search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fish Recipes"

    • எலுமிச்சை, மாங்காய், பூண்டு, இஞ்சி ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க.
    • இன்று மீனை வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மீன் - 1/2 கிலோ ( முள் இல்லாத மீன்)

    மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 4 மேஜைக்கரண்டி

    வெந்தயப்பொடி - 1 மேஜைக்கரண்டி

    பூண்டு - 1

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு

    வினிகர் - 1/2 கப்

    உப்பு - தேவையான அளவு

    கடுகு - 1 மேஜைக்கரண்டி

    கறிவேப்பில்லை - சிறிது

    நல்லெண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    மீனை நன்றாக சுத்தம் செய்து சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீனை நன்றாக கழுவி ஈரத்தன்மை போனதும் அதன் மேல் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உப்பு சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்திருக்கும் மீன் துண்டுகளை போட்டு வறுத்து தனியே வைக்கவும்.

    மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு கிளறவும்.

    பின்னர் அதனுடன் மிளகாய் பொடி, வெந்தயப்பொடி, உப்பு சேர்த்து கிளறி அதனுடன் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

    5 நிமிடம் ஆனதும் அதில் அரை கப் வினிகர் சேர்த்து 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

    இந்த கலவை நன்கு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.

    சுவையான மீன் ஊறுகாய் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மீனில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • சூடான சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    வஞ்சரம் மீன் - அரை கிலோ

    தேங்காய் பால் - 2 கப்

    வெங்காயம் - 1

    தக்காளி - 2

    பூண்டு - 1

    இஞ்சி - சிறிய துண்டு

    பச்சை மிளகாய் - 4

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    மல்லி தூள் - 1 தேக்கரண்டி

    சீரக தூள் - 1 தேக்கரண்டி

    கடுகு - 1 தேக்கரண்டி

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கல் உப்பு - 1 தேக்கரண்டி

    தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    * மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு பற்கள், மெலிதாக நறுக்கிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

    * வெங்காயத்தை நன்கு வதக்கிய பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    * தக்காளி குழைய வதங்கியதும் அதனுடன் கல் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள், மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

    * குழம்பு கொதித்தவுடன் மீன் துண்டுகளை சேர்த்து வேக வைக்கவும்.

    * மீன் வெந்த உடன் தேங்காய் பாலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    * சுவையான மற்றும் வித்தியாசமான தேங்காய் பால் மீன் குழம்பு தயார்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
    • தோசை, சப்பாத்திக்கும் அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    கனவா மீன் - அரை கிலோ

    வெங்காயம் - 1 சிறியது

    சின்ன வெங்காயம் - 10

    தக்காளி - 1

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

    பச்சை மிளகாய் - 1

    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

    சீரக தூள் - அரை தேக்கரண்டி

    தனியா தூள் - 1 தேக்கரண்டி

    மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

    கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி

    எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழம்

    கறிவேப்பிலை

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    உப்பு, தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    * வெங்காயம், சின்ன வெங்காயம், ப.மிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கனவா மீனை கழுவி சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்..

    * கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் சற்று வதங்கியதும் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கி, பின்பு அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும்.

    * பின்பு கால் கப் தண்ணீர் ஊற்றி மசாலாவில் பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.

    * அடுத்து ஊறவைத்த கனவா மீனை சேர்த்து கலந்துவிடவும்.

    * பின்பு கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து 10 நிமிடம் வேகவிடவும்.

    * கடைசியாக கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சைபழச்சாறு சேர்த்து கலந்து இறக்கவும்.

    * கனவா மீன் மசாலா தயார்!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மீனை குழம்பு, வறுவல், பிரை என விதவிதமாக சமைத்து சாப்பிட்டிருப்பீர்கள்.
    • இன்று மீனை வைத்து வடை செய்யலாம் வாங்க..

    தேவையான பொருட்கள்

    மீன் துண்டுகள் - 500 கிராம்

    முட்டை - 1

    உருளைக்கிழங்கு - 100 கிராம்

    மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    பச்சைமிளகாய் - 3

    கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிக்க

    செய்முறை

    மீனை கழுவி சுத்தம் செய்து வாணலியில் சிறிதளவு நீர்விட்டு வேக வைக்கவும்.

    பின்னர் அதை எடுத்து முள், தோல் நீக்கி நன்கு பிசையவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயைப் பொடியாக வெட்டவும்.

    ஒரு பாத்திரத்தல் உதிர்த்த மீன், மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, முட்டை எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் மசாலாவை சிறுசிறு வடைகளாகத் தட்டிப் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும்.

    ருசியான மீன் வடை தயார்.

    இதை தோசைக்கல்லில் தட்டி வைத்து கட்லெட் போல செய்யலாம். சுவை சூப்பராக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • தேங்காய் எண்ணெயில் செய்யும் மீன் கறி சுவையாக இருக்கும்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    அயிலை மீன் - 1 கிலோ

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    தக்காளி - 1

    இஞ்சி - 1

    பூண்டு - 7

    கொத்தமல்லி, கறிவேப்பிலை- சிறிதளவு

    பச்சை மிளகாய் - 3

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    புளி - நெல்லிக்காய் அளவு

    தனியா தூள் - 1 1/2 டீஸ்பூன்

    சிவப்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

    கடுகு - 1 டீஸ்பூன்

    வெந்தயம் -1 டீஸ்பூன் 

    உப்பு - தேவையான அளவு

    தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி, வெங்காயம் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

    அடுப்பில் மண் சட்டியை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

    அடுத்து அதில் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், தனியா தூள், சிவப்பு மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

    இப்போது அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி-வெங்காய விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

    அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    குழம்பு கொதித்து பச்சை வாசனை போனபின்பு அதில் மீன் சேர்த்து வேக விடவும்.

    மீன் வெந்தவுடன் இறுதியாகக் கொத்தமல்லி தூவி இறக்கினால் சூப்பரான கேரளா மீன் கறி தயார்.

    • மீனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • மீனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    துண்டு மீன் - அரை கிலோ

    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

    வெங்காயம் - 1

    வினிகர் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்

    சோள மாவு - 2 டீஸ்பூன்

    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை :

    வெங்காயத்தை தோல் நீக்கி பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.

    மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வண்டும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் கழுவிய மீனை போட்டு, அடுப்பில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி ஆற விடவும்.

    மீனில் உள்ள தோல், முள்ளை எடுத்து விட்டு சதை பகுதியை மட்டும் எடுத்து மசித்து ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, வெங்காய விழுது, உப்பு, வினிகர் சேர்த்து நன்றாக பிசைந்து, அதனை உருண்டைகளாக பிடித்து, ஒவ்வொரு உருண்டையையும் நீளவாக்கில் தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள மீன் கபாப்பை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    அருமையான பிஷ் கபாப் ரெடி.

    • முட்டை, மீன் வைத்து பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று மீன் ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மீன் - 2

    முட்டை - 2

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

    பச்சை மிளகாய் - 2

    வெங்காயம் - 1

    கொத்துமல்லி தழை - சிறிதளவு

    மிளகாய் தூள் - சிறிதளவு

    மிளகு - விருப்பத்திற்கேற்ப

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சுத்தம் செய்த மீனில் மிளகாய் தூள், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்த பின்னர் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து வைக்கவும்.

    மீன் சூடு ஆறியதும் முள்ளை எடுத்து விட்டு சதை பகுதியை சிறிது சிறிதாக பிய்த்து வைக்கவும்.

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை கலவையை ஊற்றி அதன் மேல் பிய்த்து வைத்த மீன், கொத்தமல்லி, மிளகு தூள் தூவவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சுவையான வித்தியாசமான மீன் ஆம்லெட் தயார்.

    • குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    துண்டு மீன் - 1/2 கிலோ 

    மிளகுத்தூள் - 4 ஸ்பூன் 

    எலுமிச்சைசாறு - 2 ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு 

    செய்முறை :

    மீனை நன்றாக சுத்தம் செய்து, கழுவி தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி வைக்கவும்.

    கழுவிய மீனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் எலுமிச்சை சாற்றை ஊற்றி, உப்பு, கறிவேப்பிலை, மிளகுத்தூள் சேர்த்து கலந்து பிசறி அரைமணி நேரம் வரை ஊற வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீனை போட்டு ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

    இப்போது சூடான மீன் மிளகு வறுவல் ரெடி.

    • மீனை விதவிதமாக செய்து சாப்பிடலாம்.
    • புது விதமான எளிதான மீன் வறுவல் செய்யலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்

    மீன் - 1/2 கிலோ

    சிறிய வெங்காயம் - 6

    மல்லி - 1/2 டீஸ்பூன்

    சோம்பு - 1/2 டீஸ்பூன்

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    மிளகு - 1 டீஸ்பூன்

    வர மிளகாய் - 10

    இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு

    எலுமிச்சை - 1

    செய்முறை

    மீனை நன்றாக சுத்தம்செய்து கொள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கி கொள்ளவும்.

    மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயத்தை போட்டு அதனுடன் சோம்பு, சீரகம், மிளகு வர மிளகாய், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    மீன் வருவளுக்கு தேவையான மசாலா இப்பொழுது ரெடியாகி விட்டது.

    அரைத்த மசாலாவில் எலுச்சை சாறு சேர்த்து அதில் மீன் துண்டுகளை போட்டு நன்றாக கலக்கி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா கலந்து மீன் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மொறு மொறு இடித்து அரைத்த சுவையான மீன் வறுவல் ரெடி.

    • குழந்தைகளுக்கு மீன் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று மீன், தேங்காய் சேர்த்து வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    துண்டு மீன் - 250 கிராம்

    சோளமாவு - 2 ஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

    பச்சை மிளகாய் - 1

    கொத்தமல்லி - சிறிதளவு

    பூண்டு விழுது - 1/4 ஸ்பூன்

    எலுமிச்சை பழம் - பாதி

    மிளகு பொடி - 1 ஸ்பூன்

    மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்

    இஞ்சி - சிறிய துண்டு

    தேங்காய் துருவல் - தேவையான அளவு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை:

    இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    இந்த விழுதோடு மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, மிளகு தூள், பூண்டு விழுது, சோளமாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இந்த மசாலாவை மீனுடன் சேர்த்து பிரட்டி 4 மணி நேரம் பிரிட்ஜ் பீரீசரில் வைக்கவும்.

    அடுத்து ஊற வைத்த மீனை தேங்காய் துருவலில் போட்டு பிரட்டவும்.

    தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மீனை போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

    மாறுபட்ட சுவையில் தேங்காய் பிஷ் பிரை ரெடி.

    • தீபாவளி என்றாலே பிரியாணி தான் ஸ்பெஷல்.
    • இந்த தீபாவளிக்கு ஹைதராபாத் மீன் தம் பிரியாணி செய்து அசத்தலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்

    வஞ்சிரம் மீன் - 1 கிலோ

    பாசுமதி அரிசி - 4 கப்

    வெங்காயம் - 5

    தேங்காய்பால் - 1 கப்

    தயிர் - 400 கிராம்

    எண்ணெய் - 4 ஸ்பூன்

    நெய் - கால் கப்

    மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்

    பிரியாணி மசாலா - 2 ஸ்பூன்

    பச்சைமிளகாய் விழுது - 2 ஸ்பூன்

    இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன்

    எலுமிச்சை - 1

    குங்குமப்பூ - சிறிது

    உப்பு - தேவையான அளவு

    புதினா - சிறிது

    பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு - தலா 3

    செய்முறை

    * குங்குமப்பூவை சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

    * வெங்காயம், புதினா, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மீன் துண்டுகளைக் கழுவி 1 ஸ்பூன் மிளகாய்தூள், உப்பு சேர்த்து பிரட்டி லேசாக எண்ணெயில் ஷால்லோ ஃபிரை செய்து எடுக்கவும்.

    * மெலிதாக நறுக்கிய வெங்காயத்தைப் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக முறுவலாக பொரித்து எடுக்கவும்.

    * மற்றொரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், உப்பு, பிரியாணி மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது, பொரித்த வெங்காயம், எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.

    * அத்துடன் தயிரையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

    * அதில் மீன் துண்டுகளைச் சேர்த்து கலந்து நெய் 2 ஸ்பூன், புதினா சிறிது கலந்து 1 மணிநேரம் ஊற விடவும்.

    * பாத்திரத்தில் நீர் வைத்து பட்டை, லவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு, பிரிஞ்சு இலை, புதினா சிறிது, உப்பு சிறிது, எண்ணெய் சிறிது விட்டு கொதித்ததும் அரிசியை சேர்த்து கொதி வந்த பின்னர் 3 நிமிடத்தில் (அரை பாகம் வெந்தால் போதும்) வடிக்கவும்.

    * பிரியாணி பாத்திரத்தில் நெய் விட்டு ஊற வைத்த மீன் கலவையை வைக்கவும். தேங்காய்பால் சேர்க்கவும்.

    * அதன் மேல் சாதத்தை பரப்பி விடவும். மீதி பொரித்த வெங்காயம், புதினா, கரைத்த குங்குமப்பூ கலவையை லேசாக தெளித்து விட்டு நன்றாக மூடி விடவும். ஓரங்களில் காற்று புகாமல் நன்றாக மூட வேண்டும்.

    * அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைக்கவும். 10 நிமிடம் முழுத் தீயிலும் அடுத்த 10 நிமிடம் சிம்மிலும் வைத்து இறக்கவும்.

    * தம் அடங்கியதும் திறக்கவும்.

    * சுவையான ஹைதராபாத் மீன் தம் பிரியாணி ரெடி.

    • பிஷ் ஃபிங்கர்ஸ் ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க.
    • இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    வஞ்சரம் (அ) வவ்வால் மீன் - அரை கிலோ

    எலுமிச்சை பழம் - இரண்டு (சாறு எடுக்கவும்)

    ரொட்டித்தூள் - 1௦௦ கிராம்

    காஷ்மீரி மிளகாய் தூள் - அரை தேக்கரணடி

    முட்டை - மூன்று

    வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

    உப்பு - தேவைகேற்ப

    எண்ணெய் - தேவைகேற்ப

    செய்முறை

    முட்டையை சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.

    மீனை சுத்தம் செய்து எலும்பு, தோல் நீக்கவும்.

    பின்னர் மீனை விரல் நீள, அகலத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.

    மிளகு தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், எலுமிச்சைபழம் சாறு இவற்றைக் கலந்து மீனில் புரட்டி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.

    எண்ணெய் காய்ந்ததும், அடித்த முட்டையில் மீனை முக்கி, ரொட்டித்தூளில் புரட்டி, எண்ணெயில் போடவும்.

    மீன் வெந்ததும், திருப்பி போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான பிஷ் ஃபிங்கர்ஸ் ரெடி.

    ×