search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Facemask"

    • ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • சமூக இடைவெளி, கைகழுவுதல் போன்ற கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் இருந்து வருகிறது. கடந்த வாரங்களில் தினசரி பாதிப்பு 20 என இருந்த நிலையில், தற்போது 40-க்கு மேல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து அந்த தொழிற்சாலையில் சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    மேலும், அனைத்து தொழிற்சாலைகளிலும் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்ற சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் அருணா கூறியதாவது:-

    கோவை, கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சா லையில் 54 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இங்கு பணியாற்றி வந்த ஒரு சிலருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால் அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தவிர, அனைத்து தொழிலாளர்களும் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், சமூக இடைவெளி, கைகழுவுதல் போன்ற கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சுகாதார ஆய்வாளர்கள் மூலம் தொழிற்சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் கொரோனா பரவல் இருப்பதால், பொதுமக்கள் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது.
    • சுற்றுலா தலங்களில் முககவசம் அணியாமல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு முககவசம் வழங்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சுற்றுலா தலங்களில் முககவசம் அணியாமல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு முககவசம் வழங்கவும், கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி வழங்கவும், உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய வகை கொரோனா பரவியதையடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
    • பாராளுமன்ற இரு அவைகளிலும் எம்.பி.க்கள் முக கவசம் அணிந்து வந்து இருந்தனர்.

    புதுடெல்லி:

    உலகளவில் புதிய வகை கொரோனா பரவியதையடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார். பாராளுமன்ற இரு அவைகளிலும் எம்.பி.க்கள் முக கவசம் அணிந்து வந்து இருந்தனர்.

    • முககவசம் நோய் கிருமிகளிடம் இருந்து மட்டும் இல்லை காற்று மாசுவிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
    • கொரோனா வீரியத்தில் இருந்தபோது ஒரு முறை பயன்படுத்தப்படும் முககவசம் அதிகம் விற்பனையானது.

    சீனாவில் உதயமான கொரோனா வைரஸ் கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஊடுருவியபோது மக்கள் உயிர் பயத்தில் முககவசம் அணிதல், கிருமி நாசினி மூலம் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை தாரக மந்திரம் போன்று கடைபிடித்தனர். ஒரே நேரத்தில் சிலர் 2 முககவசங்களை பயன்படுத்தினர்.

    முககவசம் அணியாமல் அலட்சியம் காட்டியவர்களிடம் அரசாங்கம் அபராத நடவடிக்கைகளை கையில் எடுத்தது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் கொரோனாவின் கொட்டம் அடங்கிப்போனாலும், இன்னும் முழுமையாக ஒழியவில்லை. தினந்தோறும் இந்த தொற்று பாதிப்பு இருந்து வருகிறது.

    இந்த தொற்று உயிர் பலி அதிகம் வாங்கிய நேரத்தில் கொரோனா என்ற பெயரை கேட்டாலே மக்கள் மத்தியில் பீதியும், அச்சமும் நிறைந்திருந்தது. தற்போது கொரோனாவின் வீரியம் குறைந்து போனதால் மக்கள் மத்தியில் அச்சமும் விலகி விட்டது. மேலும் மக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை மற்றும் சுற்றுலாதலங்கள், தியாகராயநகர் உள்பட கடை வீதிகள், திரையரங்குகள், வணிக வளாகங்களில் முககவசம் கட்டாயம் என்ற கட்டுப்பாடுகள் கானல்நீராய் போனது. அரசின் அபராத நடவடிக்கைகளும் அடங்கிப்போனது. இதனால் முககவசம் அணிபவர்கள் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிட்டது. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு ஒரு சிலர் மட்டும்தான் முககவசம் அணிந்து செல்வதை காண முடிகிறது.

    கொரோனாவுக்கு இன்னும் முடிவு கட்டப்படாத நிலையில் எச்-1 என்-1 இன்புளுயன்சா வைரசும் மிரட்டுகிறது. இந்த நோய் கிருமியில் இருந்து தப்பிக்கும் கேடயமாகவும் முககவசம் இருந்தாலும், இதனை பெரும்பாலான மக்கள் கடைபிடிக்காமல் அலட்சிய போக்குடன் உள்ளனர்.

    தற்போது முககவசம் அணிபவர்கள், அணியாதவர்கள் மனநிலை என்ன என்பதை பார்ப்போம்.

    சென்னை கோயம்பேடு பகுதியில் மளிகை கடை வைத்திருக்கும் ராஜேஷ்:-

    கொரோனாவுக்கு பின்னர் முககவசம் அணிவது கட்டாயம் என்று அறிவித்த நேரத்தில் அதை அணிவது சற்று சிரமமாகதான் இருந்தது. ஆனால் நோய் கிருமிகள் நம் உடலுக்கு செல்வதை தடுக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கிறது என்பதை உணர்ந்து அணிய தொடங்கினேன். தற்போது முககவசம் அணிவது என் தினசரி வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. புது புது வைரஸ்கள் பரவி வரும் இந்த காலக்கட்டத்தில் வெளியே செல்லும்போது முககவசம் அணிவதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

    முககவசம் அணிவது நம்மை மட்டுமின்றி நம் வீட்டில் உள்ள பெரியவர்களையும் நோய் கிருமிகளில் இருந்து பாதுகாக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த இல்லத்தரசி சுகன்யா:-

    கொரோனா தொற்று வேகமாக பரவிய நேரத்தில் முககவசம் அவசியம் தேவைப்பட்டது. தற்போது இந்த தொற்று பாதிப்பு பெரிதளவில் இல்லை. எனவே முககவசம் தேவைப்படவில்லை. முககவசம் அணிந்தால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. மூச்சு முட்டுவது போன்ற உணர்வு உண்டாகிறது. எனவே நான் முககவசம் அணிவதை நிறுத்திவிட்டேன். தற்போது நன்றாக சுவாசிக்க முடிகிறது.

    மேலும் விஷேச நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது முகத்தில் 'மேக்-அப்' போட்டு செல்வோம். முககவசம் அணிந்தால் 'மேக்-அப்'பை கலைத்து முகத்தை அலங்கோலமாக்கி விடுகிறது.

    அயனாவரத்தை சேர்ந்த இல்லத்தரசி லில்லி:-

    சாலையில் செல்லும்போது தூசுகள், வாகன புகைகள் உடலுக்கு பகையாகிறது. எனவே முககவசம் நோய் கிருமிகளிடம் இருந்து மட்டும் இல்லை காற்று மாசுவிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

    எனவே முககவசம் அணிவதன் மூலம் ஆஸ்துமா போன்ற நோய்கள் வராமல் பாதுகாத்துக்கொள்ளலாம். வீட்டில் சமையல் செய்யும்போது நெடி ஏற்படும்போது தும்மல் வருவதை தடுக்கிறது. பூ அணிவது போன்று முககவசம் அணிவதை நான் பழக்கப்படுத்தி கொண்டுள்ளேன். பொது இடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிவதில் தனிகவனம் செலுத்துகிறேன்.

    சென்னை வில்லிவாக்கம் பகுதியில் துணியிலான முககவசங்கள் விற்பனை செய்து வரும் முருகேசன்:-

    கொரோனா பரவலுக்கு முன்பு நான் பல்வேறு வியாபாரங்கள் செய்து வந்தேன். கொரோனா பரவலுக்கு பின்னர் முககவச வியாபாரத்தில் ஈடுபட்டேன். இந்த தொற்று வேகமாக பரவிய நேரத்தில் தினமும் 100-க்கும் மேற்பட்ட முககவசங்கள் விற்பனை ஆகும். தற்போது ஒரு நாளைக்கு 5 முககவசங்கள்தான் விற்பனை ஆகிறது. மக்கள் மத்தியில் கொரோனா குறித்த அச்சம் நீங்கி விட்டது என்பதையே இது காட்டுகிறது. ஆரம்பத்தில் லாபகரமாக இருந்த இந்த தொழில் தற்போது நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும் தீபாவளி நேரத்தில் மக்கள் வாங்கும் புதிய உடைக்கு ஏற்ப முககவசங்கள் வாங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அதிக முககவசங்களை வாங்கி உள்ளேன். இந்த முககவசங்கள் விற்பனையாகாவிட்டால் இந்த தொழிலை ஓரங்கட்டி விடுவேன்.

    சென்னை கொடுங்கையூர் எம்.ஆர்.நகரில் மருந்தகம் நடத்தி வரும் சங்கர்:-

    கொரோனா வீரியத்தில் இருந்தபோது ஒரு முறை பயன்படுத்தப்படும் முககவசம் அதிகம் விற்பனையானது. அதேபோன்று கைகளை சுத்தம் செய்யக்கூடிய 'சானிடைசர்' போன்ற கிருமி நாசினிகள் விறுவிறுப்பாக விற்பனையாகின.

    இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனாவா? அப்படின்னா? என்று கேட்கும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். எனவே முககவசம் அணிவது, கிருமி நாசினிகள் பயன்படுத்தும் பழக்கத்தை பலர் கைவிட்டுவிட்டனர். இதனால் முககவசம், கிருமி நாசினி விற்பனை வெகுவாக சரிந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆரம்பத்தில் உயிர்க்கொல்லி நோயாக கருதப்பட்ட கொரோனா இன்றைக்கு சாதாரண காய்ச்சல் போன்று உடனடியாக குணப்படுத்த கூடிய நோயாக மாறி இருப்பதால், கொரோனா பற்றிய கவலை போய்விட்டது. எனவே முககவசம் அணிவது இல்லை என்பது பெரும்பாலான மக்களின் மனநிலையாக உள்ளது.

    கொரோனா வைரஸ் கிருமி உருமாறும் தன்மை கொண்டது. இந்த தொற்று வீரியம் அடைந்தால் அசுர வேகத்தில் பரவும் ஆபத்து உள்ளதாக ஏற்கனவே மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே கொரோனா கிருமி இந்த பூமியில் இருந்து ஒழிந்துவிட்டது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரையில் பொது இடங்களுக்கு செல்லும்போது முககவசம் முக்கியம் என்பது டாக்டர்களின் அறிவுரையாக உள்ளது.

    • டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பொது இடங்களில் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
    • டெல்லியில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பொது இடங்களில் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் முககவச அபராதம் நீக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த ரூ.500 அபராதத்தை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதற்காக சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • மெரினா உள்ளிட்ட சென்னையில் உள்ள கடற்கரை பகுதிகளிலும் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று மட்டும் 1060 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த சில நாட்களாகவே பொது இடங்களில் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொது இடங்களில் முககவசம் அணிவதை கட்டாயமாக்கியும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

    மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு இன்று முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.

    அதன்படி பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கடைத்தெருக்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் இன்று தொடங்கியது.

    சென்னையில் 200 வார்டுகள் உள்ளன. இந்த 200 வார்டுகளிலும் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதற்காக சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் இன்று காலை முதல் பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    மேலும் திருமண மண்டபங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மத வழிபாட்டு தலங்கள் ஆகிய இடங்களுக்கு வரும் பொதுமக்கள் முககவசம் அணிந்துள்ளார்களா, சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா என்றும் கண்காணித்தனர்.

    மேலும் பஸ்களில் வரும் பயணிகள் முககவசம் அணிந்துள்ளார்களா, சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா என்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மெரினா உள்ளிட்ட சென்னையில் உள்ள கடற்கரை பகுதிகளிலும் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர்.

    இதுதொடர்பாக சுகாதார நல அதிகாரி டாக்டர் ஜெகதீஷ் கூறியதாவது:-

    முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் இன்று காலை முதலே சுகாதார ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் முககவசம் அணியாதவர்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

    பொது இடங்களுக்கு மக்கள் காலையில் குறைவாகவே வருவார்கள். பிற்பகலுக்கு பிறகே பொது இடங்களில் அவர்கள் கூடுவார்கள். எனவே அவர்கள் முககவசம் அணியாவிட்டால் உடனடியாக ரூ.500 அபராதம் விதித்து அதற்கான ரசீதையும் உடனே அவர்களிடம் வழங்குவார்கள். கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பொது இடங்களில் முககவசம் அணியாவிட்டால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை மார்க்கெட், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தியேட்டர், வணிகவளாகம், தங்கசாலையில் உள்ள தியேட்டர், ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் இன்று காலையிலேயே சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர்.

    திருவொற்றியூரில் தேரடி பகுதியில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள், திருவொற்றியூர் பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். இன்று முதல் நாள் என்பதால் பல இடங்களில் பொதுமக்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினார்கள்.

    சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டிபஜார், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைத்தெருக்கள் வணிக வளாகங்களில் அதிகாரிகள் இன்று காலை முதலே கண்காணித்து அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    மேலும் சென்னை கோயம்பேடு பஸ்நிலையம், கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளிலும் அதிகாரிகள் இன்று காலை முதலே கண்காணித்து வருகிறார்கள்.

    பரங்கிமலை சுரங்கப்பாதை, ஆலந்தூர் காய்கறி மார்க்கெட், ஆதம்பாக்கம் கருணீகர் தெருவில் உள்ள வணிக வளாகம், மேற்கு கரிகாலன் தெரு-புளுபைக் சந்திப்பு பகுதியில் உள்ள வணிக வளாகம் ஆகிய இடங்களிலும் அதிகாரிகள் நடவடிக்கைகளில் இறங்கினார்.

    மேலும் இன்று அபராதம் விதிக்கும் நடைமுறைகள் தொடங்கி இருப்பதால் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்து 'முககவசம் அணியுங்கள் அல்லது ரூ.500 அபராதம் கட்ட வேண்டும்' என்றும் எச்சரித்தனர். இந்த அறிவிப்பை கேட்டதும் பொதுமக்கள் முககவசம் அணிந்தனர்.

    தென்னக ரெயில்வே 39,822 பயணிகளிடம் முகக்கவசம் அணியாததற்கு அபராதமாக 1.98 கோடி வசூலித்து உள்ளது.
    சென்னை:

    சென்னை எழும்பூரில் இருந்து தினமும் மாலை 5 மணிக்கு கொல்லத்திற்கு விரைவு ரெயில் செல்கிறது.

    ரெயிலில் பயணிக்கும் பயணிகள் முகக்கவசம் அணிந்து இருக்கிறார்களா என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. அப்போது ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டவுடன் முகக்கவசத்தை கழற்றி பையில் வைத்திருத்தனர்.

    பெட்டிக்குள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று பயணிகள் நினைத்ததுபோல் இருந்தது. டிக்கெட் சரிபார்க்கும் ஊழியர்களும் ரெயில்வே பாதுகாப்பு போலீசும் முகக்கவசங்களை அணிந்து கொள்கிறார்கள், ஆனால் தவறிழைக்கும் பயணிகளைக் கண்டிப்பதில்லை, பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என்பதை தொடர்ந்து ஒலி பெருக்கியில் அறிவித்து வருகிறார்கள்.

    எக்ஸ்பிரஸ் ரெயில்

    இயல்பு வாழ்க்கை திரும்பியதை அடுத்து சென்னையில் இருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மாஸ்க் அணிவது கணிசமாக குறைந்து உள்ளது.

    சில வாரங்களுக்கு முன்பு வரை 70 சதவீதம் முதல் 80 சதவீதம் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முகக்கவசம் அணிந்து வந்தனர். கடந்த இரண்டு வாரங்களில் இது தலைகீழாக மாறிவிட்டது.

    கொல்லத்தில் இருந்து சென்னை வந்த ரெயிலின் ஏசி பெட்டியில் பயணம் செய்யும்போது பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் உட்பட பெரும்பாலான பயணிகள் முகக்கவசத்தை அணியவில்லை. பயணிகள் தொற்றுநோய் முடிந்து விட்டதைப் போல நடந்துகொண்டனர்.

    பல முறை நடந்து சென்ற ரெயில்வே பணியாளர்களும் பயணிகளை முகக்கவசம் அணியச்சொல்லி வற்புறுத்தவும் இல்லை என்று பிரகாஷ் குமார் என்ற பயணி கூறினார்.

    பயணிகள் 10 முதல் 12 மணி நேரத்திற்கும் மேலாக முகக்கவசத்தை அணிவது சிரமமாக உள்ளது என்கிறார்கள். ஆனால் ரெயில் என்பது அலுவலக அறைகளை விட மிகவும் சிறிய மூடப்பட்ட இடம். எளிதில் கொரோனா பரவும் என்பதை உணரவில்லை.

    தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மீறும் பயணிகளிடமிருந்து அபராதம் வசூலித்தும் வருகிறார்கள். தென்னக ரெயில்வே 39,822 பயணிகளிடம் முகக்கவசம் அணியாததற்கு அபராதமாக 1.98 கோடி வசூலித்து உள்ளது.

    நேற்று முன்தினம் ஒரேநாளில் 147 பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்றார்.


    கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்க மழைக்காலத்திலும் முககவசம் அணிவது அவசியம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர், கோட்டூர் ஜிப்ஸி காலனியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளுடன் கூட்டம் நடத்தி, குடிநீர்-கழிவுநீரகற்றுத்துறை, மாநகராட்சி நிர்வாகம், தமிழ்நாடு மின்சாரத்துறை என்னென்ன பணிகளை செய்திட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

    அந்தவகையில் குடிநீர், கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் பள்ளமான பகுதியில் இருக்கிற குடியிருப்புவாசிகளை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து, அவர்களுக்கு 3 வேளை உணவும் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் அவர்களுக்கு மாநகராட்சியும், மருத்துவத்துறையும் இணைந்து மருத்துவ முகாம்கள் மூலம் மழைக்கால சிகிச்சை அளிக்கிற பணியும் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் மின் இணைப்பு தர முடியாத நிலை இருந்துக் கொண்டிருக்கிறது. பெரிய அளவிலான பாதிப்புகளை தவிர்ப்பதற்காக தண்ணீர் தேங்கி உள்ள இடங்களில் மின் துண்டிப்பு செய்திருக்கிறார்கள். இது பொதுமக்களுக்கு இடையூறு என்றாலும் தண்ணீர் வடிந்த பிறகுதான் மின் இணைப்பு தருவது சாத்தியம் ஆகும். எனவே இந்த சிரமங்களை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

    கோட்டூரில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான இடத்தில் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு அந்த இடத்தை பெற்றுத்தந்து, அதற்கு பதிலாக அரசு சார்பில் வேறு இடம் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    முதல்-அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்றிருப்பவர்கள், 2 நாட்களுக்கு சென்னை திரும்பாமல் இருப்பது பாதுகாப்பானது. போக்குவரத்து நெரிசல், மழைநீரில் சிக்கி கொள்வதை தவிர்க்கலாம்.

    முககவசம் என்பது கண்டிப்பாக தொடர்ந்து அணிய வேண்டும். தற்போது மழைக்காலத்திலும் முககவசம் அணிந்து கொரோனா தொற்றை கட்டுக்குள் வைத்திருப்போம். டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×