search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake news"

    • ஓசாயா என்பது தாய்லாந்து நாட்டை சேர்ந்த தேநீர் நிறுவனம்.
    • போலி வீடியோவில் உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் ஹோண்டா ஷோ ரூம் இரண்டும் இந்த அசல் வீடியோவில் தெரிகிறது.

    தாய்லாந்து சம்பவத்தை இந்தியாவில் நடந்ததாக சித்தரிக்கும் போலி வீடியோ

    "இந்தியாவில் புதிதாக கட்டப்பட்ட மெட்ரோ பாலம் ஒன்று இடிந்ததாக" சமீபத்தில் ஒரு வீடியோ வைரலானது. குறைவான நேரமே ஓடும் இந்த வீடியோவில் மேல்நிலை பாலம் ஒன்று உடைவது தெரிந்தது.

    ஆனால், இது பொய்யான செய்தி என தெரிய வந்துள்ளது. நாடு முழுவதிலிருந்து எங்கும் பாலம் இடிந்ததாகவோ, உடைந்ததாகவோ செய்தி ஏதும் வரவில்லை.

    அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த போது "பிடிடி ஸ்டேஷன்" (Ptt station) எனும் எழுத்துக்கள் மற்றும் ஒரு பெட்ரோல் பங்க் வாசலில் "ஒசாயா" (Ochaya) எனும் பெயர் கொண்ட பலகையும் தெரிந்தது.

    ஓசாயா என்பது தாய்லாந்து நாட்டை சேர்ந்த தேநீர் நிறுவனம். எனவே இது தாய்லாந்து நாட்டு வீடியோ என ஊர்ஜிதமானது.

    விசாரணையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் லுவாங் ஃபேங்க் (Luang Phaeng) சாலையில் 2020லிருந்து கட்டப்பட்டு வந்துள்ள லாட் கிராபாங் (Lat Krabang) மேம்பாலம் இடிவதும், அதில் 2 பேர் பலியானதும், 11 பேர் காயமடைந்ததும் தெரிய வந்துள்ளது.

    ஒரு மிகப்பெரிய கான்கிரீட்டை தூக்கிச்சென்ற இயந்திரம் கோளாறானதில் இச்சம்பவம் நடந்துள்ளது. போலி வீடியோவில் உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் ஹோண்டா ஷோ ரூம் இரண்டும் இந்த அசல் வீடியோவில் தெரிகிறது.

    இதன்மூலம், இந்தியாவின் மெட்ரோ குறித்து வெளியான பொய் வீடியோ, தாய்லாந்தின் கட்டுமானம் நிறைவடையாத ஒரு மேம்பால சாலையில் நடைபெற்ற விபத்து என தெரிய வந்துள்ளது.

    • நர்சிங் கவுன்சில் அப்படி ஒரு சுற்றறிக்கையை வெளியிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • இதனை மேற்கொண்டு யாரும் பரப்ப வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது.

    இந்தியாவில் நர்சிங் படிப்பானது மருத்துவப் படிப்புக்கு (எம்.பி.பி.எஸ்.) சமம் என்றும், நர்சிங் முடித்த செவிலியர்கள் அனைவரும் டாக்டர்களுக்கு நிகராக ஜூனியர் டாக்டர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றும் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு அனுப்பியிருப்பதாக கூறி ஒரு சுற்றறிக்கை மற்றும் நியூஸ் கார்டு போன்ற இமேஜ் வைரலாகி வருகிறது.

    இந்த தகவல் தொடர்பான உண்மைத்தன்மையை கூகுள் மூலம் தேடும்போது, அதுபோன்ற எந்த செய்தியும் நம்பகமான ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படவில்லை. இந்திய நர்சிங் கவுன்சில் இணையதளத்திலும் அப்படி ஒரு அறிக்கையோ சுற்றிக்கையோ வெளியிடப்படவில்லை.

    இதுதொடர்பாக மேலும் தேடுகையில், இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் துருவ் சவுகான் நேற்று முன்தினம் தனது டுவிட்டர் பதிவில், இந்த சுற்றறிக்கை போலியானது என குறிப்பிட்டிருந்தார்.

    மத்திய சுகாதாரத்துறையும் நேற்று இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், "செவிலியர்கள் நர்சிங் அதிகாரிகள் என்று அழைக்கப்படுவார்கள் என்றும், பிஎஸ்சி நர்சிங் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இணையானதாகக் கருதப்படும் என்றும் இந்திய நர்சிங் கவுன்சில் வெளியிட்டதாக கூறும் சுற்றறிக்கை போலியானது. இதனை மேற்கொண்டு யாரும் பரப்ப வேண்டாம்" என தெளிவாக கூறப்பட்டிருந்தது.

    பத்திரிகை தகவல் மையத்தின் (பிஐபி) உண்மை சரிபார்ப்பு பிரிவும் தனது டுவிட்டர் பக்கத்தில் இதே கருத்தை பதிவிட்டிருந்தது.

    எனவே, வைரலாக பரவும் சுற்றறிக்கை போலி என்பதும், நர்சிங் கவுன்சில் அப்படி ஒரு சுற்றறிக்கையை வெளியிடவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    • மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து பொய் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.
    • 30 கோடிக்கும் அதிகமான முறை இந்த தவறானத் தகவல்களை சந்தாதாரர்கள் பார்த்துள்ளனர்.

    மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைத் தன்மை கண்டறியும் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் 3 யூ-டியூப் சேனல்கள் தவறான தகவல்களை இந்தியாவில் பரப்பியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    நியூஸ் ஹெட்லைன்ஸ், சர்காரி அப்டேட், ஆஜ் தக் லைவ் ஆகிய இந்த 3 யூ-டியூப் சேனல்களும், உச்சநீதிமன்றம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய அரசின் திட்டங்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்டவை குறித்துப் பொய் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. 


    வாக்குச்சீட்டுகள் மூலம் எதிர்வரும் தேர்தல்கள் நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு, ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் வங்கிக்கணக்கு வைத்திருப்போருக்கு மத்திய அரசு சார்பில் நிதியுதவி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு தடை போன்ற பொய்யான செய்திகள் இந்த யூடியூப் சேனல்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த யூ டியூப் சேனல்கள் தங்கள் வீடியோக்களில் விளம்பரங்களைக் காட்டுவதும், தவறான தகவல்களைப் பணமாக்குவதும் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த 3 சேனல்களும் 33 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டிருப்பதும், அவர்கள் 30 கோடிக்கும் அதிகமான முறை இந்த தவறானத் தகவல்களைப் பார்த்திருப்பதும் தெரிய வந்துள்ளது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சத்தின் சார்பில் கடந்த ஓராண்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கால்நடை பராமரிப்பு துறைக்கு தொடர்பு இல்லாதது.
    • 90 மணி நேரம் பயிற்சி அளிக்கப்பட்டது.

    திருவண்ணாமலை:

    சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் ஆணையர் கடிதவழி தெரிவிக்கப்பட்டவாறு அனிமல் ஹண்ட்லர் மற்றும் அனிமல் ஹண்ட்லர் கம் டிரைவர் ஆகிய பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு எனவும், சம்பளம் முறையே ரூ.15 ஆயிரம் மற்றும் ரூ.18 ஆயிரம் எனவும் தகுதி மற்றும் வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு 90 மணி நேரம் பயிற்சி அளித்து பணி நியமனம் ஆணை வழங்கப்படும்.

    இதற்கு விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்யுமாறும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 5 பணியிடங்கள் வீதம் தமிழ்நாடு முழுவதும் தலா 160 பணியிடங்கள் எனவும் வாட்ஸ் அப் மூலம் செய்திகள் பகிரப்பட்டு வருகிறது.

    இந்த தகவல் அனைத்தும் கால்நடை பராமரிப்புத்துறைக்கு தொடர்பு இல்லாதவையாகும். தவறான தகவல் பகிரப்படுகின்றது.

    மேற்படி தவறான தகவல்களை பொதுமக்கள் யாரும் வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம். இந்த தகவலை திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

    கூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், நாம் தனித்தே நிற்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #KamalHaasan #NalaiNamadhe
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    கூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம். நான் அரசியலுக்கு வந்த காரணத்தை கட்சியின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் உணர்வர். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல, நாளை நமதே என பதிவிட்டுள்ளார். #KamalHaasan #NalaiNamadhe
    போலி செய்திகள் பரவுவதற்கு காரணம் என்ன? என்பது குறித்த ஆய்வு அறிக்கையை சென்னையில் நடந்த கருத்தரங்கில் பிபிசி நிறுவனம் வெளியிட்டது. #FakeNews
    சென்னை:

    பிபிசி செய்தி நிறுவனம் சார்பில் ‘போலி செய்திகளை தாண்டி’ என்ற தலைப்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று கருத்தரங்கு நடந்தது. போலி செய்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், பிபிசி நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த அறிக்கையை நடிகர் பிரகா‌ஷ்ராஜ் வெளியிட்டார்.

    அந்த அறிக்கையில், ‘‘போலி செய்தியும், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவான அரசியல் நடவடிக்கையும் ஒன்றோடு ஒன்று கலந்திருக்கிறது. போலி செய்திகள் பரவுவதற்கு தேசப்பற்று உந்து சக்தியாக இருக்கிறது. இடதுசாரி சார்புடைய போலி செய்திகளை விட, வலது சாரி தொடர்புடைய செய்திகள் வேகமாக பரவுகின்றன. போலி செய்திகள் பரவுவதற்கு உணர்ச்சிவசப்படும் நிலை தான் முக்கிய காரணமாக அமைகிறது’’ என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டுள்ளன.

    ஆய்வு அறிக்கை குறித்து பிபிசி தமிழ் ஆசிரியர் தங்கவேல் அறிமுக உரையாற்றும்போது, ‘‘ஆய்வுக்கு 16 ஆயிரம் டுவிட்டர் பயனாளர்கள், 70 ஆயிரம் பின்தொடர்பவர்கள், 3 ஆயிரத்து 200 முகநூல் பக்கங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. போலி செய்திகள் பெரும்பாலும் அரசியல், கொள்கை, பிரபலங்கள் மற்றும் கலாசாரம் சார்ந்த வி‌ஷயங்களிலே அதிகம் உலா வருகின்றன’’ என்றார்.

    ‘போலி செய்திகள்: சவால்களும், தாக்கமும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற முதல் அமர்வில் நடிகர் பிரகா‌ஷ்ராஜ், எழுத்தாளர் வாஸந்தி, வருமான வரித்துறை அதிகாரி பாஸ்கர் கிரு‌ஷ்ணமூர்த்தி, சுற்றுச்சூழல் ஆர்வலர் காளிதாஸ் ஆகியோர் விவாதித்தனர். பிபிசி தமிழ் ஆசிரியர் தங்கவேல் நடுவராக அங்கம் வகித்தார்.

    வாஸந்தி பேசும்போது, ‘‘சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் மிகப்பெரும் சவாலாக உருவாகியுள்ளது. செய்திகளை உறுதிப்படுத்தாமல் போடும் தளங்கள் தற்போது வந்துவிட்டது. அது நமது அறிவுத்திறனை நாசமாக்கும் வகையில் இருக்கிறது. இதை கட்டுப்படுத்த ஏதாவது செய்யவேண்டும்’’ என்றார்.

    பிரகா‌ஷ்ராஜ் பேசுகையில், ‘‘சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் காட்டுத்தீ போல பரவுகிறது. இது மிகவும் ஆபத்தானது. போலி செய்திகளை நம்புவது நீண்டகாலமாக இருந்து வருகிறது. இப்போது போலி செய்திகள் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. நிம்மதி இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். ஆகவே இதனை தடுத்தாக வேண்டும்’’ என்றார்.

    காளிதாஸ் பேசும்போது, ‘‘இயற்கைக்கு எதிரான திட்டத்தை அரசு கொண்டு வரும்போது அதை எதிர்ப்பவர்கள் தவறாக சித்தரிக்கப்படுகிறார்கள். வெளிநாட்டில் இருந்து அவர்களுக்கு நிதி வருகிறது என்று கூறி தவறான செய்திகளை பரப்புகிறார்கள். இந்தியாவில் சிறுத்தை இல்லை. அதுபற்றியும் போலி செய்தி வெளிவருகிறது’’ என்றார்.

    பாஸ்கரன் கிரு‌ஷ்ணமூர்த்தி பேசுகையில், ‘‘போலி செய்திகள் வலிமையானது போல, பலவீனமானதும் கூட. வெளிவரும்போது அதுகுறித்த உண்மைத் தன்மையை ஆய்வு செய்யவேண்டும். போலி செய்திகளை தடுப்பதை விட, அதுகுறித்த உண்மைத்தன்மையை புரிய வைத்தாலே போதும்’’ என்றார்.

    ‘போலி செய்திகளை தடுக்க என்ன தீர்வு’ என்ற தலைப்பில் பிற்பகல் நடந்த அமர்வில் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான கு‌ஷ்பு, தந்தி டி.வி.யின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே, தமிழக பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, சமூக ஆர்வலர் டாக்டர் ‌ஷாலினி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

    கு‌ஷ்பு பேசும்போது, ‘‘போலி செய்தியை கண்டுபிடிப்பதை விட உண்மையாக இருக்குமா? இல்லையா? என்பதை கண்டுபிடிக்கவேண்டும். அரசியல் கட்சி மட்டுமல்ல பொதுமக்களும் போலி செய்திகளால் பாதிப்படைகிறார்கள். போலி செய்திகளை உருவாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். நடவடிக்கை எடுக்காததால் தான் போலி செய்திகள் அதிகமாகிவிட்டன’’ என்றார்.

    ரங்கராஜ் பாண்டே பேசுகையில், ‘‘போலி செய்திகள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் தான் பரப்பப்படுகின்றன. போலி செய்திகளை தடுக்க தவறான செய்தியை வெளியிடமாட்டேன் என்று ஒவ்வொருவரும் உத்தரவாதம் கொடுக்கவேண்டும். இவ்வாறு செய்தால் போலி செய்திகள் வராது. ஒவ்வொருவரும் போலியான செய்தியை புறக்கணித்தாலே, அது தானாக நின்றுவிடும்’’ என்றார்.

    நாராயணன் திருப்பதி பேசுகையில், ‘‘போலி செய்திகள் அரசியல்வாதிகளிடம் இருந்துதான் உருவாகின்றன. போலி செய்திகளை தடுப்பதில் அனைத்து தரப்பினரும் தங்கள் கடமைகளை உணர்ந்து செயல்படவேண்டும். அனைவரும் பொறுப்புடன் நடந்து அதனை தடுக்கவேண்டும்’’ என்றார்.

    டாக்டர் ‌ஷாலினி பேசும்போது, ‘‘சமூக ஊடகங்களில் முடங்கி கிடப்பதே ஒரு நோய். இவ்வாறு இருப்பவர்கள் உளவியல் நிபுணர்களை சந்தித்து சிகிச்சை பெறவேண்டும். எல்லோரையும் சமமாக பாவித்தால் போலியான செய்திகளை தடுக்கலாம். நாமே இதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும்’’ என்றார். #FakeNews
    இந்தியாவில் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் போலி செய்திகளால் பல உயிர்கள் பலியாகி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. #Fakenews #India #BBC
    லண்டன்:

    ஊடகங்களை காட்டிலும், சமூக ஊடகங்களில் மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள் உடனுக்குடன் பகிரப்பட்டு வருகின்றன. எனினும், சமீப காலமாக போலி செய்திகள் பரவுவது அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்தியாவில் பரவும் போலி செய்திகளால் பல்வேறு பிரச்சனைகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதன் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்துவந்தாலும், ஒரு சில அரசியல் கட்சிகள் தங்களின் சுய லாபங்களுக்காகவும், மக்களை ஏமாற்றுவதற்காகவும் போலி செய்திகளை வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றன.

    இதுதொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், இந்தியாவில் பரவும் போலியான செய்திகளால் பல்வேறு அசம்பாவிதங்கள் நிகழ்வதாக குறிப்பிட்டுள்ளது.

    இதுதொடர்பாக பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் சமீபத்தில் பரவும் குழந்தை கடத்தல் கும்பல் எனும் போலி செய்தியால் இதுவரை 8 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், பலர் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், செய்தி வாசிப்பாளர்களில் 83 சதவிகிதம் பேர் போலி செய்திகள் குறித்து அச்சமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுபோன்ற போலி செய்திகளை தவிர்ப்பதற்காக இந்தியாவில் காஷ்மீர் போன்ற இடங்களில் பயங்கரவாதிகள் உடனான சண்டையின் போது, போலி செய்திகள் பரப்பி மக்களை அச்சுறுத்துவதை தவிர்ப்பதற்காக இண்டர்நெட் சேவை தற்காலிகமாக முடக்கப்படுகிறது.

    இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டு வந்தாலும், மக்களும் சமூக வலைதளங்கள் மூலம் பெறும் செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் அவசியமாகிறது. #Fakenews #India #BBC
    ×