search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Home Minister"

    • ஸ்வநிதி யோஜனாவில் கடன் தொகையில் 7 சதவீதம் மானியமாக வழங்கப்படும்
    • ஆத்மநிர்பார் பாரத் 140 கோடி இந்தியர்களுக்கான திட்டம் என்றார் அமித் ஷா

    கடந்த 2020 ஜூன் மாதம், சாலையோர வியாபாரிகளுக்கு ரூ. 10 ஆயிரம் வரை வட்டியில்லாமல் கடனாக வழங்கும் "ஸ்வநிதி யோஜனா" (SVANidhi Yojana) எனும் திட்டம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான அமைச்சரவையால் தொடங்கப்பட்டது.

    இத்திட்டத்தின்படி, முதல் முறை பெறும் கடனை அடைத்ததும், வியாபாரிகளுக்கு தொடர்ந்து ரூ. 20 ஆயிரமும், அந்த கடன் அடைந்ததும், ரூ. 50 ஆயிரமும் கடனாக வழங்கப்படும்.

    கடன் பெறும் தொகையில் 7 சதவீதம் மானியமாக அரசு வழங்கும்.

    குஜராத் மாநில அகமதாபாத் நகரில், அகமதாபாத் முனிசிபல் கார்பரேஷன் ஏற்பாடு செய்திருந்த இத்திட்டத்தின் பயனாளிகளின் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    ஆத்மநிர்பார் பாரத் (Atmanirbhar Bharat) எனும் சுயசார்புள்ள பாரதத்திற்கான திட்டத்தை பிரதமர் மோடி விளக்கி உள்ளார். இது ஒரு தொலைநோக்குள்ள திட்டம்.

    விண்வெளித்துறை மற்றும் ராணுவம் உட்பட அனைத்திலும் சுயசார்பு நாடாக இந்தியா மாற வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதன் மூலம் நமது வர்த்தகம், தொழில்துறை மட்டுமின்றி 140 கோடி இந்தியர்களும் சுயசார்புடையவர்களாக மாற வேண்டும்.

    வறுமைகோட்டிற்கு கீழே வாழ்பவர்களின் நிலையை மேலே கொண்டு வர பிரதமர் மிகவும் கவனம் செலுத்தி திட்டங்களை வகுக்கிறார். தற்போது வரை வறுமையிலிருந்து 60 கோடி மக்களை மீட்டுள்ளார். உலகிலேயே கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக ஒரு உள்நாட்டு தடுப்பூசி இந்தியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

    இவ்வாறு அமித் ஷா கூறினார்.

    இக்கூட்டத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும் பங்கு பெற்றார்.

    • நள்ளிரவிலும் நீதி விழிப்புடன் இருந்தால்தான் மக்களும், சமுதாயமும் அச்சமின்றி இருக்க முடியும்.
    • நமது காவல்துறை எந்த சவாலையும் சந்திக்கும் ஆற்றலுடன் உள்ளது.

    டெல்லியில் நேற்று நடைபெற்ற இன்டர்போல் அமைப்பின் 90-வது பொதுச் சபை நிறைவு அமர்வில் உரையாற்றிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளதாவது:

    195 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட இன்டர்போல் அமைப்பு உலக அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு பெரும் பங்காற்றி வருகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராமாயணத்திலும், திருக்குறள் போன்ற அறநூல்களிலும் நீதி குறித்து கூறப்பட்டுள்ளது. மகாபாரதத்தில் குற்றங்களை கட்டுப்படுத்துதல், நீதி வழங்குதல், வெற்றிகரமான நிர்வாகம் ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நள்ளிரவிலும் நீதி விழிப்புடன் இருந்தால்தான் மக்களும், சமுதாயமும் அச்சமின்றி இருக்க முடியும். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நமது காவல்துறை எந்த சவாலையும் சந்திக்கும் ஆற்றலுடன் உள்ளது. எதிர்கால சவால்களை எதிர்கொள்ள பல முன் முயற்சிகளை இந்திய அரசு எடுத்துள்ளது.

    பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், பொருளாதார குற்றங்களை முறியடிக்க தேசிய அளவில் தரவுதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா இன்டர்போலுடன் இணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளது. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களை முறியடிக்கவும், சட்டவிரோத பணபரிவர்த்தனையை தடுக்கவும், திட்டமிடப்பட்ட சதிச்செயல்களை முறியடிக்கவும் இந்தியா இன்டர்போலுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கையை 89,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
    • ஏழை மக்களின் சுகாதார உரிமையை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்.

     கலோல்:

    குஜராத் மாநிலம் கலோலில் 150 படுக்கைகளுடன் கட்டப்பட்ட இஎஸ்ஐசி மருத்துவமனையை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்ற திறந்து வைத்தார். மேலும் 750 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அவர் அடிக்கல் நாட்டினார் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 


    ஏழை மக்களின் சுகாதார உரிமையை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். பிரமரின் ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம், 60 கோடி ஏழை மக்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ சுகாதார வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் சுகாதார கட்டமைப்பு திட்டத்தின் கீழ், ரூ. 64,000 கோடி முதலீட்டில் 600க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 35,000 புதிய அவசர கால சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    கடந்த 2013- 14ம் ஆண்டு 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில், 2021 -22ம் ஆண்டில் அதன் எண்ணிக்கையை 596 -ஆக பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார். எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கையை 51,000-ல் இருந்து 89,000-மாகவும், முதுநிலை மருத்துவப்படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை 31,000-ல் இருந்து 60,000-ம் ஆகவும் மத்திய அரசு அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒரே நாடு, ஒரே எல்லைப் பாதுகாப்புப் படை என்ற கொள்கையை அரசு ஏற்றுக்கொண்டது.
    • ஆயுதப் படை வீரர்களின் தியாகத்தை நாடு என்றும் மறக்காது.

    ஃபதேபூர்:

    பீகார் மாநிலம் ஃபதேபூர் சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இந்திய-நேபாள எல்லை பகுதிகளை ஆய்வு செய்தார். பெக்டோலா, பெரியா, அம்காச்சி மற்றும் ராணிகஞ்ச் ஆகிய இடங்களின் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கான புதிய குடியிருப்பு கட்டிடங்களை திறந்து வைத்து, பணியாளர்களுடன் சிற்றுண்டி அருந்திய அவர், அவர்களுடன் கலந்துரையாடினார். 


    பின்னர் நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது:

    நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லையில் கடினமான சூழ்நிலைகளில் பணிபுரியும் நமது துணிச்சலான பாதுகாப்பு வீரர்களின் வசதிகள் மற்றும் நலன்களை கவனித்துக்கொள்வது நமது பொறுப்பு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    கடந்த எட்டு ஆண்டுகளில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, எல்லையில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. ரூ.25 கோடி செலவில் கட்டப்பட்ட அத்தகைய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. 


    நாட்டில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும், பேரிடர்களின் போது நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளிலும், நியாயமான தேர்தலை நடத்துவதிலும் நமது பாதுகாப்புப் படைகளுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது. ஆயுதப் படை வீரர்களின் தியாகம், அர்ப்பணிப்பை நமது நாடு என்றும் மறக்காது.

    எல்லைகளின் பாதுகாப்பிற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது, எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் பிற பாதுகாப்புப் படைகள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை நோக்கி நகர வேண்டும். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்திலிருந்தே ஒரே நாடு,ஒரே எல்லைப் பாதுகாப்புப் படை என்ற கொள்கையை அரசு ஏற்றுக்கொண்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • போரிஸ் ஜான்சன் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத்தி பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
    • உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சூலா பிரேவர்மென்னுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து முந்தைய போரிஸ் ஜான்சன் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத்தி பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்த நிலையில் இங்கிலாந்தின் புதிய உள்துறை அமைச்சராக சூலா பிரேவர்மென்னை பிரதமர் லிஸ் டிரஸ் நியமித்துள்ளார்.

    சூலா பிரேவர்மென், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளி பெண் ஆவார். இவரது தாய் உமா தமிழ் நாட்டை சேர்ந்தவர். 1960-ம் ஆண்டு காலகட்டத்தில் இந்திலாந்தில் குடியேறினார். அப்போது இங்கிலாந்தில் குடியேறிய கென்யாவை சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ் என்பவரை உமா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் சூலா பிரேவர்மென்.

    போரிஸ் ஜான்சன் அரசில் அட்டர்னி ஜெனரலாக சூலா பிரேவர்மென் பணியாற்றி வந்தார். பர்ஹம் தொகுதி எம்.பி.யான சூலா பிரேவர்மென் கடந்த 2018-ம் ஆண்டு ரெயல் பிரேவர்மென் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

    உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சூலா பிரேவர்மென்னுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    லிஸ் டிரசின் அமைச்சர வையில் துணை பிரதமராக தெரேஸ் காபி, நிதி அமைச்சராக குவாசி குவார்டெங், வெளியுறவு அமைச்சராக ஜேம்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். பாதுகாப்பு அமைச்சராக பென் வாலஸ் நீடிக்கிறார்.

    • இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அனைவரும் பங்களிக்க வேண்டும்.
    • நமது துணிச்சல்மிக்க வீரர்களுக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன்.

    சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலான இந்தியாவின் கலாச்சாரம், எழுச்சிமிகு ஜனநாயக பாரம்பரியம், சாதனைகள் குறித்து பெருமை கொள்ளும் தினம் இது என்று குறிப்பிட்டுள்ளார்.

    நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்த நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், நாட்டின் பாதுகாப்புக்காக அனைத்தையும் தியாகம் செய்த நமது துணிச்சல்மிக்க வீரர்களுக்கும் நான் மரியாதை செலுத்துவதாகவும் தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.

    வலுவான, தன்னிறைவு மிக்க இந்தியா குறித்து நமது விடுதலைப் போராட்ட வீரர்களின் கண்ட கனவை, பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டு விழா தருணத்தில் இந்தியாவை மீண்டும் விஸ்வ குருவாக மாற்றுவதற்கு, கடின உழைப்பின் மூலம், தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அனைவரும் பங்களிக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை மந்திரி கேட்டுக் கொண்டுள்ளார்.

    • இந்து சமூகத்தினர் மீதான தாக்குதலைக் கண்டித்து பேரணி நடைபெற்றது.
    • நரைல் மாவட்டத்தில் இந்துக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்திய 7 பேர் கைது.

    டாக்கா:

    இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் இந்து சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. முகநூல் பதிவு தொடர்பாக நரைல் மாவட்டத்தில் உள்ள ஷஹாபரா பகுதியில் இந்துக்களின் இரண்டு வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது போன்ற தொடர் தாக்குதல்களை கண்டித்து பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், டாக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய வங்காளதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான், நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். அராஜகம் மூலம் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்களுக்கு தண்டனை பெற்று தருவதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மதம் குறித்து அவதூறு கருத்துக்களை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார். இந்துக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    • நாட்டின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என்ற மகாத்மா காந்தியின் கருத்தை உறுதியாக நம்புகிறேன்
    • வகுப்பறையில் கடைசி வரிசையில் உள்ள ஒருவர் கூட நாட்டிற்கு சிறந்ததை செய்ய முடியும்

    ஆனந்த்:

    குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள ஊரக மேலாண்மை நிறுவனத்தின் 41வது வருடாந்தர பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது என்று மகாத்மா காந்தி குறிப்பிட்டார். நான் அதை உறுதியாக நம்புகிறேன். பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் காந்திஜியின் கனவுகளை நனவாக்கப் பாடுபடவேண்டும்.

    ஊரக வளர்ச்சியை உருவாக்காமல், கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொருவரையும் வளம் மிக்கவர்களாக மாற்றாமல் இந்தியா ஒரு போதும் வளர்ச்சியடைந்த நாடாக மாறாது. மாணவர்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் நாட்டின் ஊரக வளர்ச்சிக்காக பாடுபடுவதை நினைவில் கொள்ளவேண்டும்.

    ஊரக வளர்ச்சி என்பது வெறுமனே கொள்கை சார்ந்தது அல்ல, கிராமங்களுக்குப் பணியாற்ற உறுதியுடன் தம்மை அர்ப்பணிக்கும்போது மட்டுமே அது நடைபெறும்.

    பல கோடி ரூபாய் சம்பாதித்த பிறகும் நீங்கள் திருப்தி அடைய முடியாது. உங்கள் வாழ்க்கையில் ஒரு நபரை சுய தேவை பூர்த்தி அடைந்தவராக மாற்றினால் நீங்கள் சுய திருப்தி அடைய முடியும். திருப்தி என்பது மற்றவர்களுக்கு பணியாற்றுவதில் இருந்து வருகிறது.

    வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை நீங்கள் பெறும்போது அதிலிருந்து திருப்பித் தருவது உங்களின் நோக்கமாக இருக்க வேண்டும். இந்தியா பலம் வாய்ந்த நாடாக மாற வேண்டுமென்றால் கிராமங்கள் வசதியாகவும் தற்சார்புடையதாகவும் இருக்கவேண்டும்.

    இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற நோக்கத்திற்கு அனைத்து இந்திய கிராமங்களின் வளர்ச்சி அவசியம். மோடி பிரதமரான பிறகு ஊரக வளர்ச்சி பற்றிய புதிய தொலைநோக்குப் பார்வையை முன்வைத்தார்.

    வகுப்பறையில் கடைசி வரிசையில் உள்ள ஒருவர் கூட நாட்டிற்கு சிறந்ததை செய்ய முடியும். எனவே யாரும் தாழ்வு மனப்பான்மை கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் எந்த ஒருவரும் பிறப்பால் பெரியவராதில்லை. சிறந்த சிந்தனையால் மட்டுமே பெரியவர் ஆகிறார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி சாந்தன் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு உருக்கமான கடிதம் எழுதி அனுப்பி உள்ளார். #RajivGandhiAssassination #Santhan
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், முருகனின் மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 27 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் உள்பட ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்காக போராடி வருகின்றனர்.

    இந்த நிலையில் சாந்தன், தன்னை விடுதலை செய்யக்கோரி தனது வக்கீல் ராஜகுரு மூலமாக மத்திய உள்துறை மந்திரிக்கு 4 பக்கத்திற்கு உருக்கமாக கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

    அந்த கடித விவரம் வருமாறு:-

    நான் சுதேந்திரராஜா என்கிற சாந்தன். உண்மையை சொல்லி விடுகிறேன். ராஜீவ்காந்தி கொலை சதி திட்டத்தோடு இந்தியாவிற்குள் நுழையவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு போவது தான் என் நோக்கம்.

    அந்த காலக்கட்டத்தில் இலங்கை தமிழர்கள் பலரும் தலைநகர் கொழும்பு வழியாக பயணிக்காமல் இங்கு வந்து தான் வெளிநாடுகளுக்கு பயணிப்பது வழக்கமாக கொண்டிருந்தனர். அப்படித்தான் நானும் வந்தேன். இங்குவரும் போது இலங்கையில் என் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என்று அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்ட பிறகு எனக்கு அளிக்கப்பட்ட பாஸ்போர்ட்டுடன் தான் வந்தேன். இது சி.பி.ஐ. வசமானது. பாஸ்போர்ட்டை வைத்தே நான் இலங்கை குடிமகன் என நிரூபிக்கப்பட்டது.

    சர்வதேச அளவில் பிரபலமான ஒரு தலைவரை கொல்ல வரும் வெளிநாட்டவன் யாராவது தன்னை பற்றிய உண்மையான தகவல்கள் அடங்கிய பாஸ்போர்ட்டை கொண்டு வருவானா?,

    இந்த வழக்கில் இன்னொரு சாந்தனும் குற்றவாளியாக காட்டப்பட்டுள்ளார். தடா நீதிமன்றத்தில் சி.பி.ஐ. வக்கீல் வாதிடும்போது, விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளருக்கு நான் பணம் கொடுத்ததாக சொன்னார். பணம் பெற்ற விடுதலை புலி ஆதரவாளர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும்போது என்னை அடையாளம் காட்டவில்லை. இன்னொரு சாந்தனின் போட்டோவை காட்டினார்.



    உச்ச நீதிமன்ற தீர்ப்பில் பக்கம் 558-ல், இந்த வழக்கில் 19-வது எதிரியாக சேர்க்கப்பட்டு, பிறகு விடுதலை செய்யப்பட்ட ஒருவரிடம், விரைவில் ஒரு முக்கியமான தலைவரை கொல்லப்போவதாக நான் சொன்னதாக பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால், பக்கம் 157-ல் அது அடுத்த சாந்தன் என்றிருக்கும். இப்படி பல குளறுபடிகள் தீர்ப்பில் உள்ளன.

    புலனாய்வு அதிகாரிகள் இப்போது சொல்லும் உண்மையை பற்றியோ, 1999-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ள தவறுகள் பற்றியோ நான் இப்போது வெளிக்கொணர விரும்பவில்லை. பழையவற்றை புறந்தள்ளிவிட்டு பயணப்படவே விரும்புகிறேன்.

    2011-ம் ஆண்டில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டபோது நோயாளியான என் அப்பா, தூக்கு தண்டனை ரத்து என்ற 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை அறியும் முன்னரே இறந்துவிட்டார். வயோதிக தாயாருக்காவது மகனுக்கான கடமைகளை செய்ய விரும்புகிறேன். என்னுடைய உறவுகளுடன் என்னை சேர்த்து வைக்க மத்திய அரசால் முடியும்.

    என்னுடைய சிரமம் மிகுந்த சிறை வாழ்க்கையை சிதறடிக்க உதவுங்கள்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் சாந்தன் எழுதி உள்ளார்.  #RajivGandhiAssassination  #Santhan
    கர்நாடகாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய ஆயிரத்து 118 கோடி ரூபாய் நிதி வேண்டும் என மத்திய உள்துறை மந்திரியிடம் கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். #Karnataka #RajnathSingh #CMKumaraswami
    புதுடெல்லி:

    கர்நாடகா மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 7 மாவட்டங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இப்பகுதியில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    மழை ஓய்ந்துவிட்ட நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சரிசெய்யும் பணியில் மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில், மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர்செய்ய ஆயிரத்து 118 கோடி ரூபாய் மத்திய அரசு அளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    சந்திப்பு முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, முதற்கட்ட ஆய்வில் 3,435.80 கோடி ரூபாய் மதிப்பிலான சேதம் கணக்கிடப்பட்டுள்ளதாகவும், இது இடைக்கால ஆய்வில் கணக்கிடப்பட்ட தொகை என்றும், ஆய்வு முழுமையடைந்த பிறகு முழு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    இந்த சந்திப்பின் போது கர்நாடக மாநில துணை மந்திரி பரமேஸ்வரா, வருவாய்த்துறை மந்திரி தேஸ்பாண்டே, கூட்டுறவுத்துறை பண்டேப்பா காஷெம்புர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதையடுத்து, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், முதற்கட்ட நிவாரணத்தொகை விரைவில் வழங்கப்படும் எனவும், மத்திய ஆய்வுக்குழு சேதங்களை ஆய்வு செய்ய விரைவில் அனுப்பப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார். #Karnataka #RajnathSingh #CMKumaraswami
    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #VenkaiahNaidu #LKAdvani #RajnathSingh
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.

    இதற்கிடையே, இன்று காலை முதல் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.05 மணிக்கு அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.

    இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, அத்வானி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



    இதுதொடர்பாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறுகையில், வாஜ்பாயின் ஆளுமை, கடமையின் மீதான பக்தி, தலைமைப் பண்பு நீண்ட காலத்துக்கு நினைவு கூரப்படும். பன்முகத்தன்மை கொண்ட ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது என இரங்கல் தெரிவித்துள்ளார்.

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவால் தாங்க முடியாத துயரத்தில் உள்ளேன் என பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    வாஜ்பாய் மறைவு செய்தி மிகுந்த வலியை ஏற்படுத்தியது, மிகச்சிறந்த தலைவரை தேசம் இழந்துள்ளது என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #VenkaiahNaidu #LKAdvani #RajnathSingh
    ×