search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gayatri Mantra"

    • பூணூலை தயாரிக்கையில் காயத்ரி மந்திரத்தை ஜெபித்துக்கொண்டே தயாரிப்பார்களாம்.
    • ஜெபித்து உரு ஏற்றப்பட்ட பூணூலுக்கு சக்தி அதிகம்.

    பூணூலுக்கு வடமொழியில் யக்ஞோபவீதம் என்ற பெயர். அப்படிப் பட்ட பூணூலை தயாரிக்கையில் காயத்ரி மந்திரத்தை ஜெபித்துக்கொண்டே தயாரிப்பார்களாம். அப்படி ஜெபித்து ஜெபித்து உரு ஏற்றப்பட்ட பூணூலுக்கு சக்தி அதிகம். இதற்கு ஒரு கதை உண்டு.

    ஒரு ஏழை பிராமணர் பூணூல் தயாரித்துக் கொடுத்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டி வந்தார். அவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மையில் வாழ்ந்து வந்தது. கணவன், மனைவி ஒரு பெண்குழந்தை அவருக்கு இருந்தது.

    அந்த ஊர் அரசன் மிகவும் சத்தியவான். சொன்னால் சொன்னபடி அனைவருக்கும் செய்வான். அரசன் நல்லவனாக இருந்ததால் ஊர் மக்களும் பிராமணருக்கு ஓரளவு உதவி வந்தனர்.

    பிராமணரின் பெண்ணிற்குத் திருமண வயது வந்தது. அக்கால வழக்கப்படி ஏழு வயதுக்குள் திருமணம் முடிக்க வேண்டும். ஒரு மாப்பிள்ளையும் அந்தப பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்தான். ஆனால் அந்த கல்யாணத்தைக் குறைந்தபட்ச செலவுகளோடு நடத்தியாக வேண்டுமே... என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

    தன்னுடைய குழந்தையின் திருமணத்தை நடத்த என்ன செய்வது என்று தன்னுடைய மனவியிடம் கூறி கவலையுற்றார். அதற்கு அவருடைய மனைவி காயத்ரி தேவியை நினைத்துக்கொள்ளுங்கள் அவள் நமக்கு உதவி செய்வாள் என்றாள். அதன்பிறகு பிராமணர் மன்னனிடம் சென்றார்.

    மன்னனும் பிராமணரை வரவேற்று உபசரித்தான். அவர் முகத்தின் ஒளி அவனைக் கவர்ந்தது. இது எதனால் என யோசித்துக்கொண்டே அவர் வந்த காரியம் என்னவோ என வினவினான். பிராமணரும் தன் மகளுக்குத் திருமணம் நிச்சயித்திருப்பதாகவும், அதற்கான பொருள் தேவை என்பதாலேயே மன்னனிடம் வந்திருப்பதாகவும் கூறினார்.

    அவ்வளவு தானே, நான் தருகிறேன் என்ற மன்னன் எவ்வளவு பொருள் தேவை என கேட்க கூசிக் குறுகிய பிராமணரோ, தன்னிடமிருந்த பூணூலைக் காட்டி," இதன் எடைக்குரிய பொற்காசைக் கொடுத்தால் போதும். சமாளித்துக்கொள்கிறேன்." என்று கூறினார்.

    மன்னன் நகைத்தான். ஒரு தராசை எடுத்துவரச் சொல்லி பூணூலை அதில் இட்டு மறுபக்கம் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான். பூணூல் இருக்கும் பக்கம் தராசுத்தட்டு தாழ்ந்தே இருந்தது. மேலும் பொற்காசுகளை வைக்க...ம்ஹும்..அப்படியும் பூணூல் இருக்கும் தட்டு தாழ்ந்தே இருந்தது. தராசும் பத்தவில்லை பெரிய தராசைக் கொண்டு வரச் செய்தான் மன்னன்.

    மேலும் பொற்கட்டிகள், வெள்ளிக்கட்டிகள், நகைகள், ரத்தினங்கள் என இட இட தராசுத்தட்டும் தாழ்ந்தே போக, தன் கஜானாவே காலியாகுமோ என பயந்த மன்னன் மந்திரியைப் பார்த்தான். சமயோசிதமான மந்திரியோ, "பிராமணரே. இன்று போய் நாளை வந்து வேண்டிய பொருளை பெற்றுக்கொள்ளும். நாளை வருகையில் புதிய பூணூலை செய்து எடுத்துவரவும்." எனக் கூறினார்.

    கலக்கத்துடன் சென்றார் பிராமணர். இத்தனை நாட்களாக மனதில் இருந்த அமைதியும், நிம்மதியும் தொலைந்தே போனது. மன்னன் பொருள் தருவானா மாட்டானா?

    ஆஹா, எத்தனை எத்தனை நவரத்தினங்கள்? அத்தனையையும் வைத்தும் தராசுத்தட்டு சமமாகவில்லையே? நாளை அத்தனையையும் நமக்கே கொடுத்துவிடுவானோ? அல்லது இன்னமும் கூடக் கிடைக்குமா? குறைத்துவிடுவானோ? பெண்ணிற்குக் கொடுத்தது போக நமக்கும் கொஞ்சம் மிஞ்சும் அல்லவா? அதை வைத்து என்ன எனன செய்யலாம்? பிராமணரின் மனம் அலை பாய்ந்தது. அன்றிரவெல்லாம் தூக்கமே இல்லை. காலை எழுந்ததும், அவசரம், அவசரமாக நித்ய கர்மாநுஷ்டானங்களை முடித்தார். பூணூலை செய்ய ஆரம்பித்தார்.

    வாய் என்னவோ வழக்கப்படி காயத்ரியை ஜபித்தாலும் மனம் அதில் பூர்ணமாக ஈடுபடவில்லை. தடுமாறினார். ஒருமாதிரியாக பூணூலை செய்து முடித்தவர் அதை எடுத்துக்கொண்டு மன்னனைக் காண விரைந்தார். அரசவையில் மன்னன், மந்திரிமார்கள் வீற்றிருக்க மீண்டும் தராசு கொண்டு வரப்பட்டது. அன்று அவர் தயாரித்த பூணூலை தராசுத்தட்டில் இட்டு இன்னொரு தட்டில் சில பொற்காசுகளை வைக்க சொன்னான் மன்னன்

    என்ன ஆச்சரியம்? பொற்காசுகள் இருக்கும் தட்டு தாழ்ந்துவிட்டதே? சில பொற்காசுகளை எடுத்துவிட்டு இரண்டு, மூன்று பொற்காசுகளை வைத்தாலும் தட்டுத் தாழ்ந்து போயிற்று. பின்னர் அவற்றையும் எடுத்துவிட்டு ஒரே ஒரு பொற்காசை வைக்கத் தட்டுச் சமம் ஆயிற்று. அதை வாங்கிக் கொண்டார் அந்த பிராமணர்.

    பிராமணர் அங்கிருந்து சென்றதும் மன்னனுக்கு ஆச்சரியம் "முதலில் எவ்வளவு பொருளை வைத்தாலும் தாழாத தட்டு இன்று சில பொற்காசுகளை வைத்ததுமே தாழ்ந்தது ஏன்?" என்று கேட்க மந்திரியோ, மன்னா, இந்த பிராமணர் உண்மையில் மிக நல்லவரே. சாதுவும் கூட இத்தனை நாட்கள் பணத்தாசை ஏதும் இல்லாமல் இருந்தார்.

    தேவைக்காகத் தான் உங்களை நாடி வந்தார். வந்தபோது அவர் கொடுத்த பூணூல் அவர் ஜபித்த காயத்ரியின் மகிமையால் அதிக எடை கொண்டு தனக்கு நிகரில்லாமல் இருந்தது. அந்த பூணூலை வைத்திருந்தால் ஒருவேளை உங்கள் நாட்டையே கூட கொடுக்க வேண்டி இருந்திருக்கலாம். அவ்வளவு சக்தி வாய்ந்தது காயத்ரி மந்திரம்.

    ஆனால் அவரை திரும்ப வரச் சொன்ன போது, அவர் பணம் கிடைக்குமா, பொருள் கிடைக்குமா என்ற கவலையில் காயத்ரியை மனம் ஒருமித்துச் சொல்லவில்லை ஆகவே மறுநாள் அவர் கொண்டு வந்த பூணூலில் மகிமை ஏதும் இல்லை. அதனால் தான் பொற்காசுகளை வைத்ததுமே தட்டுத் தாழ்ந்துவிட்டது." என்றான் மந்திரி.

    • தவம் இயற்றினாலும் சத்ரியனால் எளிதில் பிரம்மரிஷி பட்டம் வாங்க முடியாது.
    • கள்ளி செடியின் முனையில் மேல் நின்று கடும் தவம் புரிகிறார்.

    முன்பு ஒருமுறை சத்ரியரான கவுசிக மன்னனுடைய நாட்டில் கடும் பஞ்சம் நிலவியது. இதனை போக்க மகரிஷி வசிஷ்டரிடம் இருக்கும் காமதேனு பசுவின் பெண் வயிற்று பிள்ளையான நந்தினி என்ற பசுவை தன் நாட்டின் பஞ்சம் போக்க வேண்டி இரவல் கேட்கிறார். வசிஷ்டர் இவரது கோரிக்கையை நிராகரிக்கிறார். கோபமுற்ற கவுசிகன் அவர் மேல் போர் தொடுத்து தோல்வி அடைகிறார்.

    தோல்வியுற்ற கவுசிக மன்னனிடம் வசிஷ்டர், பிரம்ம ரிஷிகளுக்கு மட்டுமே காமதேனு, மந்திரி என்ற பசுக்கள் கட்டுப்படும் எனவே நீர் பிரம்மரிஷியானால் நந்தினி பசுவை தருகிறேன் என்கிறார். மேலும் தவம் இயற்றினாலும் சத்ரியனால் எளிதில் பிரம்மரிஷி பட்டம் வாங்க முடியாது என்று உரைக்க, கவுசிகனும் அந்த பிரம்மரிஷி பட்டத்தை வாங்கி காட்டுவதாக சவால் விடுத்து ஒரு கள்ளி செடியின் முனையில் மேல் நின்று கடும் தவம் புரிகிறார். இதை கண்ட அன்னை சக்தி கவுசிகன் முன் தோன்றி தன கோவிலில் உள்ள விளக்கில் பஞ்சமுகமாக திரி போட்டு தீபம் ஏற்றினால் உன் தவம் சித்தியாகும் என்று அறிவித்து மறைகிறாள்.

    சக்தியின் வாக்கை ஏற்று நான்கு வேதங்களின் பிறந்தநாள் (பவுர்ணமி) அன்று அவளது ஆலயம் சென்று பஞ்சமுகமாக திரிவைத்து விளக்கேற்ற முனைகிறார். ஆனால் எவ்வளவு முயன்றும் அந்த திரிகள் எரியவில்லை. உடனே அந்த விளக்கில் தன் தலை, இரண்டு கை மற்றும் கால்கள் இவை ஐந்தையும் வைத்து அந்த விளக்கை ஒரு மந்திரம் ஓதி எரிய வைக்கிறார். தனது உடலையே திரியாக்கி ஒரு நாள் முழுவதும் தனது நாட்டு மக்களுக்காக போராடுவதை கண்ட சக்தி அவரை விசுவாமித்திரர் என்று அழைத்து பிரம்மரிஷி பட்டத்தையும் வழங்குகிறார்.

    தனது உடலை திரியாக்கி ஜோதியை மையமாக வைத்து தன் தவத்தின் போது கவுசிக மன்னன் தான் அறிந்த நன்கு வேதத்தின் சாரமாக ஒரு மந்திரம் இயற்றி உச்சாண்டம் செய்ததால் அதுவும் மந்திரத்திற்காக தன் உடலையே திரியாக்கி உச்சாண்டம் செய்து வரம் பெற்றதால் அந்த மந்திரம் காயத்ரி மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் கவுசிகன் கூறிய இம்மந்திரம் நான்கு வேதங்களின் சாரம் என்பதால் இனி வேதியர்கள் ஜோதி சொரூபமாக என்னை நினைத்து உலக நன்மைக்கு பிராத்தனை செய்யலாம் என அருளியதால் அன்று முதல் இன்று வரை நாம் உச்சாண்டம் செய்து பலன் பெறுகிறோம்.

    காயத்ரி மந்திரத்திற்கு கட்டுப்பட்டு மனம் இறங்கிய சக்தியை அந்த மந்திரத்தை கொண்டே காயத்ரி தேவி என்று அழைக்கிறோம். சிரவண மாத பவுர்ணமிக்கு மறுநாள் அவர் வரமும் பட்டமும் பெற்றதால் நாமும் அதே நாளில் காயத்ரி மந்திரத்தை உச்சாண்டம் செய்து வணங்குகிறோம். அந்நாளில் இம்மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க பூர்வஜென்ம பாவங்கள் தொலைந்து போகும்.

    'காயத்திரி' என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு "காயத்திரி மந்திரம்" என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது.

    காயத்ரி மந்திரம்:

    ஓம் பூர் புவ ஸுவ

    தத் ஸவிதுர் வரேண்யம்

    பர்கோ தேவஸ்ய தீமஹி

    தியோ யோந ப்ரசோதயாத்

    இதை தினசரி ஜெபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜெபிப்பவனை காப்பாற்றுவது என்று பொருள்.

    • நற்காரியம் நடைபெற நவக்கிரகத்தை வழிபடுவோம்.
    • இந்த காயத்ரி மந்திரங்களை தினமும் சொல்லி வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.

    சூர்ய காயத்ரி மந்திரம்:-

    ஓம் அச்வ த்வஜாய வித்மஹே

    பாச ஹஸ்தாய தீமஹி

    தன்னோ சூர்ய ப்ரசோதயாத்

    சந்திர காயத்ரி மந்திரம்:-

    பத்மத்வஜாய வித்மஹே

    ஹேமரூபாய தீமஹி

    தன்னோ ஸோமப் பிரசோதயாத்

    அங்காரக காயத்ரி மந்திரம்:-

    ஓம் வீர த்வஜாய வித்மஹே

    விக்ன ஹஸ்தாய தீமஹி

    தன்னோ பெளம ப்ரசோதயாத்

    புத காயத்ரி மந்திரம்:-

    ஓம் கஜத் வஜாய வித்மஹே

    சுக ஹஸ்தாய தீமஹி

    தன்னோ புத ப்ரசோதயாத்

    குரு காயத்ரி மந்திரம்:-

    ஓம் விருஷபத்வஜாய வித்மஹே

    க்ருணி ஹஸ்தாய தீமஹி

    தன்னோ குரு ப்ரசோதயாத்

    சுக்ர காயத்ரி மந்திரம்:-

    ஓம் அச்வ த்வஜாய வித்மஹே

    தனுர் ஹஸ்தாய தீமஹி

    தன்னோ சுக்ர ப்ரசோதயாத்

    சனீஸ்வர காயத்ரி மந்திரம்:-

    ஓம் காக த்வஜாய வித்மஹே

    கட்க ஹஸ்தாய தீமஹி

    தன்னோ மந்த ப்ரசோதயாத்

    ராகு காயத்ரி மந்திரம்:-

    ஓம் நகத் வஜாய வித்மஹே

    பத்ம ஹஸ்தாய தீமஹி

    தன்னோ மந்த ப்ரசோதயாத்

    கேது காயத்ரி மந்திரம்:-

    ஓம் அச்வத் வஜாய வித்மஹே

    சூல ஹஸ்தாய தீமஹி

    தன்னோ கேது ப்ரசோதயாத்

    • காயத்ரி மந்திரத்தை 48 நாட்கள் தினமும் சொல்லி வந்தால் நன்மையான பலன்கள் கிடைக்கும்.
    • இங்கே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய காயத்ரி மந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இறைவனை துதிக்கும் மந்திரங்களிலேயே, காயத்ரி மந்திரத்திற்கு முதலிடம் உண்டு. எந்த பிரச்சினையையும் தீர்க்கும் மந்திரமாக காயத்ரி மந்திரம் போற்றப்படுகிறது. அனைத்து தெய்வங்களுக்கும், தெய்வீக சக்தி கொண்ட பொருட்களுக்கும், கிரகங்களுக்கும் என்று பலவற்றுக்கும் காயத்ரி மந்திரங்கள் ஏற்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 27 நட்சத்திரங்களுக்கும் காயத்ரி மந்திரம் உள்ளது. ஒருவர் தன்னுடைய ஜாதகத்திற்குரிய நட்சத்திரத்தின் காயத்ரி மந்திரத்தை, 1 மண்டல (48 நாட்கள்) காலம், தினமும் அதிகாலையில் சொல்லி வந்தால், நன்மையான பலன்கள் கிடைக்கும். தினமும் ஒன்பது முறையாவது, உங்கள் நட்சத்திரத்திற்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இதனால் வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றம் வந்து சேரும்.

    இங்கே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய காயத்ரி மந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உங்களுக்கானதை தினமும் பாராயணம் செய்து, வாழ்வில் சகலவிதமான வளங்களையும் பெறுங்கள்.

    * அஸ்வினி

    ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே

    சுதாகராயை தீமஹி

    தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

    * பரணி

    ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே

    தண்டதராயை தீமஹி

    தன்னோ பரணி ப்ரசோதயாத்

    * கிருத்திகை

    ஓம் வன்னிதேஹாயை வித்மஹே

    மஹாதபாயை தீமஹி

    தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

    * ரோஹிணி

    ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே

    விச்வரூபாயை தீமஹி

    தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

    * மிருகசீரிடம்

    ஓம் சசிசேகராய வித்மஹே

    மஹாராஜாய தீமஹி

    தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

    * திருவாதிரை

    ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே

    பசும்தநாய தீமஹி

    தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

    * புனர்பூசம்

    ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே

    அதிதிபுத்ராய த தீமஹி

    தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

    * பூசம்

    ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே

    மஹா திஷ்யாய தீமஹி

    தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

    * ஆயில்யம்

    ஓம் ஸர்பராஜாய வித்மஹே

    மஹா ரோசனாய தீமஹி

    தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

    * மகம்

    ஓம் மஹா அனகாய வித்மஹே

    பித்ரியா தேவாய தீமஹி

    தன்னோ மகஃப்ரசோதயாத்

    * பூரம்

    ஓம் அரியம்நாய வித்மஹே

    பசுதேஹாய தீமஹி

    தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

    * உத்திரம்

    ஓம் மஹாபகாயை வித்மஹே

    மஹாச்ரேஷ்டாயை தீமஹி

    தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

    * அஸ்தம்

    ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே

    ப்ரக்ருப்ணீதாயை தீமஹி

    தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

    * சித்திரை

    ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே

    ப்ரஜாரூபாயை தீமஹி

    தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

    * சுவாதி

    ஓம் காமசாராயை வித்மஹே

    மகாநிஷ்டாயை தீமஹி

    தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

    * விசாகம்

    ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே

    மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி

    தன்னோ விசாகா ப்ரசோதயாத்

    * அனுஷம்

    ஓம் மித்ரதேயாயை வித்மஹே

    மஹா மித்ராய தீமஹி

    தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

    * கேட்டை

    ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே

    மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி

    தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

    * மூலம்

    ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே

    மஹப்ராஜையை தீமஹி

    தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

    * பூராடம்

    ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே

    மஹாபிஜிதாயை தீமஹி

    தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

    * உத்திராடம்

    ஓம் விஸ்வேதேவாய வித்மஹே

    மஹா ஷாடாய தீமஹி

    தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

    * திருவோணம்

    ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே

    புண்யஸ்லோகாய தீமஹி

    தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

    * அவிட்டம்

    ஓம் அக்ர நாதாய வித்மஹே

    வசூபரீதாய தீமஹி

    தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

    * சதயம்

    ஓம் பேஷஜயா வித்மஹே

    வருண தேஹா தீமஹி

    தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

    * பூரட்டாதி

    ஓம் தேஜஸ்கராய வித்மஹே

    அஜஏகபாதாய தீமஹி

    தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

    * உத்திரட்டாதி

    ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே

    ப்ரதிஷ்டாபநாய தீமஹி

    தன்னோ உத்ரப் ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

    * ரேவதி

    ஓம் விச்வரூபாய வித்மஹே

    பூஷ்ண தேஹாய தீமஹி

    தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

    • காயத்ரி மந்திரத்தை தினமும் ஜெபிப்பவர்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும்
    • யாக சாலையில் அமர்ந்து காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால் 100 மடங்கு பலன் கிடைக்கும்.

    மந்திரத்திலேயே காயத்ரி மந்திரம் சக்தி வாய்ந்த மந்திரம்.

    ஓம் பூ, புவ, ஸ்வஹ:

    தத் ஸவிதுர் வரேண்யம்

    பர்கோ தேவஸ்ய தீமஹி

    த்யோயோந: ப்ரசோதயாத்

    இதுதான் அந்த காயத்ரி மந்திரம்.

    யார் நம் அறிவாகிய ஒளிச்சுடரைத் தூண்டுகிறாரோ அந்த ஒளிக் கடவுளை நான் வணங்குகிறேன் என்பதே இதன் அர்த்தம். காயத்ரி மந்திரத்தை தினமும் ஜெபிப்பவர்களின் அனைத்து ஆசைகளும் உறுதியாக நிறைவேறும். தினமும் காயத்ரி தேவியை நினைத்து இந்த மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு ஆத்மசுத்தி கிடைக்கும்.

    இந்த மந்திரத்தை சொல்பவர்கள் ஒழுக்க நெறியுடனும், உள்ளத் தூய்மையுடனும் இருக்க வேண்டும். காயத்ரி மந்திரத்தை குருமுகமாக உபதேசம் பெற்ற பின் தினமும் சொல்வது சிறந்ததாகும். யாக சாலையில் அமர்ந்து காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால் 100 மடங்கு பலன் கிடைக்கும். வீட்டில் ஒரே இடத்தில் அமர்ந்து 27 முறை உள்முகமாகக்கூற 27,000 முறைக்குச் சமம் என்பதால் சுத்தமான அறையில் அமர்ந்து மந்திரத்தைக்கூறி அனைத்து செல்வங்களையும் அடையலாம்.

    • கிருஷ்ண பரமாத்மா கீதையில், மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன் என்கிறார்.
    • எல்லா காயத்ரி மந்திரங்களுக்கும் பொதுவாக அமைந்தது கீழ்கண்ட பிரம்ம காயத்ரியாகும்

    ஒருமுகப்பட்ட மனத்தோடு காயத்ரி மந்திரம் சொல்லி வழிபட மும்மூர்த்திகளின் அருளையும் பெறலாம்.

    ஓம் பூர்புவஸ் ஸுவ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ

    தேவஸ்ய தீமஹி தியோயோன் ப்ரசோதயாத்

    இதுவே காயத்ரி மந்திரம் எவர் நமது அறிவைத் தூண்டி பிரகாசிக்கச் செய்கிறாரோ, அந்த ஜோதி மயமான இறைவனை தியானிப்போமாக என்பதே இம்மந்திரத்தின் பொருளாகும்.

    எல்லா தெய்வங்களுக்கும் காயத்ரி மந்திரம் பிரார்த்தனை மற்றும் தியான சுலோகமாக உள்ளது. எல்லா காயத்ரி மந்திரங்களுக்கும் பொதுவாக அமைந்தது மேற்கண்ட பிரம்ம காயத்ரியாகும். இதுதவிர மற்ற தெய்வங்களுக்குரிய நூற்றுக்கும் மேற்பட்ட காயத்ரி மந்திர சுலோகங்களும் உண்டு.

    ஐயப்ப சுவாமியின் மகா மந்திரத்தைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். இந்த மந்திரத்தை காலையும் மாலையும் ஜபித்து வந்தால், எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் விலகிவிடும்.
    ஐயன் ஐயப்ப சுவாமியை தர்ம சாஸ்தா என்று கொண்டாடுகிறது புராணம்.

    தர்ம சாஸ்தா காயத்ரி மந்திரம்:

    ஓம் பூதாதி பாய வித்மஹே
    மஹா தேவாய தீமஹி
    தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்

    எனும் தர்மசாஸ்தாவின் காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லி வந்தால், மனோபலம் பெருகும். மனதில் இதுவரை இருந்த தேவையற்ற குழப்பங்களும் கவலைகளும் பறந்தோடும் என்பது உறுதி.
    அனைத்து உயிர்களின் மீது மிகவும் அன்பு கொண்ட தெய்வமான வைஷ்ணவி தேவிக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வழிபடுவதால் வாழ்வில் செல்வ வளங்கள் கிடைக்கப்பெறுவார்கள்.
    ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
    சக்ர ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்

    விஷ்ணுவின் பத்தினியான வைஷ்ணவி தேவிக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் காலையில் 27 முதல் 108 எட்டு முறை வரை துதிப்பது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீட்டு பூஜையறையில் லட்சுமி தேவியின் படத்திற்கு வாசமுள்ள பூக்களை சமர்ப்பித்து, இனிப்பை நைவேத்தியம் வைத்து, மந்திரத்தை 108 முறை வடக்குத் திசையைப் பார்த்தவாறு துதித்து வந்தால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை மாறி மகிழ்ச்சி, மன அமைதி உண்டாகும். வீட்டில் செல்வச் சேர்க்கை ஏற்படும். வீண் விரயங்கள் ஏற்படுவது நீங்கும்.

    ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது யோக நித்திரையில் இருந்தவாறு உலகத்தை இயக்குகிறார் நாராயணன் ஆகிய ஸ்ரீ மகாவிஷ்ணு. அந்த மகாவிஷ்ணுவின் பத்தினியான லட்சுமி தேவி தான் வைஷ்ணவி என அழைக்கப்படுகிறார். அனைத்து உயிர்களின் மீது மிகவும் அன்பு கொண்ட தெய்வமாக வைஷ்ணவி தேவி இருக்கிறார். அந்த தேவிக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வழிபடுவதால் வாழ்வில் செல்வ வளங்கள் கிடைக்கப்பெறுவார்கள்.
    நரசிம்மருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் அனைத்து நலன்களையும் பெறலாம். துன்பம் பறந்தோடும்.
    வஜ்ர நகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
    தன்னோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்
    ஓம் நரசிம்ஹாய வித்மஹே வஜ்ரநகாய தீமஹி
    தன்ன ஸிம்ஹ ப்ரசோதயாத்

    இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் அனைத்து நலன்களையும் பெறலாம்.
    திருமணம் தடைப்படும் பெண்கள் கன்னிகா பரமேஸ்வரிக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.
    மந்திரங்களுக்கு தாயானவள் காயத்ரி. மங்கயர்கரசியான அம்பிகைகளுக்கென்று தனி காயத்ரி மந்திரமே உள்ளது. தினம்தோறும் இதனை பாராயணம் செய்ய நம்முள் மிகப்பெரிய ஆன்மீக அதிர்வை உணர முடியும்.  

    ஓம் பாலாரூபிணி வித்மஹே
    பரமேஸ்வரி தீமஹி
    தன்னோ கந்யா ப்ரசோதயாத் 
    ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும்.
    ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும். அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம்.

    ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.

    ஓம் சுதர்ஸனாய வித்மஹே
    ஜ்வாலா சக்ராய தீமஹி
    தன்னோ: சக்ர ப்ரசோதயாத்
    மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் நீங்க, முருகப்பெருமானுக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வரலாம்.
    வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை என்பார்கள். மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் நீங்க, முருகப்பெருமான் கை வேலை வணங்கி வரலாம்.

    ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்
    ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்திஹந்த்ரீம்
    நமோ நமஸ்தே குஹஹஸ்தபூஷே
    பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னிதத்ஸ்வ

    பொருள் :

    ஓம் சக்தியான வேலே, இவ்வுலகத்திற்கு தாயானவளே, அனைத்து சுகத்தையும் கொடுப்பவளே, உன்னை வணங்குபவரின் மனோவியாதியை போக்குபவளே உன்னை ஆராதிக்கிறேன்.
    ×