search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gudimangalam"

    • குடிமங்கலம் நால்ரோடு வழியில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
    • சேலம், சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களும் இந்த வழியாக செல்கின்றன.

    உடுமலை :

    உடுமலையிலிருந்து பல்லடம் திருப்பூர் செல்லும் சாலை, பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலை ஆகியவை சந்திக்கும் முக்கியமான இடமாக குடிமங்கலம் நால்ரோடு பகுதி உள்ளது. இந்த வழியில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக உடுமலை பகுதியில் இருந்து சேலம், சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களும் இந்த வழியாக செல்கின்றன. மேலும் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கும் குடிமங்கலம் நால்ரோடு பகுதி வந்து பஸ் ஏறி செல்கின்றனர். நால்ரோடு பகுதி மிகவும் விசாலமாகவும் ரவுண்டான அமைக்கும் வகையிலும் உள்ளது இதனால் சாலை கடப்பதற்கு வேகமாக வரும் வாகனங்கள் பாதசாரிகளின் மீது மோதி விடுகின்றன.

    இங்கு போக்குவரத்து போலீசாரும் பணியில் இருப்பதில்லை. எனவே குடிமங்கலம் நால்ரோடு பகுதியில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நிலம் செம்மைப்படுத்தவும், இடுபொருட்களும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
    • நிலங்களிலுள்ள முட் புதர்களை அகற்றுதல், சமன் படுத்துதல், உழவு செய்தல் ஆகிய பணிகளுக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் வட்டாரத்தில், 24 கிராமங்களில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நிலம் செம்மைப்படுத்தவும், இடுபொருட்களும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது:-

    விவசாய நிலங்கள், போதியளவு மழை பொழிவு இல்லாததாலும், தொழிலாளர் பற்றாக்குறையாலும், விவசாயம் செய்யப்படாமல், தரிசு நிலங்களாக மாறி வருகிறது. வேளாண் துறை சார்பில், வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ், நிலங்களிலுள்ள முட் புதர்களை அகற்றுதல், சமன் படுத்துதல், உழவு செய்தல் ஆகிய பணிகளுக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. மேலும் இந்நிலங்களில் சாகுபடி மேற்கொள்ள தேவையான விதைகள், நுண்ணுயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகளும், வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக, மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    குடிமங்கலம் வட்டாரத்தில் 24 கிராமங்களில், தரிசு நில மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தரிசு நில விவசாயிகள், சிட்டா, பட்டா, ஆதார் அட்டை நகல், போட்டோ ஆகியவற்றுடன், வேளாண் அலுவலங்களை அணுகி தரிசு நிலங்களை திருத்தி விளை நிலங்களாக மாற்றி பயன்பெறலாம்.இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    • 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • பெரும்பாலான கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் ஒன்றியக்குழு சாதாரணக்கூட்டம், துணைத்தலைவர் புஷ்பராஜ் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் சிவகுருநாதன், சாதிக்பாஷா முன்னிலை வகித்தனர்.ஒன்றிய அலுவலக செலவினங்கள், லிங்கமநாயக்கன்புதூர் முதல் சனுப்பட்டி வரையிலான ரோட்டை 78 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்தல் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் திருமூர்த்திமலை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சீரான வினியோகம் இல்லாததால், ஒன்றியத்துக்குட்பட்ட பெரும்பாலான கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு நடத்தி வினியோகத்தை சீராக்க வேண்டும்.கிராமங்களில் ரோடு மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்காக கவுன்சிலர்கள் வழங்கிய கருத்துரு மீது ஒன்றிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.ஒன்றிய பொது நிதியில், வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய கவுன்சிலர்கள் பேசினர்.

    • உலக மக்கள் தொகை தினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக மக்கள் தொகை தினம், அரசு மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.பள்ளித்தலைமையாசிரியர் பழனிசாமி தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்த தினத்தையொட்டி ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. உதவித்தலைமை ஆசிரியர்கள் பத்மகீதா, சக்திவேல்ராஜா, ஓவிய ஆசிரியர்கள் தியாகராஜன், மாசிலாமணி, சுகாதார ஆய்வாளர் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • இலவச மின்சாரத்திற்கு போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    குடிமங்கலம் :

    இலவச மின்சாரத்திற்கு போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் குடிமங்கலத்தில் நடைபெற்றது.

    இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள், திருப்பூர் தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், அப்பிலியபட்டி பரமேஸ்வரன், ரமேஷ், வரதராஜபுரம் கிளை பொறுப்பாளர் ராஜகோபால், சுகுணா ரமேஷ், இராமச்சந்திரபுரம் ராஜ்குமார், செந்தில்குமார், முருகேஷ், கோவிந்தசாமி, சோமசுந்தரம், குமாரபாளையம் காவடி முருகேஷ், ராசு , நாச்சிமுத்து , சம்பத் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி, உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • ஊராட்சிகளில் கடுமையான குடிநீர்தட்டுப்பாடு நிலவுகிறது.
    • அதிகாரிகள் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குடிமங்கலம்,

    குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரணக்கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் புஸ்பராஜ் தலைமை வகித்தார்.கூட்டத்தில், கவுன்சிலர்கள் ராஜமாணிக்கம் (தி.மு.க.,) தமயந்தி (அ.தி.மு.க.,) உள்ளிட்ட கவுன்சிலர்கள் பேசியதாவது:-

    பெரியபட்டி, வாகத்தொழுவு, மூங்கில்தொழுவு உள்ளிட்ட ஊராட்சிகளில் கடுமையான குடிநீர்தட்டுப்பாடு நிலவுகிறது. மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் தவிப்புக்குள்ளாகின்றனர். குடிநீருக்காக பல்வேறு இடங்களுக்கும் சென்று பெற வேண்டியதுள்ளது.திருமூர்த்தி அணை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து போதுமான அளவு தண்ணீர், கிராமங்களை வந்தடைவதில்லை.குடிநீர் வடிகால் வாரியம், ஒன்றிய அதிகாரிகளிடம், பலமுறை புகார் தெரிவித்தும் கண்டுகொள்வதும் கிடையாது. மூங்கில் தொழுவில், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டும் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

    இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இப்பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அப்போது அதிகாரிகள் பதில் அளிக்கையில், குடிநீர் வடிகால் வாரிய திட்டத்தின் வாயிலாக ஊராட்சிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் நீரேற்று நிலையத்தில் இருந்து வழங்கப்படுகிறது. தற்போது தெரிவிக்கப்படும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்துநடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    ×