search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flight service"

    • டெல்லியில் கடும் குளிர் வாட்டி வதைப்பதால் பனிமூட்டம் நீடிக்கிறது.
    • இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 11 விமானங்கள் தரையிறங்க தாமதம் ஆனது.

    புதுடெல்லி:

    தலைந்கர் டெல்லியில் உள்பட வடமாநிலங்களில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. கடும் பனிமூட்டத்தால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக நிலையில் உள்ளது என காற்றின் தரம் குறித்த ஆராய்ச்சி அமைப்பு தெரிவிக்கிறது.

    பனிப்பொழிவு காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 11 சர்வதேச விமானங்களும், 3 உள்ளூர் விமானங்களும் தரையிறங்குவதில் தாமதம் ஆனது.

    பனிமூட்டம் காரணமாக பல விமானங்கள் திருப்பிவிடப்பட்டும் வருகின்றன.

    • மோசமான வானிலை காரணமாக டெல்லியில் விமான சேவை பாதிப்பு அடைந்துள்ளது.
    • காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை சுமார் 18 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மோசமான வானிலை நிலவி வருகிறது. இதையடுத்து, டெல்லி வந்த விமானங்கள் மோசமான வானிலை காரணமாக ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

    காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை சுமார் 18 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் தி.மு.க. எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் பயணம் செய்தனர். அந்த விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தி.மு.க. எம்.பி. வில்சன் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கொரோனா தொற்று தாக்கம் குறைந்த பிறகு மீண்டும் நாடு முழுவதும் விமான சேவைகள் தொடங்கப்பட்டன.
    • விமான சேவைக்கு இலங்கை மற்றும் இந்தியாவில் பெருமளவு வரவேற்பு இருக்கிறது.

    மீனம்பாக்கம்:

    இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் தமிழர்கள் பெருமளவு வசித்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து இலங்கை கொழும்பு நகருக்கு மட்டுமே விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. எனவே தமிழர்கள் அதிக அளவு வசிக்கக்கூடிய யாழ்ப்பாணம் நகருக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து ஏர்-இந்தியாவின் சகோதர நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனம் 2019-ம் ஆண்டில் இருந்து சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவையை தொடங்கியது. ஆனால் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டபோது, சென்னை- யாழ்ப்பாணம் இடையே விமான சேவை நிறுத்தப்பட்டது.

    கொரோனா தொற்று தாக்கம் குறைந்த பிறகு மீண்டும் நாடு முழுவதும் விமான சேவைகள் தொடங்கப்பட்டன. அதன்படி சென்னை- யாழ்ப்பாணம் இடையே நிறுத்தப்பட்ட விமான சேவையை 2022-ம் ஆண்டு டிசம்பர் 12-ந்தேதியில் இருந்து அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் வாரத்தில் 4 நாட்கள் என மீண்டும் தொடங்கியது. திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய 4 நாட்களில் இந்த விமான சேவை இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த விமான சேவைக்கு இலங்கை மற்றும் இந்தியாவில் பெருமளவு வரவேற்பு இருக்கிறது. சுற்றுலா பயணிகளும் இந்த விமானத்தில் அதிக அளவில் யாழ்ப்பாணம் சென்று வருகின்றனர். இதனால் யாழ்ப்பாணம் விமான சேவையை தினசரி விமானமாக சென்னை-யாழ்ப்பாணம் இடையே இயக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

    இதையடுத்து அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் வருகிற 16-ந்தேதி முதல் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமானமாக இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தினமும் காலை 9.35 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் சென்றடையும். பின்னர் பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.25 மணிக்கு சென்னை வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தினசரி விமான சேவையாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் இலங்கை மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
    • விமானங்களில் பயணம் செய்ய இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மீனம்பாக்கம்:

    தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.

    இதன் காரணமாக சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைந்து உள்ளது. போதிய பயணிகள் இல்லாமல் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    அதன்படி சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் 2 விமானங்களும், கடப்பா செல்லும் ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் மதுரையில் இருந்து சென்னை வரவேண்டிய 2 விமானங்களும், கடப்பாவில் இருந்து வரவேண்டிய ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமானங்களில் பயணம் செய்ய இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மரைன் டிரைவ் பகுதியில் தடுப்பு சுவரை தாண்டி அலைகள் சீறி பாய்ந்தன.
    • தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் படையினரும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மும்பை:

    தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி பிபர்ஜாய் புயலாக உருவெடுத்தது.

    இந்த புயலானது போர்பந்தருக்கு 340 கிலோ மீட்டர் தெற்கு, தென்மேற்கிலும், துவாரகாவுக்கு 400 கிலோ மீட்டர் தெற்கு-தென்மேற்கிலும் அதிதீவிர புயலாக மையம் கொண்டு உள்ளது.

    பிபோர்ஜோய் புயல் மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாகவும், வருகிற 15-ந் தேதி பிற்பகல் குஜராத்தின் மாண்ட்வி-பாகிஸ்தானின் கராச்சி இடையே சவுராஸ்டிரா கடல் பகுதியில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இந்த புயல் காரணமாக மும்பையில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. மரைன் டிரைவ் பகுதியில் தடுப்பு சுவரை தாண்டி அலைகள் சீறி பாய்ந்தன.

    மேலும் அங்குள்ள தாதர், தாராவி, சி.எஸ்.எம்.டி. உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்தது.

    பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மும்பையில் விமான சேவை பாதிக்கப்பட்டது.

    4 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. விமானங்கள் வருவதும், புறப்பட்டுச் செல்வதும் 40 நிமிடம் தாமதமானது.

    பிபோர்ஜோய் புயலால் குஜராத் மாநிலத்துக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சவுராஸ்டிரா, கட்ச் ஆகிய கடற்கரை மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    கட்ச், ஜாம்நகர், மோர்பி, கிர்சோம்நாத், போர்பந்தர், தேவபூமி, துவாரகா ஆகிய 6 மாவட்டங்கள் புயலால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    இதனால் இந்த மாவட்டங்களில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தற்காலிகமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    குஜராத் மாநில அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் படையினரும் தயார் நிலையில் 6 மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமானங்களை அறிவிக்கப்பட்ட நேரத்தில் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.
    • அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று காலையில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. வாகன போக்குவரத்து வழக்கத்தைவிட மெதுவாகவே இருந்தது. விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக, விமானங்களை அறிவிக்கப்பட்ட நேரத்தில் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.

    பயணிகள் முன்பதிவு செய்துள்ள விமானங்களுக்கான பயண நேரம் குறித்து அந்தந்த விமான நிறுவனங்களிடம் கேட்டு அறிந்துகொள்ளும்படி விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    டெல்லியில் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 30ம் தேதிவரை வெப்ப அலை இருக்காது என கணித்துள்ளது.

    • 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தைவிட இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 22.18 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்தின் சேவை அதிகரித்துள்ளது.
    • கடந்த ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டு சேவை விமானங்கள் 0.47 சதவீத அளவுக்கே ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    புதுடெல்லி:

    உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி அடைந்துள்ளது என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    பல்வேறு உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் அளித்துள்ள தரவுகளின்படி, நடப்பாண்டில் பயணிகளின் எண்ணிக்கை 5 கோடியே 4 லட்சம் என்ற அளவை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 42.85 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டில் 3 கோடியே 53 லட்சம் பேர் பயணித்து இருந்தனர்.

    மேலும் 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தைவிட இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 22.18 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்தின் சேவை அதிகரித்துள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டு சேவை விமானங்கள் 0.47 சதவீத அளவுக்கே ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதைப்போல பயணிகளின் புகார் எண்ணிக்கையும் 10 ஆயிரம் பயணிகளுக்கு 0.28 பயணிகள் என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

    • கட்டானியாவிற்கு சேவை செய்யும் விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.
    • விமானங்கள் பாதுகாப்பு நிலைமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.

    இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கிழக்கு சிசிலியன் நகரத்தில் உள்ள மவுண்ட் எட்னாவில் எரிமலை வெடித்து சிதறி தீப்பிழம்பை கக்கி வருகிறது.

    தீப்பிழப்பு வழிந்து சாம்பல் அருகிலுள்ள விமான நிலையத்தின் விமான ஓடுபாதை வரை பரவியது. இதனால், கட்டானியாவிற்கு சேவை செய்யும் விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.

    3,330 மீட்டர் (10,925 அடி) உயரம் கொண்ட இந்த எரிமலை வருடத்திற்கு பல முறை வெடித்து, சாம்பலை மத்திய தரைக்கடல் தீவில் கரைகிறது. கடைசியாக பெரிய அளவில் எரிமலை வெடிப்பு கடந்த 1992ம் ஆண்டில் ஏற்பட்டுள்ளது.

    இந்த சூழலால், பிரபல சுற்றுலாத் தலமான கேடானியாவுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்கள் பாதுகாப்பு நிலைமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வரை ரத்து செய்யப்படும் என்று விமான நிலைய நிர்வாகம் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது.

    • வடக்கு கோவாவில் மோபா என்ற இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
    • இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் கோவையில் இருந்து வடக்கு கோவா, மோபா பகுதிக்கு விமான சேவை இயக்கப்படுகிறது.

    கோவை:

    கோவையில் இருந்து கோவாவுக்கு இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் புதிய விமான சேவை வருகிற 29-ந் தேதி முதல் தொடங்குகிறது.

    கோவா மாநிலத்தை பொறுத்தவரை பெரும்பாலான விமானங்கள் தெற்கு கோவாவில் அமைந்துள்ள பனாஜி விமான நிலையத்திற்கே இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், வடக்கு கோவாவில் மோபா என்ற இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் கோவையில் இருந்து வடக்கு கோவா, மோபா பகுதிக்கு விமான சேவை இயக்கப்படுகிறது.

    வாரத்தில் திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பகல் 1.10 மணிக்கு விமானம் புறப்பட்டு பகல் 2.30 மணிக்கு விமானம் புறப்படுகிறது.

    அதேபோல மோபாவில் இருந்து புறப்பட்டு பகல் 2.30 மணிக்கு கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைகிறது.

    அத்துடன் புதன்கிழமைகளில் மாலை 6.40 மணிக்கு கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படும். மோபாவில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு கோவை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைகிறது.

    • மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தார்.
    • சாத்தியக்கூறுகளை ஆராய விமான நிலையங்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை:

    சென்னையிலிருந்து மலேசியாவிலுள்ள பினாங்கிற்கு விமானப் போக்குவரத்தினை தொடங்கிடத் தேவையான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்திட இந்திய விமான நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    சென்னையிலிருந்து மலேசியாவிலுள்ள பினாங்கிற்கு நோடி விமானப் போக்குவாத்தை அறிமுகப்படுத்த முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 11-2-2023 அன்று கடிதம் எழுதியிருந்தார்.

    அக்கடிதத்தில், பினாங்கில் வாழும் தமிழர்கள் குறித்தும் பினாங்கு மற்றும் மலேசியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றி வரும் அளப்பரிய பங்களிப்பினையும் முதல்வர் குறிப்பிட்டு, தமிழ்நாட்டிற்கும் பினாங்கிற்கும் இடையிலான கலாச்சார பிணைப்புகளையும், வர்த்தக உறவுகளையும், சுற்றுலா வாய்ப்புகள் குறித்தும் கோடிட்டுக் காட்டியிருந்தார்.

    இந்நிலையில், கோவிட் பெருந்தொற்றிற்குப் பிறகு, தற்போது சுற்றுலாத் துறையில் ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பயன்படுத்திக் கொள்ளவும். தமிழ்நாட்டிற்கும் மலேசியாவுக்கும் இடையிலான வணிக உறவுகளை மேம்படுத்தவும், தமிழ் மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில், சென்னைக்கும் பினாங்கிற்கும் இடையே நேரடி விமானங்களை முன்னுரிமை அடிப்படையில் அறிமுகப்படுத்திடவும் தனது கடிதத்தில் முதலமைச்சர் கோரியிருந்தார்.

    முதலமைச்சலின் கடிதத்தைப் பரிசீலித்த சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தனது 2-3-2023 நாளிட்ட கடிதத்தில், சென்னை மற்றும் பினாங்கிற்கு இடையே நேரடி விமான சேவையைத் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்திட இந்திய விமான நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளார். இந்திய நிறுவனங்களின் ஆதரவுடன் பன்னாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்குவிப்பதில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதிபூண்டுள்ளதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    • விமான நிலையத்தில் ஓடுபாதை சீரமைப்பு பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்து விட்டன.
    • ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

    கோவை,

    கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் நாட்டிற்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விமான ஓடுபாதை சீரமைப்பு பணி தொடங்கியது. இரவு 10 மணிக்கு மேல் அதிகாலை 6 மணி வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் விமானங்கள் இயக்கப்படுவது ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில், பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இந்த மாத இறுதி முதல் மீண்டும் அதிகாலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் விமானங்கள் இயக்க அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    ஓடுபாதை சீரமைப்பு பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்து விட்டன.

    இதனால் வருகிற 27-ந் தேதி முதல் 24 மணி நேரமும் விமானங்களை இயக்க மத்திய சிவில் போக்குவரத்து இயக்குனர் ஜெனரல்(டிஜிசிஏ) அனுமதி வழங்கி உள்ளார்.

    27-ந் தேதி முதல் ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் விமானம் வழக்கம் போல அதிகாலை 4.30 மணிக்கு தரையிறக்கப்பட்டு, மீண்டும் 5.10 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

    இதேபோல சிங்கப்பூ–ருக்கு இயக்கப்படும் விமான–மும் 27-ந் தேதி முதல் இரவு 9.30 மணியளவில் தரை இறக்கப்பட்டு, மீண்டும் இரவு 11 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

    ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மதுரைக்கு வருகை, புறப்பாடு என தினமும் 12 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது 14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
    • விமான கட்டணங்கள் உயர்ந்த நிலையிலும், விமான டிக்கெட்டுகள் விற்று தீர்வதாக அதிகாரிகள் தகவல்.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு, அரையாண்டு விடுமுறையை ஒட்டி சென்னையில் விமான சேவை மற்றும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    பண்டிகை கால விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு அதிகம் செல்லக்கூடும் நிலையில், சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை செல்ல கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகிறது.

    மதுரைக்கு வருகை, புறப்பாடு என தினமும் 12 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது 14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    தூத்துக்குடிக்கு 6ஆக இருந்த விமான சேவை தற்போது 8 ஆகவும், கோவைக்கு 16ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.5300 என கட்டணம் உள்ள நிலையில் தற்போது ரூ.14,500 வரை வசூல் செய்யப்படுகிறது.

    மதுரைக்கு வழக்கமாக ரூ.3,600 என கட்டணம் உள்ள நிலையில் தற்போது ரூ.14,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    கோவைக்கு ரூ.13,500 வரையும், திருச்சிக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.19,500 வரையிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    விமான கட்டணங்கள் உயர்ந்த நிலையிலும், விமான டிக்கெட்டுகள் விற்று தீர்வதாக அதிகாரிகள் தகவல் வெளியாகி உள்ளன.

    ×