search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "families"

    • 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
    • வேளாண்மை உதவி இயக்குநர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சி பகுதியில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு திருப்புகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.வேளாண்மை உதவி இயக்குநர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார்.

    இதில் துணை வேளாண்மை அலுவலர் தெய்வகுமார், வேளான் உதவி அலுவலர் பவித்ரா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுந்தரி கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலர் ஜெய்சங்கர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பேபிசரளா பக்கிரிசாமி, சுஜாதா ஆசைத்தம்பி மற்றும் மூத்த விவசாய முன்னோடிகள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.3.19 கோடி மதிப்பில் நரிக்குறவர் குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டும் பணிக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
    • கம்பிகுடி ஊராட்சி மன்ற தலைவா் லட்சுமி பாலு மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், கம்பிக்குடி ஊராட்சி, மந்திரிஓடை கிராமத்தில், நாிக்குறவா் காலனியில் வசிக்கும் 54 குடும்பத்தினா்களுக்கு ரூ.3.19 கோடி மதிப்பில், வீடுகள் கட்டப்படுகின்றன. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.

    கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சா் தங்கம் தென்னரசு அவர்கள் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். பின்னர்அவர் பேசியதாவது:-

    இந்த பகுதியில் கடந்த வருடம் பெய்த மழையால் வௌ்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அருகில் உள்ள மந்திரிஓடை அரசு தொடக்கப்பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, அவா்களுக்கு தேவையான 54 நாிக்குறவா் இன குடும்பத்திற்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் மற்றும் தலையணை, பாய்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

    இப்பகுதி நாிக்குறவா் இன மக்களின் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சா் உத்தரவின்போில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.35 லட்சம் மதிப்பில் மந்திரி ஓடை-சத்திர புளியங்குளம் சிறு பாலம் அமைப்பதற்கும், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ரூ.5.75 லட்சம் மதிப்பில் சமுதாய சுகாதார வளாகம் கட்டுவதற்கும், ஊராட்சி பொது நிதியில் இருந்து ரூ.1.82 லட்சம் மதிப்பில் தெருவிளக்குகள் அமைப்பதற்கும், 15-வது நிதிக்குழு மானியத்தின் மூலம் ரூ.3.84 லட்சம் மதிப்பில் குடிநீர் வசதிகள் செய்வதற்கும், ரூ.3.10 லட்சம் மதிப்பில் போர்வெ்ல் அமைத்து குளியல் தொட்டி அமைப்ப தற்காகவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், ரூ.47 லட்சம் மதிப்பில் நாிக்குறவா் காலனி பாதுகாப்பிற்காக அருகில் உள்ள காரியாபட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 636 மீ பள்ளி சுற்றுச் சுவா் கட்டுவதற்கும் என மொத்தம் ரூ.96.51 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    அதுமட்டுமல்லாமல், 25 சதவிகித கனிமவள நிதி திட்டத்தின்கீழ், நாிக்குறவா் காலனியில் வசிக்கும் 54 குடும்பத்தினருக்கு வீடு ஒன்றிற்கு தலா ரூ.5.90 லட்சம் வீதம் மொத்தம் 54 வீடுகளுக்கு ரூ.3 கோடியே18 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

    இதுபோன்று, அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசினுடைய நலத்தி ட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் கல்யாணகுமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் தங்க தமிழ்வாணன், கமலி பாரதி, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியகுழுத்தலைவர் முத்துமாரி, பேரூராட்சி தலைவா் செந்தில், யூனியன் துணைதலைவர் ராஜேந்திரன், பிரமுகர் கண்ணன், செல்லம், கம்பிகுடி ஊராட்சி மன்ற தலைவா் லட்சுமி பாலு மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

    • பாதிப்படைந்த 50 காவலர் குடும்பங்களுக்கு இதுவரை ரூ. 2 கோடியே 86 லட்சத்து 32 ஆயிரத்து 405 வழங்கப்பட்டுள்ளது.
    • பத்தாவது பங்களிப்பாக கடந்த மூன்று மாதங்களில் மறைந்த 5 சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு தலா ரூ.7 லட்சத்து 6000 பங்களிப்பு அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு காவல்துறையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக முதல் முதலாக இரண்டாம் நிலை காவலராக 1993-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு ஒரே ஆண்டில் அதாவது ஜூன் 9 ,16 மற்றும் அக்டோபர் 25 ஆகிய தேதிகளில் வெவ்வேறு மாவட்டங்களில் சுமார் 3500 காவலர்கள் பயிற்சி பெற்றனர்.

    இந்த நிலையில் அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து கடந்த 2019-ம் ஆண்டு வாட்ஸ் அப் குழு ஆரம்பிக்கப்பட்டது.

    இந்த வாட்ஸ் அப் குழு மூலம் காக்கும் கரங்கள் என்ற பெயரில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதுவரை இறந்த காவலர்களுக்கு 10 பங்களிப்பு பகிர்ந்து அளித்து அதில் மறைந்த மற்றும் பாதிப்படைந்த 50 காவலர் குடும்பங்களுக்கு இதுவரை ரூ.2 கோடியே 86 லட்சத்து 32 ஆயிரத்து 405 வழங்கப்பட்டு உள்ளது.

    இதில் பத்தாவது பங்களிப்பாக கடந்த மூன்று மாதங்களில் மறைந்த 5 சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு தலா ரூ.7 லட்சத்து 6000 பங்களிப்பு அளிக்கப்பட்டது.

    இதில் தஞ்சை மாவட்டத்தில் மறைந்த தஞ்சை நகர போக்குவரத்து புலன் விசாரணை பிரிவில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் முருகேசன் குடும்பத்திற்கு ரூ.7 லட்சத்து 6000 வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

    மறைந்த முருகேசன் மனைவி தனரேகா, மகன்கள் ஜெகன், ஆதித்யா ஆகியோரிடம் அந்த நிதியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 1993-ம் ஆண்டு பேட்ஜ் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 120 ஏக்கர் வரை நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது‌.
    • 24 ஆண்டுகளுக்கு முன் மழைநீரால் முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி உள்ளது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள கத்தாங்கன்னி பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் கத்தாங்கன்னி குளம் அமைந்துள்ளது‌. கொங்கு சோழர்கள் ஆட்சி காலத்தில் இக்குளம் வெட்டப்பட்டு, நொய்யல் ஆற்றில் அணைப் பாளையம் அருகே கற்களால் கட்டப்பட்ட தடுப்பணை மூலம் பருவமழை காலத்தில் நொய்யல் ஆற்றில் வரும் வெள்ள நீரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்க்கால் வெட்டி குளத்துக்கு தண்ணீர் கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் பாசனத்துக்கு அப்போது தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இக்குளத்தின் மூலம் சுமார் 120 ஏக்கர் வரை நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது‌.

    பல நூற்றாண்டு பழமை வாய்ந்த கத்தாங்கன்னி குளம் இறுதியாக கடந்த 24 ஆண்டுகளுக்கு முன் மழைநீரால் முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி உள்ளது. திருப்பூர் தொழில் வளர்ச்சி காரணமாக சாய நீர் தொடர்ச்சியாக சுத்திகரிப்பு செய்யாமல் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டதால், ஆற்றின் மூலம் நீர் பெறும் குளங்கள் மற்றும் பாசன நிலங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானது. இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுபடி கடந்த 2009-ஆம் ஆண்டு குளங்களுக்கு நீர் செல்வதை தடுக்க நொய்யல் தடுப்பணைகள் உடைக்கப்பட்டு குளத்துக்கு நீர் வருவது தடுக்கப்பட்டது.

    கடந்த 2010 க்கு பின் குளங்களுக்கு தண்ணீர்‌ திறக்கப்படாமல் இருந்த நிலையில், திருப்பூர் சாய ஆலைகள் பூஜ்ஜிய சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சாய தண்ணீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனால் நொய்யல் ஆற்றில் சாய நீர் கலப்பது குறைந்தது. இதனை அடுத்து மழைக்காலங்களில் நொய்யல் ஆற்றில் வரும் மழை நீரை குளங்களுக்கு திறக்கக் கோரி விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை அடுத்து கடந்த சில ஆண்டுகளாக நொய்யலில் வரும் வெள்ள நீரின் டிடிஎஸ்.ஐஅளவீடு செய்து, மழைநீர் தற்போது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களுக்கு விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக மழை நீர் சென்று கொண்டிருக்கும் நிலையில்,நொய்யல் ஆற்றின் மூலம் நீர் நிரம்பும் வகையில் 23 தடுப்பணைகள் வழியாக 31 குளங்களுக்கு தண்ணீர் சென்று வருகிறது.

    இதில் இறுதி 31-வது குளமான கத்தாங்கன்னி குளத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து மழைநீர் திறக்கப்பட்டதால் குளத்தின் மொத்த உயரமான 18 அடியை நோக்கி நீர் வேகமாக நிரம்பி வந்தது.நேற்று காலை குளம் முழுமையாக நிரம்பியதை அடுத்து, வெள்ளப் போக்கி பகுதி வழியாக 24 ஆண்டுக்கு பின் உபரி நீர் வெளியேறியது. இதனை தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் உபரி நீர் வெளியேறுமிடத்தில் மலர் தூவி தண்ணீருக்கு மரியாதை செய்தனர். பல ஆண்டுக்கு பின் கத்தாங்கன்னி குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதை சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் ஆச்சர்யமாக பார்த்து செல்கின்றனர்.

    இது குறித்து அப்பகுதி விவசாயி பொன்னுசாமி கூறுகையில், பல ஆண்டுக்கு பின் மழை நீரால் குளம் முழுமையாக நிரம்பி வழிகிறது. இதன் மூலம் இப்பகுதியில் பருத்தி, மக்காச்சோளம், சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட உள்ளோம். குளம் முழுமையாக நிரம்பி வழிவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

    • ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு துறை, சமூக பாதுகாப்புத் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
    • இதில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேரந்த 182 பேர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 7 நபர்க ளுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி பணி வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியிருந்தார்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர் முத்துசாமி ஆலோசனையின் பேரில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு துறை, சமூக பாதுகாப்புத் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் சார்பில் கடந்த 9-ந் தேதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

    இதில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேரந்த 182 பேர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 7 நபர்க ளுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் 8 நபர்கள் தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தில் தையல் பயிற்சிக்கும், 14 நபர்கள் முதல்நிலை நேர்முக தேர்வில் வெற்றி பெற்று, 2-ம் நிலை நேர்முக தேர்வுக்கும், 20 நபர்கள் இலவச சட்ட ஆலோசனைக்கும், ஒரு நபர் சிறுதொழில் அமைக்க வங்கி கடனுதவிக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

    இதில் வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பணி ஆணையை வழங்கினார்.

    இதுகுறித்து வேலை வாய்ப்பு பெற்ற கருங்கல் பாளையம் பகுதியை சேர்ந்த அபிராமி என்பவர் கூறியதாவது:

    எனக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். எனது கணவர் திடீரென கொரோனா பாதிப்பால் இறந்துவிட்டார். இதனால் எங்களது எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. பெரும் துயரத்தில் இருந்த எங்களுக்கு இந்த வேலை வாய்ப்பு முகாம் புதிய வழியை காட்டியுள்ளது.

    நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டு இருக்கிறேன். விரைவில் பணியில் இணைகிறேன். இதன் மூலம் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் என்னால் உழைத்து எனது மகளை காப்பாற்ற முடியும்.

    இந்த நம்பிக்கை ஏற்படுத்தி கொடுத்த முதல்-அமைச்சர், அமைச்சர், கலெக்டர் ஆகியோருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 11 லட்சம் குடும்பங்களுக்கு இலவச கியாஸ் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. #CentralGovernment #gascylinder

    சென்னை:

    பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மேலாளர் செந்தில்குமார் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 2018 டிசம்பர் மாதத்துக்குள் நாடு முழுவதும் 6 கோடி கியாஸ் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலேயே அந்த இலக்கு எட்டப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    இதன்படி வருகிற மார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு 2 கோடி இலவச சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் இதுவரை 27லட்சத்து 87 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 25 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மேலும் 11 லட்சம் இலவச இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பெண்களின் குடும்ப மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் பயனடைய விரும்புபவர்கள் வரும் மார்ச் மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆதார் அட்டை, ஸ்மார்ட் ரே‌ஷன் அட்டை, வங்கி பாஸ்புத்தகம், 3 புகைப்படங்கள் அடங்கிய ஆவணங்களை அருகில் உள்ள கியாஸ் ஏஜென்சியில் வழங்கி இத்திட்டத்தின் கீழ் இலவச இணைப்பை பெறலாம்.

    கிராமப் பகுதிகளில் இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஊழியர்கள் வீடுதோறும் விண்ணப்ப படிவங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #CentralGovernment #gascylinder

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். #sterliteprotest #TTVDhinakaran
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். வார்டு வாரியாக சென்று அவர் காயமடைந்தவர்களை பார்த்து விபரங்களை கேட்டறிந்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    தூத்துக்குடியில் இருந்து காவல்துறை வெளியேறவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தினகரன் வலியுறுத்தினார்.



    துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிவாரண நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். திமுக சார்பில் தலா ரூ 2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. #sterliteprotest #TTVDhinakaran

    ×