search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fields"

    • சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது.
    • மழைநீர் முழுவதும் வடிவதற்கு வடிகால்களை சீரமைக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழையால் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது .இதனால் அப்பகுதி மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனர்.

    அதேபோல் சம்பா,தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது.மழையால் பாதிக்கப்பட்ட பகுதியினை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மழைநீர் முழுவதும் வடிவதற்கு வடிகால்களை சீரமைக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.டி.எஸ்.சரவணன்,இளஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி கலியமூர்த்தி, ஊராட்சி செயலர் இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • நடவு வயல்களில் ஆகாய தாமரை செடிகள் வேகமாக பரவி வருகின்றன.
    • ஆகாயதாமரை செடிகளை அழிக்க பல்வேறு களைகொல்லி மருந்துகளை தெளித்தும் அழிக்க முடியவில்லை.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் தாலுக்காவில் சாலியமங்களம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் சம்பா நடவு பணிகளை துவங்கியுள்ள நிலையில் சாலியமங்களம் பகுதியில் சம்பா சாகுபடி வயல்கள் மற்றும் நடவு வயல்களில் ஆகாய தாமரை செடிகள் அதிகளவில் காணப்படுகிறது.

    பாசன வாய்க்கால் மூலம் தண்ணீரில் மிதந்து வந்து வயல்களில் ஊடுறுவி தற்போது வயல்கள் முழுவ தும் வேகமாக பரவிவரும் இந்த பிரச்சனையால் சம்பா சாகுபடி விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    வயல்களில் ஓரீரு இடத்தில் காணப்பட்ட ஆகாய தாமரை செடிகள் தற்போது வேகமாக வயல் முழுவதும் பரவி வருவதால் விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர்.

    விவசாய வயல்களில் வேகமாக படர்ந்து வரும் இந்த ஆகாய தாமரை செடிகளை ஒழிக்க விவசாயிகள் பல்வேறு யுத்திகளை கையாண்டும், களை கொல்லி மருந்துகளை தெளித்தும், கட்டுபடுத்த முடியவில்லை அதனால் விவசாயிகள் சம்பா பயிர்களை காப்பாற்ற கடுமையாக போராடி வருகின்றனர்.

    நடவு வயல்களில் வேகமாக பரவி வரும் ஆகாய தாமரை செடிகளை அழிக்கவும், சம்பா பயிர்களை காப்பாற்றவும், அரசு வேளாண் அலுவலர்களை கொண்ட குழுவை உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வயல்களில் பரவிவரும் ஆகாயதாமரை செடிகளை கட்டுப்படுத்த விவசாயி களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டுமென எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது, ஆகாயதாமரை செடிகள் பாசன வாய்க்கால் மூலம் வயல்களில் ஊடுருவி தற்போது வயல்களில் அதி வேகமாக பரவி வருகிறது ஆகாயதாமரை செடிகளை அழிக்க பல்வேறு களைகொல்லி மருந்துகளை தெளித்தும் ஆகாய தாமரை செடிகளை அழிக்க முடியல மாறாக நடவுபயிர்கள் வளர்ச்சி தான் பாதிக்கிறது இதற்கு வேளாண்மை துறை அதிகாரிகள் தான் பதில் சொல்ல வேண்டும் என்றனர்.

    • மானாவாரி சாகுபடிக்காக விளைநிலங்களை உழவு செய்வது உட்பட பணிகள் தாமதமானது.
    • சீதோஷ்ண நிலை மாற்றத்தால் விளைநிலங்களில் சிறுதானியங்கள் விதைப்பு முற்றிலுமாக குறைந்துள்ளது.

    குடிமங்கலம்,:

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு மானாவாரி சாகுபடி பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக மொச்சை, சோளம், கொண்டைக்கடலை, கொத்தமல்லி உள்ளிட்ட சாகுபடி அதிக அளவு மேற்கொள்ளப்படும்.

    கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொழிவு தாமதம், பனிப்பொழிவு குறைவு உள்ளிட்ட சீதோஷ்ண நிலை மாற்றங்களால் மானாவாரி சாகுபடியில் நிலையான விளைச்சல் கிடைப்பதில்லை. எனவே இத்தகைய சிறுதானிய சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்தாண்டும் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. புரட்டாசி மாத துவக்கத்திலும் மழை இல்லை. இதனால் மானாவாரி சாகுபடிக்காக விளைநிலங்களை உழவு செய்வது உட்பட பணிகள் தாமதமானது.

    இந்நிலையில் கடந்த வாரம் உடுமலை பகுதியில் பரவலாக மழை பெய்தது. விளைநிலங்களில் உழவு செய்யும் அளவுக்கு மழைப்பொழிவு இருந்தது. இதையடுத்து மானாவாரி சாகுபடிக்கு முன்னோட்டமாக உழவுப்பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    விவசாயிகள் கூறுகையில், மானாவாரி சாகுபடியில் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வருகிறோம். இந்தாண்டு தாமதமாகவே விதைப்பு செய்யும் நிலை உள்ளது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால் விளைநிலங்களில் சிறுதானியங்கள் விதைப்பு முற்றிலுமாக குறைந்துள்ளது. பருவமழை கைகொடுத்தால் இந்தாண்டு நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்றனர்.

    • கருநாவாய் பூச்சி அறுவடை நிலையில் உள்ள வயல்களில் அதிகமாக தென்படுகிறது.
    • விளக்கு பொரி அமைத்து தாய் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

    நாகப்பட்டினம்:

    குறுவை பயிர்களை தாக்கும் குருத்துப் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குருத்துப்பூச்சி பாபநாசம் வேளாண்மை கோட்டத்தில் நடப்பு குறுவை பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரில் ஆங்காங்கே குருத்துப் பூச்சி, கரு நாகப்பூச்சி மற்றும் இலை கருகல் நோய் அறிகுறிகள் தென்படுகிறது.

    கபிஸ்தலம் அருகே கருப்பூர் கிராமத்தில் குறுவை பயிர்களில் வேளாண்மை துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் கருநாவாய் பூச்சி அறுவடை நிலையில் உள்ள வயல்களில் அதிகமாக தென்படுகிறது.

    இதனை கட்டுப்படுத்திட ஆசி பேட் 25 எஸ்.பி. ஏக்கருக்கு 250 கிராம் உபயோகப்படுத்தலாம்.

    மேலும் வாத்துகளை கருநாவாய் பூச்சிகள் காணப்படும் வயல்களில் மேச்சலுக்கு விடுவதன் மூலம் இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்.

    விளக்கு பொரி அமைத்து தாய் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். கருநாவாய் பூச்சிகளை வேப்பங்கொட்டை கரைசல் வயலில் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

    பாக்டீரியல் இலை கருக்கல் நோயை கட்டுப்படுத்திட தாக்குதல் அதிகமாக காணப்படும் போது காப்பர் ஆட்சி குளோரைடு 500 கிராம் மற்றும் ஸ்பெக்ட்ரோ மைசின் சல்பேட் மற்றும் பெற்றா சொலின் கலவை 120 கிராம் ஆகிய மருந்துகளை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேலைகளில் தெளித்து இந்த நோயை கட்டுப்படுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கல்லணை கால்வாய் பகுதிகளுக்கு நீர் திறப்பு கடந்த வாரம் நிறுத்தப்பட்டது.
    • தஞ்சை வண்ணாரப்பேட்டை, சூரக்கோட்டை, காட்டூர், வடுவூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

    இதையடுத்து குறுவை சாகுபடி டெல்டா மாவட்டத்தில் நடைபெற்று வரும் நிலையில், அணையின் நீர் இருப்பு குறைந்த காரணத்தினால் பாசனத்திற்கு முறை பாசனம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இதனால் கல்லணை கால்வாய் பகுதிகளுக்கு நீர் திறப்பு கடந்த வாரம் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் முறை பாசனத்தின் படி நாளை (திங்கள் கிழமை) முதல் நீர் வழங்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திருச்சி மண்டலம் நீர்வளத்துறை தலைமை பொறியாளர் எம். சுப்பிரமணியன் இன்று கல்லணை கால்வாய் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

    தஞ்சை வண்ணாரப்பேட்டை, சூரக்கோட்டை, காட்டூர், வடுவூர், மன்னார்குடி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

    இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் பவழக்கண்ணன், உதவி செயற்பொறியாளர்கள் சீனிவாசன், இளங்கண்ணன், மணிகண்டன், உதவி பொறியாளர்கள் சேந்தன், சூரியபிரகாஷ், நிஷாந்த், அறிவரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

    • இப்பகுதியில் உள்ள மின்கம்பிகள் மிகவும் சேதமடைந்து தாழ்வாக செல்கிறது.
    • அறுவடை எந்திரங்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதி.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் சாலையோ ரமாகவும், வயல் வெளிகள் நடுவிலும் மின்கம்பங்கள் அமைக்க ப்பட்டு வாழ்ம ங்கலம் பூலாப்பள்ளம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றும் மோட்டார் இயக்கு அறைக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள மின் கம்பிகள் சேதம டைந்து தாழ்வாக செல்கிறது.

    இதனால் விவசாயிகள் விவசாய பணிகளுக்கு டிராக்டர் உள்ளிட்ட வாக னங்கள் கொண்டு செல்ல முடியாமல் அவதிக்கு ள்ளாகின்றனர்.

    மேலும் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அறுவடை செய்ய அறுவடை இயந்திர ங்களை கொண்டு செல்ல முடியாமல் குறுவை நெற்பயிர்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை எனவும் விவசா யிகள் விவசாய பணிகளை செய்ய சேதமடைந்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின்கம்பங்கள் சரி செய்யப்படாமல் அப்படியே உள்ளது.
    • விவசாயிகள் வயலுக்கு சென்றால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் வீசிய சூறை காற்றால் சின்னகரம் என்ற கிராமத்தில் வயல்வெளியின் நடுவே உள்ள மின்கம்பங்கள் சாய்ந்தன.

    அதனைத் தொடர்ந்து உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை மின்கம்பங்கள் சரி செய்யப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் இரவு நேரங்களில் விவசாயிகள் வயலுக்கு சென்றால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

    எனவே, சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்படுமா என விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • வயல்களில் புகையான்கள் வேர்களின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் பயிர் மஞ்சள் நிறமாக மாறுகிறது.
    • மீதைல்பாரத்தியான் மற்றும் பைரித்ராய்டு மருந்துகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நெற்பயிர்களில் புகையான் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சேகர், ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் கா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ராஜப்பன் (பயிர் நோயியல்), ஆனந்தி (பூச்சியியல்) குத்தாலம் வேளாண்மை உதவி இயக்குநர் வெற்றிவேலன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சேத்திரபாலபுரம், பழையகூடலூர் பகுதிகளில் விளைநிலங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர், இது குறித்து குழுவினர் தரப்பில் கூறியதாகவது:-

    சுவர்ணா சப்-1, ஆடுதுறை-51 மற்றும் பிபிடி 5204 போன்ற நெல் ரகங்களில் பாதிப்பு காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட வயல்களில் புகையான்கள் வேர்களின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் பயிர் மஞ்சள் நிறமாக மாறுகிறது.

    பின்னர் பழுப்பு நிறமாக மாறும். இது தத்துப்பூச்சி எரிப்பு எனப்படும். பாதிக்கப்பட்ட வயல்களில் ஆங்காங்கே வட்ட வட்டமாக புகைந்தது போல காணப்படுவது தாக்குதலின் அறிகுறியாகும் எனத் தெரிவித்தனர்.

    மேலும், இப்பூச்சிகளை கட்டுப்படுத்த ஆடுதுறை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் அறிவுரைகள் வழங்கினர்.

    விவசாயிகள் தழைச்சத்து உரங்களை அதிகமாக இடுவதை தவிர்க்க வேண்டும். 8 அடிக்கு 1 அடி இடைவெளி பட்டம் வீட்டு நெற்பயிரை நடவு செய்ய வேண்டும்.

    புகையான் தாக்குதல் அதிகம் உள்ள இடங்களில் புகையான் பூச்சிக்கு எதிர்ப்பு திறன் உடைய ரகங்களை நடவு செய்ய வேண்டும்.

    நெல் நாற்றுகளை நெருக்கமாக நடுவதை தவிர்க்க வேண்டும். புகையான் பாதித்த பகுதிகளில் பட்டங்களுக்கு இடையே உள்ள நெற்குத்துக்களை நன்கு விலக்கிவிட்டு சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் பெற வசதி செய்ய வேண்டும். வயலில் நீர் தேங்காமல் உடன் நீரை வடியச்செய்ய வேண்டும். நீர் வடிந்த வயல்களில் மருந்துகளை நன்கு அடியில் உள்ள தூர்களில் நனையும்படி தெளிக்க வேண்டும்.

    மருந்து தெளிக்கும் போது மருந்தினை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்.எல்- 40 மிலி அல்லது ப்யூப்ரோ பெசின் 25 எஸ்.சி., 300 மிலி, அல்லது பிப்ரோனில் 5எஎப்சி -400 மிலி அல்லது கார்போசல்பான் 25 ஈ.சி., 300 மிலி, தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

    விளக்கு பொறி அமைத்து தாய்ப்பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து அழிக்கலாம்.

    மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை ஹெக்டேருக்கு 12 என்ற அளவில் அமைக்கலாம். புகையானின் மறு உற்பத்தியை பெருக்கும் மீதைல்பாரத்தியான் மற்றும் பைரித்ராய்டு மருந்துகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • வாடிப்பட்டி அருகே ஜவுளி பூங்காவில் இருந்து வெளியேறிய மழைநீர் வயல்களுக்குள் புகுந்தது.
    • வடிகால் அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டியில் ஒருங்கி ணைந்த ஜவுளி பூங்கா உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட பனியன் மற்றும் ஆயத்த ஆடை தயாரிக்கும் தனியார் கம்பெனிகள் உள்ளது. இந்த ஜவுளி பூங்காவை சுற்றிலும் தடுப்பு சுவர்கள் 4 புறமும் கட்டப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த பூங்காவின் தென்மேற்கு புறம் உள்ள கம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது. அதனால் அந்தபகுதியில் பெய்த மழைத்தண்ணீர் காட்டாற்று வெள்ளமாய் வெளியேறி வயல்கள், புளியந்தோப்புகள், தென்னந்தோப்பு பகுதிகளில் புகுந்துவிடுகின்றன. இதனால் விவசாயிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

    பல ஆண்டுகளுக்கு முன் தாதம்பட்டி கண்மாய் நிரம்பியபின் மாறுகால் செல்லும் ஓடை தேசியநான்குவழிச்சாலை அமைத்ததால் தூர்ந்து போய்விட்டது. இதனால் வயல்வெளிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்லவழியில்லாமல் வயலுக்குள் தேங்கி விடு கிறது. எனவே தூர்ந்து போன ஓடைக்கு மாற்றாக புதியதாக மழைவெள்ளம் செல்லும்படியாக வடிகால் அமைக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக விவசாயி கருப்பையா என்பவர் கூறியதாவது:-

    தாதம்பட்டியில் ஒருங்கி ணைந்த ஜவுளிபூங்கா சுமார் 127ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அதிகஅளவில் மழைபெய்யும்போது மழை வெள்ளம் காம்பவுண்டுசுவர் இடிந்துவிழுந்ததால் எங்கள் வயல்களில் புகுந்துவிட்டது. இதனால் தற்போது நான் பயிரிட்டுள்ள 4 ஏக்கரில் 300 தென்னைமரங்களிலும், 10 மாமரங்களிலும், 50 செண்டில் உள்ள தீவண புல்லிலும் தண்ணீர்தேங்கி வடிகால் இல்லாததால் அவை அழுகும் நிலையில் உள்ளது.

    மேலும் அடுத்தடுத்துள்ள தென்னந்தோப்புகளிலும் மழை வெள்ளம் புகுந்து தேங்கி நின்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஜவுளிபூங்கா தண்ணீர் வெளியில் செல்ல வடிகால் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அறுவடை பணி நடந்து வந்ததால் அறுவடை எந்திரம் வயலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
    • மழையால் போட்ட முதலீட்டை கூட மீட்க முடியுமா என்பது கூட தெரியவில்லை.

    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது மே மாதத்திலேயே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் குறுவை சாகுபடி பணியை விவசாயிகள் மும்முரமாக செய்தனர்.

    தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 72 ஆயிரத்து 816 எக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

    தற்போது பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

    இன்னும் 2 வாரத்திற்குள் அறுவடை பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நள்ளிரவில் கனமழை கொட்டியது.

    தொடர்ந்து 3 மணி நேரத்தி ற்கும் மேலாக இடைவிடாது கனமழை பெய்தது.

    இதன் காரணமாக தஞ்சை மாவட்டம்புதுகல்வி ராயன்பேட்டை,மானோ ஜிபட்டி, சித்திரைக்குடி, பூதலூர், கல்விராய ன்பே ட்டை மற்றும் சுற்றுவ ட்டார பகுதிகளில் மட்டும் 500 ஏக்கரில் அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயி ர்கள் வயலில் மழைநீர் புகுந்தது.

    தொடர்ந்து தண்ணீர் சென்றதால் வயல்கள் வெள்ளக்காடாக மாறியது.

    அறுவடைக்கு தயாரன பயிர்கள் மூழ்கி சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும் புதுகல்விராயன்பேட்டை பகுதியில் 2 நாட்களாக அறுவடை பணி நடந்து வந்ததால் அறுவடை எந்திரம் வயலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    தற்போது பெய்த மழையால் அறுவடை எந்திரம் வெளியே வர முடியாமல் வயலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் கனமழை பெய்ததால் 1000 ஏக்கர் அளவுக்கு அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் மூழ்கி சாய்ந்து பாதிக்கப்பட்டு இருக்கும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது:-

    தஞ்சை மாவட்டத்தில் குறுவை அறுவடை இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் எதிர்பாராத கனமழையால் பல இடங்களில் அறுவ டைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.

    லேசான மழை பெய்தால் இந்த அளவுக்கு பாதிப்பு இருக்காது.

    ஆனால் 4 நாட்களுக்கு சேர்த்து மிகப்பெரிய அளவில் கனமழையாக பெய்ததால் வயலில் தண்ணீர் சூழந்து பயிர்கள் மூழ்கி விட்டன.

    இதனால் மகசூல் பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளது.

    மேலும் ஒரு வயலில் 1 மணி நேரம் எந்திரம் மூலம் அறுவடை நடந்தால் இனி அது 3 மணி நேரமாக அதிகரிக்கும்.

    இதனால் கூடுதல் செலவு ஏற்படும். நாங்கள் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவழித்து பயிரிட்டிருந்தோம்.

    தற்போது மழையால் போட்ட முதலீட்டை கூட மீட்ட முடியுமா என்பது கூட தெரியவில்லை.

    எனவே உடனடியாக குறுவை பயிர்களுக்கு காப்பீடு திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

    தஞ்சை மாவட்டத்தில் மூழ்கி பாதிப்படைந்த பயிர்களை கணக்கீட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

    • பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு என்ற தலைப்பில் செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் உரை யாற்றினார்.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் அருணாசலம் செய்திருந்தார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே இலத்தூர் கிராமத்தில் தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர் தலைமையில் தென்காசி வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) நபீஸா செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன், இலத்தூர் உதவி வேளாண்மை அலுவலர் அருணாசலம் உள்ளிட்ட அலுவலர்கள் இலத்தூர் பகுதியில் முகாமிட்டு வேளாண் பெருமக்களை வயல்வெளியில் சந்தித்து அரசின் திட்டங்களை விளக்கி கூறினர். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை என்பது பற்றி வேளாண்மை உதவி இயக்குனர் பொறுப்பு நபிஸா உரையாற்றினார். பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு என்ற தலைப்பில் செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் உரை யாற்றினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் அருணாசலம் செய்திருந்தார். வேளாண்மை இணை இயக்குனர், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் இலவச தென்னங் கன்று மானியத்தில் வழங்கப்பட்ட தார்ப்பாய் பண்ணை கருவி கைத்தெளிப்பான் பெற்று பயன் அடைந்த விவசாயிகள் உடைய வயல்வெளிக்கு சென்று ஆய்வு பணியை மேற் கொண்டனர். வரப்பு பயிராக உளுந்து சாகுபடியையும் வேளாண்மை இணை இயக்குனர் தொடங்கி வைத்தார்.

    • வயல்களின் நடுவில் சாலை வசதி ஏதும் இல்லாத நிலையில் இந்த கடம்பன்குடி கிராமம் உள்ளது.
    • கிராம பகுதிகளுக்கு வேலைக்குச் சென்று வருவதில் பயண தூரமும், நேர விரயமும் அதிகமாவதால் சிரமப்படுகிறார்கள்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே குழிமாத்தூர் கிராமத்தின் தென் எல்லையில் சுமார் 8 மீட்டர் அகல முடைய கோணக்கடுங்கால் ஆறு ஓடுகிறது. குழிமாத்தூரி லிருந்து இந்த ஆற்றின் தென் கரைக்கு நேர் எதிராக ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கடம்பன்குடி கிராமம் உள்ளது. 4 கிலோ மீட்டர் சுற்றளவு தூரம் உள்ள வயல்களின் நடுவில் சாலை வசதி ஏதும் இல்லாத நிலையில் இந்த கடம்பன்குடி கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்திலிருந்து மாணவர்கள் உயர்நிலை மற்றும் மேற்படிப்புக்காக குழிமாத்தூர் வழியாக திருப்பூந்துருத்தி, திருவை யாறு மற்றும் தஞ்சாவூர் ஆகிய ஊர்களிலி லுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று படிக்கிறார்கள். இந்த ஆற்றில் தண்ணீர் வராத போது வயல் வரப்புகள் வழியாக ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து குழிமாத்தூரிலிருந்தும், ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் 2 கிலோமீட்டர் தூரத்திலுள்ள அம்பதுமேல்நகரம் கிராமம் வரையில் நடந்து சென்று பஸ் மூலமாக குழிமாத்தூர் வழியாக சென்று வருகிறா ர்கள்.

    குழிமாத்தூர் மற்றும் கடம்பன்குடி பகுதி விவசாயம் மற்றும் கூலி வேலையாட்களும் இந்த இரண்டு கிராமப் பகுதிகளுக்கு வேலைக்குச் சென்று வருவதில் பயண தூரமும், நேர விரயமும் அதிகமாவதால் சிரமப்படுகிறார்கள். மேலும், கடம்பன்குடி கிராம விவசாய நிலங்களிலிருந்து அறுவடையாகும் நெல் மற்றும் வைக்கோல்களை சாலை வசதி இல்லாததால் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு 1 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள குழிமாத்தூருக்கு 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு வருவது மிகவும் சிரமமாக உள்ளது.

    எனவே, சாலைப் போக்குவரத்துவசதி இல்லாமலும் அருகாமையி லுள்ள குழிமாத்தூர், அம்பது மேல்நகரம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்க ளோடு தொடர்பில்லாமல் தனித்து விடப்பட்ட தீவு போல தத்தளிக்கும் கடம்பன்குடி கிராமம் மற்றும் குழிமாத்தூர் விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரிதும் பயன்படுகிற வகையில் கோணக் கடுங்கால் ஆற்றில் சாலைப் போக்கு வரத்துக்கு உகந்த வகையில் பாலம் கட்ட வேண்டும்.

    கடம்பன்குடி கிராமத்திலி ருந்து அம்பதுமேல்நகரம் வரையிலும் மற்றும் கடம்பன்குடி கிராமத்தி லிருந்து குழிமாத்தூர் கிராமம் வரையிலும் தார்சாலை அமைத்தும் பஸ் போக்குவரத்தினை உருவாக்கியும், கடம்பன்குடி கிராம மக்கள் வெளி உலகத்தோடு இணைந்து பயணிக்க ஆவன செய்து உதவ சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடம்ப ன்குடி மற்றும் குழிமாத்தூர் ஆகிய கிராமங்க ளின் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×