என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "G20 Summit"
- ஜி20 மாநாட்டை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடத்தியது.
- இதில் சர்வதேச அளவில் சக்திவாய்ந்த நாடுகள் பலவும் கலந்துகொண்டன.
ஜி20 நாடுகள் அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா உள்பட மிக முக்கியமான 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஜி-20 அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டில் உச்சி மாநாடு நடத்துவது வழக்கத்தில் உள்ளது.
இந்த மாநாட்டுக்காக டெல்லி மாநகரம் சொர்க்கலோகம்போல அலங்கரிக்கப்பட்டு மாற்றப்பட்டது. ஜி20 மாநாட்டை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செப்டம்பரில் நடத்தியது. ஜி20 கூட்டமைப்பின் நிரந்தர உறுப்பு நாடாக ஆப்பிரிக்க ஒன்றியம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
- அண்டை நாடான இந்தியா தலைமை ஏற்று, ஜி20 மாநாட்டை நடத்தியுள்ள நிலையில்...
- நாங்கள் வெளிநாடு கொள்கையில் தோல்வியடைந்ததாக நினைக்கிறேன்
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த 9-ந்தேதி மற்றும் 10-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஒருமித்த கருத்தோடு ஜி20 டெல்லி பிரகடனம் வெளியிடப்பட்டது. இது இந்தியாவின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோரை தவிர்த்து அனைத்து தலைவர்களும் டெல்லியில் கூடியிருந்தனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய பிரதமர் மோடி 15-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களுடன், இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இந்தியாவுக்கு பல்வேறு நாடுகள் வாழ்த்து, நன்றி தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் ''நாட்டிற்கு உலகின் டாப் 20 தலைவர்கள் வருகை தரும்போது, அது அந்த நாட்டிற்கு பெருமை. இதன்மூலம் இந்திய பொருளாதாரம் இன்னும் அதிக பயனடையும்'' என்றார்.
#WATCH | Some reactions from people in Pakistan praising India for successfully hosting the G-20 summitA local says, "...When heads of the top 20 countries visit the country, it is an honour for the country. Indian economy will get many benefits from it..." pic.twitter.com/vxbCoZIfmk
— ANI (@ANI) September 14, 2023
மற்றொரு நபர் ''அண்டை நாடான இந்தியா தலைமை ஏற்று, ஜி20 மாநாட்டை நடத்தியுள்ள நிலையில், நாங்கள் வெளிநாடு கொள்கையில் தோல்வியடைந்ததாக நினைக்கிறேன். பாகிஸ்தானில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பொருளாதாரம், பாதுகாப்பு நிலை மோசம் அடைந்துள்ளது'' என்றார்.
#WATCH | Pakistan: Another local says, "I think we have failed in our foreign policy and because of this the G-20 summit is being held in our neighbouring country and heads of state are coming. In the last 5-6 years our economy and the security situation have deteriorated. The… pic.twitter.com/HFhwPhWPtg
— ANI (@ANI) September 14, 2023
இன்னொருவர் ''இன்று நாங்கள் எங்களுடைய பொருளாதாரத்தை பாதுகாக்க முயற்சி செய்யும்போது, இந்தியா ஜி20 தலைவர்களை வரவழைத்து மாநாட்டை நடத்தியுள்ளது. இந்தியா சிறந்த அடியை எடுத்து வைத்துள்ளது. இந்தியர்களுக்கு இது பெருமையளிக்கும் தருணம்'' என்றார்.
#WATCH | Another local says, "Today when we are trying to save our economy, India is hosting the top 20 countries. India has taken a good step. This was a proud moment for Indians... The pictures that have come from India, PM Modi's pictures with the world leaders, they got… pic.twitter.com/bbZsu5Z1a3
— ANI (@ANI) September 14, 2023
- பா.ஜ.க.வின் பாராளுமன்ற குழு கூட்டம் நேற்று டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது.
- ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய பிரதமருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுடெல்லி:
வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் வரவுள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பா.ஜ.க.வின் பாராளுமன்ற குழு கூட்டம் நேற்று டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது, ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய பிரதமர் மோடிக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக பா.ஜ.க. பாராளுமன்ற குழு வெளியிட்ட அறிக்கை:
ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமையானது.
பிரதமர் மோடி மேற்கொண்ட பல்வேறு முன்முயற்சிகள் மீது கருத்தொற்றுமை ஏற்பட்டது. இது, பிரதமர் மோடியின் திறமையான தலைமைப்பண்புக்கு ஒரு அடையாளம். இதை உலகமே பேசுகிறது.
ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருப்பொருளின் பல்வேறு அம்சங்களை உருவாக்குவதில் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு பாராட்டுகள்.
60 நகரங்களில் நடைபெற்ற 200-க்கும் அதிகமான கூட்டங்கள் ஜி20 நிகழ்வுகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் தடம் பதித்தன. இதன் விளைவாக, இந்தியா ஜி20 தலைவர் பதவி உண்மையிலேயே மக்களை மையமாகக் கொண்டதாகவும் ஒரு தேசிய முயற்சியாகவும் உருவெடுத்தது.
இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தட ஒப்பந்தம், உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி ஆகியவற்றின் முடிவும் கணிசமான முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றங்களாகும்.
ஜி20 உச்சி மாநாட்டின் வெற்றியில் ஈடுபட்ட அனைத்து அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் பங்களிப்புக்கு பாராட்டுகள்.
உலகில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இந்திய ஜி20 தலைமைக்கு ஒரு வலுவான திசையை வழங்குவதில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை அது அங்கீகரித்தது என தெரிவித்துள்ளது.
- உறுப்பினர் நாட்டு பிரதிநிதிகளுக்கு ஒரு கையேடு வழங்கப்பட்டது
- தீன் இலாஹி எனும் புதிய கோட்பாட்டை உருவாக்கினார்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மக்களை பாதிக்கும் அன்றாட பிரச்னைகள் குறித்தும், மக்களிடமிருந்து அரசாங்கத்திற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகளை பெறுவதற்கும் இந்திய வானொலியில் மாதா மாதம் ஒவ்வொரு கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று "மன் கி பாத்" எனும் நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார்.
இந்நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்து இருப்பதால், இதன் 100வது நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் நடந்த போது பா.ஜ.க.வினர் பெருமையுடன் கொண்டாடினர்.
சமீபத்தில் ஜி20 கூட்டமைப்பின் 2-நாள் உச்சி மாநாடு புது டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு "பாரத்: ஜனநாயகத்தின் தாய்" எனும் ஒரு சிறு கையேடு வினியோகிக்கப்பட்டது. இதன் 38-வது பக்கத்தில் மொகலாய பேரரசர் அக்பர் குறித்து பிரசுரமாகியுள்ளது.
அதில், "காலங்காலமாக இந்தியாவில் மக்களின் உணர்வு, ஆட்சி அமைப்பவர்களுக்கு முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. மொகலாய பேரரசர் அக்பர் ஆட்சியின் போது மதங்களை பற்றி எண்ணாமல் பொது நலனுக்காக அனைவரையும் அரவணைத்து செல்லும் ஜனநாயகம் கடைபிடிக்கப்பட்டது. தீன்-இ-லாஹி எனும் ஒருங்கிணைந்த மத கோட்பாட்டை அக்பர் உருவாக்கினார். தனது காலத்தையும் தாண்டி எதிர்கால தலைமுறைகளின் நல்வாழ்வு குறித்து சிந்தித்தவர் அக்பர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் துணையுடன் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், பிரதமரின் "மன் கி பாத்" நிகழ்ச்சியை இந்த கையேட்டுடன் தொடர்புபடுத்தி பா.ஜ.க.வை கிண்டல் செய்யும்விதமாக தனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் கருத்து பதிவிட்டிருக்கிறார்.
அதில் அவர், "ஜி20 பதிவேடு: முகலாய பேரரசர் அக்பரை அமைதி மற்றும் ஜனநாயகத்தின் முன்னோடியாக புகழ்கிறது. உலகத்திற்கு ஒரு முகம்; பாரத் எனும் இந்தியாவிற்கு மற்றொரு முகம். உண்மையான இதயத்தின் குரல் எது என தெரிவியுங்கள்," என்று பதிவிட்டிருக்கிறார்.
- சீன குழுவினர் தாஜ் பேலஸ் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்
- ஸ்கேனர் கருவி ஆய்வுக்கு அவர்கள் உடன்படவில்லை
இந்திய தலைநகர் புதுடெல்லியில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு கடந்த வாரம் 9, 10 தேதிகளில் நடைபெற்றது.
ஜி20 உறுப்பினர்களாக இருந்த போதிலும் சீனா மற்றும் ரஷியாவின் அதிபர்கள் கலந்து கொள்ளவில்லை. சீனாவின் சார்பில் அந்நாட்டு உயரதிகாரி லி கியாங் தலைமையில் ஒரு குழு கலந்து கொண்டது.
வருகை தந்த அனைத்து உலக நாட்டு முக்கிய தலைவர்களுக்கும், பிரதிநிதி குழுவிற்கும் இந்தியா சார்பில் சிறப்பான வரவேற்பும், உபசரிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தினர் அனைவரும் புதுடெல்லியில் உள்ள உயர்ந்த நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
உச்சி மாநாடு வெற்றிகரமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நிறைவடைந்தது.
இந்நிலையில் நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்ட சீன பிரதிநிதி குழு குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
கடந்த வியாழக்கிழமையன்று டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் நட்சத்திர ஓட்டலில் சீன குழு தங்க வைக்கப்பட்டது. அப்போது வழக்கமான பாதுகாப்பு பரிசோதனையின்போது வழக்கத்திற்கு மாறான அளவுகளில் பெட்டிகளை கொண்டு வந்திருந்தனர் என்பது தெரிந்தது. இருப்பினும் ராஜாங்க நடைமுறைப்படி அவற்றை பாதுகாவலர்கள் அனுமதித்தனர்.
பிறகு, அந்த குழு தங்கியிருந்த ஒரு அறையில், மர்மமான ஒரு சாதனம் அவர்களின் 2 பைகளில் உள்ளதை ஓட்டல் பணியாளர் ஒருவர் கண்டுபிடித்தார். அவர் இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தார். அவர்கள் ஓட்டல் மேலதிகாரிகளுக்கு இதனை தெரிவித்தனர்.
இதையடுத்து ஓட்டல் அதிகாரிகள், அந்த குழுவினரிடம் அவர்களது பைகளை "ஸ்கேனர்" கருவி ஆய்வுக்கு தருமாறு கோரிக்கை வைத்தனர். அந்த பைகளை வழக்கமான தூதரக பணிக்கான பைகள் என கூறி சீன குழுவினர் தர மறுத்தனர்.
சுமார் 12 மணி நேரம் அவர்களின் அறைக்கு வெளியே பாதுகாப்பு அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர். இருப்பினும் ஒட்டல் மற்றும் சீன தரப்புக்குமிடையே இப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே சென்றது.
இறுதியாக அந்த பைகளை அவர்களின் தூதரகத்திற்கே அனுப்ப சீன குழு சம்மதித்தது. அவற்றில் இருந்த சாதனங்கள் என்னவென்று இதுவரை தெரியவில்லை.
இதைத்தவிர, அந்த சீன குழுவினர் ஓட்டல் அறையில் இருக்கும் இணையத்தை பயன்படுத்த மறுத்து, தனியாக தங்களுக்கென இணைய வசதி கோரினர். ஆனால், ஓட்டல் நிர்வாகம் இதற்கு மறுத்து விட்டது.
சீன குழுவினரின் இந்த வித்தியாசமான நடத்தைக்கான காரணத்தை குறித்து சமூக வலைதளங்களில் பயனர்கள் பல்வேறு யூகங்களை வெளியிட்டு வருகின்றனர்.
- 2014-ல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது
- 90-களில் அயல்நாடுகளிலிருந்து கார்களை வாங்கி குவித்தோம்
இந்திய தொழில் துறையில் முதலீடுகளை அதிகரிக்கவும், புதுமைகளை வளர்க்கவும், திறனை மேம்படுத்தவும், அறிவுசார் உடைமைகளை பாதுகாக்கவும் மற்றும் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், அதனை கொண்டு இந்தியாவிலேயே அனைத்து பொருட்களும் தயாரிக்கவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், வெளிநாட்டு இறக்குமதியை குறைக்கவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் 2014-ல் கொண்டு வரப்பட்டது "மேக் இன் இந்தியா" திட்டம்.
இந்நிலையில் கிழக்கு பொருளாதார மன்றத்தின் 8-வது அமர்வில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உரையாற்றினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:-
ஒரு காலத்தில் நாங்கள் வெளிநாடுகளிலிருந்து மட்டுமே கார்களை இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். ஆனால், பிறகு நாங்கள் உள்நாட்டில் கார்களை உற்பத்தி செய்ய தொடங்கினோம். நாங்கள் 90-களில் இறக்குமதி செய்து குவித்து வந்த அயல்நாட்டு மெர்சிடிஸ் மற்றும் ஆடி கார்களை போல் இவை மிக பிரமாண்டமானவை அல்ல என்றாலும் அது ஒரு குறை அல்ல.
எங்கள் கூட்டாளிகளின் வழிமுறைகளை நாங்களும் கடைபிடிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இந்தியாவின் "மேக் இன் இந்தியா" (இந்தியாவிலேயே தயாரியுங்கள்) திட்டம் போன்றவற்றை நாங்களும் கையாள விரும்புகிறேன். உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்துவதன் மூலமும் அந்தந்த நகரங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும்.
இத்தகைய பொருளாதார வளர்ச்சிக்கான வெற்றி பெறும் வழிமுறைகளை ரஷியா இந்தியாவை போல கையாள வேண்டும். இந்தியர்கள் இந்தியாவிலேயே அதிகளவில் வாகனங்களை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகின்றனர். இது மிக சரியான வழிமுறை. மோடி மிக சரியானதைத்தான் செய்கிறார்.
இவ்வாறு புதின் தெரிவித்தார்.
கடந்த 9, 10 தேதிகளில் இந்தியா ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர் மோடியை உலக நாடுகள் பாராட்டி வரும் பின்னணியில் ரஷிய அதிபரின் இந்த கருத்து பார்க்கப்படுகிறது.
- கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பயணம் செய்யவிருந்த விமானம் கோளாறால் நிறுத்தப்பட்டது.
- விமானத்தின் பழுது சரிசெய்யப்பட்டு பிரதமர் ட்ரூடோ இன்று கனடா புறப்பட்டார்.
புதுடெல்லி:
டெல்லியில் பாரத் மண்டபத்தில் கடந்த செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் ஜி20 உச்சி மாநாடு நடந்துது. இதையடுத்து, உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பினர்.
இதற்கிடையே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பயணம் செய்யவிருந்த விமானம் கோளாறால் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், கனடா பிரதமரின் விமானத்தின் பழுது நீக்கப்பட்டு இன்று சரி செய்யப்பட்டது.
இந்நிலையில், 36 மணி நேர தாமதத்துக்குப் பிறகு, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது அலுவலக குழுவினர் இன்று கனடா புறப்பட்டுச் சென்றனர்.
36 ஆண்டுகால அனுபவம் நிறைந்த இந்த விமானம் கடந்த காலங்களிலும் இதுபோன்ற சிக்கலை சந்தித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபரில் இந்த விமானம் ஒட்டாவா நகருக்கு திரும்ப இருந்தது. விமானம் ட்ரூடோவை சுமந்து கொண்டு திரும்பிய 30 நிமிடங்களில் கோளாறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஜி-20 தலைவர்களின் பிரகடனம், ஆலோசனை மூலம் எட்டப்பட்ட ஒருமித்த முடிவாகும்.
- உச்சி மாநாடு புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு சிக்கல்களை தீர்ப்பதற்கான இடமில்லை.
வாஷிங்டன்:
ஜி-20 உச்சி மாநாடு, டெல்லியில் கடந்த 9, 10-ந்தேதிகளில் நடந்தது. இதில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். ரஷிய அதிபர் புதின், சீனா அதிபர் ஜின்பிங் ஆகியோர் பங்கேற்கவில்லை.
ஜி-20 மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்து கூட்டு பிரகடனம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் நடந்த ஜி-20 உச்சி மாநாடு வெற்றிக்கு இந்தியாவை அமெரிக்கா, சீனா பாராட்டி உள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறும்போது, ஜி-20 ஒரு பெரிய அமைப்பு. பல்வேறு கருத்துக்களை கொண்ட உறுப்பினர்கள் உள்ளனர். டெல்லியில் நடந்த உச்சி மாநாடு ஒரு வெற்றி என்று நாங்கள் முற்றிலும் நம்புகிறோம். இதில் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ ஜிங் கூறும்போது, ஜி-20 மாநாட்டு பிரகடனத்தை அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக் கொண்டது நேர்மறை தகவல்களை அனுப்புகிறது. வளரும் நாடுகளின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும், ஒருமித்த முடிவுகளை அடைய வேண்டும் என்பதிலும் சீனா எப்போதும் ஆதரவை அளித்தே வருகிறது.
ஜி-20 தலைவர்களின் பிரகடனம், ஆலோசனை மூலம் எட்டப்பட்ட ஒருமித்த முடிவாகும். டெல்லி உச்சி மாநாடு, ஜி-20 சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்காக முதன்மை மன்றமாக இருக்கிறது.
இந்த உச்சி மாநாடு புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு சிக்கல்களை தீர்ப்பதற்கான இடமில்லை. உக்ரைன் போர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.
- ஜி20 டெல்லி பிரகடனம் ஒருமித்த கருத்தோடு வெளியிடப்பட்டது
- ரஷியா பெயரை குறிப்பிடாமல் இந்தியா சாதுர்யமாக வடிவமைத்து ஒப்புதல் பெற்றது
டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதற்கு கண்டனம் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜி20 டெல்லி பிரகடனத்தை ஒருமித்த கருத்தோடு இந்தியா சாதுர்யமாக வெளியிட்டது. ஒருமித்த கருத்தோடு பிரகடனம் வெளியிடப்பட்டது இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
இதற்கிடையே ஜி20 மாநாட்டின் பிரகடனம் குறித்து சீனா பதில் அளிக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில், ஜி20 டெல்லி பிரகடனம் நேர்மறையாக சிக்னலை தந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
சிறப்புமிக்க குழு உலகளாவிய் சவால்கள், உலக பொருளாதாரத்த மீட்டெடுப்பதை ஊக்குவித்தல் விவகாரத்தில் நேர்மறையாக சிக்னலை தந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
- இரண்டு நாட்கள் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார்.
- அனைத்தையும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவில் மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் ஊடக சுதந்திரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்து உள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வந்திருந்தார்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட ஜோ பைடன், மாநாடு நிறைவு பெறுவதற்குள் இந்தியாவில் இருந்து கிளம்பி வியட்நாமிற்கு சென்றார். பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியாவில் மனித உரிமைகள் அதிகளவில் மறுக்கப்படுவதாக செயற்பாட்டாளர்கள் மற்றும் உரிமை குழுக்கள் குற்றம்சாட்டி வருகின்றன.
2014 ஆண்டு நரேந்திர மோடி ஆட்சியில் பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினர்- குறிப்பாக இஸ்லாமியர்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் தாக்குதல்கள் பெருமளவில் அதிகரித்து இருப்பதாக பா.ஜ.க. தலைமையிலான அரசு மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. எனினும், இவை அனைத்தையும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இது குறித்து ஹனோயில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிபர் ஜோ பைடன், இந்தியா அமெரிக்கா இடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்து உள்ளார்.
இதோடு, "எப்போதும் நான் செய்வதை போன்றே, மனித உரிமைகளை மதிப்பது, அவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் ஊடக சுதந்திரம் எப்படி வலுவான நாட்டை கட்டமைக்கும் என்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்," என்று அதிபர் பைடன் தெரிவித்து இருக்கிறார்.
சமீபத்தில் வெளியான ஊடக சுதந்திரம் தொடர்பான ஆய்வறிக்கையில், ஊடக சுதந்திரம் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 11 இடங்கள் பின்தள்ளி 180 நாடுகளில் 161-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது என்ற தகவல் வெளியானது.
- பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
- ஜி20 உச்சி மாநாடு தொடர்பாக பிரதமர் மோடியின் எக்ஸ் பதிவுக்கு ஷாருக்கான் பதில் அளித்தார்.
கிங் கான் என்று அறியப்படும் பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஜவான் திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில், நடிகர் ஷாருக்கான் பிரதமர் மோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஜி20 உச்சி மாநாடு வெற்றிகரமாக அமைந்ததை அடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
ஜி20 உச்சி மாநாடு தொடர்பாக பிரதமர் மோடியின் எக்ஸ் பதிவுக்கு பதில் அளித்த ஷாருக்கான், "ஜி20 அமைப்புக்கு இந்தியா வெற்றிகரமாக தலைமை வகித்து, உலக எதிர்காலத்தை சிறப்பாக மாற்றுவதற்கு நாடுகள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றி இருப்பதற்கு மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தெரிவித்து உள்ளார்.
"இது ஒவ்வொரு இந்தியரின் மனங்களில் பெருமை மற்றும் மரியாதையை ஏற்படுத்தி இருக்கிறது. உங்கள் தலைமையில், நாம் ஒற்றுமையாக வளர்ச்சியடைவோம். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்," என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் நடைபெற்று முடிந்த ஜி20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நிறைவு பெற்றதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. முன்னதாக பாலிவுட் பிரபலம் அனுபம் கெர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
Congratulations to Hon. PM @narendramodi ji for the success of India's G20 Presidency and for fostering unity between nations for a better future for the people of the world. It has brought in a sense of honour and pride into the hearts of every Indian. Sir, under your… https://t.co/x6q4IkNHBN
— Shah Rukh Khan (@iamsrk) September 10, 2023
- ஜி.20 மாநாட்டில் கலந்து கொண்ட சவுதி அரேபிய இளவரசர் மற்ற தலைவர்கள் போல நாடு திரும்பவில்லை.
- இரு நாட்டு உறவு தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசினார்கள்.
புதுடெல்லி:
சவுதி அரேபிய பிரதமரும், சவுதி இளவரசருமான முகமது பின் சல்மான் அல் சவுத் ஜி.20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 3 நாள் பயணமாக இந்தியா வந்தார்.
அவர் 2-வது முறையாக இந்தியாவுக்கு வந்தார். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுற்றுப்பயணம் மேற் கொண்டு இருந்தார்.
ஜி.20 மாநாட்டில் கலந்து கொண்ட சவுதி அரேபிய இளவரசர் மற்ற தலைவர்கள் போல நாடு திரும்பவில்லை. அரசு முறை பயணமாக டெல்லியிலேயே தங்கினார்.
சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் அல்சவுத்துக்கு இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் சவுதி இளவரசரை வரவேற்றனர். மூவரும் ஒன்றாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர்.
அதைத்தொடர்ந்து 12 மணியளவில் பிரதமர் மோடியும், சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானும் ஐதராபாத் இல்லத்தில் சந்தித்தனர்.
இரு நாட்டு உறவு தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசினார்கள். வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாடுகள் இடையே கையெழுத்திடப்படும்.
கடந்த சனிக்கிழமை இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை கப்பல் மற்றும் ரெயில் இணைப்பு வழித்தடத்தை தொடங்குவதற்கான வரலாற்று ஒப்பந்தத்தை அறிவித்து இருந்தன.
ஜனாதிபதி திரவுபதி முர்முவை மாலை 6.30 மணியளவில் சவுதி அரேபிய இளவரசர் சல்மான் சந்திக்கிறார். இரவு 8.30 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் தனது நாட்டுக்கு அவர் புறப்படுகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்