search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government school student"

    • மாணவர் ரவுல் ஜானை அமெரிக்க மாணவர்கள் தொடர்பு கொள்கிறார்கள்.
    • மாணவர் ரவுல்ஜானின் இந்த படைப்பு அவர் தொடங்கிய யூ-டியூப் சேனலின் மூலமாக தெரிய தொடங்கியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியில் உள்ள எடப்பள்ளி அமர்தநகரை சேர்ந்த தம்பதி அஜூ ஜோசப்-ஷெபா ஆன். இவர்களது மகன் ரவுல் ஜான். எடப்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    படிப்பில் சிறந்து விளங்கிய மாணவர் ரவுல் ஜான், எதிர்கால தொழில்நுட்பம் தொடர்பான விஷயங்களில் ஆர்வமாக இருந்தார். இதன் காரணமாக அவர் மீபோட் என்ற பெயரில் ரோபோ ஒன்றையும் தயாரித்து வைத்துள்ளார்.

    பல மரங்களை பயன்படுத்தி தனது வகுப்பு தோழன் சையத் உதவியுடன் அதனை உருவாக்கி இருக்கிறார். பல மாதங்களுக்கு பிறகு உருவாகியிருக்கும் அந்த ரோபோ, தொடக்கத்தில் கம்ப்யூட்டர் கேம் போன்றே வடிவமைக்கப்பட்டிருந்தது. பின்பு அதில் பல தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நாம் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் மாணவர் ரவுல்ஜான் உருவாக்கியிருக்கிறார்.

    மாணவர் ரவுல் ஜான் தயாரித்துள்ள அந்த ரோபோ, நாம் கேட்கும் கேள்வியின் தன்மைக்கு தகுந்தாற்போல் பதிலளிக்கும் வகையில் உள்ளது. அதாவது ஆத்திர மூட்டும் கேள்வியாக இருந்தால் அதே தொணியிலும், சந்தேகத்தின் அடிப்படையில் பணிவாக இருந்தால் அந்த தொணியிலும் பதில் கொடுக்கும்.

    மாணவர் ரவுல்ஜானின் இந்த படைப்பு அவர் தொடங்கிய யூ-டியூப் சேனலின் மூலமாக தெரிய தொடங்கியது. வெளி நாட்டில் உள்ள படிப்பு தளங்கள் கலந்துரையாடலின் போது ராவல் ஜானின் திறமையை அங்கீகரித்தது. இதன்மூலம் மாணவர் ரவுல் ஜானை அமெரிக்க மாணவர்கள் பலர் கூகுள் மீட் மூலம் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்.

    அதன் மூலமாக அமெரிக்க மாணவர்களுக்கு அவர் வகுப்பு எடுத்து வருகிறார். ஒவ்வொரு வகுப்பிலும் 40 மாணவர்கள் வரை பங்கேற்று ரவுல் ஜானிடம் பல்வேறு கேள்விகளை கேட்கின்றனர். பெரும்பாலும் 2 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்கள் அவரிடம் யோசனைகளை கேட்கிறார்கள்.

    சில நேரங்களில் இரவு நேரத்திலும் மாணவர் ரவுல் ஜானை அமெரிக்க மாணவர்கள் தொடர்பு கொள்கிறார்கள். அப்போது அவர் தூங்கிவிட்டால் அவருக்கு பதிலாக அவர் தயாரித்துள்ள ரோபோ பதிலளிக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஆளில்லா விமானம் தயாரிப்பதே தனது அடுத்த இலக்கு என்று மாணவர் ரவுல் ஜான் தெரிவித்திருக்கிறார்.

    • கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள், அடிப்படை கட்டமைப்புகள் வசதிகள் குறித்து ஆய்வு
    • படித்த பிறகு கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்

    கோவை,

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கான வழிகாட்டல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனால், மாணவர்கள் உயர்கல்வியை தேர்வு செய்வதிலும், வேலை வாய்ப்பு பெறுவதிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

    இந்நிலையில், தற்போது பிளஸ்-2 படிக்கும் மாண வர்கள் அடுத்த ஆண்டு கல்லூரிக்கு சேரும் ஆர்வத்தை தூண்டும் வகை யில் களப்பயணம் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஒரு பள்ளிக்கு தலா 35 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மாவட்டம் முழுவதும் 113 மேல்நி லைப்பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 4 ஆயிரத்து 45 மாணவர்கள் கல்லூரி களப்பயணத்திற்கு தேர்வாகியுள்ளனர். இந்த மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்த பாடப்பிரிவுகளின் அடிப்படையில் அந்தந்த பாடப்பிரிவு உள்ள கல்லூரிகளுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

    இதற்காக, பாரதியார் பல்கலைக்கழகம் வேளாண் பல்கலைக்கழகம், கோவை, மேட்டுப்பாளையம், வால்பாறை அரசு கலைக்கல்லூரிகள், அரசு தொழில்நுட்ப கல்லூரி, கோவை அரசு மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 24 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த களப்பயணத்தின் போது மாணவர்கள் கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள், நூலகம், ஆய்வகங்கள், உபகரணங்கள், விளையாட்டு மைதானங்கள், விடுதி அறைகள், உணவுகூடம், வகுப்பறைகள், அடிப்படை கட்டமைப்புகள் வசதிகள் குறித்து பார்வையிட உள்ளனர்.

    மேலும், கல்லூரியில் உள்ள இளங்கலை படிப்புகள், உதவித் தொகை திட்டங்கள், போட்டி தேர்வுகள், வேலைவாய்ப்புகள், பயிற்சி வகுப்புகள், சான்றிதழ் படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள், படித்த பிறகு கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். மாணவர்களை கல்லூரிக்கு அழைத்து செல்ல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் பஸ்கள் ஏற்பாடு செய்யபடவுள்ளது.

    மேலும், களப்பயணத்தின் போது மாணவர்கள் சீருடையில் தான் வர வேண்டும். மாணவர்களுக்கு மதிய உணவு, தேநீர் உள்ளிட்டவையும் வழங்கப்படும். இந்த கல்லூரி களப்பயணத்திற்கு மாணவர்களை வரும் டிசம்பர் முதல் வாரத்தில் அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மாணவன் கமல் நாத் நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
    • பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முருகேசன். விசைத்தறி கூடத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி.

    இவர்களது மகன் கமல் நாத். இவர் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதி முடிவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் நடந்து முடிந்த நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் மாணவன் கமல் நாத் 720-க்கு 623 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    மேலும் நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 561 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் மாணவன் கமல் நாத்துக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    பண்ருட்டியில் அரசு பள்ளி மாணவன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூர் புதுகாலனியை சேர்ந்தவர் சண்முகம்(57) இவரது மகன் ரோஸ்பாண்டியன்(வயது 15). இவர் இதே பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்தநிலையில் ரோஸ்பாண்டியன் திடீரென பூச்சிமருந்து குடித்தார். அவரை ஆபத்தான நிலையில் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் உடலை பரிசோதித்த டாக்டர்கள் ரோஸ்பாண்டியன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த பள்ளியில் இதற்கு முன்பு குறிப்பிட்ட ஒரு ஆசிரியரின் வகுப்பறையில் 2 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவம் இங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்மந்தப்பட்ட ஆசிரியரை பணி மாற்றம் செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    தேசிய அளவிலான தடகள போட்டியில் தங்கம் வென்ற ஊத்துக்கோட்டை அரசு பள்ளி மாணவனுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் பாராட்டு தெரிவித்தார்.
    ஊத்துக்கோட்டை:

    பள்ளி மாணவர்களுக்கு இடையிலான தேசிய அளவிலான தடகள போட்டிகள் புனேயில் நடைபெற்றது. இதில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள மெய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் சாந்தகுமார் கலந்து கொண்டு மும்முனை தாண்டும் போட்டியில் தங்கம் வென்றார்.

    அவருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் பாராட்டு தெரிவித்தார். தலைமை ஆசிரியர் சிவராமன் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். #tamilnews
    அரசு பள்ளி மாணவனை கடத்தி சித்ரவதை செய்ததில் காயம் அடைந்த அவன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி முத்தையாபுரம் கீதாநகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் சொந்தமாக என்ஜினீயரிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 14). இவன் ஸ்பிக்நகர் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    இதே பள்ளியில் அமிஸ் எபன் (14) என்ற மாணவனும் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது சதீஷ்குமாரும், அமிஸ் எபன்னும் சண்டையிட்டுள்ளனர்.

    பின்னர் மறுநாள் சைக்கிளில் வரும் போது எதிர் பாராதவிதமாக ஒருவருடன் ஒருவர் உரசி இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதில் அமிஸ் எபனின் சைக்கிள் முன்பகுதி சேதம் அடைந்துள்ளது. இதனை வீட்டிற்கு சென்றதும் தனது தந்தையிடம் கூறியுள்ளான். இதை கேட்டு அவனது தந்தை ஆத்திரமடைந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 11-ந் தேதி பள்ளி முடிந்து சதீஷ்குமார் வீடு திரும்பி கொண்டிருந்தான். அப்போது அமிஸ் எபனின் தந்தை, மாணவன் சதீஷ்குமாரை தாக்கி தனது பைக்கில் கடத்தி உள்ளார்.

    பின்னர் கனநீர் ஆலை ஊழியர் குடியிருப்பான ஹெவி வாட்டர் காலனியில் உள்ள தனது வீட்டிற்கு கடத்தி சென்றார். மேலும் மாணவனை அவர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த மாணவன் சதீஷ்குமாரின் தந்தை பாலமுருகன் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து தட்டிக் கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவனை வெளியே அனுப்பி கதவை அடைத்தார்.

    இதில் காயம் அடைந்த மாணவன் சதீஷ் குமார் தனக்கு வயிறு வலிப்பதாக கூறியதால் அவனை தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

    இடைநிற்றல் உள்ளிட்ட மாணவர்களின் அனைத்து மேலாண்மையையும் மேற்கொள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ‘எமிஸ்‘ அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. #EMISCard #GovernmentSchool
    மானாமதுரை:

    தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இடைநிற்றலை கண்டறியும் வகையிலும், பல்வேறு காரணங்களால் இடமாறும் மாணவர்களை எளிதில் மற்ற அரசு பள்ளிகளில் சேர்க்கும் வகையிலும் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (எமிஸ்) என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் விவரங்களை அனுப்பிவைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு, அந்தந்த பள்ளி தலை மை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி 16 இலக்க எண் கொண்ட எமிஸ் அடையாள அட்டை ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்பட உள்ளது. மேலும் ஆசிரியர்களுக்கும் எமிஸ் திட்டத்தில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

    முதற்கட்டமாக ஆசிரியர் தினத்தன்று பல்வேறு இடங்களில் வழங்கப்பட்டது. இதேபோன்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மிளகனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 76 மாணவ-மாணவிகளுக்கு எமிஸ் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் விநாயகமூர்த்தி அடையாள அட்டைகளை வழங்கினார். இதேபோன்று அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு குறியீடு கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆசிரியர்களின் பணியில் சேர்ந்த நாள், பதவி உயர்வு, இதுவரை பணியாற்றிய பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×