search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hardeep Singh Puri"

    • பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
    • பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தற்போதைக்கு இல்லை என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதிக்கு பிறகு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ந்து, 592-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை ஒரே விலையில் நீடிக்கிறது.

    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தெற்காசிய நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தற்போதைக்கு இல்லை என தெரிவித்தார்.

    • இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றார் மத்திய மந்திரி ஹர்தீப்சிங் பூரி.
    • ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டால்தான் பாராளுமன்ற முடக்கம் முடிவடையும் என்றார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்தில் பேசுகையில், இந்திய ஜனநாயகம் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இதில் தலையிட வேண்டும் என்றும் கூறினார். இந்தியாவை இழிவுபடுத்தியதற்காக, ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பா.ஜ.க. அமளியில் ஈடுபட்டு வருகிறது. அதானி பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டு வருவதால் பாராளுமன்றம் முடங்கி வருகிறது.

    இந்நிலையில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது

    இந்திய குடிமகன் யாராவது வெளிநாட்டுக்குச் சென்றால், அங்கு பேச அவருக்கு உரிமை உண்டு. ஆனால் அந்தப் பேச்சு சுதந்திரத்துடன், பொறுப்புணர்வும் இருப்பது அவசியம்.

    இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, மிகவும் பழமையான நாடு. அதில் சந்தேகம் இல்லை. ராகுல் காந்தி வெளிநாட்டுக்குச் சென்றால், இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக பேசுகிறார். அவர் தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அவர் இந்தியாவில் இருப்பதைத்தான் கூறுவதாக சொல்வதை ஏற்கமுடியாது. அவர் ஏதேனும் செயல்திட்டத்துக்கு உடந்தையாக இருக்கிறாரா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

    இந்தப் பிரச்சினை முடிக்கப்பட வேண்டும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், ராகுல் காந்தி சந்தேகத்துக்கு இடமின்றி மன்னிப்பு கேட்டால்தான் பிரச்சினை முடிவுக்கு வரும். ராகுல் காந்தி, தெளிவாக மன்னிப்பு கேட்க வேண்டும். தவறு செய்துவிட்டேன். அதனால் மன்னிப்பு கேட்கிறேன் என அவர் கூறவேண்டும். அப்படி செய்தால் பாராளுமன்றம் செயல்பட வழி பிறக்கும் என தெரிவித்தார்.

    • இரண்டு முறை பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்திருப்பதாக மத்திய மந்திரி தெரிவித்தார்.
    • சமையல் எரிவாயு விலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்ததை அடுத்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கடந்த சில வாரங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

    எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து பெட்ரோலியத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி பேசியதாவது:-

    இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் எரிபொருள் விலை மிக குறைந்த அளவில் மட்டுமே உயர்த்தப்பட்டு இருக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்னெய் விலை உயர்வால் எண்னெய் நிறுவனங்களுக்கு ரூ.27276 கோடி இழப்பு ஏற்பட்டபோதும், 2022 ஏப்ரல் 6-க்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை. இதனால் 3 பெட்ரோலிய நிறுவனங்களும் இழப்பை சந்தித்துள்ளன.

    சமையல் எரிவாயு விலை உயர்ந்த போதும் நுகர்வோருக்கு பாதிப்பின்றி அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. நவம்பர் 2021 மற்றும் மே 2022 என 2 முறை பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்திருக்கிறது. இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை குறைவாகவே இருக்கிறது.

    எரிபொருள் விலையை கட்டுப்படுத்த வாட் வரியை குறைக்குமாறு மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தும் பாஜக ஆளும் மாநிலங்கள் தவிர பிற மாநிலங்கள் வரியை குறைக்கவில்லை. தமிழகம், மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கேரளா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் வரியை குறைக்காததால் அங்கெல்லாம் விலை அதிகமாக இருக்கிறது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த மாநிலங்களில் வரியை குறைக்கச் சொல்லவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய மந்திரியின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    • இந்தியாவால் தேடப்படும் நபரான ஜாகிர் நாயக் கத்தாருக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.
    • இதுதொடர்பாக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்து மத்திய மந்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    மத வெறுப்புணர்வு பேச்சு, பணமோசடி வழக்கில் இந்தியாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டவர் ஜாகிர் நாயக். இஸ்லாமிய மத போதகரான ஜாகிர் நாயக் இந்தியாவில் இருந்து தப்பியோடி மலேசியாவில் தஞ்சம் அடைத்தார். ஜாகிர் நாயக்கிற்கு மலேசியா நிரந்தர குடியுரிமை வழங்கியுள்ளது.

    இதற்கிடையே, ஜாகிர் நாயக் கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளார். உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெற்றுவரும் நிலையில் சாகிர் நாயக்கை கத்தார் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது.

    இந்நிலையில், இந்தியாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள ஜாகிர் நாயக் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் கத்தாருக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருப்பது தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்து மத்திய மந்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், இந்த விவகாரத்தை இந்தியா கவனிக்கும். மேலும், இந்த விவகாரத்தை கவனத்தில் கொள்ளும். ஆனால், ஜாகிர் நாயக் மலேசிய குடிமகன். ஜாகிர் நாயக் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்தியாவின் நிலைப்பாடு கடுமையாக எடுத்துரைக்கப்படும் என தெரிவித்தார்.

    • மாநிலங்கள் சம்மதிக்க வாய்ப்பில்லை.
    • மதுபானம், எரிபொருட்கள் மூலம் மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது.

    ஸ்ரீநகர் :

    பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்படுமா? என்று நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு ஹர்தீப்சிங் பூரி கூறியதாவது:-

    பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது. ஆனால் அதற்கு மாநிலங்கள் சம்மதிக்க வேண்டும். மாநிலங்கள் சம்மதித்தால், அதை செய்ய தயாராக இருக்கிறோம்.

    ஆனால், மாநிலங்கள் சம்மதிக்க வாய்ப்பில்லை. இதை புரிந்து கொள்வது ஒன்றும் கஷ்டம் இல்லை. மதுபானம், எரிபொருட்கள் ஆகியவற்றில் இருந்து மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது.

    நல்ல வருவாய் கிடைக்கிறது என்றால், அதை யாரும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். பணவீக்கம் பற்றி மத்திய அரசு மட்டுமே கவலைப்படுகிறது.

    பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது பற்றி கடைசியாக லக்னோவில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்குமாறு கேரள ஐகோர்ட்டு யோசனை தெரிவித்தது. ஆனால், அந்த மாநில நிதிமந்திரி ஏற்றுக்கொள்ளவில்லை.

    கடந்த ஓராண்டில் பெட்ரோலிய பொருட்கள் விலை குறைவாக உயர்த்தப்பட்டது இந்தியாவில்தான். வடஅமெரிக்காவில் ஓராண்டில் 43 சதவீதம் விலை உயர்த்தப்பட்டது. ஆனால், இந்தியாவில் வெறும் 2 சதவீதம் மட்டுமே அதிகரித்தது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்களை பாதிக்காத வகையில், உற்பத்தி வரியை குறைத்துள்ளோம். சில அண்டை நாடுகளில், எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், விலையும் அதிகமாக உள்ளது. ஆனால், நமக்கு கிராமப்புற பகுதிகளில் கூட தட்டுப்பாடு இல்லை. மத்திய, மாநில அரசுகளின் போக்குவரத்து வசதிகளே இதற்கு காரணம்.

    எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. விலையை சீராக வைத்திருப்பதற்கு முயன்று வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 25 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
    • சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வீட்டு வசதித் துறை மந்திரி ஹர்தீப்சிங் புரி, ஸ்ரீநகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி முன்னெடுப்புப் பணிகள் அங்குள்ள மக்களுக்கும், நாட்டுக்கும் இடையே உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சி அரசியல் பிரிவு சட்ட 370 மற்றும் 35ஏ நீக்கப்பட்டதன் மூலம் சாத்தியமாகி உள்ளது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி குறித்த பிரதமர் மோடியின் கனவு நனவாகிறது

    11,721 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக 25 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 13,600 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. 7 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. ஜம்மு-தில்லி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் காஷ்மீர் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 1,000 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • சென்னையில் 2 ஆம் கட்டமாக 112 கிலோமீட்டர் தொலைவுக்கு பணிகள் நடைபெறுகிறது.

    சென்னை நந்தனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரெயில் திட்ட தலைமை அலுவலகத்தை மத்திய வீட்டுவசதி மந்திரி ஹர்தீப் சிங் புரியும் முதலமைச்சர் மு க ஸ்டாலினும் கூட்டாக நேற்று திறந்து வைத்தனர். 


    நவீன முறையில் கட்டப்பட்டுள்ள இந்த தலைமையகத்தை இருவரும் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளதாவது:

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் மத்திய மாநில அரசுகளின் கூட்டாட்சி முறைக்கு உதாரணமாக விளங்குகிறது. நாடு முழுவதும் தற்போது 810 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், 1,000 கிலோமீட்டர் தொலைவுக்கான மெட்ரோ ரெயில் பணிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. 


    இதில் சென்னையில் மட்டும் இரண்டாவது கட்டமாக 112 கிலோமீட்டர் தொலைவுக்கான பணிகள் நடை பெறுகின்றன. நகர்ப்புற போக்குவரத்து முறையில் இது புரட்சிகரமானது.

    மெட்ரோ ரெயில் போக்குவரத்தைப் பயன்படுத்தும் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. வெகுவிரைவில், மெட்ரோ ரெயில் பயன்பாட்டில் ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா நாடுகளை இந்தியா மிஞ்சிவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அனைவருக்கும் எரிபொருள் வழங்க வேண்டிய தார்மீகக் கடமை மத்திய அரசுக்கு உள்ளது.
    • குறைந்த விலையில் எங்கிருந்து வேண்டுமானாலும் கச்சா எண்ணெய் வாங்கப்படும்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீதான ரஷிய தாக்குதலை அடுத்து ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடமிருந்து எரி பொருள் கொள்முதல் செய்வதை படிப்படியாகக் குறைத்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது கடந்த ஏப்ரல் மாதம் முதல் 50 மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியா வெளிநாடுகளில் இருந்து வாங்கும் மொத்த கச்சா எண்ணெயில் இது 10 சதவீதமாக உள்ளது.

    இந்நிலையில் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள, மத்திய பெட்ரோலித்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், உக்ரைனுடன் ரஷியா போர் புரிந்து வரும் நிலையில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நடவடிக்கை தொடரும் என்று கூறினார். இந்திய குடிமக்களுக்கு தடையின்றி எரிபொருள் வழங்க வேண்டிய தார்மீகக் கடமை மத்திய அரசுக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள் முதல் செய்ய கூடாது என்று எந்த நாடும் இந்தியாவை நிர்பந்திக்க வில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். குறைந்த விலையில் எங்கிருந்து வேண்டுமானாலும் கச்சா எண்ணெய்யை வாங்கும் மத்திய அரசின் நடவடிக்கை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க இந்தியா நடவடிக்கை.
    • சுய -சார்பு நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியா எரிசக்தி வாரம் 2023 நிகழ்ச்சியையொட்டி லோகோவை வெளியிட்ட மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ள இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சுய-சார்பு நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ், சுய-சார்பு நடவடிக்கைத் தொடர்பான முதலீட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

    பெட்ரோலில் எத்தனாலை 10 சதவீதம் கலப்பது, 2ஜி சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசின் உறுதிப்பாட்டின் அடையாளமாகும். வளர்ந்த நாடுகளில் எரிபொருள் விலை உயர்வு மிக அதிகமாக இருக்கிறது. அதை ஒப்பிடுகையில் இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.

    பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 22 வரையிலான காலகட்டத்தில் பெட்ரோல் விலையில் கிட்டத்தட்ட 40% பணவீக்கம் கணிசமாக உயர்ந்துள்ளது, இந்தியாவில் பெட்ரோல் விலை 2.12% குறைந்துள்ளது. எரிவாயு விலையில் கூட கடந்த 24 மாதங்களில், சவுதி விலை கிட்டத்தட்ட 303% அதிகரித்துள்ளது.

    அதே காலகட்டத்தில், இந்தியாவில் எல்பிஜி விலை அந்த எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவாக, அதாவது 28% அதிகரித்துள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் நிகழும் ஏற்ற இறக்கத்தைக் குறைக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×