search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "healthy food"

    • கருத்தரங்கில் ஆரோக்கியமான உணவு சமையல் குறித்த கேள்வி, பதில் அமர்வும் இடம்பெற்றது.
    • இதில் பங்கேற்றவர்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    ஆரோக்கியமான மனம், உடல் மற்றும் வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டு நீடித்த மற்றும் ஆக்கப்பூர்வமான ஆன்லைன் வணிகத் தளத்தை 'நேச்சுரலே' நிறுவனம் நடத்தி வருகிறது.

    இதேபோல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் நிலையான வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் இந்த நிறுவனம் தன்னை அர்ப்பணித்து அதுதொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.

    அந்த வரிசையில் ஆரோக்கியமான மற்றும் சத்துகள் நிறைந்த சுவையான உணவுகளை சமைப்பது எப்படி? என்பது குறித்த கருத்தரங்கத்தை சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள பேரோஸ் ஓட்டலின் 'அலெக்சாண்ட்ரியா டாவெர்ன்' உணவு விடுதியில் நேற்று நடத்தியது. 

    இந்த கருத்தரங்கத்துக்கு நேச்சுரலே நிறுவனத்தின் நிறுவனர் சம்யுக்தா ஆதித்தன் தலைமை தாங்கினார். இதில் நடிகர் அரவிந்த்சாமியின் மகளும், புகழ்பெற்ற உணவு ஆலோசகரும், சமையல் கலை நிபுணருமான அதிரா முன்னிலை வகித்தார்.

    சாப்பிடக் கூடிய உணவு வகைகளில் மிகவும் கவனம் செலுத்துவதோடு, சுவை மற்றும் நேரத்தில் எந்தவித சமரசமும் இல்லாமல், ஆரோக்கியமான உணவுகளை சமைப்பது குறித்த செயல்முறையை சுவாரஸ்யமாகவும், அழகாகவும் எடுத்துரைப்பதுதான் இந்த கருத்தரங்கின் நோக்கமாக இருந்தது.

    அதன்படி, சமையல் கலை நிபுணர் அதிரா, ஆரோக்கியமான, சத்துகள் நிறைந்த சுவையான உணவுகள் தயாரிப்பு குறித்த சமையல் விளக்கத்தை கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு கூறியதோடு, சமைத்தும் காட்டினார். 

    பின்னர், அலெக்சாண்ட்ரியா டாவெர்ன் உணவு விடுதி சமையல் கலைஞர்கள் மற்றும் உணவு ஆலோசகரும், சமையல் கலை நிபுணருமான அதிரா ஆகியோரால் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் கருத்தரங்கில் உள்ளவர்களுக்கு பகிரப்பட்டன. அதனை அவர்கள் அனைவரும் ருசி பார்த்து, உணவின் சுவைக்காக பாராட்டும் தெரிவித்தனர்.

    மேலும், கருத்தரங்கில் ஆரோக்கியமான உணவு சமையல் குறித்த கேள்வி, பதில் அமர்வும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து கருத்தரங்கில் பங்கேற்ற ஆர்வலர்களுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் சில நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன. அதுமட்டுமல்லாமல், இதில் பங்கேற்றவர்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    • போடி அரசு பொறியியல் கல்லூரியில் உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது
    • உணவு பொருட்களில் உள்ள கலப்படங்கள் குறித்தும் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம் :

    போடி அரசு பொறியியல் கல்லூரியில் உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரியில் உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் மக்களின் உணவு முறை உணவு தரம் குறித்து கருத்துக்கள் கூறப்பட்டது.

    பாக்கெட் உணவுகளில் உள்ள கலப்படங்கள் குறித்தும், உணவில் கலக்கப்படும் செயற்கை வர்ணங்களால் ஏற்படும் தீமை குறித்தும், உணவு எண்ணெயில் உள்ள கலப்படங்கள் குறித்தும் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    உடலையும், ஆரோக்கி–யத்தையும் பேணிக்காக்க கலப்படமில்லாத இயற்கை உணவுகள் பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் கலப்பட உணவுகள் உடலில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுத்துவதுடன் பல நோய்களுக்கும் வழிவகை செய்து விடுகிறது என்பதால் பொதுமக்கள் அதனை தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் இதனை அறிவுறுத்தி வளர்க்க வேண்டும்.

    பொறியியல் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு கருத்தரங்கில் போடி வட்டார உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சரண்யா கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு ஆரோக்கியமான உணவு வகை குறித்தும் உணவில் கலப்படம் குறித்தும் சிறப்பு விளக்க உரையாற்றினார்.

    இந்த கருத்தரங்கில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    தங்கம் மேல் பூசப்பட்ட உணவு பொருட்கள் பெரிய உணவகங்கள் மற்றும் உணவு தயாரிப்பு கூடங்களில் பிரத்யேக உணவாக தயார் செய்யப்பட்டு தரப்படுகிறது.
    தங்கம் உலகம் முழுவதும் அனைவராலும் விலை மதிப்புமிக்க உலோகமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. நகைகள், பண சேமிப்பு, பல் மருத்துவம், எலக்ட்ரானிக்ஸ், மொபைல் போன், விண்வெளி என பல துறைகளில் தங்கத்தின் பயன்பாடு மிகப்பெரிய அளவில் வளர்ந்து வந்துள்ளது. அதுபோல் தற்போது தங்க இலைகள் (அ) பவுடர் போன்றவை உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது.

    தங்கம் மேல் பூசப்பட்ட உணவு பொருட்கள் பெரிய உணவகங்கள் மற்றும் உணவு தயாரிப்பு கூடங்களில் பிரத்யேக உணவாக தயார் செய்யப்பட்டு தரப்படுகிறது. இதற்கென பயன்படுத்தப்படும் தங்கம் என்பது 24 காரட் உண்ண கூடிய தங்க இலைகள் (அ) தகடுகள் என்றவாறு விற்பனை செய்யப்படுகின்றன. முன்பெல்லாம் வெள்ளி ரேக் என்பது உணவில் பயன்படுத்தப்பட்டன. அதுபோல் தங்க லீப் என்றவாறு உணவில் மேற்புற அழகை வெளிப்படுத்தும் வகையில் பூசப்பட்டு தரப்படுகின்றன.

    உண்ணக்கூடிய தங்க இலை

    உண்ணக்கூடிய தங்க இலை தங்க ரேக் (அ) இலை என்பது பெரும்பாலும் உணவுகளின் மீது அலங்கரிக்கும் விதமாக பயன்படுத்தப்படுகிறது. சாக்லேட், ஐஸ்கிரீம், டெரெட், கப்கேப் போன்றவைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த தங்க இலைகள் தூய்மையான தங்கத்தில் மெல்லிய அளவில் அதாவது காகித தடிமனின் சுழற்றப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. இதனை முற்றும் உண்ண கூடிய தங்க இலையாக உள்ளது. நமது உடல் செரிமான திறனுக்கு ஏற்றவாறு செரிக்கும் திறன் கொண்டுள்ளதால் இதனை சாப்பிட பயப்பட வேண்டியதில்லை. இதற்கென உள்ள விற்பனை பெட்டிகள் மீது உண்ணக்கூடியது (மீபீவீதீறீமீ) என்று பொறிக்கப்பட்டுள்ளதை ஆராய்ந்து வாங்குதல் வேண்டும்.

    சிறு துகள்கள் மற்றும் காகிதம் போல் மெல்லிய வடிவில் கிடைக்கும் இந்த உண்ணக்கூடிய தங்க இலைகள், தங்க பிளேக்கல்கள் என்பது தனிப்பட்ட விற்பனை நிலையங்கள் பலவற்றில் கிடைக்கின்றன. சில உணவகங்கள் தங்க ரேக் பதித்த உணவுகளை அறிமுகம் செய்து மக்களை கவர்ந்து வருகின்றன. E 175 என்ற வாறு குறியீடு கொடுக்கப்பட்டு உள்ள உணவு பொருளாக தங்க இலைகள் உள்ளன.



    தங்க இலை மேற்பூச்சுடன் சில உணவுகள்

    மேற்கத்திய நாடுகள் விரும்பி உண்ணும் சில பிரபல உணவுகள் அதிக விலையுள்ளவாறு உண்ணக்கூடிய தங்க இலை மேற்பூச்சு மற்றும் முற்றிலும் தங்க இதழ் சுற்றப்பட்ட உணவுகளாக விற்பனைச் செய்யப்படுகின்றன. அவ்வப்போது உணவகங்கள் மக்களை கவர்ந்திழுக்க பெரிய அளவிலான காட்சி தங்க உணவுகளை தயாரித்து தருகின்றன. சில உணவகங்கள் அன்றாடம் விரும்பி உண்ணும் உணவுகளின் மீது சிறு அளவு தங்க இலை அழகுபடுத்தபட்டவாறு உணவுகளை தருகின்றன.

    நியூயார்க் நகரில் 666 யூரோ மதிப்புள்ள 6 தங்க இதழ் சுற்றப்பட்ட விலை உயர்ந்த பர்கர்-யை தயார் செய்து தந்தது. அனைவரும் விரும்பி சாப்பிடும் பிட்சாவில் தங்க இதழ் அலங்கரித்து டோரோண்டா நகர உணவகம் கடந்த சில வருடங்களாக விற்பனையே செய்து வருகிறது. இதன் விலை 108 யூரோ ஆகும்.

    ஒவ்வொரு நாட்டின் சில பிரபல உணவுகள் பல தங்க இதழ் பூச்சுடன் விற்பனைக்கு வருகின்றன. அதாவது சுஹி, பேஜல், லாஸாங்கனா, பேகன், கேன், காப்போசீனா, காட் பெர்ரி சாக்லேட், நம்மூர் தோசை என பல ரகங்கள் தங்க ரேக் பூசப்பட்ட உணவுகளாக விற்பனைக்கு வருகின்றன. இதனை உண்ணும்போது ஏற்படும் மகிழ்ச்சியே அலாதி. உண்ணக்கூடிய தங்க இலைகள் பல நிறுவனங்களில் உணவுகளுடனும், தனிப்பட்ட தங்க பிளேக்களாகவும் விற்பனைக்கு தருகின்றன. அவற்றின் தரம் மற்றும் உண்மை தன்மை ஆராய்ந்து வாங்குதல் வேண்டும்.

    இந்தியாவில் சில நட்சத்திர ஹோட்டல்களில் தங்க ரேக் அலங்கரிப்புடன் சில உணவு வகைகள் விழா காலங்களின் போது சிறப்பு விற்பனை செய்யப்படுகின்றன. ஆடம்பர உணவில் ஆர்வம் கொள்பவர்கள் வீட்டிலேயே கூட தங்க இலை பிளேர் உணவுகளை தயார் செய்து சாப்பிட முடியும். 
    ×