search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guru Pooja ceremony"

    • பழனி சண்முக சுந்தரதேசிகா், கரூா் ஓதுவாா் சுவாமிகள் சுவாமிநாததேசிகா் ஆகியோா் தலைமை வகித்தனா்.
    • முக்திப்பதிகம் பாடி, அவிநாசியப்பா் திருவடிகளில் ஜோதியாய் கலக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    அவினாசி :

    அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருஞானசம்பந்த சுவாமிகள் குருபூஜை விழா மற்றும் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.திருஞானசம்பந்த சுவாமிகள் குருபூஜை விழாவிற்கு பழனி சண்முகசுந்தரதேசிகா், கரூா் ஓதுவாா் சுவாமிகள் சுவாமிநாததேசிகா் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் திருஞானசம்பந்தா் திருக்கோயில் பிரகார உலா வருதல், 'காதலாகி கசிந்து' என்ற முக்திப்பதிகம் பாடி, அவிநாசியப்பா் திருவடிகளில் ஜோதியாய் கலக்கும் நிகழ்வு நடைபெற்றது. மேலும், கூட்டு வழிபாடு, மகாதீபாராதனையுடன் அன்னம்பாலிப்பு நடைபெற்றது. இதைத்தொடா்ந்து தமிழ்வேள்வியும், திருமுறைகண்ட விநாயகா், நால்வா் பெருமக்கள், அம்மையப்பன் ஆகியோருக்கு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற்றது.

    இதில் காஞ்சிபுரம் அரசு தேவார இசைப்பள்ளி ஆசிரியா் ராஜூபதி, அவிநாசி ஓதுவாா் சுவாமிகள் சங்கா், சரவணம்பட்டி கெளமார மடாலய தலைமை ஓதுவாா் கணேசன், கரூா் மாவட்ட அரசு தேவார இசைப்பள்ளி மாணவா்கள், தமிழகத்தின் தலைசிறந்த ஓதுவாமூா்த்திகள், பக்கவாத்திய கலைஞா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 

    • 32-ம் ஆண்டு குருபூஜை விழா, மகான் ஸ்ரீமகாலட்சுமி சுவாமிகளின் 60-ம் ஆண்டு கல்கி ஜெயந்தி விழா நடக்கிறது.
    • காலை 7மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை, ஸர்வ காயத்ரி ஹோமம் நடக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் ஸ்ரீலட்சுமி நாராயண பீடம் ஸ்ரீமகாலட்சுமி கோவிலில் மகான் ஸ்ரீமகாலட்சுமி சுவாமிகளின் அருளாசியுடன் 32-ம் ஆண்டு குருபூஜை விழா, மகான் ஸ்ரீமகாலட்சுமி சுவாமிகளின் 60-ம் ஆண்டு கல்கி ஜெயந்தி விழா வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

    இதைெயாட்டி அன்று காலை 7மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம், அஷ்டதி ஹோமம், பஞ்சப்ரமே ஹோமம், நவகிரக ஹோமம், ஸ்ரீ ஸூக்தம், புருஷஸூக்தம், மகாலட்சுமி, மிருத்யுஞ்ஜெய ஹோமம், ஸர்வ காயத்ரி ஹோமம் நடக்கிறது. காைல 9மணிக்கு மகா பூர்ணாஹூதி , 10மணிக்கு சுவாமிஜி தம்பதியர்களுக்கு கலசாபிஷேகம், 12மணிக்கு ஸ்ரீமகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம் நடக்கிறது. சிறப்பு பூஜைகள் புளியம்பட்டி பாலுசாமி, சுரேஷ்பாபு, திருப்பூர் பாஸ்கர் சாஸ்திரிகள், வேத மாதா காயத்ரி குழுவினர்கள் நடத்துகின்றனர்.

    இக்கோவிலில் வாரந்தோறும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அருள்வாக்கு நடக்கிறது. மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று காலை 11மணி முதல் விளக்கு பூஜை நடக்கிறது. அன்னபிரசாதமும் வழங்கப்படுகிறது. 

    ×