருப்பூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. திருப்பூர் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா நடைபெறும் சிக்கண்ணா கல்லூரி மைதானம் ஆகியவை போலீசாரின் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டது. விழா நடக்கும் இடங்களில் போலீசார் கேமராக்கள் மூலம் கண்காணித்தனர்.

    ரெயில் நிலையம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் திருப்பூர் மாநகர் முழுவதும் போலீசார் ரோந்துப்பணிகள், வாகன சோதனையில் ஈடுபட்டனர். மாநகரில் 10-க்கும் அதிகமான இடங்களில் விடிய, விடிய வாகன சோதனைகள் நடத்தப்பட்டது. முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.இது தவிர மாவட்டத்தின் பிற பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

    • சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறா, பலூன் பறக்க விடப்பட்டது.
    • 258 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    இந்தியாவின் 75 -வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். இதையடுத்து சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறா, பலூன் பறக்க விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.

    தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். அதன்படி திருப்பூர் மாநகர போலீசில் பணியாற்றும் 53 பேருக்கும் மாவட்ட போலீசில் பணியாற்றும் 40 பேருக்கும், தீயணைப்பு வீரர்கள் 10 பேர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரிகள், சுகாதார பணியாளர்கள், மருத்துவ அதிகாரிகள், வேளாண் துறை, மாநகராட்சி ஊழியர்கள் என மொத்தம் 258 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பின்னர் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விலையில்லா வீட்டு மனைபட்டா, தாட்கோ திட்டத்தின் மூலம் சுற்றுலா வாகனம், பயணிகள் ஆட்டோ, சரக்கு வாகனம், மாவட்ட தொழில் மையம் சார்பில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என ரூ.1 கோடியே 41 லட்சத்து 52 ஆயிரத்து 129 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வினீத் வழங்கினார்.

    தொடர்ந்து திருப்பூர் மாவட்ட போலீஸ் மோப்பநாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், துணை கமிஷனர்கள் வனிதா, அபினவ் குமார் மற்றும் திருப்பூர் மாவட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர், எஸ்.பி., மேயர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பேரணியை தொடங்கி வைத்தனர்.
    • 75 வகை மரக்கன்றுகள் நடப்பட்டன.

    திருப்பூர் :

    நாட்டின், 75வது சுதந்திர தின பவள விழாவையொட்டி திருப்பூரில் இன்று பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்ற பிரம்மாண்ட சுதந்திர தினவிழா பேரணி நடைபெற்றது. திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு, இன்று காலை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கலெக்டர் வினீத், மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், எஸ்.பி.,சஷாங் சாய், மேயர் தினேஷ்குமார் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பேரணியை தொடங்கி வைத்தனர். முன்னதாக, 75 வகை மரக்கன்றுகள் நடப்பட்டன.

    அலங்கார ஊர்தி, ஊர்க்காவல் படையினரின் மிடுக்கான பேண்ட் வாத்திய அணிவகுப்பு,தேசியக்கொடி ஏந்திய குதிரை வீரர்கள் அணிவகுப்பு, பள்ளி மாணவர்களின் ஸ்கேட்டிங், மராத்தான் வீரர்களின் மித ஓட்டம், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அணிவகுப்பு, தொழில் அமைப்பினரின் அணிவகுப்பு, பொதுநல அமைப்பினர், தன்னார்வ அமைப்பினர், லயன்ஸ் மற்றும் ரோட்டரி அமைப்பினரின் சீரான அணிவகுப்புடன் பல்வேறு தரப்பினரும் பிரம்மாண்ட பேரணியில் பங்கேற்றனர். பேரணியில் பல அடி நீளமுடைய பிரம்மாண்ட தேசிய கொடியை மாணவர்கள் கொண்டு சென்றனர். இது பார்ப்போரை பிரமிக்க வைத்தது.

    4 இடங்களில், பவளக்கும்மியாட்டம், பெருஞ்சலங்கையாட்டம், பரத நாட்டியம் போன்ற, மேடை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பேரணி பழைய பஸ் நிலைய மேம்பாலம், வளர்மதி பாலம், பார்க்ரோடு வழியாக, நஞ்சப்பா பள்ளியை சென்றடைந்தது. பள்ளி வளாகத்தில் பேரணியை வரவேற்கும் வகையில் தேசப்பற்று கலை நிகழ்ச்சிகளும், தன்னம்பிக்கை பேச்சாளர் பாரதி பாஸ்கரின் சுதந்திர தின எழுச்சி சொற்பொழிவும் நடைபெற்றது. வானுயர பறக்கும் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மூவர்ண பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன. சுதந்திர தின பவளவிழா உறுதிமொழி ஏற்பு, தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது. தேசப்பற்றை நெஞ்சில் சுமந்தபடி, தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி, வீரர், வீராங்கனைகளும், எதிர்கால சந்ததியினரும் பேரணியில் பங்கேற்றனர்.

    • மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய வேண்டும்.
    • மது விற்பனை செய்தால் நடவடிக்கை மேறகொள்ளப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு, டாஸ்மாக்கின் கீழ் இயங்கி வரும் மதுபான கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் ஆகியவை சுதந்திர தினத்தன்று மூடப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய வேண்டும்.

    தவறும்பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேறகொள்ளப்படும் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம் என்று உறுதி எடுப்போம்.
    • மனிதநேயம் மிக்கவர்களாக உங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

    திருப்பூர் :

    கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- 75-வது சுதந்திர தின ஆண்டைக் கொண்டாட தயாராகும் இந்த நேரத்தில் பலர் செய்த தியாகத்தை நாம் நினைவு கூர்ந்து நமக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் சிறப்புகளை நினைவுபடுத்திக்கொண்டு நாம் நம்முடைய அடுத்த சந்ததியினருக்கு அவசியம் அறிய செய்ய வேண்டும்.

    அண்டை நாடுகளின் அச்சுறுத்தல், தீவிரவாதிகளின் அட்டகாசம் இவைகளுக்கு நடுவே நீங்கள் லட்சியவாதிகளாகவும், மனிதநேயம் மிக்கவர்களாகவும் உங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். பல்வேறு தலைவர்களும், முகம் தெரியாத போராளிகளும் பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம் என்று உறுதி எடுப்போம். கொங்கு நாடு மக்கள் சார்பாகவும், கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் சார்பாகவும் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ரூ.145 லட்சம் மதிப்பில்,நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது.
    • 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளி உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், ரூ.145 லட்சம் மதிப்பில்,நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது. இந்த நிலையில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும் தமிழக முதல்வர், சுற்றுச்சூழல் துறை, மாவட்ட ஆட்சியர், ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

    மேலும் வீடுகளில் கருப்புக்கொடி போராட்டம், உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில்,பல்லடத்தில் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாட நகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.பச்சாபாளையம் பகுதியில்,நகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று தேசியக்கொடி வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் பச்சாபாளையத்தில் உள்ள வீடுகளில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியுடன்,கருப்பு கொடியும் பறக்கும் என அறிவித்துள்ளனர்.இதுகுறித்து பச்சாபாளையம் பொது மக்கள் கூறியதாவது:-

    சுற்றுப்புறம் குடியிருப்புப் பகுதிகள் உள்ளது. 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளி உள்ளது. ஏற்கனவே கடும் போக்குவரத்து நெரிசல் உள்ள இந்தப் பகுதியில் மின்மயானம் அமைந்தால் கடும் போக்குவரத்து நெரிசல் உடன், சுற்றுப்புறச் சூழலும் கெடும்.எனவே, பச்சாபாளையத்தில் மின்மயானம் அமைப்பதை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 10நாட்களாக வீடுகளின் முன்பு கருப்புக்கொடிகளை பறக்க விட்டுள்ளோம்.இந்த நிலையில் நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், வீடு தோறும் தேசிய கொடியையும் மற்றும் கருப்பு கொடியையும் பறக்கவிடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • 75 மாணவர்கள் கலந்து கொள்ளும் ஓவிய போட்டி நடைபெறுகிறது.
    • 75 மாணவ மாணவிகள் தொடர் வாசிப்பை மேற்கொள்ள உள்ளனர்.

    உடுமலை :

    பாரத திருநாட்டின் 75 -வது சுதந்திர தின விழா நிறைவை ஒட்டி உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எண் இரண்டில் 75 மாணவர்கள் கலந்து கொள்ளும் ஓவிய போட்டி நடைபெறுகிறது. வருகிற 13, 14-ந்தேதி ஆகிய 2 நாட்கள் ஒரே சமயத்தில் 75 மாணவ மாணவிகள் தேசத் தலைவர்களின் படங்களை வரையும் இந்த நிகழ்ச்சியில் உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு மகளிர் இல்ல மாணவிகள் கலந்து கொண்டு இந்த போட்டியில் ஓவியங்களை வரைய உள்ளனர்.

    இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு உடுமலை 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழா குழுவினர் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும். அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் வாசிப்பின் அவசியத்தையும் உணர்த்தும் வகையில் 75 மாணவ மாணவிகள் தொடர் வாசிப்பை மேற்கொள்ள உள்ளனர். இரு நிகழ்ச்சிகளை உடுமலை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் நாகராஜ் துவக்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலக வாசகர் வட்ட தலைவர் இளமுருகு ,துணைத்தலைவர் சிவகுமார் ,நூலக வாசகர்வட்டஆலோசகர் அய்யப்பன், பேராசிரியர் கண்டி முத்து, ஓவியர் வீரமணி, நூலகர் கணேசன், மகளிர் வாசகர் வட்ட தலைவர் நல்லாசிரியர் விஜயலட்சுமி ,நூலகர்கள் மகேந்திரன், பிரமோத் ,அஷ்ரப் சித்திகா, மற்றும் நூலக வாசகர் வட்டத்தினர் செய்து வருகின்றனர். ஓவிய போட்டி மற்றும் வாசிப்பு நிகழ்ச்சிகளை உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியரும் மகளிர் வாசகர் வட்ட தலைவருமான விஜயலட்சுமி ஒருங்கிணைக்கிறார் .

    • டெல்லியில் 75-வது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.
    • விழாவில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

    உடுமலை :

    வருகிற 15 ந் தேதி டெல்லியில் 75-வது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதை யொட்டி அணிவகுப்பை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    விழாவில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும் .இந்த சுதந்திர தின விழா அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற உள்ள சுதந்திர தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கு உடுமலை ஸ்ரீ. ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படிக்கும் தேசிய மாணவர் படை மாணவி ஆர்.அபர்ணா மற்றும் தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளரான இந்த கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியரான தேசிய மாணவர் படை அலுவலர் பி.கற்பகவள்ளி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் காருண்யா பல்கலைக்கழகத்தில் பயிற்சி முடித்து இன்று கோவையில் இருந்து டெல்லிக்கு புறப்படுகின்றனர்.

    இவர்கள் இருவரையும் உடுமலை ஸ்ரீ. ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி செயலாளர் சுமதிகிருஷ்ணபிரசாத், இயக்குனர் ஜெ.மஞ்சுளா, முதல்வர் என்.ராஜேஸ்வரி மற்றும் பேராசிரியைகள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

    ×