search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flower market"

    • காதலர் தினத்தில் ஒற்றை ரோஜா பூ கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்ளும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
    • மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    காதலர் தினம் நாளை (பிப்ரவரி 14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்குவது வழக்கம். பரிசு பொருட்களை பரிமாறி கொள்ளும்போது அதனுடன் ரோஜா பூவையும் சேர்த்து கொடுத்து அன்பை வெளிப்படுத்துவார்கள்.

    பரிசு பொருட்கள் கொடுக்க முடியாமல் இருந்தாலும் காதலர் தினத்தில் ஒற்றை ரோஜா பூ கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்ளும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.

    இதையடுத்து காதலர்தின ஸ்பெஷல் ரோஜா பூக்கள் திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஓசூர், பெங்களூர் போன்ற பகுதிகளில் இருந்து பட்டர்ரோஜா, சிவப்பு ரோஜா, மஞ்சள் ரோஜா, வெள்ளை ரோஜா, காஷ்மீர் ரோஜா என பல வகைகளிலும், பல வண்ணங்களிலும் ரோஜா பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

    சில்லரை வியாபாரிகள் இந்த ரோஜாக்களை பொக்கே தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கட்டு ரோஜா பூக்கள் ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ரோஜா பூ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதனை காதலர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். பனிப்பொழிவு காரணமாக ரோஜாப்பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
    • 400 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த மல்லிகை பூ இன்று 600 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது.

    மதுரை

    நாளை ஆடி பவுர்ணமி தினம் என்பதால் மதுரை பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை அதிகரித் துள்ளது. மல்லிகை பூ 600 ரூபாய்க்கு விற்பனையானது.

    மதுரை பூ மார்க்கெட்டில் கடந்த ஒரு வாரமாக மல்லிகை பூக்கள் வழக்கமாக 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது. மற்ற பூக்களான பிச்சு, சம்பங்கி, செவ்வந்தி, பட்டன் ரோஸ் உள்ளிட்ட பூக்களின் விலையும் சராசரியாக 100 முதல் 200 வரை விற்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நாளை ஆடி பவுர்ணமி தினம் என்ப தாலும், இன்னும் 2 நாட்க ளில் ஆடி 18 வருவதாலும் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பூக்க ளைத் தேடி பொது மக்கள் ஆர்வத்துடன் சென்று வாங்கி வருகிறார்கள்.

    இதன் காரணமாக மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் வணிக வளாகத்தில் பூக்களை வாங்க ெபாதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    இதன் காரணமாக அனைத்து பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. வழக்கமாக 400 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த மல்லிகை பூ இன்று 600 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது. மேலும் சம்பங்கி 100 ரூபாய் அதிகரித்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிச்சிப்பூ 500 ரூபாய்க்கும், செவ்வந்தி, அரளி ஆகிய மலர்கள் 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பட்டன் ரோஸ் இன்று 200 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.

    மற்ற பூக்களின் விலையும் சற்று அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து cள்ளனர். இன்னும் சில தினங்களில் ஆடி 18 வர இருப்பதால் பூக்களின் விலை இன்னும் சில நாட்க ளுக்கு தொடர்ந்து அதிக ரிக்கும் என்று வியா பாரிகள் தெரிவித்தனர்.

    • சேலம் கடை வீதியில் வ.உ.சி பூ மார்க்கெட் செயல்பட்டு வந்தது.
    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதால் தற்காலிகமாக பூ மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் கடை வீதியில் வ.உ.சி பூ மார்க்கெட் செயல் பட்டு வந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதால் தற்காலிகமாக பூ மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்பட்டது.

    இதனால் போஸ் மைதானத்தில் பூ மார்க்கெட் மற்றும் பல்பொருள் அங்காடி, காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. வ.உ.சி மார்க்கெட் கட்டு மான பணிகள் முடிவடைந்த தால் விரைவில் பூ மார்க்

    கொட் அங்கு மாற்றப்பட உள்ளது.

    இந்த நிலையில் வருகிற 11-ந் தேதி ஈரடுக்கு பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதையொட்டி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள வணிக வளாகம் அருகே போஸ் மைதானத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக பூ கடைகளை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    இதன்படி, போஸ் மைதா னத்தில் உள்ள தற்காலிக கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்று வதற்கான நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் இறங்கினர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபார நல சங்க நிர்வாகி ஆறுமுகம் தலைமையில் வியாபாரிகள் அங்கு குவிந்தனர். அவர்கள் அதிகாரியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து கடைகளை அகற்ற அதிகாரிகள், வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவி வருவதால் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    • சிவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் அர்ச்சனை செய்ய, வழிபாடு நடத்த பூக்களின் தேவை அதிகரித்தது.
    • பூக்களின் விலையும் நேற்றையை விட அதிகமாகும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் விளார் ரோடு சைலஜா மண்டபத்தில் பூச்சந்தை இயங்கி வருகிறது.

    இந்த சந்தைக்கு திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இதேபோல் இங்கிருந்தும் வெளியூர்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும்.

    பண்டிகை, திருவிழாக் காலங்கள்,

    சுப முகூர்த்த நாட்களில் பூக்கள் விலை கணிசமாக உயரும். அதன்படி இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் அர்ச்சனை செய்ய, வழிபாடு நடத்த பூக்களின் தேவை அதிகரித்தது.

    இதன் காரணமாக தஞ்சை பூச்சந்தையில் இன்று பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று 1 கிலோ ரூ.900-க்கு விற்கப்பட்ட முல்லைப் பூ இன்று கிடு கிடுவென உயர்ந்து ரூ.1500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    நேற்று ரூ.800-க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று ரூ.1000-க்கு விற்கப்பட்டது. இதேபோல் கனகாம்பரம் கிலோ ரூ.1000, ஆப்பிள் ரோஸ் ரூ.200, சம்பங்கி ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்த பூக்களின் விலையும் நேற்றையை விட அதிகமாகும்.

    இது குறித்து வியாபாரிகள் கூறும்போது:-

    சிவராத்திரி என்பதால் இன்று பூக்களின் தேவை அதிகமானது. இதன் காரணமாகவும் தற்போது பனிப்பொழிவால் பூக்களின் விளைச்சல் குறைந்து காணப்படுகிறது.

    இந்த காரணங்களால் பூக்களின் தேவை அதிகரித்தது. இருந்தாலும் பொதுமக்கள் அதிகளவில் பூக்கள் வாங்கி செல்கின்றனர் என்றனர்.

    • நாளை காதலர் தினம் என்பதால் மதுரை மலர் சந்தையில் ரோஜா பூக்கள் விற்பனைக்கு குவிந்தன.
    • ஒரு பாக்கெட் ரூ.200-க்கு விற்பனையாகிறது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் காதலர் தினம் நாளை (14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜா பூ கொடுத்து தங்களது காதலை வெளிப்படுத்துவது வழக்கம்.

    நாளை காதலர் தினம் என்பதால் ரோஜா மலர்கள் அதிகளவில் விற்பனையாகும். இதனை கருத்தில் கொண்டு மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் சந்தைக்கு ரோஜா மலர்கள் அதிகளவில் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த ரோஜா மலர்கள் ஓசூர், கொடைக்கானல், ஊட்டி, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஒரு பாக்கெட் ரோஜா பூக்கள் ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ரோஜா பூ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை வாங்க வாலிபர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். காதலர் தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரையில் காதலர்கள் எல்லை மீறக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை காந்தி மியூசியம், மாநகராட்சி ராஜாஜி பூங்கா, எக்கோ பார்க், அழகர்கோவில் மலை, திருமலை நாயக்கர் மகால் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று முதலே கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை ராஜாஜி பூங்காவுக்கு காதலர் தினத்தையொட்டி ஜோடியாக வந்திருந்த சில பெண்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    தமிழகத்தில் பலருக்கும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் என்பது மட்டும்தான் தெரியும். ஆனால் மதுரைக்காரர்களுக்கு ஏற்கனவே காதலர் வாரம் தொடங்கி விட்டது. காதலர் தினம் என்றால் பலருக்கும் ரோஜா பூக்கள் தான் நினைவுக்கு வரும். அது தவறு. ப்ரவரி 7-ந்தேதி ரோஜா தினம் ஆகும். அன்றுதான் காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜா பூக்களை கொடுத்து அன்பை பரிமாறிக் கொள்வார்கள்.

    பிப்ரவரி 8-ந்தேதி முன்மொழிவு நாள். அன்றுதான் நேசிப்பவர்க ளிடம் காதலை வெளிப் படுத்த வேண்டும். பிப்ரவரி 9-ம் தேதி சாக்லேட் தினம். அன்றைய நாளில் காதலர்கள் விரும்பத்தகாத மற்றும் மோசமான நிகழ்வு களை மறந்து, சாக்லேட் பகிர்ந்து காதலை பரிமாறிக் கொள்வார்கள்.

    பிப்ரவரி 10-ந்தேதி டெடி டே அன்று அழகான பொம்மையை வழங்கியுள்ளோம். அது எங்களின் மன அழுத்தத்தை குறைக்க, முகத்தில் புன்ன கையை வரவழைக்க உதவியாக இருக்கும். பிப்ரவரி 11-ந்தேதி வாக்குறுதி தினம். அன்றைய நாளில் காதலர்கள் உறவை ஆழப்படுத்திக் கொள்வோம். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கவும் உறுதியேற்றுக் கொண் டோம்.

    பிப்ரவரி 12 - கட்டிப்பிடி நாள். அன்றைய நாளில் அன்புக்குரியவர்களை அரவணைப்பதன் மூலம் பாசத்தை வெளிப்படுத்தி உள்ளோம். அது நிச்சயமற்ற தன்மை அல்லது எதிர்காலம் பற்றிய கவலையை சரிசெய்வதற்கு உதவியாக இருக்கும்.

    • ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையானது.
    • இன்று கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த பூ மா ர்க்கெட்டிற்கு சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து முல்லை, மல்லிகை பூவும், ஓசூர், பெங்களூரு பகுதிகளில் இருந்து ரோஜா, காக்கடை பூக்களும் வருகிறது.

    இதுதவிர சேலத்தில் இருந்து அரளி பூவும், நிலக்கோட்டையில் இருந்து குண்டுமல்லியும் விற்பனைக்கு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டில் கோவை மாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மல்லிகை, முல்லை, அரளி, குண்டுமல்லி, ரோஜா, செவ்வந்தி என பூக்களை தேர்வு செய்து வாங்கி செல்கிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து சற்று குறைவாக உள்ளது. இதனால் பூக்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கார்த்திகை மாதம் என்பதால் கோவில் விசேஷங்கள், திருமண நிகழ்ச்சிகள் என பல்வேறு விழாக்களுக்கு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் இன்று கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இதனால் பூக்கள் விற்பனை அதிகளவில் இருந்தது. அய்யப்ப பக்தர்கள், பொதுமக்கள் காலை முதலே பூக்கள் வாங்க மார்க்கெட்டுக்கு குவிந்தனர்.

    இதையடுத்து கோவை பூமார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையானது. மற்ற பூக்களும் விலை உயர்ந்து காணப்பட்டது. கோவை பூமார்க்கெட்டில் விற்பனையாகும் பூக்களின் விலை நிலவரம் கிலோவில் வருமாறு:-

    செவ்வந்தி-ரூ.100, ரோஜா ரூ.160, கோழி கொண்டை-ரூ.30 முதல் 60, அரளி-ரூ.240, சம்பங்கி-ரூ.60, வாடாமல்லி-ரூ.80, மரிக்கொழுந்து 1 கட்-ரூ.50, காக்கடைபூ-ரூ.400, செண்டுமல்லி- ரூ.160, மருகு-ஒரு கட்டு ரூ.30, தாமரை ஒன்று ரூ.15க்கும் விற்பனையானது. பூக்கள் வாங்க மார்கெட்டுக்கு பொதுமக்கள் குவிந்ததா ல் காலை முதலே அந்த பகுதியில் கடும்போ க்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.தற்போ து நிலவும் கடும் பனிப்பொழிவால் மல்லிகைப்பூ வரத்து குறை வாகவே காணப்பட்டது.

    • மதுரை மாட்டுத்தாவணியில் பூ மார்க்கெட்டில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன.
    • இதனால் தொற்றுநோய் பரவுவதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மார்க்கெட்டிற்கு செல்ல அஞ்சுகிறார்கள்.

    மதுரை

    மதுரை மாட்டுத்தா வணியில் கடந்த 2009-ம் ஆண்டு ஒருங்கிணைந்த நெல் மற்றும் மலர் வணிக வளாகம் உருவாக்கப்பட்டது.

    இந்த வணிக வளாகத்தில் 104 பூக்கடைகள், 127 நெல் கடைகள், 60 உரகடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் வியாபாரிகளுக்கு சொந்தமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. சுமார் 9.85 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த ஒருங்கிணைந்த வணிக வளாகத்தை நிர்வகிக்க தனியாக கமிட்டி ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பூ மார்க்கெட்டை பொருத்தவரை தினமும் 100 டன்களுக்கு மேல் பூக்கள் வியாபாரம் நடைபெறும். தற்போதும் வழக்கமாக வியாபாரம் களை கட்டி உள்ளது. இதன் காரணமாக தினமும் வியாபாரிகள் குப்பைகளை மார்க்கெட்டின் பின்பகு தியில் எடுத்து சென்று கொட்டுகிறார்கள்.

    இந்த குப்பைகள் சில வாரங்களாக அகற்றப்படாததால் அந்த பகுதியில் குப்பைகள் லைபோல தேங்கி கிடக்கிறது. இதனால் பூக்கள் மற்றும் கழிவுகள் அழுகி துர்நாற்றம் வீசுவதால் அந்த பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு அஞ்சுகிறார்கள்.

    துர்நாற்றத்துடன் குப்பை குவியல் காட்சி அளிப்பதால் தொற்று நோய் பரவும் அபாயமும் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அங்குள்ள சில வியாபாரிகள் கூறியதாவது:-

    கடைகளின் சார்பில் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தருவதற்காக 600 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி வருகிறோம். மேலும் மதுரை மாநகராட்சிக்கு ஒவ்வொரு 6 மாதத்திற்கும் சொத்து வரியை செலுத்துகிறோம்.

    ஆனால் மார்க்கெட் கமிட்டியோ, மாநகராட்சியோ வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் அடிப்படை வசதிகளை செய்து தருவதில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து வருகிறது.

    கடந்த சில வாரங்களாக குப்பைகள் அள்ளப்படாததால் குப்பைகள் மலை போல குவிந்து துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    தற்போது மதுரையில் பல்வேறு பகுதிகளில் தொற்றுநோய் பரவிவரும் நிலையில் மார்க்கெட்டில் குவிந்துள்ள குப்பைகள் காரணமாக இங்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கும் தொற்றுநோய் பரவி விடுமோ என்ற அச்சம் அனைவரது மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

    எனவே மார்க்கெட் கமிட்டி மற்றும் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள குப்பையை உடனடியாக அகற்றுவதுடன் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் மற்றும் சுகாதார தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இட நெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசல் இருப்பதால் அதற்கு மாற்றாக வடக்கு தேவித்தெருவில் புதிய பூ மார்க்கெட் கட்டப்பட்டது.
    • இதுவரை அந்த பூ மார்க்கெட் முழுமையாக செயல்பட்டுக்கு வரவில்லை. அங்கு கடை எடுத்துள்ள வியாபாரிகள், மாலை கட்டும் இடமாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் சாத்தார வீதியில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் தொடர்ந்து இட நெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசல் இருப்பதால் அதற்கு மாற்றாக வடக்கு தேவித்தெருவில் அ.தி.மு.க. ஆட்சியில் புதிய பூ மார்க்கெட் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை அந்த பூ மார்க்கெட் முழுமையாக செயல்பட்டுக்கு வரவில்லை. அங்கு கடை எடுத்துள்ள வியாபாரிகள், மாலை கட்டும் இடமாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மாநகராட்சி சார்பில் தெற்கு தேவித்தெருவில் உள்ள பூ மார்க்கெட்டை மேம்படுத்துவது, அப்பகுதியில் ஒருங்கிணைந்த மார்க்கெட் அமைப்பது தொடர்பாக அமைச்சர் நேரு, கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் ஆகியோர் சாத்தார வீதி, புதிய பூ மார்க்கெட் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

    பூ மார்க்கெட்டை இடம் மாற்றுவதில் உள்ள நடைமுறை பிரச்சனைகள், இடவசதி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், இது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய உத்தரவிட்டார்.

    இது குறித்து மாநகராட்சி வட்டாரங்களில் கேட்ட போது சாத்தார வீதியில் உள்ள பூ மார்க்கெட், அதன் அருகில் உள்ள தெற்கு தேவித் தெரு ஜெ.ஜெ திருமண மண்டபம் முன்பாக ஏற்கனவே கட்டி முழுமையாக செயல்பாட்டுக்கு வராமல் உள்ள பூ மார்க்கெட்டுக்கு மாற்றப்பட உள்ளது. இதற்காக அருகிலுள்ள மாநகராட்சி இடத்தையும் சேர்த்து (மீன் மார்க்கெட் இடம்) வியாபாரிகளுக்கு தேவையான வசதிகள், அமைப்புகள் குறித்து கேட்டறிந்து பூ மார்க்கெட் விரிவுபடுத்தப்படும்.

    மேலும், அதே பகுதியில் பயன்பாட்டில் இல்லாத ஜெ ஜெ திருமண மண்டபம் இடிக்கப்பட்டு அங்கு ஒரு ஏக்கரில் காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்ட கடைகள் தனித்தனி வளாகமாக கொண்ட ஒருங்கிணைந்த மார்க்கெட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி வருவாயை பெருக்கும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ள இத்திட்டத்தை எந்த நிதியிலிருந்து மேற்கொள்வது மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய அமைச்சர் உத்தரவிட்டார். விரைவில் அப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.

    முன்னதாக ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ள அரசு மருத்துவமனை எதிரில் உள்ள இடத்தில் முன்னேற்பாடுகளையும் அமைச்சர் நேரு பார்வையிட்டார்.

    ஆய்வின் போது மாநகராட்சி மேயர் அன்பழகன், மண்டலக் குழுத் தலைவர் ஆண்டாள், நகரப் பொறியாளர் (பொ) சிவபாதம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டுக்கு வியாபாரத்திற்காக தினமும் ஏராளமான வியாபாரிகள் பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
    • குலவணிகர்புரம், குறிச்சி உள்ளிட்ட பகுதியில் சில மாதங்களாக குடிநீர் கலங்கலான முறையில் வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

    நெல்லை மாவட்ட மொத்த பூ கமிஷன் வியாபாரிகள் சங்க பொருளாளர் வெங்கடகிருஷ்ணன், தி.மு.க. வர்த்தக அணி துணை அமைப்பாளர் எல்.ஐ.சி. பேச்சிமுத்து தலைமையில் வியாபாரிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள பூ மார்க்கெட் நெல்லையில் பிரதான பூ மார்க்கெட் ஆகும். இங்கு வியாபாரத்திற்காக தினமும் ஏராளமான வியாபாரிகள் பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

    இதனால் எப்போதும் பொதுமக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும். முகூர்த்த நாட்களில் அதிகளவில் பொதுமக்கள் திரள்வார்கள்.

    ஆனால் சந்திப்பில் இருந்து பூ மார்க்கெட் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே உடனடியாக அந்தச் சாலையை சீரமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    31-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் அமுதா சுந்தர் கலங்கலான தண்ணீரை பாட்டிலில் கொண்டு வந்து கொடுத்த மனுவில், 31-வது வார்டுக்குட்பட்ட குலவணிகர்புரம், குறிச்சி உள்ளிட்ட பகுதியில் சில மாதங்களாக குடிநீர் கலங்கலான முறையில் வருகிறது.

    இது தொடர்பாக இப்பகுதியினர் 3 மாதமாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    மனுவை பெற்று கொண்ட மேயர் சரவணன், இன்றுகாலை முதல் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்ட இடங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. விரைவில் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    பிறப்பு சான்றிதழ்

    டவுன் பகுதியை சேர்ந்த சமூகஆர்வலர்கள் கொடுத்த மனுவில், பிறப்பு-இறப்பு பதிவுக்காக மாநகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

    இது தொடர்பான மனுக்களை கொடுப்பதற்காக மாநகராட்சி வளாகத்தில் ஒரு பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. அதில் மனுக்களை போட்டு செல்வதால் எங்களுக்கு ஒப்புகை சீட்டுகள் வழங்கப்படுவதில்லை.

    சான்றிதழ் கிடைக்காதபட்சத்தில் அது தொடர்பாக விளக்கம் கேட்க ஒப்புகை சீட்டுகள் வழங்கப்பட வேண்டும். மேலும் குறித்த காலத்தில் பிறப்பு-இறப்பு பதிவுகள் பதிவுசெய்ய வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

    தஞ்சை பூச்சந்தையில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தமாட்டோம். அதற்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்துவோம் என வியாபாரிகள் தெரிவித்தனர். #Plasticban
    தஞ்சாவூர்:

    பிளாஸ்டிக்குகளால் ஆன தட்டு, தண்ணீர் பாக்கெட், கப், பை உள்ளிட்ட 14 வகையான பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை நேற்றுமுதல் அமலுக்கு வந்தது.

    தஞ்சையில் பெரும்பாலான கடைகளில் தண்ணீர் பாக்கெட், கப் விற்பனை அடியோடு நிறுத்தப்பட்டது. ஒரு சில கடைகளில் மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஒரு சில டீக்கடைகளில் இட்லி, தோசைகளை பார்சலாக கட்டி எளிதில் மக்கும் வகையிலான கைப்பைகளை வழங்கினர். பேப்பர் தட்டுகளில் இட்லி, பூரி, தோசைகள் பரிமாறப்பட்டன. தஞ்சை சரபோஜி மார்க்கெட்டில் சில மளிகை கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக பேப்பரால் ஆன பைகளில் தான் மளிகை சாமான்களை கட்டி கொடுத்தனர்.

    தஞ்சை பூக்கார தெருவில் பூ சந்தை கடைகளில் துணிப்பையில் பூக்களை போட்டு வழங்கினர். மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என விளம்பர பேனர், பூச்சந்தையில் வைக்கப்பட்டுள்ளது.

    பூக்கள் வாங்க வருபவர்கள் வீட்டில் இருந்து துணிப்பைகளை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். பூச்சந்தையில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தமாட்டோம். அதற்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்துவோம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    தஞ்சையில் இறைச்சி கடைகளில் கறிவாங்க, பொதுமக்கள் பாத்திரங்களை கொண்டு வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் பார்களில் குடிக்க வரும் மதுப்பிரியர்களுக்கு பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டது. இந்த 2 பொருட்களும் அரசு தடை செய்த பொருட்கள் பட்டியலில் வருவதால் நேற்று முதல் விற்பனை செய்யப்படவில்லை. இதற்கு மாற்றாக மதுப்பிரியர்களுக்கு சில பார்களில் கண்ணாடி டம்ளர், தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டது. இதற்கு நுழைவு கட்டணமாக ரூ.20 வரை வசூலிக்கப்பட்டது.  #Plasticban

    ×