search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "finance"

    • மூதாட்டியிடம் கொடுத்து வீட்டை சரி செய்து கொள்ளுமாறும், அரிசி உள்ளிட்ட மளிகை ஜாமான்களை வாங்கி கொள்ளுமாறும் கூறினார்.
    • சம்பவ இடத்திற்கு வராத கிராம நிர்வாக அலுவலரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய திட்டக்குடி தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி ஊராட்சியில் உள்ள கொட்டாரம் போத்திரமங்கலத்தில் உள்ள பொது மக்களின் குறைகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் கேட்டறிந்தார்.

    அப்போது கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியால் தனது வீடு பாதிக்கப்படுவதாக கொளஞ்சி என்ற மூதாட்டி அமைச்சரிடம் அழுத படி முறையிட்டார். அவரை அழைத்து கண்களை துடைத்து விட்டு, அழ வேண்டாமென கூறிய அமைச்சர், அதிகாரிகளை அழைத்து இந்த இடத்தை முறையான அளவீடு செய்து, பின்னர் கழிவுநீர் வாய்க்கால் கட்டுமாறு உத்தரவிட்டார்.

    மேலும் அதே பகுதியில் வைரம் என்ற மூதாட்டியின் ஓட்டு வீடு முற்றிலும் சேதமானதை கண்ட அமைச்சர், உடனடியாக ரூ.50 ஆயிரம் பணத்தை மூதாட்டியிடம் கொடுத்து வீட்டை சரி செய்து கொள்ளுமாறும், அரிசி உள்ளிட்ட மளிகை ஜாமான்களை வாங்கி கொள்ளுமாறும் கூறினார். பொதுமக்கள் கூறிய புகார்கள் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு நேரில் வரவழைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சம்பவ இடத்திற்கு வராத கிராம நிர்வாக அலுவலரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய திட்டக்குடி தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது தி.மு.க. ஒன்றிய செயலாளர் பட்டூர் அமரலிங்கம், மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், திட்டக்குடி நகர செயலாளர் பரமகுரு ஆகியோர் உடனிருந்தனர்.

    • வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்று மீண்டும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
    • கவர்னர் கேட்டிருக்கும் தகவல்களை திரட்டி அனுப்பும்படி துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

    சென்னை:

    தி.மு.க. அரசு பொறுப் பேற்றதில் இருந்து மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாமலேயே உள்ளது.

    மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதியை தராமல் வஞ்சித்து வருகிறது என்று பலமுறை குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.

    ஆனாலும் மத்திய நிதி மந்திரி இதற்கு அவ்வப்போது புள்ளி விவரங்களுடன் பதிலளித்து வருகிறார். இந்த சூழலில் வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்று மீண்டும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மந்திரிகள் அவ்வப் போது பதில் அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் துறை வாரியாக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பற்றியும் அதில் மத்திய மாநில அரசுகளின் நிதி பங்களிப்பு என்ன?

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு மத்திய அரசின் தொகை எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை தொகுப்பு அனுப்புமாறு தமிழக அரசை கவர்னர் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடிதம் கவர்னரின் செயலாளர் வழியாக தலைமைச் செயலாளருக்கு கடந்த 8-ந் தேதி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

    கவர்னர் கேட்டிருக்கும் தகவல்களை திரட்டி அனுப்பும்படி துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

    இதன்படி விவரங்கள் எடுக்கப்பட்டு வருவதாகவும் முழுமையான விவரங்கள் கிடைக்கும் போது மத்திய அரசு நிதி தமிழகத்தில் முழுமையாக செலவழிக்கப் பட்டுள்ளதா? அல்லது திருப்பி அனுப்பப்பட்டு உள்ளதா? என்கிற விவரம் தெரியவரும் எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ஏற்கனவே இதற்கு முன்பு பன்வாரிலால் புரோகித் கவர்னராக இருந்த போது கொரோனா காலத்தில் செலவழித்த தொகை பற்றி கணக்கு கேட்டதாகவும் எனவே இந்த விவரங்களை தெரிந்து கொள்ள கவர்னருக்கு அதிகாரம் உள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன் அனைவரையும் வரவேற்றார்.
    • கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் திட்டம் குறித்து விளக்க உரை ஆற்றினார்.

    கபிஸ்தலம்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலத்தில் வேளாண்மை துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட துணை விவசாய விரிவாக்கம் மையம், திருமண்டங்குடி ஊராட்சியில் சண்முகம் எம்.பி. நிதியில் இருந்து கட்டப்பட்ட பொது விநியோக மையம், கூனஞ்சேரி, திருவைகாவூர் ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டிடங்கள், கொந்தகை ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன் நிதியில் இருந்து கட்டப்பட்ட பொது விநியோக கட்டிடம் உள்பட ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 5 புதிய கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். முன்னதாக ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன் அனைவரையும் வரவேற்றார். கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் திட்டம் குறித்து விளக்க உரை ஆற்றினார்.

    இதில் எம்.பி.க்கள். கல்யாணசுந்தரம், ராமலிங்கம், சண்முகம், அரசு தலைமை கொறடா செழியன், ஜவாஹிருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் நாசர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், சுதா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் விஜயன், ஹாஜா மைதீன், சுரேஷ், ஊராட்சி தலைவர்கள் பிரபாகரன், பாலசுப்பி ரமணியன், பவுனம்மாள் பொன்னுசாமி, மகாலிங்கம், மகாலட்சுமி பாலசுப்பி ரமணியன், ராஜேந்திரன், வேளாண்மை இணை இயக்குனர் நல்ல முத்துராஜா, பாபநாசம் உதவி வேளாண்மை இயக்குனர் மோகன், வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் ஈஸ்வர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோமதி தங்கம், மற்றும் வேளாண்மை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பழனிச்சாமி நன்றி கூறினார்.

    • அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.
    • புரவலர் மேம்பாட்டு நிதியின் கீழ் பள்ளிகளுக்கு தலா ரூ.10, ஆயிரமும் அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உலகம்பட்டி, வி.புதூர், கட்டுகுடிப்பட்டி அரசு மாதிரிப்பள்ளி, கரிசல் பட்டி, முசுண்டப்பட்டி, புழுதிப்பட்டி மற்றும் கட்டுகுடிபட்டி ஆகிய அரசு மேல்நிலை பள்ளிகளில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:

    விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 68 அரசு பள்ளிகள் உள்ளிட்ட 105 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 4 ஆயிரத்து 270 மாணவர்கள், 6ஆயிரத்து 323 மாணவிகள் ஆக மொத்தம் 10 ஆயிரத்து 593 பேருக்கு இந்த ஆண்டு சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 7 அரசு பள்ளிகளைச் சார்ந்த மொத்தம் 511 மாணவர்களுக்கு விலை யில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.

    மாணவர்களின் உடல் நலம், சுற்றுச்சூழலை பேணிக் காத்திடும் நோக்கில், தமிழக அரசால் சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் சாலை விதிகளை முறையாக கடைபிடித்து, பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.

    நிகழ்ச்சியில், 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்க தொகையும், புரவலர் மேம்பாட்டு நிதியின் கீழ் பள்ளிகளுக்கு தலா ரூ.10, ஆயிரமும் அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்.மணிபாஸ்கரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைந்து வந்தனர்.
    • ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி 13-வது வார்டு பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள சிறுபாலம் மற்றும் கழிவுநீர் கால்வாய் குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைந்து வந்தனர்.

    இதனிடையே பொது மக்களின் கோரிக்கையை ஏற்று அதனை உடனடியாக சீரமைத்து சரிசெய்திட நகராட்சி மற்றும் நெடுஞ்சா லைத்துறை யினருக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார்.

    இதனையடுத்து பழைய பஸ் நிலையம் மடவிளாகம் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் அகலப்படுத்தி கான்கிரீட் மூடியமைத்திட ரூ.4லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது.

    பொக்லைன் எந்திரம் கொண்டு பள்ளம் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியினை நகர்மன்ற உறுப்பினர் முபாரக் பார்வையிட்டார்.

    ஒப்பந்த தாரர் பிரவீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தேவனாங்குறிச்சி கிராமம் கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துகவுண்டர் மகன் மோகன்ராஜ். இவரது மனைவி செந்தமிழ்செல்வி.
    • இவர்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு திருச்செங் கோடு, தெற்கு ரதவீதியில் நிதி நிறுவனம் தொடங்கி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கீழேரிப் பட்டியில் நிதி மோசடி செய்த வர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் முதலீட்டா ளர்கள் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தேவனாங்குறிச்சி கிராமம் கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துகவுண்டர் மகன் மோகன்ராஜ். இவரது மனைவி செந்தமிழ்செல்வி.

    இவர்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு திருச்செங் கோடு, தெற்கு ரதவீதியில் நிதி நிறுவனம் தொடங்கி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர். இதையடுத்து கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்த ஏராள மானோர் இந்த நிதி நிறுவ னத்தில் முதலீடு செய்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி செந்தமிழ்செல்வி ஆகிய இருவரும் இறந்து விட்டனர். இதையடுத்து நிதி நிறுவனத்தை அவர்களது மகள் சவுந்தர்யா, அவரது கணவர் தமிழ்கண்ணன் ஆகி யோர் நடத்தி வந்ததாக தெரி கிறது.மேலும் முதலீட்டா ளர்களுக்கு முதிர்வு தொகை உள்ளிட்ட வற்றை வழங்காமல் மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. எனவே அவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    • ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து முதல்-அமைச்சரின் பொது நிவா ரணம் மற்றும் கொரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்கி வருகிறார்.
    • அதன்படி, தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்களுக்கு சென்று இதுவரை ரூ.55 லட்சத்திற் கும் மேல் நிவாரண நிதியாக வழங்கி உள்ளார்.

    சேலம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு பகு தியைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன் (வயது 75). இவர், ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து முதல்-அமைச்சரின் பொது நிவா ரணம் மற்றும் கொரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்கி வருகிறார்.

    அதன்படி, தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்களுக்கு சென்று இதுவரை ரூ.55 லட்சத்திற் கும் மேல் நிவாரண நிதியாக வழங்கி உள்ளார்.

    ஏற்கனவே சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ரூ.10 ஆயிரம் நிதி வழங்கிய அவர், இன்று மீண்டும் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியாக, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

    அப்போது அவர் கூறுகையில், எனது மனைவி இறந்து விட்டார். எனக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் வேலை செய்து வரு கிறார்கள். நான் அவர்களி டம் செல்வதில்லை.

    தமிழகம் முழுவதும் பிச்சை எடுத்து பொது மக்களை காக்கும் நோக்கத்தில் முதல்-அமைச்சரின் பொது நிவா ரண நிதிக்கு பணம் வழங்கி வருகிறேன். எனது இறுதி காலம் வரை இதனை ஒரு பணியாக செய்வேன்.

    ஒரு வாரத்திற்கு ரூ.10 ஆயிரம் வரை யாசகம் கிடைக்கும். அதனை வைத்து இந்த நிதி உதவியை செய்து வருகிறேன் என்றார். 

    • வேளாண் வளர்ச்சிக்காக பெரம்பலூரில் 25 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.18.63 லட்சம் நிதி ஒதுக்கபட்டுள்ளது
    • திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 25 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.18.63 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தோட்டக்கலை துணை இயக்குநர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 25 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    நடப்பு நிதியாண்டில் (2023-24) இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 25 கிராம ஊராட்சிகளில் காய்கறி சாகுபடியை ஊக்குவித்தல், ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த பழச்செடி தொகுப்புகள் வழங்குதல் மற்றும் பல்லாண்டு தோட்டக்கலை பயிர்கள் பரப்பு விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் நடைபெறும். இத்திட்டத்தில் பயனடைய பெண்கள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது இணையதளத்தின் மூலமாக பதிவு செய்தோ பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    • கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.

    கடலூர்:

    கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநகர அவைத்தலைவர் பழனிவேல், மாவட்ட பிரதிநிதிகள் ராமு, செந்தில்முருகன், பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப் பாளர்களாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அய்யப்பன் எம்.எல்.ஏ., கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். திராவிட மாடல் என்பது காலாவதியாகி விட்டது என தமிழக கவர்னர் ரவி கூறி வருகிறார். ஆனால், சனா தானம் தான் காலாவதியாகி விட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தியவர் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின். கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிதிநிலை பற்றாக்குறையாக இருந்தது. 

    • பேராவூரணியில் அரசு காமராஜர் ஆஸ்பத்திரி கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
    • 100-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பேராவூரணி:

    பேராவூரணியில் அரசு காமராஜர் மருத்துவமனை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

    30-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நவீன உபகரணங்களுடன் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சட்டமன்றத்தில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்து பேசி னார்.

    அதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் மா.சுப்பிர மணியன், பேராவூரணி அரசு காமராசர் மருத்துவ மனை மேம்பாட்டிற்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

    கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சருக்கும், சுகாதாரத்துறை அமை ச்சருக்கும் பேராவூரணி தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக அசோக்குமார் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

    • விபத்தில் இறந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கு தொழிற்சங்க நிர்வாகிகள் நிதி உதவி வழங்கினர்.
    • காளிதாஸ் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.

    மதுரை

    கோவை மாவட்டம் வால்பாறை அரசு ஆஸ்பத்திரி முன்பு 108 ஆம்புலன்ஸ் டிரைவர் காளிதாஸ் (27) நேற்று உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். அவருக்கு மனைவி கீதா (24), மகன்கள் புகழ்அறிவு (3), கவி (1) ஆகியோர் உள்ளனர்.

    விபத்தில் கணவனை பறிகொடுத்து நிற்கதியற்று நின்ற குடும்பத்திற்கு தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் முடிவு செய்தது. மாநில பொது செயலாளர் இருளாண்டி, பொருளாளர் கணேசன், துணை செயலாளர் உதய குமார், துணைத்தலைவர் குணா ஆகியோர் உடனடி யாக வால்பாறைக்கு புறப்பட்டுசென்றனர்.

    அங்கு கோவை மாவட்ட தலைவர் பொய்யாமொழி மற்றும் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

    விபத்தில் இறந்த காளிதாசுக்கு தர்மபுரி சொந்த ஊராகும். உடலை அங்கு கொண்டு செல்வது என்று குடும்பத்தினர் முடிவு செய்தனர். இக்கட்டான சூழ்நிலையில் காளிதாஸ் குடும்பத்திற்கு, சங்கம் சார்பில் முதல் கட்டமாக ரூ. 37 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.

    இதற்கான காசோ லையை நிர்வாகிகள் காளிதாஸ் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதனை காளிதாஸ் குடும்பத்தினர் கண்கலங்க பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தனர்.

    • நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்ப டாமல் நீண்டகாலமாக பாதியிலேயே நின்றது.
    • ஏற்று ரூபாய் 104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாகப்பட்டினம்:

    சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்ப டாமல் நீண்டகாலமாக பாதியிலேயே நின்றது.

    இந்த ஆட்சி அமைந்ததும் அதை கட்டி முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

    அதை ஏற்று ரூபாய் 104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    அதற்காக முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாலம் கட்டும் பணிக்கு நிர்வாக ஒப்புதல் எப்போது அளிக்கப்படும்? பணிகள் எப்போது தொடங்கப்படும் என்பதை அறிய விரும்புகிறேன் என்றார்.

    இது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

    நாகப்பட்டினம் அக்கரை ப்பேட்டை வேளாங்கண்ணி சாலையில் கடவு எண் 48-இல் ரயில்வே பாலம் கட்டுவது தொடர்பாகத் தான் எம்.எல்.ஏ கேட்டுள்ளார்.

    ரெயில்வே பாலத்திற்கு அவர் குறிப்பிட்டதைப் போல 104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அநேகமாக இந்த மாதமே அந்த கட்டுமானப் பணிகள் தொடங்கும் நிலையில் இருக்கிறது என்றார்,

    ×