search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "friends"

    • Friends தொடர் மூலம் பிரபலமானவர் மேத்யூ பெர்ரி.
    • இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

    1994 முதல் 2004 வரை ஒளிபரப்பான அமெரிக்க டிவி தொடர் 'பிரெண்ட்ஸ்'(Friends). 10 சீசன்களாக வெளியான இந்த தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.இதில் சாண்ட்லர் பிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மேத்யூ பெர்ரி. இவர் பல தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார். 54 வயதான மேத்யூ பெர்ரி கலிபோர்னியாவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார்.


    இந்நிலையில், இவர் தனது வீட்டின் குளியலறையில் உள்ள பாத் டப்பில் இறந்து கிடந்துள்ளார். இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எப்படி இறந்தார்? என தெரியவில்லை. மதுவுக்கு அடிமையான நடிகர் மேத்யூ பெர்ரி பல ஆண்டுகளாக வலி நிவாரண மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். மேலும் போதை மறுவாழ்வு மையத்திற்கு சென்றும் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    மேத்யூ பெர்ரி மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேத்யூ பெர்ரி மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • நேற்று இரவு அரிச்சந்திரன் மகிழ்ச்சிபுரம் முனியசாமி கோவில் அருகே நண்பர்களோடு சேர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.
    • மது போதையில் இருந்த அவரது நண்பர்கள் அங்கிருந்த பீர்பாட்டிலை உடைத்து அரிச்சந்திரன் முதுகில் குத்தினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மில்லர்புரம் 6-வது தெருவை சேர்ந்தவர் அரிச்சந்திரன். (வயது 25). இவர் இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு இவர் மகிழ்ச்சிபுரம் முனியசாமி கோவில் அருகே நண்பர்களோடு சேர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் மது போதையில் இருந்த அவரது நண்பர்கள் அங்கிருந்த பீர்பாட்டிலை உடைத்து அரிச்சந்திரன் முதுகில் குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த அரிச்சந்திரன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார்.

    இதனால் செய்வதறியாது திகைத்த அவரது நண்பர்கள் அரிச்சந்திரனை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அங்கு அரிச்சந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொலை செய்யப்பட்ட முத்தையா, ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்பட்டது.
    • சுரேசும், மதியழகனும் சேர்ந்து கத்தியால் முத்தையாவை குத்திக்கொலை செய்தனர்.

    திசையன்விளை:

    திசையன்விளையை அடுத்த அப்புவிளை சுவாமி தாஸ் நகரை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் முத்தையா(வயது 19). இவர் திசையன்விளை அருகே சங்கனாங்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    கொலை

    நேற்று முன்தினம் இரவில் முத்தையா தன்னுடைய நண்பர்களை சந்தித்து விட்டு வருவதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். பின்னர் நீண்ட நேர மாகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

    உடனே அவரை குடும்பத்தினர், உறவினர்கள் தேடிப் பார்த்தபோது சுவாமிதாஸ் நகரில் உள்ள காட்டு பகுதியில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    நண்பர்கள் சிக்கினர்

    கொலை செய்யப்பட்ட முத்தையா, ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. எனவே காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக அவருடைய நண்பர்களே அவரை கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக முத்தையாவின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, நண்பர்களில் ஒருவரின் கையில் காயம் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்தனர்.

    அப்போது அவர் கூறுகையில், எங்களுடைய நண்பரான அப்புவிளை கக்கன் நகரை சேர்ந்த சுரேஷ்(19), மதியழகன்(31) ஆகியோருடன் சேர்ந்து நேற்று முன்தினம் காட்டுப்பகுதியில் வைத்து மது அருந்தினோம்.

    அப்போது எங்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சுரேசும், மதியழகனும் சேர்ந்து கத்தியால் முத்தையாவை குத்திக்கொலை செய்தனர். அதனை தடுக்க சென்ற எனக்கு காயம் ஏற்பட்டது என்றார்.

    இதையடுத்து கொலை செய்த சுரேஷ் மற்றும் மதியழகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே முத்தையா காதல் விவகாரத்தில் தான் கொலை செய்யப்பட்டார் என்று கூறி அவரது உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் போலீசார் அந்த கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

    • நிஜ வாழ்க்கை துணைகள் இல்லாத பிரிட்டன்வாசிகள், தங்களுக்கு ‘ஆன்லைன்’ நண்பர்கள் இருப்பதாக கூறுகின்றனர்.
    • 55 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு சராசரியாக 8 நண்பர்கள் இருந்தனர்.

    சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதள விளையாட்டுகள் மக்களுக்கிடையேயான 'மனித' தொடர்பை குறைத்து வருவதாக பிரிட்டனில் 3000 பேரிடம் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான "லைஃப்சர்ச்" நடத்திய ஆய்வில் தெரிகிறது.

    அந்நாட்டு மக்களில் கிட்டத்தட்ட 10 பேரில் ஒருவர், தங்களுக்கு எந்த நண்பர்களும் கிடைக்கவில்லை என்று தெரிவித்திருப்பதாக இது கூறுகிறது.

    18 முதல் 70 வயதுக்குட்பட்ட வயதுள்ளவர்களில் 8% பிரிட்டன் மக்கள் இணைய வழியிலேயே அனைத்து சமூக தொடர்புகளையும் அடைகிறார்கள் என்றும் நண்பர்களைக் கொண்ட மீதமுள்ள 92% பேர் சராசரியாக தலா 8 நண்பர்களைக் கொண்டிருந்தனர் என்றும் அது தெரிவிக்கிறது.

    இந்த புள்ளி விவரத்தை சுமார் 5.5 கோடி (55 மில்லியன்) மக்கள் தொகைக்கு விரிவுபடுத்தி ஆராயும்போது சுமார் 40 லட்சம் (4.4 மில்லியன்) மக்கள் தங்களுக்கு நம்பக்கூடிய 'உண்மையான' நண்பர்கள் இல்லாமல் வாழ்வதை காட்டுகிறது.

    நிஜ வாழ்க்கை துணைகள் இல்லாத பிரிட்டன்வாசிகள், தங்களுக்கு 'ஆன்லைன்' நண்பர்கள் இருப்பதாகவும், அவர்களுடன் சமூக ஊடகங்கள், ஆன்லைன் கேம்கள் அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பில் இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

    ஆண்களுக்கு சராசரியாக 9 நண்பர்கள் இருப்பதாகவும், பெண்களுக்கு சராசரியாக 7 பேர் இருப்பதாகவும் அந்த கருத்துக்கணிப்பு காட்டுகிறது. 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சராசரியாக 10 நண்பர்கள் உள்ளனர்.

    இவர்களோடு ஒப்பிடுகையில், 35-54 வயதுடையவர்களுக்கு குறைந்தளவே உள்ளனர். அதாவது 7 பேர் மட்டுமே நட்பில் உள்ளனர்.

    55 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு சராசரியாக 8 நண்பர்கள் இருந்தனர்.

    3,000 பேரில் 55 சதவீதம் பேர் தங்களுக்கு ஒரு 'சிறந்த நண்பர்' இருப்பதாகவும், அவர்களின் மனைவி அல்லது கணவர் இதில் முதலிடத்தில் இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    மொத்தத்தில், கணக்கெடுக்கப்பட்டவர்களில் 3ல் ஒரு பகுதியினர் (39 சதவீதம்) தங்கள் சிறந்த நண்பர் தங்கள் கணவர், மனைவி அல்லது தங்கள் 'இணை' (Partner) என்று கூறியுள்ளனர்.

    ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் உள்ள வாட்ஃபோர்டைச் சேர்ந்த 44 வயதான பேரி டெய்லர், அவரது மனைவி கிளாரியை தனது 'சிறந்த நண்பர்' என்று கூறியுள்ளார்.

    டோர்செட் பகுதியின் ஸ்வானேஜ் எனும் இடத்தை சேர்ந்த 23 வயதான க்ளோ வைட் எனும் பெண், தனது 2 சிறந்த நண்பர்களும் லண்டனுக்குச் சென்றதிலிருந்து தனக்கு 'உண்மையான நண்பர்கள்' இல்லை என்று கூறியிருக்கிறார்.

    "3,000 பிரிட்டன் மக்களிடம் நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து 40 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு உண்மையான நண்பர்கள் இல்லை என தெரிகிறது" என லைஃப்சர்ச் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

    அண்மைக்காலங்களில், இந்தியாவிலும் மக்கள் தங்களின் பெருமளவு நேரத்தை ஒருவரையொருவர் நேரில் சந்தித்துக் கொள்வதை தவிர்த்து சமூக வலைதளங்களிலும், ஆன்லைன் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகளிலுமே கழித்து வருவதால், தனிமைப்படுத்தப்பட்டு பல்வேறு மனநல பிரச்னைகளுக்கு ஆளாவார்கள் என உளவியல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

    இந்த பின்னணியில், பிரிட்டன் நாட்டின் இந்த ஆய்வின் புள்ளி விவரங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.

    • திருமண மாப்பிள்ளையான சிவா சண்டை கிடாய்கள், சேவல்களை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் மிகுந்தவர்.
    • பாரம்பரியமிக்க போட்டிகளுக்கு புத்துயிர் கொடுத்து ஊக்குவிக்கும் விதமாக திருமண பரிசாக வழங்கினோம்.

    திருச்சுழி:

    திருமணம் என்றாலே மணமக்களுக்கு அவர்களது சொந்த பந்தங்கள், நண்பர்கள், திருமணத்திற்கு வருபவர்கள் சீர்வரிசை பொருட்கள் மற்றும் பரிசுகள் வழங்குவது வழக்கம். உறவினர்களை பொறுத்தவரை கட்டில், மெத்தை, பீரோ, பாத்திரங்கள் போன்றவைகளை மணமக்களுக்கு சீர் வரிசைகளாக வழங்குவார்கள்.

    இந்நிலையில் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை காப்பாற்றும் வகையிலும், திருமண மாப்பிள்ளைக்கு பிடித்ததுமான சண்டை கிடாய்கள், சேவல்கள், நாட்டு இன நாய்கள் போன்றவைகளை சீர் வரிசைகளாக அவரது நண்பர்கள் வழங்கினர். திருமணத்திற்கு வந்திருந்த மணமக்களின் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியடைய செய்த இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியை சேர்ந்த தனுஷ்கோடி என்பவரின் மகன் சிவா. இவருக்கும், இருஞ்சிறை பகுதியை சங்கரலிங்கம் மகள் துர்கா என்பவருக்கும் நரிக்குடி அருகே உள்ள வீரக்குடி கரைமேல் முருகன் கோவிலில் நேற்று திருமணம் நடந்தது.

    தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகள், சண்டைக்கிடாய்கள், நாட்டு இன ரக நாய்கள் என பல்வேறு விலங்குகளை ஏராளமானோர் ஆர்வமு டனும், பாசத்துடனும் வளர்த்து வருகின்றனர்.திருமண மாப்பிள்ளையான சிவாவும் சண்டை கிடாய்கள், சேவல்களை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் மிகுந்தவர்.

    இந்த நிலையில் அவருக்கு திருமணம் நடந்தததால், சண்டை கிடாய்கள், சண்டை சேவல், நாட்டு இன நாய் உள்ளிட்டவைகளை அவரது நண்பர்கள் பரிசு பொருட்களாக வழங்கினர். அவர்கள் 2 சண்டை ஆட்டு கிடாய்கள், 5 சண்டை சேவல்கள், நாட்டு ரக இனத்தை சார்ந்த கன்னி, சிப்பிப்பாறை நாய்கள் ஆகியவற்றை வழங்கினர்.

    அப்போது மாப்பிள்ளையின் நண்பர்கள் மற்றும் அவர்கள் பரிசாக வழங்கிய சண்டை கிடாய்கள், சண்டை சேவல்கள், நாட்டு ரக நாய்கள் உள்ளிட்டவைகளுடன் மணமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    இதுகுறித்து மாப்பிள்ளையின் நண்பர்கள் கூறும் போது, "தமிழர்களின் வீர விளையாட்டு போட்டிகளான அழிந்து வரும் நிலையில் உள்ள ஆட்டு கிடாய் சண்டை, சேவல் சண்டை உள்ளிட்ட பாரம்பரியமிக்க போட்டிகளுக்கு புத்துயிர் கொடுத்து ஊக்குவிக்கும் விதமாக அவர் விரும்பி வளர்த்து வரும் சண்டை ஆட்டு கிடாய்கள், சண்டை சேவல்கள், நாட்டு ரக இன நாய் ஆகியவற்றை திருமண பரிசாக வழங்கினோம்" என்றனர்.

    • சங்கர் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த போது அஸ்வின் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
    • சங்கர், சிவபெருமாள் ஆகியோர் சேர்ந்து அஸ்வினை தாக்கினர்.

    களக்காடு:

    களக்காடு ஆற்றாங்கரை தெருவை சேர்ந்தவர் சிவசங்கர் மகன் அஸ்வின் (வயது21). கட்டிட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர் தனது நண்பர்களுடன் களக்காடு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலுக்கு டீ குடிக்க சென்றார்.

    அப்போது அவரது நண்பரான கீழத்தெருவை சேர்ந்த சங்கர் (21) தனது நண்பர்களுடன் வந்தார். இருவரும் பேசிக் கொண்டு இருந்த போது அஸ்வின் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது. சங்கர், அவரது நண்பர் சிவபெருமாள் (25) ஆகியோர் சேர்ந்து அஸ்வினை தாக்கினர். இதுபோல அஸ்வின், வினிஸ் (23), ரவி (21) ஆகியோர் சேர்ந்து சங்கரின் நண்பரான பொறியியல் கல்லூரி மாணவர் ஸ்ரீராமரை (21) தாக்கினர்.

    இது தொடர்பாக இரு தரப்பினரும் களக்காடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சிவபெருமாள், சங்கர், அஸ்வின், வினிஸ், ரவி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவிகள் நிதி உதவி அளித்தனர்.
    • மின் மோட்டார், குப்பை கூடைகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1996-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவிகள் ஒருங்கிணைந்து ''எவர் கிரீன் 96'' நிகழ்ச்சியை பள்ளி வளாகத்தில் நடத்தினர். தலைமை ஆசிரியர் ஆஷா தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர்-கவுன்சிலர் கிருஷ்ணவேணி பால்பாண்டியன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவி பிரியா வரவேற்றார். ராஜயோக தியானம் கூடத்தின் அமைப்பாளர்-ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராஜம்மாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளிடம் மலரும் நினைவுகளை பகிர்ந்தார்.

    விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும் முன்னாள் மாணவிகள் சார்பில் மின் மோட்டார், குப்பை கூடைகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை சுசீலா தேவி செய்திருந்தார். சித்ரா தொகுத்து வழங்கினார். ஜெயந்தி நன்றி கூறினார்.

    • பரமக்குடி வாலிபர் கொலையில் அவரது நண்பர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • நகை-பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    பரமக்குடி

    சிவகங்கை மாவட்டம் கல்லனி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 32). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் பரமக்குடி கோர்ட்டில் ஆஜரான கண்ணன் நேற்று காலை பரமக்குடி எமனேஸ்வரம் அருகே உள்ள சுடுகாட்டில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து எமனேஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கண்ணன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    போலீசார் நடத்திய விசாரணையில் கண்ணனுக்கும், இளையான்குடி அருகே உள்ள ராதாபுளி கிராமத்தை சேர்ந்த விஜயராஜ், தர்மகர்த்தா ஆகியோருக்கும் நகை-பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதில் ஏற்பட்ட பிரச்சினையில் 2 பேரும் கண்ணனை பீர் பாட்டிலால் அடித்துக்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் விஜயராஜ், தர்மகர்த்தா ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் நிறுவனத்தில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார்.
    • காந்திமா நகர் பகுதியில் சிறுவன் ஒருவனை வாலிபர் ஒருவர் தாக்கினார்.

    கோவை 

    கோவை ஆவாரம்பாளையம் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 22). இவர் காந்தி மாநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் தனது நண்பர்களுடன் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

    இதேபோன்று கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அஜித் குமார் வேலைக்கு சென்றபோது காந்திமா நகர் பகுதியில் சிறுவன் ஒருவனை வாலிபர் ஒருவர் தாக்கினார். இதனை பார்த்த அஜித் குமார் அந்த வாலிபரை கண்டித்தார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே மோதல் இருந்து வந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக அஜித்குமார் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றார். ஆனால் அவரை புகார் அளிக்க விடாமல் அந்த வாலிபர் மிரட்டினார். இதனை அடுத்து அவரின் நடவடிக்கை குறித்து தந்தையிடம் தெரிவிப்பதற்காக நேற்று அஜித்குமார் தனது நண்பர் கார்த்திக் (21) என்பவருடன் கணபதி வீ. ராவ் நகரில் உள்ள அந்த வாலிபரின் வீட்டுக்கு சென்றார்.

    அப்போது அவர்களுக்கி டையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த அஜித்குமார் மற்றும் கார்த்திகை கத்தியால் குத்தினார். பின்னர் இருவரையும் மிரட்டிவிட்டு அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பி சென்றார்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கத்திக்குத்தில் காயமடைந்த 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அஜித்குமார் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 2 பேரையும் கத்தியால் குத்தியது கோபால் என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கோபாலை தேடி வருகின்றனர்.

    • போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
    • குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து, வாழ்க்கையில் முன்னேற பெற்றோர் அரும்பாடுபடுகின்றனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் போலீசார் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாகச்சென்று அங்கு மாணவ, மாணவிகளிடையே போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.அவ்வகையில் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. உடுமலை கல்வி மாவட்ட அலுவலர் பழனிசாமி, தலைமை வகித்தார்.கோவை சரக டி.ஐ.ஜி., முத்துசாமி பேசியதாவது:-

    குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து, அவர்கள் வாழ்க்கையில் முன்னேற பெற்றோர் அரும்பாடுபடுகின்றனர்.ஆனால் பெற்றோர்களின் உழைப்பை சிதைக்கும் வகையில் சமூக விரோத நட்புகள் வாயிலாக போதைக்கு அடிமையாகி இளைஞர்கள் சிலர், தவறான பாதைக்குச்செல்கின்றனர்.போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை இழந்து வருகின்றனர்.

    சமீபகாலமாக இளைஞர்களிடம் கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளது.இத்தகைய போதைப்பொருட்களை உட்கொள்வதால் உடல் பலவீனம் அடைந்து பசியின்மை ஏற்படுவதுடன் எந்தவொரு பணியையும் செய்ய முடியாது. ஞாபக மறதி அதிகரிக்கும்.படிக்கும் காலத்தில் நல்ல நண்பர்களைத்தேர்ந்தெடுங்கள். போதைப்பொருட்கள் பயன்பாட்டை தடுக்க அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு வருகின்றனர். இளைஞர்கள் எச்சரிக்கையாக செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    • சத்யா வித்யாலயா பள்ளியில் நண்பர்கள்தின விழா நடந்தது.
    • பாலர்வகுப்பு மாணவர்கள் ஒருவருக்கொருவர் நட்பை பரிமாறிக்கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் நண்பர்கள் தினவிழா பாலர்வகுப்பு மாணவர்களுக்கு நடந்தது.

    சேர்மன் குமரேசன், டாக்டர் சித்ரா குமரேசன், முதன்மை செயல் அலுவலர் அரவிந்த் தலைமை தாங்கினர். முதல்வர் அனுசுயா, துணை முதல்வர் சவுந்தரபாண்டி என்ற சவுந்தரி, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா முன்னிலை வகித்தனர்.

    பாலர்வகுப்பு மாணவர்கள் ஒருவருக்கொருவர் நட்பை பரிமாறிக்கொண்டனர். இதை வெளிப்படுத்தும் வகையில் இனிப்பு வழங்கி, ஆடிப்பாடியும் மகிழ்ந்தனர்.

    • சுரேஷ் மது குடிக்க பணம் தருமாறு கைலாஷ்குமாரிடம் கேட்டார்.
    • மோட்டார் சைக்கிளில் உடையாம்பாளையம் பகுதிக்கு நூடுல்ஸ் வாங்க சென்றார்.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் சவுரிபாளையம் பிரிவை சேர்ந்தவர் கைலாஷ்குமார்(22). தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் உடையாம்பாளையம் பகுதிக்கு நூடுல்ஸ் வாங்க சென்றார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளின் சாவி தொலைந்து விட்டது.

    இதனையடுத்து கைலாஷ்குமார் தனது நண்பர்களான ராஜேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோரை உதவிக்கு அழைத்தார். அவர்கள் அங்கு வந்து மோட்டார் சைக்கிளில் லிப்ட் கொடுத்து கைலாஷ்குமாரை அவரது வீட்டில் விட்டனர்.

    அப்போது சுரேஷ் மது குடிக்க பணம் தருமாறு கைலாஷ்குமாரிடம் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கைலாஷ்குமார் சுரேசை தாக்கினார். பதிலுக்கு சுரேசும், கைலாஷ்குமாரை தாக்கினார்.

    நடுரோட்டில் தாக்கி கொண்டதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில், போலீசார் கைலாஷ்குமார்(22) மற்றும் ராமநாதபுரம் மருதூரை சேர்ந்த பெயிண்டர் சுரேஷ்(33) ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×