search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flower"

    • தாவரவியல் பூங்காவில் ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா மலர்கள் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • 675 வகையான ரோஜா செடிகள் என மொத்தம் 6,750 எண்ணிக்கையில் நடவு செய்யப்பட்டு வருகிறது

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படும். தமிழகத்தில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வருகை தருவார்கள். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்காவில் ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா மலர்கள் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து தோட்ட கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஏற்காடு கோடை விழாவில் மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர்ச்செடிகளை இப்போதே நடவு செய்ய தொடங்கியுள்ளோம். அண்ணா பூங்காவில் பால்சம், ஜீனியா, சால்வியா, டெல்பினியம், ஆஸ்டர், மேரிகோல்டு, சூரியகாந்தி ஆகிய மலர் விதைகள் 25 ஆயிரம் முதல் கட்டமாக விதைக்கப்பட்டுள்ளன. ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா கட்டிங்ஸ், 3ஆயிரம் எண்ணிக்கைக்கு மேல் மேட்டுப்பாத்திகளில் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும், ரோஜா பூங்கா, அண்ணா பூங்கா, முதலாவது அரசு தாவரவியல் பூங்கா ஆகியவற்றில் 675 வகையான ரோஜா செடிகள் என மொத்தம் 6,750 எண்ணிக்கையில் நடவு செய்யப்பட்டு வருகிறது.

    ஏற்காட்டில் பருவமழை சீராக பெய்துள்ளதால், தற்போது தட்பவெப்ப நிலை சீராக உள்ளது. இதன் காரணமாக, தோட்டங்களில் வைத்துள்ள பூச்செடிகள் செழித்து வளர தொடங்கியுள்ளன. கோடை விழா தொடங்கும் போது, பூச்செடிகள் முழுமையாக வளர்ச்சியடைந்து, பூத்துக் குலுங்கி, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • புறநகர் பகுதிகளான பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
    • பரவலாக பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் ஒருங்கிணைந்த பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் புறநகர் பகுதிகளான பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    பின்னர் இங்கிருந்து வியாபாரிகள் அதனை வாங்கிச்சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதம் மார்கழி என்பதால் எந்தவித திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. மேலும் பரவலாக பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்பட்டது.

    இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பின்பு நாளை தை மாதத்தின் முதல் வளர்பிறை முகூர்த்த நாள் வருகிறது. நாளை திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷேச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளநிலையில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

    திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இன்று 30 கிலோ மல்லிகை மட்டுமே விற்பனைக்கு வந்தது. இதனால் ஒரு கிலோ மல்லிகை ரூ.4000-க்கு விற்பனையானது. இதேபோல் முல்லைப்பூ ரூ.1800, ஜாதிப்பூ ரூ.1300, காக்கரட்டான் ரூ.1300, சம்பங்கி ரூ.300, அரளி ரூ.150, செவ்வந்தி ரூ.200, செண்டுமல்லி ரூ.70, கோழிக்கொண்டை ரூ.130, பட்டன்ரோஸ் ரூ.200, பன்னீர்ரோஸ் ரூ.150 என விற்பனையானது.

    வழக்கமாக மார்க்கெட்டுக்கு வரும் பூக்களில் பாதிஅளவு கூட இன்று விற்பனைக்கு வராததால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வர உள்ள நிலையில் பூக்களின் விலையேற்றம் சாமானிய மக்களை அதிர்ச்சி அடைய வைத்தள்ளது.

    • பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லைப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அ ரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகை யான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
    • பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளதால் பூ க்கள் பயிர் செய்துள்ள விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர்.

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம் ,சேமங்கி, முத்தனூர், கோம்பு ப்பாளையம், திருக்கா டுதுறை, பேச்சிப்பா றை , வேட்டமங்கலம் உள்ளி ட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லைப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அ ரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகை யான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    பூக்கள் பறிக்கும் தருவாய்க்கு வரும்போது விவசாயிகள் கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறித்து கோணிப்பைகளில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகில் செயல்பட்டு வரும் பூ ஏல மார்க்கெட்டிற்கும் தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கி ன்றனர் . இந்நிலையில் கடந்த வாரம் குண்டுமல்லி ரூ.700- க்கும், சம்பங்கி கிலோ ரூ.50- க்கும், அரளி கிலோ ரூ.100- க்கும், ரோஜா கிலோ ரூ.160- க்கும், முல்லைப் பூ ரூ.500- க்கும், செவ்வந்திப்பூ ரூ.100- க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம் போனது.

    கார்த்திகை தீபம், கிருத்திகை மற்றும் பவுர்ண மியை முன்னிட்டு நடை பெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.2,100-க்கும், சம்பங்கி கிலோ ரூ.150- க்கும், அரளி கிலோ ரூ.220- க்கும், ரோஜா கிலோ ரூ.280- முல்லைப் பூ கிலோ ரூ.1,800-க்கும், செவ்வ ந்திப்பூ ரூ.250- க்கும், கனகா ம்பரம் ரூ.1,200-க்கும் ஏலம். போனது.

    பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளதால் பூ க்கள் பயிர் செய்துள்ள விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர்.

    • குண்டுமல்லி, முல்லை பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகை யான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
    • திருமண முகூர்த்தம் உள்ளதால் பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம் ,சேமங்கி, முத்தனூர், கோம்புப்பா ளையம், திருக்காடு துறை, பேச்சிப்பா றை, வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் குண்டுமல்லி, முல்லை பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகை யான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    பூக்கள் பறிக்கும் தருவாய்க்கு வரும்போது விவசாயிகள் கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறித்து கோணிப்பைகளில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகில் செயல்பட்டு வரும் பூ ஏல மார்க்கெட்டிற்கும் தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ.600- க்கும், சம்பங்கி கிலோ ரூ.40- க்கும், அரளி கிலோ ரூ.100- க்கும், ரோஜா கிலோ ரூ.160- க்கும், முல்லைப் பூ ரூ.500- க்கும், செவ்வந்திப்பூ ரூ.100- க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் ஏலம் போனது.

    தற்போது நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1100-க்கும், சம்பங்கி கிலோ ரூ.90- க்கும், அரளி கிலோ ரூ.170- க்கும், ரோஜா கிலோ ரூ.280- முல்லைப் பூ கிலோ ரூ.800-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150- க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும் ஏலம் போனது. அதிக அளவில் திருமண முகூர்த்தம் உள்ளதால் பூக்கள் விலை உயர்வ டைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.

    • நவதானியங்களில் அனுமன் மற்றும் ராமர் உருவங்களை வடிவமைத்துள்ளனர்.
    • நான்கு மாடவீதிகளில் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருமலை:

    நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி திருமலையில் பக்தர்களை கவரும் வகையில் மலர்கள்-புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறைக்கும் நவராத்திரி பிரம்மோற்சவம் நடக்கும் நாட்களில் பக்தர்களை கவரும் வகையில் திருமலையில் கவர்ச்சியான, கருத்துகளுடன் மலர்-புகைப்படக் கண்காட்சி நடப்பது வழக்கம்.

     அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு கலை வடிவங்களை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதில் துரியோதணன் சபையில் திரவுபதி துகிலுரிக்கப்பட்ட காட்சி, புகழ்பெற்ற மாயா பஜார், மகாபாரதத்தில் இருந்து

    பிருஹன்னலா-உத்தர குமார அத்தியாயங்கள் உள்பட இதிகாசங்களில் இருந்து எடுக்கப்பட்ட தனித்துவமான கருத்துகளுடன் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    விஜயவாடாவை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணர் என்பவர், கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக மலர் கண்காட்சியில் காய்கறிகள், ஐஸ், தானியங்கள், பழங்கள் போன்றவற்றைக் கொண்டு தெய்வ உருவங்களை செதுக்கி வருகிறார். நவதானியங்களில் அனுமன் மற்றும் ராமர் உருவங்களை வடிவமைத்துள்ளார்.

    ராவணன் ஜடாயுவை கொன்றது, ராமரின் மகன்களான லவ-குசா, ராம ஜனனம், மோகினி-பஸ்மாசூரன், பீமசேனன்-பாகாசூரன், அனந்தாழ்வார் அத்தியாயங்கள் தவிர திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசாமி போன்ற கலை வடிவங்கள் பக்தர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதனுடன் திருமலையில் பல்வேறு புகைப்படங்களும் பக்தர்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    அலிபிரியில் உள்ள கருடன் சிலை, திருமலை கோவில் உள்பட பல்வேறு சிற்பங்களை தேவஸ்தானத்தின் பாரம்பரிய சிற்பக்கழகம் வடிவமைத்து வைத்துள்ளது. அதில் கல், சிமெண்டு, இரும்பு, மரம் மற்றும் வண்ணப்பூச்சு வேலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆயுர்வேதப் பொருட்கள், மதம் மற்றும் ஆன்மிக புத்தகங்கள் வைத்திருப்பது தேவஸ்தானத்தின் பெருமையை உயர்த்தியது.

    இதுதவிர நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் வளாகம், நான்கு மாடவீதிகள், ஸ்ரீவாரி புஷ்கரணி உள்பட பல்வேறு இடங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பெருமாள், சங்கு, சக்கரம் உருவங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நான்கு மாடவீதிகளில் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கோவிலின் தங்க கொடிமரம், பலிபீடம் பிரத்யேக மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மின் விளக்கு அலங்காரத்தைப் பார்க்க கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் வளாகம், நான்கு மாடவீதிகள் உள்பட பல்வேறு இடங்களில் பலத்தபோலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

    • பிரம்மகமலம் மலர் மலரும்போது அருகி இருந்து நாம் நினைத்து வேண்டினால் அது வரமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    • ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்

    மேட்டுப்பாளையம்,

    உத்தரகண்ட் மாநில மலராகவும், இமயமலை பகுதிகளில் மட்டுமே காணப்படும் அதிசய மலராகவும் உள்ளது பிரம்ம கமலம்.

    இளவேனில் காலத்தில் மாலை 7 மணிக்கு மேல் இரவு நேரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும். இந்த பூ மலரத் தொடங்கிய நேரத்திலிருந்து 2 மணி நேரத்துக்கு பிறகே முழுமையாக மலரும்.

    அதிகாலைக்குள் உதிா்ந்து விடும். என்றாலும் இந்த பூவின் வாசம் அந்த பகுதி முழுவதும் வீசும். இந்த மலரின் செடி கள்ளிச்செடி வகையைச்சோ்ந்தது என கூறப்படுகிறது.

    உலக வெப்பநிலை மாறுபாட்டால் அழிந்துவரும் இந்த தாவரத்தை பாதுகாக்க உத்தரகாண்ட் மாநில அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த மலா் மலரும்போது அருகி இருந்து நாம் நினைத்து வேண்டினால் அது வரமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இத்தகைய அபூா்வ பிரம்ம கமலம் பூ அன்னூர் அருகே பொகலூர் பகுதியை சேர்ந்த பூசாரியான முத்துச்சாமி என்பவரின் வீட்டில் 3 ஆண்டுகளாக வளா்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த செடியில் 1 மொட்டு சில தினங்களுக்கு முன்னா் வந்துள்ளது.

    இதனிடையே நேற்று காலை முதல் மொட்டு மலர தொடங்கிய நிலையில் நள்ளிரவு பிரம்ம கமலம் மலா் வெண்ணிலவை போல் காட்சியளித்தது. இதையறிந்த பொதுமக்கள் பலா் ஆச்சரியத்துடன் பாா்த்து வரம் கேட்டு வேண்டியதோடு சுயபடம் எடுத்துக்கொண்டு உறவினா்களுக்கும் அனுப்பி மகிழ்ந்தனா்.

    • ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் வசிக்கும் மலையாளிகள் அத்தப்பூ கோலமிட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர்
    • கோவையில் மல்லி ரூ.800க்கு விற்பனையாகிறது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் பூ மார்க்கெட், மேட்டுப்பா–ளையம், வால்பாறை, தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலர்ச்சந்தைகள் இயங்கி வருகின்றன.

    இங்கு உள்ளூர் விவசாயிகள் சாகுபடி செய்த பூக்களை விற்பனைக்கு கெர்ண்டு வருகின்றனர். மேலும் வெளியூர் மாநிலம்-மார்க்கெட்டுகளில் இருந்து பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

    கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் வசிக்கும் மலையாளிகள் அத்தப்பூ கோலமிட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும் கல்லூரிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பூக்கோலத்தை பார்க்க முடிகிறது.

    கோவை மற்றும் பல்வேறு பகுதிகளில் தற்போது வறண்ட வானிலை நிலவுகிறது. போதியஅளவில் மழை இல்லை. எனவே அங்கு பூக்களின் விளைச்சல் குறைந்து உள்ளது.

    மேலும் கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன்கணக்கில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. எனவே கோவைக்கு மலர்வரத்து குறைந்து உள்ளது.

    இதன்காரணமாக கோவை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. அங்கு தற்போது ஒரு கிலோ மல்லி ரூ.800க்கு விற்கப்படுகிறது. அதேபோல ஜாதி மல்லி ரூ.400-க்கு விற்பனை–யாகிறது. இருந்தபோதிலும் ஓணம் பண்டிகை என்பதால் பொதுமக்கள் விலைஉயர்வு பற்றி கவலைப்படாமல் பூக்களை கிலோக்கணக்கில் வாங்கி செல்கின்றனர்.

    கோவை பூ மார்க்கெட்டில் விற்பனை–யாகும் பூக்களின் விவரம் (கிலோவுக்கு): செவ்வந்தி-160, செண்டு மல்லி-50, சம்பங்கி-120, அரளி-120, ஒரு கட்டு மருகு-10, வாடாமல்லி-80, ரோஜா-240, மரிக்கொழுந்து-30, துளசி-40, கலர் செவ்வந்தி-240, வெள்ளை செவ்வந்தி-200, மஞ்சள் செவ்வந்தி-100, ஜாதிப்பூ-400, கோழிக்கொண்டை-100, ஒரு தாமரைப்பூ-20, முல்லை-400.

    இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், கோவை மலர்ச்சந்தைக்கு பூக்களின் வரத்து போதிய அளவில் இல்லை. உற்பத்தியும் சற்று குறைந்து உள்ளது. ஓணம் பண்டிகைக்காக பெருமளவில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

    எனவே கோவை மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை உயர்ந்து உள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை முடிந்தபிறகு கோவை மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை குறைய வாய்ப்பு உண்டு என்று தெரிவித்து உள்ளனர்.

    • சிவபெருமானுக்கு உகந்தது குங்கிலிய மலர் ஆகும்.
    • மூலிகை மருத்துவ குணம் உடையது குங்கிலிய மரம்.

    சிவராத்திரி தினத்தன்று பூக்கும் குங்கிலிய மலர்

    சிவபெருமானுக்கு உகந்தது குங்கிலிய மலர் ஆகும்.

    அது சிவராத்திரியில் மட்டுமே பூக்கும் என்பதும் ஆச்சரியமானது.

    மூலிகை மருத்துவ குணம் உடையது குங்கிலிய மரம்.

    இந்த மரத்தில் சால் மற்றும் ஜலரி எனும் இரு வகைகள் உள்ளன.

    ஜலரி மரங்களில்தான் சிவராத்திரியில் மட்டும் குங்கிலியப் பூக்கள் அபூர்வமாகப் பூக்கின்றன.

    சிவராத்திரி நாட்களில் பூப்பதால் தெய்வத்தன்மை கொண்டதாக விளங்கும் இப்பூக்களை சிவனுக்கு மாலையாகப் படைக்கும் மலை கிராம மக்கள், சிவனின் மலர் பூக்கும் மரம் எனக் கருதி, மறந்தும் கூட அவற்றை வெட்டுவதில்லை.

    கன்னடத்தில் குங்கிலிய மரத்தை "தளி" என அழைப்பர்.

    இப்பெயரிலேயே ஹோசூர் அருகிலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் ஒரு இடம் உள்ளது.

    இதன் அருகிலுள்ள தேர் பெட்டா மலைப்பகுதியில் வருடந்தோறும் சிவராத்திரியின் போது குங்கிலியப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன!

    இந்த பூ அபூர்வ நறுமணம் கொண்டவை.

    இம்மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து 3 கி.மீ. தூர சுற்றளவுக்கு நறுமணம் வீசும்.

    சிவராத்திரியில் பூக்கும் இந்த அதிசயப் பூக்களைக் காணவும், அதன் மணத்தை நுகரவுமே சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் தேர் பெட்டா மலைப்பகுதிக்கு வந்து செல்வதுண்டு.

    • இதனை “கைலாய மலையின் பனித்தூறல்” என்று வர்ணிப்பவர்களும் உண்டு.
    • சிவபெருமானுக்கு பொதுவாக வெள்ளை நிற மலர்கள் மிகவும் படிக்கும்.

    மனதை அமைதிப்படுத்தும் நில சம்பங்கி

    வெள்ளைநிறம் உடைய மலர்கள் சாத்வீக குணத்தை கொண்டவை. மீண்டும் மீண்டும் சாத்வீகமான மலர்களை நாம் இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபாடு செய்து தரிசிக்கும்போது, அந்த வெள்ளை மலர்களில் உள்ள சாத்வீக குணம் நமக்குள்ளும் வந்துவிடும்.

    அத்தகைய சாத்வீக குணத்தை தரும் மலர்களில் ஒன்றாக நில சம்பங்கி மலர் உள்ளது. இந்த நில சம்பங்கி மலர்களுக்கு மற்ற மலர்களை விடக் கூடுதலான ஒரு அம்சம் உண்டு.

    அதாவது நில சம்பங்கி மிகமிக வலிமையான பிரத்யேகமான வாசனை கொண்டது.

    நில சம்பங்கி மாலையை மற்ற மலர்களைபோல கட்டுவது போல் இல்லாமல் ஊசியில் நூல் கோத்து, நீள நீளமாகக் கோத்து, மிக மெல்லிய, நளின மாலைகளை அணிவது இன்றும் வழக்கம்.

    இதைவிட ஆலயங்களில் செய்யப்படும் அனைத்து அலங்காரங்களுக்கும் அதிகம் பயன்படும் மலர் இதுதான்.

    இந்தப் பூவின் வெண்மைநிறம் மற்றும் மெல்லிய நீண்ட குழல் போன்ற வடிவத்தின் காரணமாக, இதனை "கைலாய மலையின் பனித்தூறல்" என்று வர்ணிப்பவர்களும் உண்டு.

    இந்த மலர்மாலை அனைத்து ஆலயங்களிலும் அனைத்து தெய்வங்களுக்கும் எப்போதும் அணிவிக்கப்படும் மாலையாக உள்ளது.

    சகஸ்ரநாம அர்ச்சனைகளுக்கு ஏராளமான பூக்கள் தேவைப்படும்போது வாசனைமிக்க மலர் என்ற ஒரே காரணத்திற்காக அதிகம் இடம்பெறும் மலர் சம்பங்கிதான்.

    மல்லிகை சாகுபடி செய்யும் மதுரை விவசாயிகள் சமீபகாலமாக நிலசம்பங்கி சாகுபடிக்கு வெகுவாக மாறியுள்ளனர்.

    "இரவு ராணி" என்று நம் விவசாயிகள் இந்தப்பூவை சொல்வ துண்டு. சந்தை விற்பனையில் அதிகலாபம் பெற்றுக் கொடுப்பதால் இந்த மலர் பூ வியாபாரிகளின் செல்வம் ஆகவும் கருதப்படுகிறது.

    சிவபெருமானுக்கு பொதுவாக வெள்ளை நிற மலர்கள் மிகவும் படிக்கும்.

    அவனுக்குகந்த நாட்களிலும், நேரங்களிலும் கைநிறைய அள்ளி அள்ளி அர்ச்சித்து வணங்கினால் மனத்தூய்மை பெருகும்.

    உங்களைச்சுற்றி எது நடந்தாலும் பதற்றம் அடைய மாட்டடீர்கள். நிதானமான மனதுடன் செயல்களில் ஈடுபடுவீர்கள்.

    நிலசம்பங்கிப்பூக்களை "புதிய சிருஷ்டி" என்று புதுச்சேரி அன்னை வர்ணித்துள்ளார். எனவே சம்பங்கி மலர்கள் நமக்குள்ள திறனை அதிகப்படுத்தவும், இல்லாத அம்சங்களை உருவாக்கவும் உதவுகின்றன.

    • இதுகெட்டி அரளி எனப்படும் ஈரடுக்கு மலராகவும் நமக்கு கிடைக்கிறது.
    • சகாரா பாலைவனத்தில் கூட செவ்வரளி பூப்பது குறிப்பிடத்தக்கது.

    கடன்களை தீர்க்கும் செவ்வரளி

    "அரளி" பூக்களில் எத்தனையோ வகைகள் உள்ளன. ஆனால் அரளி என்று சொன்னதும் சாதாரணமாக நம்மால் அழைக்கப்படும் மலர் செவ்வரளிதான்.

    சிவந்த அரளிப் பூ எங்கும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடிய ஓரடுக்கு மலராகும்.

    இதுகெட்டி அரளி எனப்படும் ஈரடுக்கு மலராகவும் நமக்கு கிடைக்கிறது.

    ஆனால்பெரும்பாலான பக்தர்களால் விரும்பி வாங்கப்படுவது செவ்வரளிப்பூதான்.

    மகாவாராஹிக் குரிய மலர்களில் செவ்வரளி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

    அனைவருக்கும் கிடைக்கக்கூடிய எளிய மலர் செவ்வரளி, இம்மலர் சோலை, நந்தவனம், தோட்டம், பாதையோர பாலைவனம் என்ற பாகுபாடுகளின்றி, எங்கும் மிக எளிமையாக பூத்துக்குலுங்கும் அற்புத குணம் உடையது.

    சகாரா பாலைவனத்தில் கூட செவ்வரளி பூப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மலருக்கு விஞ்ஞான பூர்வமாக, காற்றிலுள்ள கார்பனின் அளவைக்குறைக்கக்கூடிய ஆற்றல் உண்டு.

    அதனால்தான் நமது தேசிய நெடுஞ்சாலைகளில் நாற்கரசாலைகளில் அக்கறையுடன் இந்த மலர் அதிகமாக வளர்க்கப்படுகின்றன.

    அம்மனை வழிபடும்போது நமது மனதை அம்மன் மீது ஒரு நிலைப்படுத்தி சிவப்பு அரளி கொண்டு பூஜை செய்தால், குடும்பச் சச்சரவுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும்.

    மனம் திறந்து கடன் பிரச்சினைகளை கடவுளிடம் சமர்ப்பித்தவிட்டு மஞ்சள் அரளி கொண்டு பூஜை செய்தால் கடன் தொல்லை காணாமல் போகும்.

    வேதனை மிகுதியால் சஞ்சலப்படுபவர்கள், வெள்ளை அரளி கொண்டு வேதபிரானை அர்ச்சித்து வணங்கினால் மன அமைதி கிடைக்கும்.

    இத்தகைய பெருமை மிகு அரளிப்பூ, அனைத்து ஆலயங்களின் நந்தவனங்களிலும் செல்லக் குழந்தையாகவே வளர்க்கப்பட்டு வருகிறது.

    திருக்கரவீரம் மற்றும் திருக்கள்ளில் ஆகிய புண்ணிய தலங்களில் தல விருட்சமாகத் திகழகூடிய பெருமையையும் அரளி பெற்றுதுள்ளது.

    உத்திர நட்சத்திரக்காரர்கள் அரளிச்செடிகளை நடுவதும் வளர்ப்பதும் மிகவும் அல்லது என சொல்லப்படுகிறது.

    • மதுரையில் மல்லிகை பூக்கள் ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • பிச்சி-முல்லை மலர்களும் விலை உயர்ந்துள்ளது.

    மதுரை

    ஆடி 18-ஐ யொட்டி மதுரையில் மல்லிகை பூக்கள் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன பிச்சி, முல்லை மலர்களும் விலை அதிகரித்துள்ளது.

    ஆடி மாதத்தின் முக்கிய தினமாக ஆடி 18-ஐ யொட்டி மதுரையில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் பூக்க ளின் விலை மேலும் அதிகரித்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் வணிக வளாகத்தில் மல்லிகை, பிச்சி, முல்லை உள்ளிட்ட அனைத்து மலர்க ளும் விற்பனை செய்யப் பட்டு வருகின்றன. இன்று பூக்களை வாங்க பொது மக்கள் அதிகளவில் திரண்டனர்.

    மல்லிகை பூக்கள் நேற்றை விட ரூ.200 விலை உயர்ந்து இன்று கிலோ 700 ரூபாய்க்கு கொடுக்கப்பட்டது. நேற்று 400 ரூபாய் வரை விற்கப்பட்ட பிச்சி, முல்லை மலர்களும் இன்று 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. இது தவிர சம்மங்கி 300 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ், செவ்வந்தி 250 ரூபாய்க்கும், செண்டு மல்லி 120 ரூபாய்க்கும், அரளி 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.

    தற்போது ஆடி மாதம் என்பதால் ஓரளவுக்கு விலை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் வருகிற ஆவணி மாதத்தில் விசேஷ நாட்கள் அதிகமாக இருக்கும் என்பதால் பூக்களின் தேவை யும் அதிகமாக இருக்கும். அப்போது பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சிறப்பு அலங்காரங்கள் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெறும்.
    • பல்வேறு வகையான பூக்களால் அம்மனுக்கு பூச்சொரிதல் நடத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகில் உள்ள கோவிலூர் நெல்லித்தோப்பு காத்தாயி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெறும். அதன்படி நேற்று ஆடி மாதத்தின் முதல் செவ்வாய் கிழமையை முன்னிட்டு காத்தாயி அம்மனுக்கு பூச்சொரிதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதில் நூற்று க்கணக்கான பக்தர்கள் கொண்டு வந்த பல்வேறு வகையான பூக்களால் அம்மனுக்கு பூச்சொரிதல் நடத்தப்பட்டது. பின்னர் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    ×