search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "immunity"

    • குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை.
    • குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள் ஆகும். ஆகையால், குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்...

    * வைட்டமின் `ஏ' குறைந்தால் கண்பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ' அதிகம் காணப்படுகிறது.

    * வைட்டமின் `பி' குறைந்தால், குழந்தைகளுக்கு வயிறு மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

    * வைட்டமின் `சி' குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். குழந்தைகளுக்கு எலும்புகள் பலம் குறையக்கூடும், பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளைக்கிழங்கு, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

    * வைட்டமின் `டி' இல்லாவிட்டால், குழந்தைகளின் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி' போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும். போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் 'டி'யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி' அதிகம் உள்ளது.

    * வைட்டமின் `ஈ' குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இது குழந்தைகளில், ரத்தம் உறைதல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `ஈ' சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.

    • குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய புரதம் உள்ளது.
    • நோய் எதிர்ப்பாற்றலை கூட்டுகிற வல்லமை தாய்ப்பாலில் உள்ளது.

    தாய்மார்களுக்கு 600 மில்லி முதல் 1000 மில்லி வரை ஒரு நாளைக்கு தாய்ப்பால் உற்பத்தி செய்யக்கூடிய திறன் உள்ளது. பருமனானவர், ஒல்லியானவர் என்றெல்லாம் எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து தாய்மார்களாலும் இந்த அளவுக்கு தாய்ப்பாலை உற்பத்தி செய்ய முடியும். குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய புரதமான லாக்டால்புமின் (lactalbumin) தாய்ப்பாலில் உள்ளது. இது மாட்டுப்பால் போன்ற பிற மாற்றுப் பொருட்களில் இருக்காது.

    குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா, வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துகிற, மற்றும் நோய் எதிர்ப்பாற்றலைக் கூட்டுகிற வல்லமை தாய்ப்பாலில் உள்ளது. தாய்ப்பால் குடிக்கும்போது மட்டுமே குழந்தையின் நாக்கு, வாய் போன்றவை அசைந்து வேலை செய்கின்றன.

    புட்டிப்பாலை பயன்படுத்தும்போது, அது குழந்தைகளின் எதிர்ப்பாற்றலையும் அசைவையும் குறைத்துவிடும். திரும்பவும் தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தைகள் மார்பை பிடித்து சப்பிக் குடிக்க மறுக்கும். மார்பகத்தில் இருந்து நேராக பால் புகட்டும்போது தாய்க்கும் சேய்க்குமான அன்பு உறவு வளரும். குழந்தை பாதுகாப்பாக இருப்பதாக உணரும்.

     தாய்ப்பாலைத் தவிர மற்ற பொருள்கள் குழந்தையின் சிறுநீரகத்துக்கு பாதிப்பானது என்பது உண்மையா?

    தாய்ப்பாலைத் தவிர பிற மாற்றுப் பொருட்களையும் குழந்தையால் எடுத்துக்கொள்ள இயலும். ஆனால் மாட்டுப்பால் போன்ற மாற்றுப்பொருட்களில் உள்ள உப்புச்சத்துகள், ஸ்டார்ச் போன்றவை குழந்தைகளின் இளம் சிறுநீரகத்துக்கு பாரமே. இதனால் சிரமங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவேதான் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கட்டாயம் என அறிவுறுத்தப்படுகிறது.

    மாடுகள் பாலுக்காக வளர்க்கப்படுவதற்கு முன்னர், தாய்ப்பால்தான் குழந்தைகளுக்கு முதன்மையான உட்பொருளாக இருந்தது. மனிதகுலம் அழியாது வளர்வதற்கு தாய்ப்பால் முக்கியக் காரணமாக உள்ளது. பிற பொருட்களைக் கொடுத்தால் குழந்தையின் வளர்ச்சியில் சிக்கல்கள் எழும் வாய்ப்புள்ளது.

    குழந்தை பிறந்தவுடன் சர்க்கரைத்தண்ணீர், இனிப்பு போன்றவற்றை கொடுப்பது சரியா?

    சர்க்கரைத் தண்ணீர், இனிப்பு போன்றவற்றை கொடுப்பது மிகவும் தவறு. அதுபோன்ற செயல்களை ஊக்குவிக்கவோ ஆதரிக்கவோ கூடாது. இதுகுறித்து சரியான விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் வேண்டும். சர்க்கரைத் தண்ணீரைக் கொடுத்தால் குழந்தைகளின் வயிறு நிறைந்து விடும், பசி ஏற்படாது. பசி இருந்தால்தான் குழந்தைகள் மார்பை பிடித்து சப்பிக் குடிக்கும். குழந்தைகள் பசி எடுத்து சப்புவதுதான் தாய்ப்பால் புகட்டலின் முக்கியமான பகுதி.

    மேலும் தாய்ப்பால் புகட்டுவது தனிமனித செயல்பாடு அல்ல, சமூகச் செயல்பாடு. இதனால் குழந்தைகளின் நலம் உந்தப்படுவது மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரமும் சேமிக்கப்படுகிறது. தாய்ப்பாலுக்கு மாற்றுப்பொருள் உற்பத்தி செய்தால் ஒரு நாளைக்கு 600 மில்லி முதல் 1000 மில்லி என்பது, பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தக் கூடியது. தாய்ப்பால் இவற்றில் இருந்து காத்து குழந்தைகளின் நலனை உறுதி செய்கிறது.

    • உடலில் ‘தடுப்பாற்றல் மண்டலம்’ என்ற தற்காப்பு படை உள்ளது.
    • நுண் கிருமிகளிடம் இருந்து உடலைப் பாதுகாத்து வருகிறது.

    நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தவரை, `இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி', 'செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி' என இரண்டு வகைகள் உண்டு. கோடிக்கணக்கான நுண்கிருமிகள் உடலின் திசுக்களுக்குள்ளும், உறுப்புகளுக்குள்ளும் புகுந்து நம்மை ஆட்டிப் படைக்கின்றன.

    மனித உடலில் 'தடுப்பாற்றல் மண்டலம்' என்ற தற்காப்புப் படை உள்ளது. இதுதான் நுண் கிருமிகளிடம் இருந்து உடலைப் பாதுகாத்து வருகிறது. நாம் நடந்தாலும், ஓடினாலும், அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தாலும், உறங்கினாலும் 24 மணி நேரமும் இடையறாது நம்மைக் காவல் காக்கிறது. நம் ரத்தம்தான் இதன் 'தலைமையகம்'.

    ரத்த வெள்ளை அணுக்கள்தான் போர் தளபதிகள். டி அணுக்கள், பி அணுக்கள், 'மேக்ரோபேஜ்' அணுக்கள், 'எதிர் அணுக்கள்' என்று பலதரப்பட்ட சிப்பாய்கள் போர் தளபதியின் கீழ் இயங்கும் படையில் இரவு பகல் பாராமல் பணிபுரிகின்றனர். ரத்தக்குழாய்களும், ரத்தக் குழாய்க்கு வெளியில் இருக்கும் நிணநீர்க் குழாய்களும்தான் யுத்தம் நடக்கும் இடங்கள்.

    கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகளுடன்தான் யுத்தம். வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா ஆகிய நான்கு வகைகளில் அவை அடங்கும். இந்த 'எதிரிகள்' நம் உடலுக்குள் நுழையும்போது, அவர்களை தடுக்க ரத்த வெள்ளை அணுக்கள் கட்டளையிடுகின்றன.

    அதை ஏற்று, சிப்பாய் படை எதிரிகளைக் கொல்கின்றன. சில சிப்பாய்கள், கொல்லப்பட்ட எதிரிகளை அப்படியே விழுங்கி, அந்த இடத்தை துப்புரவு செய்கின்றன.

    இந்த எதிரிகளை நினைவில் வைத்துக்கொண்டு, இனியும் இதுபோன்ற எதிரிகள் உடலுக்குள் நுழைகிறார்களா என்பதை வேவு பார்க்க உளவாளிகளும் உண்டு. இப்படி, நம் எதிரிகளை அழித்து, அவை உண்டாக்கும் பல நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது, உடலின் தற்காப்புப்படை. இதற்கு 'நோய் எதிர்ப்பு சக்தி' அல்லது `நோய்த் தடுப்பாற்றல்' என்று பெயர்.

    நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தவரை, 'இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி', 'செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி' என இரண்டு வகைகள் உண்டு. 'இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி' என்பது உடலில் பிறவியிலேயே அமைந்திருப்பது.

    செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி என்பது, தடுப்பு மருந்துகள் தருவது. ஒரு நோய்க் கிருமியை அழிப்பதற்கு நம் உடலில் எதிர்ப்புச் சக்தி கிடைக்க வேண்டும் என்றால், அந்தக் கிருமியையே உடலுக்குள் செலுத்த வேண்டும். இதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவைதான் தடுப்பூசிகள்.

    தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் மூலம் வீரியம் குறைந்த நோய்க் கிருமிகளைச் சிறிதளவு நம் உடலுக்குள் செலுத்தினால், அந்தக் கிருமிகளுக்கு எதிராக 'எதிர் அணுக்கள்' உருவாகி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிவிடும். பிறகு, மற்றொரு சமயத்தில் இதே நோய்க்கிருமிகள் நம் உடலுக்குள் நுழையும்போது, ஏற்கனவே உள்ள எதிர் அணுக்கள் அந்தக் கிருமிகளை அடையாளம் கண்டு அழிக்கின்றன.

    • உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
    • உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது.

    செம்பருத்தி ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து, அதிகப்படியாக சேர்வதை தடுக்கும். உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். காய்ந்த இதழ்களை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    தேவையானபொருட்கள்:

    செம்பருத்தி இதழ் (காய்ந்தது ) – 5 இதழ்,

    தண்ணீர் 1 கப் – 150 மி.லி,

    நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் – 1 ஸ்பூன்.

    செய்முறை:

    பாத்திரத்தில் 150 மி.லி தண்ணீரை கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் செம்பருத்தி இதழை போட்டு ௫ நிமிடங்கள் கொதித்தபின் வடிகட்டி நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து குடிக்கவும். ஒரு நாளைக்கு 2 – 3 தடவை குடிக்கலாம். காலை உணவுக்கு பின் குடிப்பது உடலுக்கு நல்லது.

    மற்றொருமுறை:

    ஒரு கப் தண்ணீரில் புதிதாக பூத்த 4 செம்பருத்தி பூக்களை சேர்த்து அதனுடன் நான்கு துளசி இலை, சுக்கு, ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். வடிகட்டி நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். காலை நேரத்தில் பருக உடலும் மணமும் பலப்படும்.

    பலன்கள்

    * மன அழுத்தம் மற்றும் வேலை பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்படும். இதனால் உடலின் உள்ளுறுப்புகள் பாதிப்படையும். செம்பருத்தி டீ, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதயம் சுருங்கி விரிவதற்கு வலிமையைத் தருகிறது.

    சூடான செம்பருத்தி டீ, ஒரு கப் காலை உணவு உண்பதற்கு முன் வெறும் வயிற்றில் குடிப்பதால் நல்ல பலனைக் காணலாம்.

    செம்பருத்தி டீயில் தேன் கலந்து பருகுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. பல்வேறு ஊட்டச்சத்துகள் இந்த டீயில் உள்ளது. இந்த டீ கருப்பை கட்டிகளைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது.

    * தற்போது ப்ளாக் டீ, க்ரீன் டீ போன்றவை உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் உள்ளதால் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. செம்பருத்தி செடியில் இருந்து செய்யப்படும் செம்பருத்தி டீ அந்த வரிசையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

    செம்பருத்தி பூவிற்கு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத தன்மை உள்ளது. காய்ச்சலால் அவதிப்பட்டு அதிக சளி உள்ளவர்கள், ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை செம்பருத்தி டீயைப் பருகலாம்.

    * பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி போன்றவற்றைப் போக்க செம்பருத்தி டீயைப் பருகலாம். கர்ப்ப காலங்களில் செம்பருத்தி டீ பருகுவதால், ஹார்மோன்கள் சமச்சீராக இருக்க உதவுகின்றன.

    * கர்ப்பப்பை கட்டிகள் இருக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த செம்பருத்தி டீயை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மிக விரைவாகவே நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

    • குளிர்காலத்தில் காற்று உலர் தன்மை கொண்டிருக்கும்.
    • எலக்ட்ரோ லைட்டுகளை வழங்கும் பானமாக இளநீர் விளங்குகிறது.

    கோடை டை காலத்தில் பருவதற்கு சிறந்த பானமாக கருதப்படும் இளநீரை குளிர் காலத்திலும் ருசிக்கலாம். ஏனெனில் அதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளம் நிரம்பியுள்ளன. குளிர்கால நிலைக்கு ஏற்ப உடலை மேம்படுத்தவும், புத்துணர்ச்சியூட்டவும்உதவுகிறது. குளிர் காலத்தில் ஏன் இளநீர் பருக வேண்டும் என்பதற்கான காரணங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

    நீரேற்றம்

    குளிர்காலத்தில் காற்று உலர் தன்மை கொண்டிருக்கும். கோடை காலத்தை போல தாகத்தை உணர முடியாது. பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய எலக்ட்ரோ லைட்டுகளை வழங்கும் பானமாக இளநீர் விளங்குகிறது. இயற்கையாகவே உடல் நீரேற்றமாக இருக்க வழிவகை செய்கிறது.

    எலக்ட்ரோலைட்

    குளிர்காலத்தில் விளையாட்டு போட்டிகள் அல்லது உடற்பயிற்சிகளில் ஈடுபடும்போது நீரிழப்பு ஏற்படும். எலக்ட்ரோலைட் சமநிலையின்மைக்கும் வழிவகுக்கும். இளநீர் இயற்கையாகவே எலக்ட்ரோலைட்டுகளை கொண்டது. உடல் செயல்பாடுகளின் போது வியர்வை மூலம் இழக்கப்படும் திரவங்கள் மற்றும் தாதுக்களை நிரப்புவதற்கு இளநீர் சிறந்த தேர்வாக அமையும்.

    வெப்பநிலை

    குளிர்காலத்தில் உடல் வெப்பநிலையை சீராக பராமரிப்பது முக்கியம். இளநீர் உடல் வெப்ப நிலையை ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள் ளும். குளிர்ந்த ர்ந்த காலநிலையில் உடல் வெப்ப நிலையை சமநிலையில் பேணுவதற்கு வித்திடும்.

    ஆற்றல்

    இளநீரில் இயற்கையான சர்க்கரை மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. அவை குளிர்பானங்களுக்கு ஆரோக்கியமான மாற்றாக விளங்குகின்றன. குளிர்காலங்களில் ஆட்கொள்ளும் சோர்வு மற்றும் சோம்பலை எதிர்த்து போராடும் பணியை இளநீர் மேற்கொள்ளும். உடலுக்கு விரைவான ஆற்றலையும், சக்தியையும் அளிக்கும்.

    ஊட்டச்சத்துக்கள்

    வைட்டமின்கள் (வைட்டமின் சி மற்றும் பி-காம்ப்ளக்ஸ்) மற்றும் தாதுக்கள் (பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம்) உள்ளிட்ட முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இளநீரில் உள்ளன. அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும். குளிர் காலங்களில் நோய் தாக்கத்தை எதிர்த்து போராடுவதற்கு ஏற்ப உடலுக்கு சக்தியை வழங்கும் பயனுள்ள பணியை இளநீர் செய்யும்.

    நோய் எதிர்ப்பு சக்தி

    சளி மற்றும் காய்ச்சல் போன்ற குளிர்கால நோய்களை தடுக்க வலுவான நோய் எதிர்ப்பு அமைப்பு அவசியம். இளநீரில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.

    செரிமானம்

    குளிர்காலத்தில் விரும்பிய உணவுகளை பலரும் அதிகமாக சாப்பிட்டு விடுவார்கள். பிறகு செரிமான தொந்தரவுக்கு உள்ளாகி அவதிப்படுவார்கள். இளநீர் உணவு துகள்களை உடைத்து செரிமான செயல்பாடுகளை துரிதப்படுத்தி அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

    • கொசு கடிப்பதால் இந்த நோய் உண்டாகிறது.
    • டெங்கு தாக்குதலில் முக்கியமானது நோய் எதிர்ப்பு சக்தி

    டெங்கு காய்ச்சல், நான்கு வகையான டெங்கு வைரஸ்களில் ஒன்றை கொண்டு செல்லும் கொசு கடிப்பதால் இந்த நோய் உண்டாகிறது. ஏடிஎஸ் கொசுக்களால் பரவும் இது ஜிகா மற்றும் சிக்குன்குனியாவையும் உண்டு செய்கிறது. இவை தீவிரமான நிலையில் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும். இந்த டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க வந்தால் குணப்படுத்த உதவும் ஆயுர்வேத மருத்துவ முறை மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

    டெங்குவின் தாக்கம் ஒரு வாரகாலத்துக்குள் குறையவும், அதேநேரம் ரத்த தட்டுக்களின் உற்பத்தி விகிதத்தை அதிகரிக்கவும், நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலமும் உடலை புத்துயிர் பெறவும் கவனமாக இருக்க வேண்டும். ஆயுர்வேதத்தில் டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க 30-க்கும் மேற்பட்ட மருந்துகள் உள்ளன.

    * டெங்கு தாக்குதலில் முக்கியமானது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது தான். மேலும் உடலில் வளர்சிதை மாற்றத்தை பராமரிப்பதும் முக்கியம் ஆகும். இந்த அமிழ்தவள்ளி மற்றும் துளசி இலைகளின் தண்டுகளை சேர்த்து கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் மூலிகை பானம் டெங்குபாதிக்கப்பட்ட உடலில் எதிர்ப்பு சக்தியை அளிக்க கூடும்.

    * துளசி நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. துளசி இலையை கருப்பு மிளகு சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் தண்ணீரை இரண்டு மணி நேரம் இடைவெளியில் குடித்து வர வேண்டும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவும். துளசி மருத்துவ குணங்களை கொண்டது என்பதோடு பக்கவிளைவுகள் இல்லாமல் இருக்க அளவோடு எடுப்பது நல்லது.

    * பப்பாளி இலைகளை நசுக்கி அல்லது அதன் சாறு எடுத்து நேரடியாக குடித்து வரலாம். இது டெங்குவால் உடலில் ரத்த அணுக்கள் குறைந்திருப்பதை அதிகரிக்க செய்வதோடு சோர்வு மற்றும் குமட்டல் அறிகுறிகளையும் நீக்க செய்கிறது. உடலில் ரத்த அணுக்கள் அதிகரிக்கும் வரை தினமும் பப்பாளி இலை சாறு குடித்து வரலாம்.

    * கரு ஊமத்தை சக்தி வாய்ந்த மூலிகை. இது டெங்குவினால் உண்டாகும் அறிகுறிகளை குறைக்க செய்கிறது. பெரும் மருத்துவ குணங்களை கொண்டுள்ள இது நன்மை செய்யகூடியது என்றாலும் சுயமாக எடுக்கமால் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் கலந்தாலோசிட்து எடுப்பது நல்லது.

    * நெல்லிக்கனி வைட்டமின் சி நிறைந்தது. உடலில் நோயெதிர்ப்புசக்தியை அதிகரிக்க வைட்டமின் சி மிகவும் உதவும். ஆயுர்வேதத்தில் நெல்லி அற்புதமான மருத்துவகுணங்களை கொண்டதாக விவரிக்கிறது. இவை உடல் முழுவதும் நன்மை செய்யகூடியது. நெல்லியை மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் எடுத்து வரலாம்.

    * டெங்கு காய்ச்சல் தீவிரமாக இருக்கும். அதிமதுர வேர்கள் மோசமான தோஷங்களை சமப்படுத்தவும் வீக்கத்தை குறைக்கவும் உதவும். இதை தேநீராக்கி குடிப்பது காய்ச்சல், வீக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

    * வேப்பிலை கசப்பு நிறைந்தது. இது பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது. இதன் மருத்துவ குணங்களுக்காக நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. இது பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. டெங்குவில் உள்ள வேப்ப இலை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது. உடலில் இருக்கும் நச்சை வெளியேற்றுகிறது. உடலில் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. ஒரு டம்ளர் தண்ணீரில் 3-4 வேப்ப இலைகளை போட்டு ஊறவைத்து நாள் முழுவதும் கஷாயத்தை குடிப்பதன் மூலம் பலனை பெறலாம்.

    டெங்குவுக்கு இந்த ஆயுர்வேத மருத்துவத்தை எல்லோரும் பின்பற்றலாம் என்றாலும் உங்கள் உடல் வாகு மற்றும் உங்கள் உடலில் உள்ள நோயின் தீவிரத்தை பொறுத்து மருத்துவரின் பரிந்துரை படி இதனை எடுத்துக்கொள்ளலாம்.

    • ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு காரணம்.
    • மனஅழுத்தம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவிழக்கச் செய்து, நோயாளி ஆக்கிவிடும்.

    கொரோனா மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக குரங்கு அம்மை, தட்டம்மை, டெங்கு காய்ச்சல், நிபா வைரஸ் போன்ற பல்வேறு நோய்களால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி போடுவதும், ஆரோக்கியமான உணவுப்பழக்கவழக்கங்களை பின்பற்றுவதுமே தொற்றுநோய்களை எதிர்த்து போராட உதவும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான 6 காரணங்கள் குறித்து பார்ப்போம்.

    ஊட்டச்சத்து குறைபாடு:

    போதுமான அளவு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். ஆரோக்கியமற்ற உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, நொறுக்குத் தீனி போன்றவற்றில் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இருக்காது. ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அமைப்புக்கு குடலில் இருக்கும் மைக்ரோபயோட்டா இன்றியமையாதது.

    மேலும் புரதம், நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்புகள், வைட்டமின்கள் டி, சி, பி, ஏ, ஈ, கே மற்றும் இரும்பு, கால்சியம், செலினியம், துத்தநாகம் போன்ற தாதுக்களும் உடலுக்கு போதுமான அளவு தேவை. அத்துடன் நோய் எதிர்ப்பு அமைப்பு திறம்பட செயல்பட பழங்கள் மற்றும் காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், ஃப்ரீபயாடிக்குகள், புரோபயாடிக்குகள், தானியங்கள் போன்றவற்றை சேர்த்துக்கொள்வதும் முக்கியம்.

    உடற்பயிற்சி இல்லாமை:

    தினமும் உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டாலும் வாரத்தில் 3 நாட்களாவது உடற்பயிற்சிக்காக நேரம் செலவிட வேண்டும். இல்லாவிட்டால் நோய் எதிர்ப்பு அமைப்பு சரியாக வேலை செய்யாது. அடிக்கடி நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

    மன அழுத்தம்:

    நமது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைவதன் பின்னணியில் இருக்கும் முக்கிய குற்றவாளிகளில் மன அழுத்தம் முதன்மையானது. ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது அதில் இருந்து மீள்வதற்கான நேரம் அதிகரிக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். பல்வேறு நோய் பாதிப்புகளை எதிர்கொள்ள வைத்துவிடும். மன அழுத்தம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேலும் வலுவிழக்கச் செய்து, நோயாளி ஆக்கிவிடும்.

    தூக்கமின்மை:

    மன அழுத்தத்தைப் போலவே தூக்கமின்மையும் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய அங்கமான ரத்த வெள்ளை அணுக்களின் இயல்பான உற்பத்தியை சீர்குலைத்து விடும். ஒழுங்கற்ற தூக்க முறைகளும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும்.

    மது-புகைப்பழக்கம்:

    மது பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படக்கூடும். ஏனெனில் அவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பு ஆல்கஹால் காரணமாக பாதிப்படையும். புகைப்பிடித்தல் புற்றுநோயுடன் தொடர்புடையது. நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளிலும் குறுக்கிடும்.

    வீட்டுக்குள்ளேயே இருத்தல்:

    எப்போதும் வீட்டுக்குள்ளேயே அடைபட்டு இருப்பதும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்திவிடும். தினமும் சில நிமிடங்களாவது உடலில் சூரிய ஒளி படர வேண்டும். சூரிய ஒளியின் வெளிப்பாடு சர்க்காடியன் தாளத்தை பராமரிக்க உதவும். இது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அது போதுமான அளவு கிடைக்காதபோது நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாகிவிடும்.

    கொரோனா காலகட்டத்தில் பலரும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு பிரச்சினையை எதிர்கொண்டார்கள். எப்போதும் சளி, இருமலால் அவதிப்படுவது, அடிக்கடி வயிறு சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்வது, மன அழுத்தத்திற்கு ஆளாவது, அவ்வப்போது சோர்வாக இருப்பதாக உணர்வது, அடிக்கடி நோய் பாதிப்புக்கு ஆளாவது போன்ற அறிகுறிகளை எதிர்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

    • மிளகை 'பிளாக் கோல்டு' என்று அழைக்கின்றனர்.
    • மிளகில் உள்ள விட்டமின் சி நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

    நம் இந்திய சமையலை பொருத்த வரை மிளகு என்பது மிக முக்கியமான பொருளாகும் சேர்க்கப்படுகிறது. இந்த கருப்பு மிளகை 'பிளாக் கோல்டு' என்று அழைக்கின்றனர். எனவே இந்த கொரோனா தொற்று நோய் கால கட்டத்தில் வீட்டிலேயே மிளகு கஷாயம் செய்து குடிப்பது காய்ச்சல், சளி, இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற பிரச்சினைகளை களைய உதவி செய்யும். இவ்வளவு நன்மைகள் தரும் இந்த மிளகு கஷாயத்தை எப்படி செய்யலாம் வாங்க தெரிஞ்சுக்கலாம்.

    மிளகில் உள்ள ஊட்டச்சத்து

    கருப்பு மிளகில் ஏராளமான வைட்டமின்கள், தயமின், ரிபோப்ளவின், வைட்டமின் சி, ஈ, பி6 மற்றும் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருக்கிறது. அதேமாதிரி ஜிங்க், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இதனாலேயே இந்த மிளகை நிறைய மருத்துவ நன்மைகளுக்கு பயன்படுத்துகின்றனர். மிளகில் உள்ள விட்டமின் சி நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

    மிளகு கஷாயம் தயாரிக்க கருப்பு மிளகு, துளசி, பனை வெல்லம், சர்க்கரை மற்றும் தண்ணீர் போன்ற பொருட்கள் தேவைப்படுகிறது. இந்த மிளகு கஷாயத்தை வெறும் 20 நிமிடங்களில் செய்து உங்க சளித்தொல்லையை நீக்கி விட முடியும்.

    தேவையான பொருட்கள்:

    கருப்பு மிளகு - 1/4 கப்

    துளசி : 10 எண்ணிக்கை

    பனை வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்

    தண்ணீர் - 2 கப்

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கருப்பு மிளகை போட்டு வெடிக்கும் வரை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை உரலில் போட்டு நன்றாக பொடியாக்கி கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

    உடைத்த மிளகு அதனுடன் துளசி, பனை வெல்லம் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து சூடுபடுத்த வேண்டும். அதன்பிறகு ஒரு வடிகட்டியை கொண்டு கஷாயத்தை வடிகட்ட வேண்டும். இந்த கஷாயத்தை குடித்து வந்தால் ஜீரணக்கோளாறு, இருமல் மற்றும் ஜலதோஷம் அறிகுறிகள் குறையும்.

    நன்மைகள்

    மிளகில் உள்ள பைபரைன் வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்க வைத்து ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல், வாய்வுத்தொல்லை, வயிற்றுபோக்கை போக்குகிறது. இதில் உள்ள விட்டமின் சி சாதாரண ஜலதோஷம், இருமலுக்கு எதிராக ஆன்டிபயாடிக் ஆக செயல்படுகிறது.

    சருமம் வயதாவது, சரும சுருக்கங்கள் மற்றும் சரும கோடுகள் போன்ற அறிகுறிகளை இதில் உள்ள வைட்டமின் சி குறைக்கிறது. இதன் ஆன்டிபயாடிக் தன்மை நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

    • சட்டென்று பலரும் ருசிப்பது வாழைப்பழமாகத்தான் இருக்கும்.
    • இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் வைட்டமின் சி உள்ளது.

    திடீர் பசியைத் தணிக்க விரும்பினாலோ, பயணத்தின்போது சாப்பிட ஆசைப்பட்டாலோ சட்டென்று பலரும் ருசிப்பது வாழைப்பழமாகத்தான் இருக்கும். இதனை எந்த நேரத்திலும் சாப்பிட முடியும். தினமும் ஒரு வாழைப்பழமாவது சாப்பிட வேண்டும் என்று சுகாதார நிபுணர்களும் அறிவுறுத்துகிறார்கள். வாழைப்பழம் ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான ௧௦ காரணங்களையும், அதனால் கிடைக்கும் நன்மைகளையும் தெரிந்து கொள்வோம்.

    சத்துக்கள்

    எல்லா வகையான வாழைப்பழங்களிலும் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் வைட்டமின் சி, செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அத்துடன் இயற்கை சர்க்கரையும், கார்போஹைட்ரேட்டும் உள்ளன. அவை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் சிற்றுண்டி உணவாகவும் அமைந்திருக்கின்றன.

    மேலும், வாழைப்பழத்தில் உள்ளடங்கி இருக்கும் மெக்னீசியம் எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். குறைந்த கலோரிகளே கொண்டிருப்பதும் வாழைப்பழத்தை பலரும் விரும்ப காரணமாக அமைந்திருக்கிறது.

    பொட்டாசியம்

    வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் உடலுக்கு தேவையான சிறந்த இயற்கை ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதயம் மற்றும் தசைகளின் செயல்பாட்டை பராமரிக்க பொட்டாசியம் முக்கியமானது. அதனால் தினமும் ஒரு வாழைப்பழமாவது தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

    ஆற்றல்

    வாழைப்பழத்தில் நிறைந்திருக்கும் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரை விரைவான மற்றும் நீடித்த ஆற்றலை உடலுக்கு அளிக்கின்றன. உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு அதிக எனர்ஜியை கொடுக்கும். உடற்பயிற்சியையும் உற்சாகமாக செய்யத் தூண்டும். மதிய உணவுக்குப் பின்பு வாழைப்பழம் சாப்பிடுவதும் நல்லது.

    செரிமானம்

    வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை பேண உதவும். குறிப்பாக 'பெக்டின்' குடல் இயக்கத்தை ஊக்குவித்து செரிமானம் சுமூகமாக நடைபெறுவதற்கு உதவிபுரியும். மலச்சிக்கலையும் தடுத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    வயிற்றுக் கோளாறு

    வயிற்று கோளாறு அல்லது செரிமானம் சார்ந்த அசவுகரியங்களை எதிர்கொள்பவர்களுக்கு வாழைப்பழம் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் வாழைப்பழங்கள் எளிதாக ஜீரணமாகும். வயிற்றில் ஏற்படும் வலியை போக்கவும் உதவும்.

    இதய ஆரோக்கியம்

    பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் போன்ற உணவுப்பொருட்களை தவறாமல் உட்கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். இதய நோய் மட்டுமின்றி பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும்.

    உடல் எடை

    வாழைப்பழங்களில் கலோரிகள் மட்டுமின்றி கொழுப்பின் அளவும் குறைவு. அவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம் அதிக பசியை கட்டுப்படுத்திவிடலாம். அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். உடல் எடையை சீராக பராமரிக்க முயற்சிப்பவர்களுக்கு வாழைப்பழம் சிறந்த தேர்வாக அமையும்.

    மனநிலை மேம்பாடு

    வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 உள்ளது. இது மூளையின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. மேலும் வைட்டமின் பி6  செரோடோனின்,டோபமைன் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்களின் உற்பத்திக்கு துணைபுரியக்கூடியது. இது மனநிலையை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.

    சருமம்

    வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் சருமம் விரைவில் வயதான தோற்றத்திற்கு மாறுவதை தடுக்கும். தோல் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிப்பதன் மூலம் ஆரோக்கியமான சருமத்திற்கு வித்திடும்.

    இயற்கை இனிப்பு

    வாழைப்பழங்கள் ஆரோக்கியமான முறையில் உடலின் இனிப்பு தேவையை பூர்த்தி செய்யக்கூடியவை. ஸ்மூத்தி, பேக்கரி பொருட்கள் போன்றவற்றில் வாழைப்பழங்களை சேர்ப்பதன் மூலம் செயற்கை சர்க்கரையின் தேவையை குறைக்கலாம்.

    • உடல் பலவீனமாக இருக்கும்போது, உடற்பயிற்சியை தவிர்ப்பது நல்லது.
    • உடல் சற்று சீரடைந்த பின்னரே உடற்பயிற்சி செய்வது பயனளிக்கும்.

    உங்கள் உடல் கட்டுமஸ்தானதாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஆனால் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க, தினமும் உடற்பயிற்சி அவசியம்.

    தினசரி உடற்பயிற்சி என்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஏரோபிக் பயிற்சிகளை தினசரி 45 நிமிடங்கள் செய்தால் தொற்றுநோய் பிரச்சினை குறையும் என்பது ஆய்வு ரீதியாக கண்டறியப்பட்ட உண்மை. ஆனால், உடல் பலவீனமாக இருக்கும்போது, உடற்பயிற்சியை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள், மருத்துவர்கள்.

    "ஒருவரின் உடல் காய்ச்சல் அல்லது சளியினால் பாதிக்கப்பட்டு சோர்வடைந்திருக்கும் நிலையில் உடற்பயிற்சி செய்வது, உடல் நோயில் இருந்து மீண்டு வருவதை தாமதமாக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, தொற்றுநோய் கிருமிகளை எதிர்த்து தாக்கிக் கொண்டிருக்கும்போது உடலை வருத்தும் உடற்பயிற்சிகள், உடல் நிலையை இன்னும் மோசமாக்கும். எனவே உடல் சற்று சீரடைந்த பின்னரே உடற்பயிற்சி செய்வது பயனளிக்கும். இல்லையேல், லேசான உடற்பயிற்சிகளை செய்யலாம்'' என்கிறார்கள், மருத்துவர்கள்.

    • நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் வழிவகுக்கின்றன.
    • உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்க துணைபுரியும்.

    கவர்ச்சிகரமான பழ இனங்களுள் ஒன்றாக காட்சி அளிக்கும் டிராகன் பழத்தின் பூர்வீகமாக மெக்சிகோ அறியப்படுகிறது. ஆரம்பத்தில் அமெரிக்கா முழுவதும் பரவி இப்போது உலகம் முழுவதும் விளைவிக்கப்படுகிறது. இந்தியாவிலும் இதனை பலர் விரும்பி ருசிக்க பழகிவிட்டார்கள். டிராகன் பழத்தை ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணத்தை தெரிந்துகொள்வோம்.

    * டிராகன் பழத்தில் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை உடலில் செல்களை சேதப்படுத்தும் ப்ரீரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகின்றன. நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் வழிவகுக்கின்றன.

    * டிராகன் பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தக்கூடியது. நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடி உடல் பலவீனம் அடைவதை தடுக்கக்கூடியது.

    * டிராகன் பழத்தில் உள்ளடங்கி இருக்கும் நார்ச்சத்து செரிமான செயல்பாடுகளையும், குடல் இயக்கங்களையும் மேம்படுத்த உதவும்.

    * இதில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்சிடென்டுகள் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து சருமத்தை பாதுகாக்க வழிவகை செய்யும். விரைவிலேயே வயதான அறிகுறிகள் எட்டிப்பார்ப்பதை தடுக்கும்.

    *டிராகன் பழத்தில் உள்ள நார்ச்சத்துகள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் ஆரோக்கியமான கொழுப்பின் செயல்பாடுகளை ஊக்குவிக்க உதவும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதய நோய் அபாயங்களையும் குறைக்கும்.

    * டிராகன் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் வெப்பமான காலநிலையின்போது உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்க துணைபுரியும். உடற்பயிற்சி செய்த பிறகு உடலை நீரேற்றமாக வைத்திருப்பதற்கும் டிராகன் பழம் சிறந்த தேர்வாக அமையும்.

    * டிராகன் பழத்தில் கலோரிகள் குறைவு. ஆனால் வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

    • உடலில் 300-க்கும் மேற்பட்ட என்சைம்கள் உற்பத்திக்கு ஜிங்க் இன்றியமையாதது.
    • உடலில் நோய் எதிர்ப்பு உயிரணுக்கள் உற்பத்தி மற்றும் செயல்பாட்டிற்கு ஜிங்க் உதவுகிறது.

    ஜிங்க் என்பது நமது அன்றாட உடல் செயல்பாடுகளை பராமரிக்க தேவையான தனிம சத்தாகும். உடலில் ஜிங்க் குறைபாடு இருக்கும் நபர்களுக்கு ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. வளர்ச்சி குன்றுதல், வயிற்றுப்போக்கு, முடி உதிர்தல், கண் மற்றும் சரும பாதிப்புகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது

    உடலில் 300-க்கும் மேற்பட்ட என்சைம்கள் உற்பத்திக்கு ஜிங்க் இன்றியமையாதது. எனவே நம் உணவில் போதுமான வைட்டமின்களை பெறுவது மிகவும் அவசியம். நம் உடல் ஆரோக்கியமான வளர்ச்சி பெற கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து போன்ற பல தாதுக்கள் தேவைப்படுகின்றன. எனவே சமச்சீரான ஜிங்க் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா போன்ற காலங்களில் ஏற்படக்கூடிய தொற்றில் இருந்து தப்பிக்க உதவுகிறது

    பெண்களுக்கு உடல்நலனை காக்க தேவைப்படும் சத்துக்களில் துத்தநாகம் என்னும் ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது., இந்த ஜிங்க் பெண்களின் உடல்நலத்திற்கு எந்த வகையில் உதவுகிறது என்பதை பார்க்கலாம்.

    * உடலில் நோய் எதிர்ப்பு உயிரணுக்கள் உற்பத்தி மற்றும் செயல்பாட்டிற்கு ஜிங்க் உதவுகிறது.

    * ஜிங்க் உணவுகள் இதய நோய்கள் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்கள் வராமல் காக்க உதவுகிறது.

    * ஜிங்க் சத்து கால்சியம் அளவிற்கு எலும்புகளுக்கு முக்கியமானது. எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது.

    * ஜிங்க் உணவுகள் ஹார்மோன் உற்பத்தியை சமநிலையாக பராமரிக்க உதவுகிறது.

    * ஜிங்க்கில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட் பண்புகள் சரும செல்கள் சேதமடைவதை தடுத்து சருமத்தை பாதுகாக்கிறது.

    * ஜிங்க்கில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் தொகுப்புகள் கண்களின் பார்வை திறனை மேம்படுத்துகின்றன.

    * ஜிங்க்கில் உள்ள சத்துக்கள் முடி உதிர்தலை குறைத்து கூந்தல் பாதுகாப்பிற்கு உதவுகிறது.

    * ஜிங்க் பெண்களின் கர்ப்பப்பை பாதுகாப்பு மற்றும் கருமுட்டை வளர்வதற்கு உதவுகிறது.

    ×