search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "eyes"

    • காற்று மண்டலத்தில் இருந்து ஆக்சிஜனையும் கருவிழிகள் நேரடியாக பெறுகிறது.
    • சுரப்பியிலிருந்து வரும் நீர், கண்களை பாதுகாக்கிறது.

    நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் இயங்குவதற்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன், ரத்தத்தின் மூலமே கடத்தப்படுகிறது. ஆனால் கண்ணில் உள்ள கருவிழிகளுக்கு மட்டும் ரத்தம் பாய்வதில்லை. பின்பு எப்படி தேவையான ஊட்டச்சத்து கண்களுக்கு கிடைக்கிறது என்று தெரியுமா?

    கண்ணீர் மூலமே ஊட்டச்சத்துகளையும், காற்று மண்டலத்தில் இருந்து ஆக்சிஜனையும் கருவிழிகள் நேரடியாக பெறுகிறது. அதனால், கண்ணீர் நமது கண்ணுக்கு அவசியமானது. லாக்ரிமல் என்ற சுரப்பி கண்ணீரை உற்பத்தி செய்கிறது. இந்த சுரப்பி, கண்ணின் பக்கவாட்டு முனைக்கு மேல் சுற்றுப்பாதையில் அமைந்துள்ளது. இது தோராயமாக 2 செ.மீ. நீளம் கொண்டது.

    லாக்ரிமல் சுரப்பியில் அதிகப்படியான திரவம் சுரக்குமானால், அவை கண் குழாய்கள் வழியாக மூக்கின் நாசி குழிக்குள் சென்று விடுகிறது. கண்ணில் தூசி விழுந்தால், கண்ணில் உள்ள விழி, லென்ஸ் போன்ற பகுதிகளில் கீறல் உண்டாகி, பார்வைத்திறனில் பாதிப்பு ஏற்படுத்தும். சுரப்பியிலிருந்து வரும் நீர், கண்களில் விழும் தூசியை சுத்தம் செய்து கண்களைப் பாதுகாக்கிறது.

    பாக்டீரியாவை எதிர்ப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கின்றது. இதன்மூலம் கண்களை பராமரிப்பதில் கண்ணீருக்கு அளவில்லாத பங்கு உண்டு. லாக்ரிமல் சுரப்பிகள் குறைவான கண்ணீர் திரவத்தை உற்பத்தி செய்தால் வறட்சி, அரிப்பு மற்றும் கண்களில் எரிதல் ஆகிய பாதிப்புகள் உண்டாகும்.

    • கணினி துறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
    • கண்களுக்கு எப்போதும் குளிர்ச்சி தேவை.

    கணினி துறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. மூளை போன்று கண்ணுக்கும் அதிகப்படியான வேலையை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் இன்றைய தலைமுறைகள். இதனால் உடல்ரீதியிலான குறைபாடுகளையும் அவ்வப்போது சந்தித்து வருகிறார்கள்.

    ஆரோக்கியத்தோடு அதிகம் சந்திக்கும் பிரச்சினைகள் என்றால் அது அழகு சார்ந்த பிரச்சினை தான். குறிப்பாக கண்கள் பொலிவிழந்து காணப்படும். முகத்தில் அழகாய் இருக்க கூடியவை கண்கள். ஆனால் கண்களுக்கு கீழ் கருவளையங்கள், கருமை நிறம், கண் இரைப்பைக்கு கீழ் வீக்கம் போன்ற பிரச்சனைகளும் வரகூடும்.

    ஒருவகையில் இது ஆரோக்கியம் குறைபாடு என்பதையும் குறிப்பிட வேண்டும். உடலில் வைட்டமின் சத்துகள் குறையும் போதும், நச்சுகள் வெளியேறாத போதும் இந்த பிரச்சனைகள் வந்தாலும் கூட மறுபுறம் சருமத்தை கண்களை உரிய பாதுகாப்பில்லாமல் வைக்கும் போதும் இந்த பிரச்சனையின் தீவிரம் அதிகரித்துவிடும்

    சுட்டெரிக்கும் வெயில் வாட்டவும் தொடங்கியுள்ளது. வெப்பம் மிகுந்த நமது நாட்டில் இயல்பாகவே உடல் வெப்பம் அதிகரிக்கும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும் போது இயல்பாக உண்டாகும் ஆரோக்கிய குறைபாட்டில் அழகு சார்ந்த பிரச்சினையும் உண்டாகக் கூடும். அதில் முக்கியமானது கண்கள்.

    கண்களுக்கு எப்போதும் குளிர்ச்சி தேவை. ஓய்வும் தேவை. ஆனால் இரண்டும் கொடுக்காமல் அதிக வேலை கொடுக்கும் இந்த வெயில் காலத்தில் உரிய முறையில் கண்களுக்கு பாதுகாப்பு கொடுத்தால் கண் பார்வை பிரச்சனை, கருவளையம் பிரச்சனை போன்றவற்றை தவிர்க்கலாம் என்கிறார்கள் கண் மருத்துவ நிபுணர்கள்.

    இந்த கண்களை எப்போதும் பாதுகாக்கும் பொருளாக இருக்கிறது பாதாம். ஆரோக்கியமான உணவின் பட்டியலில் கண்டிப்பாக இடம்பெற்றிருப்பது போலவே இது அழகு சார்ந்த குறிப்பிலும் சருமத்துக்கு சத்து கொடுக்கும் பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கிறது. பாதாம் பருப்பை முகத்துக்கு பயன்படுத்துவதன் மூலம் கண்கள் சத்துக்களையும் பொலிவையும் இழக்காமல் இருக்கும்.

    எப்படி பயன்படுத்துவது பார்க்கலாம்

    பாதமை பொடித்து வைத்துகொள்ளுங்கள். வாரம் ஒரு முறை 30 எண்ணிக்கை பாதாமை மிக்சியில் பொடித்து வைத்துகொள்ளுங்கள். தினமும் தூங்குவதற்கு முன்பு அரை டீஸ்பூன் பாதாம் பருப்புடன் மூன்று டீ ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக குழைத்துக்கொள்ளுங்கள். பிறகு கண்களின் கீழ் தடவி லேசாக மசாஜ் செய்யுங்கள். மீதி இருப்பதை முகத்திலும் தடவிக் கொள்ளுங்கள். சற்று காய்ந்ததும் முகத்தை கழுவாமல் அப்படியே தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை எழுந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் போதுமானது.

    தினமும் இரவில் இதை பயன்படுத்தி வரும் போது கண்களுக்கு கீழ் கருவளையம் இருந்தால் அவை படிப்படியாக குணமடையக்கூடும். கண்களில் கருவளையத்தால் உண்டான கருமையும் சிறிது சிறிதாக மறைய கூடும். கண்களுக்கு கீழ் இருக்கும் வீக்கம், கண்களை சுற்றியுள்ள கருமை, முகத்தில் படிந்திருக்கும் கரு மையான நிறம் அனைத்துமே நீங்கும். குறிப்பாக கண்கள் புத்துணர்ச்சியோடு இருக்கும். இதனால் கண்கள் மேக்- அப் போடாமலேயே அழகாக இருக்கும். லேசான ஒப்பனையிலும் கண்கள் பளிச்சென்று இருக்கும். சோர்வு இல்லாத கண்களை எப்போதும் பெறுவீர்கள்.

    முக பராமரிப்பு என்னும் போது கண்களுக்கு பராமரிப்பு கொடுப்பதும் முக்கியம். பாதாம் அதிக விலை என்பவர்கள் முகத்துக்கு இல்லையென்றாலும் கண்களுக்கு மட்டும் பயன்படுத்துவதற்காக பாதாமை பயன்படுத்தலாம். பாதாம் பருப்பை பொடித்து பயன்படுத்துவது சிரமமாக இருக்கிறது என்பவர்கள் பாதாம் எண்ணெயை பயன்படுத்தலாம். நிச்சயம் கண் ஆரோக்கிய மாகவே அழகு கூடும்.

    பராமரிப்பு கடந்து அன்றாட வாழ்க்கையிலும் சில மாற்றங்களை கடைபிடியுங்கள். கோடைக்காலம் மட்டுமல்ல எல்லா காலங்களிலும் உடலுக்கு நீர்ச்சத்து குறையாமல் பார்த்துகொள்வது அவசியம். பழச்சாறுகள், கீரைகள், காய்கறிகள் இவை எல்லாவற்றையும் தாண்டி தினமும் குறைந்தது 8 மணிநேர தூக்கம் அவசியம். தூங்குவதற்கு முன்பு ஒரு மணி நேரம் முன்புவரை கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

    கம்ப்யூட்டர், டீவி முன்பு அதிக நேரம் செலவழிக்ககூடாது. செல்போன் அதிக நேரம் பார்க்க கூடாது. போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அதற்கேற்ப சிறுநீரையும் வெளியேற்ற வேண்டும். இவையெல்லாம் சரியாக இருந்தால் கண்ணை கண் போல் ஆயுள் வரையும் பாதுகாக்கலாம். கண்கள் காந்த கண்களாக எப்போதும் அழகாய் மிளிர தேவதையாய் வலம் வரவும் செய்யலாம்.

    • நெற்குப்பையில் பெரியகண்மாய் நிரம்பியதால் கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.
    • தேங்காய், பழம், வெற்றிலை வைத்து பூஜை செய்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக 3 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பெரியகண்மாய் முழுகொள்ளவை எட்டியது.

    இந்த கண்மாயில் இருந்து சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பெரியகண்மாய் முழுகொள்ளவை எட்டியவுடன் பாரம்பரிய முறைப்படி நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள கிராமத்தினர் ஒன்றுகூடி சிறிய மண் பானையில் கருப்பு-வெள்ளை பொட்டு வைத்து, பொட்டுகலயத்தை கீழத்தெருவில் உள்ள கோவிலில் வழிபாடு செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று பெரியகண்மாய் மடைபகுதி கரையில் பாரம்பரிய முறைப்படி ஊர்முக்கியஸ்தர்கள், கிராமமக்கள் ஒன்றுகூடி தேங்காய், பழம், வெற்றிலை வைத்து பூஜை செய்தனர். பின்னர் ஆழமான இடத்தில் குச்சியின் நுனிப்பகுதியில் வைக்கோல் வைத்து கட்டப்பட்டு அதன்மேல் பெரியகண்மாய் முழுகொள்ளவை எட்டியதற்கு அடையாளமாக பெண்கள் குலவையிட, வாண வேடிக்கையுடன் பொட்டுகலையம் வைக்கப்பட்டது.

    பெரியகண்மாய் முழுகொள்ளவை எட்டி யவுடன் பாரம்ப ரிய முறைப்படி பொட்டுக்கலை யம் வைத்து வழிபாடு செய்வது இந்த ஆண்டு நல்லமழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது கிராமமக்களின் ஐதீகமாகும்.

    பெரிய கண்மாய் முழுகொள்ளவை எட்டும்போதல்லாம் திருவிழா போல் கொண்டாடி மகிழ்கிந்து வருகின்றனர். இந்த விழாவில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் ஆனந்த், உதவியாளர் முரளி, மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • கண் அறுவை சிகிச்சை பிரிவு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு கண் நோய்க்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • கண் தானம் செய்தால் மற்றவர்களுக்கு பார்வை கொடுக்கலாம். 35 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் இன்று உலக கண்ணொ தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு இளங்கலை மாணவர்க ளால் உருவா க்கப்பட்ட கண்ணொளி பற்றிய கண்காட்சிகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

    இந்த கண்காட்சியை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருது துரை, நிலைய மருத்துவ அலுவலர் உஷா தேவி மற்றும் டாக்டர்கள் பார்வையிட்டனர்.

    இதனைத் தொடர்ந்து கண்ணொளி பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் பேசும்போது, தஞ்சை ராசா மிராசுதாரர் அரசு ஆஸ்பத்திரியில் கண் அறுவை சிகிச்சை பிரிவு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு கண் நோய்க்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மாதாந்திர கண்புரை அறுவை சிகிச்சையில் தமிழக அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது. கண் தானம் செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும். கண் தானம் செய்தால் மற்றவர்களுக்கு பார்வை கொடுக்கலாம். 35 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் துறை பேராசிரியரும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க மேலாளருமான ஞான செல்வன் தலைமையில் செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் இணை பேராசிரியர் அன்புசெல்வி நன்றி கூறினார்.

    முன்னதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

    இந்த ஒரு மாத அளவில் கண் புரை அறுவை சிகிச்சையில் டாக்டர்களின் பங்களிப்பில் ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரி மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. கண் தானம் செய்வதை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும். கண் தானம் செய்வது மிகவும் எளிது. உடல் தானம் செய்பவர்கள் கூட கண் தானம் செய்யலாம்.

    ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருட்டு போவதாக புகார்கள் வந்துள்ளன. அதனை தடுக்க 25 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    கணினி, மொபைல், தொலைக்காட்சியை அதிகமாக பார்ப்பதால் கண்ணில் சோர்வு, கருவளையங்கள் உருவாகிறது. உங்கள் கண்கள் பிரகாசிக்க உதவும் 5 இயற்கை கண் மாஸ்க்குகளை பார்க்கலாம்.
    கணினி திரைகள், மொபைல் போன்கள் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றின் தொடர்ச்சியான பார்வையால் கண் சோர்வு மற்றும் கரு வளையங்கள் உருவாகிறது. உங்கள் கண்களுக்கு போதுமான ஓய்வு தவிர தினசரி உடற்பயிற்சி முக்கியம், அது பார்வை நரம்புகளுக்கு ஆக்சிஜன் சப்ளையை அதிகரிக்க  உதவுகிறது. உங்கள் கண்கள் பிரகாசிக்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.

    1. வெள்ளரிக்காய் பிழிந்து அதன் சாற்றை, அரை மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இச்சாற்றை கண்களில் மசாஜ் செய்து 30 நிமிடங்கள் விடவும். பிறகு குளிர்ந்த நீரில் அதை கழுவவும். கண்கள் பிரகாசிப்பதை உடனே காணலாம்.

    2. பாதாம் எண்ணெய் தோலில் ஒரு ஹைட்ரேட்டர் போல் செயல்படுகிறது. இது கருவளையத்தையும் குறைக்கும். பாதாம் எண்ணெயுடன் தேன் கலந்து தினம் இரவு கண்களைச் சுற்றி மசாஜ் செய்ய வேண்டும்.

    3. சோர்வான கண்களுக்கு இது சிறந்த மருந்தாகும். சிறிய அளவு காட்டனை ரோஸ் வாட்டரில் நனைத்து 15 நிமிடங்கள் கண்களில் வைக்கவும். இது கண்சோர்வை குறைக்கும்.
     
    4. 4 தேக்கரண்டி பால் மற்றும்  2 தேக்கரண்டி சமையல் சோடாவை ஒன்றாக கலக்கவும். அதை சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும், கண்களைச் சுற்றி இந்த குளிர்ந்த கிரீம்மை மாஸ்க் போல் பயன்படுத்துங்கள். 20-25 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். உங்கள் கண்கள் புத்துயிர் மற்றும் ஆரோக்கியம்  பெரும்.

    5. பச்சை தேயிலை, கறுப்பு தேநீர் மற்றும் பல்வேறு பிற மூலிகை தேநீர் வகைகள் கருவளையத்திற்கு பெரிய தீர்வாகும். 5 முதல் 10 நிமிடங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் சில தேநீர் பைகளை வைக்கவும். பின்னர் 10-15 நிமிடங்கள் உங்கள் கண்களில் இந்த குளிர்ந்த தேநீர் பைகளை வைக்கவும். இது உங்கள் கண்களை சுற்றியுள்ள வீக்கம் மற்றும் கருவளையத்தை நீக்கும். 
    கண்களுக்கு காஜல்களைப் பயன்படுத்தும்போது நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். செயற்கையான காஜல் எதுவுமே கண்களுக்கு நன்மையைத் தராது.
    காஜல் கண்களுக்கு அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல் மாசிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது. சீக்கிரம் அழியாது என்பதற்காகச் செயற்கை ரசாயனப் பொருள்கள் அதிகளவில் கலந்த காஜலைச் சிலர் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், அதில் லெட் சல்பேட் போன்ற ரசாயனம் கலந்திருப்பதால் கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இப்போது, புதிதாக பென் (pen) மாதிரியான வடிவில் ப்ரௌன், ப்ளாக் கலர்ஸில் கிடைக்கின்றன. இவை மாதிரியான காஜல்களைப் பயன்படுத்தும்போது நாம்தான் மிகக் கவனமாக இருக்க வேண்டும். செயற்கையான காஜல் எதுவுமே கண்களுக்கு நன்மையைத் தராது.  

    இந்தப் பாதிப்புகளைத் தவிர்க்க வீட்டிலேயே காஜல் தயாரிக்கலாம். கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்துக் காய்ந்த, காட்டன் திரியை நல்லெண்ணெய் ஊற்றிய விளக்கில் எரியவிடவும். அந்த விளக்கின் மேல் பகுதியில் குமிழ் போன்ற பாத்திரத்தைப் பாதி திறந்த நிலையில் வைக்கும்போது, அதில் கரித்துகள் படியும். இதை பேஸ்ட் மாதிரி எடுத்து வைத்து, அதனுடன் விளக்கெண்ணெய் கலந்து பயன்படுத்தினால் கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும்; பக்க விளைவுகளும் கிடையாது.

    ஹெர்பல் காஜல்ஸ் அதிகமாகக் குமிழ் மாதிரியான வடிவில்தான் அதிகம் வரும். ஆனால், இது சீக்கிரமே அழிந்துவிடாமல் இருப்பதற்குக் கொஞ்சம் விளக்கெண்ணெய்யைக் கலந்துகொண்டு பயன்படுத்தலாம்.

    காஜலைப் பயன்படுத்துவதைப் போலவே ரிமூவ் செய்வதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

    செயற்கையான ரிமூவர்ஸில் ஆல்கஹால் அதிகமாக இருக்கும். ஆல்கஹால் இருந்தால்தான் காஜல், மஸ்காரா, ஐ ஷேடோவை முழுமையாகச் சுத்தப்படுத்த முடியும். ரிமூவர்ஸ் எப்போதாவது பயன்படுத்துவது தவறு இல்லை. தினமும் என்றால், கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

    காஜல் கண்களுக்கு உட்பகுதில போடுவது ஒரு வகை, கண்களின் கீழ்ப் பகுதியில் போடுவது மற்றொரு வகை. கண்கள் பெரிதாக, அழகாகத் தெரிய வேண்டும் என நினைப்பவர்கள் கண்களின் உட்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் காஜல் அப்ளைப் பண்ணும்போது ரொம்ப அட்ராக்டிவான அழகைக் கொடுக்கும். கண்கள் சிறியதாக இருப்பவர்கள், குட்டி லைன் மாதிரி காஜல் போடலாம். திக்கா போட்டால் கண்கள் இன்னும் ரொம்பச் சிறியதாகத் தெரியும்.
    கண்கள் உங்கள் உடலின் ஆரோக்கியத்தினை எளிதாய் வெளிப்படுத்தி விடும். கண்களின் ஆரோக்கியத்தினை அறிந்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.
    உங்கள் கண்கள் உங்களுக்கு சொல்வது என்ன? கண்கள் உங்கள் உடலின் ஆரோக்கியத்தினை எளிதாய் வெளிப்படுத்தி விடும்.

    * கண்ணில் இரைப்பையின் முடிகாலில் வரும் கட்டி மிகவும் வலி கொடுக்கும். சில நாட்கள் முதல் சில மாதங்கள் வரை கூட இருக்கக்கூடும். பொதுவில் உடனடி மருத்துவ உதவி பெறுவதே இதற்கு தீர்வாக அமையும். ஆனால் தொடர்ந்து ஒரே இடத்தில் வருவது, நீண்ட கால தொந்தரவு இவைகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக கவனிக்க வேண்டும்.

    * புருவ முடி சிலருக்கு சீக்கிரமாகவே மெலிந்து வரும். வயது, சக்தியின்மை, ஸ்ட்ரெஸ் இவையெல்லாம் ஒரு காரணம் என்றாலும் தலையில் வழுக்கை ஏற்படுவது போல புருவ முடியிலும் ஏற்படலாம். தைராய்டு குறைபாடு காரணமாக இருக்கலாம். உரிய கவனம் கொள்ளுங்கள்.

    இன்றைய கால கட்டத்தில் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து காலை முதல் இரவு வரை வேலை செய்வதே வழக்கமாகி விட்டது. கம்ப்யூட்டர் முன்னேற்றம் உலகையே உங்களிடம் அழைத்து வந்துவிடும் என்றாலும் கண்களுக்கு ஏற்படும் அதிக உழைப்பு பற்றி கண்டிப்பாக கண் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

    * கண்கள் சற்று வெளிவந்தது போல் இருந்தாலும் தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம்.

    * கண் வெள்ளை, மஞ்சள் நிறத்தில் இருந்தால் அனைவரும் அறிந்ததே. மஞ்சள்காமாலைக்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    * சர்க்கரை நோய் பலவித கண் பிரச்சினைகளை கொடுக்கலாம். வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    * திடீரென கண் பார்வை மங்குதல், சரியான பார்வை இன்மை போன்றவை உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவை.
    காஜலை போட்டவர்கள் சரியாக அதனை நீக்காமல் இருப்பதும் கருவளையத்திற்கு காரணம். ஆகவே அத்தகைய காஜலை சரியாக நீக்குவதற்கு ஒரு சில டிப்ஸ் இருக்கிறது.
    பெண்கள் அழகுக்காக பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் காஜல். அவ்வாறு தினமும் காஜலைப் பயன்படுத்தும் பெண்கள் ஒரு நாள் அதனை பயன்படுத்தவில்லை என்றாலும், பார்க்க ஏதோ ஒன்று குறைந்தது போல் காணப்படுவர். அதிலும் காஜல் நிறைய வகையில் தற்போது கடைகளில் விற்கப்படுகின்றன.

    மேலும் அந்த காஜலை வீட்டிலே கூட தயாரிக்கலாம் அல்லது காஸ்மெடிக்ஸ் கடைகளில் வாங்கலாம். தற்போது அவ்வாறு காஜலைப் பயன்படுத்தும் பெண்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சனை தான், கண்களுக்கு போடும் காஜல் கலைந்துவிட்டு, முக அழகை கெடுத்துவிடுகின்றன. அதனாலேயே நிறைய பெண்களுக்கு கருவளையம் வந்துவிட்டது போன்று காணப்படுகிறது.

    சிலசமயங்களில் அந்த காஜலை போட்டவர்கள் சரியாக அதனை நீக்காமல் இருப்பதும் கருவளையத்திற்கு காரணம். ஆகவே அத்தகைய காஜலை சரியாக நீக்குவதற்கு ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அவை இதோ……

    * தினமும் முகத்தை கிளின்சிங் மில்க்கை வைத்து கழுவ வேண்டும். இதுவும் மேக்கப்பில் ஒரு வித பகுதி தான். அதிலும் முகத்திற்கு என்னதான் மேக்கப் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ போட்டாலும், கிளின்சிங் மில்க்கால் கழுவ வேண்டும். அதிலும் காஜலை எளிதாக நீக்குவதற்கு, கிளின்சிங் மில்க்கை முகத்திற்கு தடவி, முகம் மற்றும் கண்களுக்கு நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின் அதனை ஒரு காட்டனை வைத்து, துடைத்து எடுக்க வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் காஜல் வருவதோடு, அழுக்குகளும் வந்துவிடும். இல்லையெனில் மேக்கப் ரிமூவல் க்ரீம் என்று விற்கப்படும் கிரீமையும் பயன்படுத்தி நீக்கலாம்.

    * காஜல் பயன்படுத்தியதால் ஏற்படும் கருவளையத்தை தடுப்பதற்கு, தினமும் படுப்பதற்கு முன், எண்ணெயை வைத்து நன்கு மசாஜ் செய்து, தூங்க வேண்டும். அவ்வாறு மசாஜ் செய்ய பயன்படுத்தும் எண்ணெய் ஆலிவ் அல்லது ஆமணக்கெண்ணெயை பயன்படுத்தினால் நல்லது. இவ்வாறு எண்ணெயை பயன்படுத்தினால், கண் இமைகள் நன்கு வளர்வதோடு, காஜலும் எளிதில் நீங்கும். வேண்டுமென்றால், எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்ததும், ஒரு காட்டனை வைத்து துடைத்துவிட்டு, பின் ஃபேஸ் வாஷை பயன்படுத்தலாம்.

    * வாஸ்லினை பயன்படுத்தி கண்களுக்கு அடியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்னர் காட்டனை வைத்து, துடைக்க வேண்டும். இதனால் காஜல் எளிதில் நீங்கிவிடும்.

    ஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்தால், காஜல் எளிதில் நீங்குவதோடு, கருவளையம் ஏற்படாமலும் இருக்கும்.

    தற்போது குழந்தைகளுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. நீண்ட நேரம் டி.வி. பார்ப்பதும், கம்ப்யூட்டர், செல்போன் உபயோகிப்பதும் கண் பார்வையை அதிகம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
    மனித உறுப்புகளில் தலைசிறந்தது கண். கண் இல்லாவிட்டால் உலகமே இல்லை. ‘எண்ணும், எழுத்தும் கண்ணென தகும்’ கண்ணுடையர் என்பவர் கற்றோர் என்று கண்களின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வலியுறுத்துகிறார். குழந்தைகளிடம் அன்பு காட்டும் போது எந்த உறுப்புகளையும் அடைமொழியிட்டு அழைக்காமல் ‘கண்ணே மணியே’ என்று கூறி தான் கொஞ்சி மகிழ்கிறோம்.

    தற்போது குழந்தைகளுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் கணிசமான அளவில் கண்ணாடி அணிந்து கொண்டு செல்வதைப் பார்க்கிறோம். பொதுவாக குழந்தைகளுக்கு கண் உறுப்பின் வளர்ச்சி 18 வயது வரை இருக்கும். தூரப்பார்வை, கிட்டப்பார்வை மாறிக்கொண்டே இருக்கும். நீண்ட நேரம் டி.வி. பார்ப்பதும், கம்ப்யூட்டர், செல்போன் உபயோகிப்பதும் கண் பார்வையை அதிகம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

    முன்பெல்லாம் குழந்தை அழுதால் தாலாட்டு பாடல்களை பாடியோ, விளையாட்டுப் பொருட்களை காட்டியோ சமாதானப்படுத்துவார்கள். ஆனால் தற்போது செல்போனில் கார்ட்டூன் படத்தை போட்டும் அதை குழந்தைகளின் பார்வையில் படும்படி வைத்து விடுகிறார்கள். அதை குழந்தை ஊன்றி கவனிக்கும் போது கண்களில் அழுத்தம் ஏற்பட்டு கண் பாதிப்பு வர அதிகம் வாய்ப்பு உள்ளது.



    இந்த பழக்கத்தை பெற்றோர்கள் கைவிட வேண்டும். அது மட்டுமின்றி குழந்தைகளை வருடத்திற்கு ஒருமுறை கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பல குழந்தைகளுக்கு மாறு கண் இருக்கிறது. அதை 2 வழிகளில் சரி செய்யலாம்.ஒன்று கண்ணாடி அணிந்து கண் பயிற்சி செய்ய வேண்டும். அது சரியாகா விட்டால் கண் அறுவை சிகிச்சை மேற் கொள்ளலாம். அதன் மூலம் கண்களை சரி செய்யலாம்.

    வீட்டில் குழந்தைகள் டி.வி. பார்ப்பதாலும், கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் அமர்ந்து இருப்பதாலும் கண் எரிச்சல், கண் சிவப்பு, பார்வைக் கோளாறு ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம்? கம்ப்யூட்டரை உபயோகிக்கும்போது கண்களை சிமிட்டிக்கொண்டே இருக்கவேண்டும். கண்களை சிமிட்ட மறந்து விடுகிறார்கள். இதனால் கண்ணீர் வரண்டு விடுகிறது. தொடர்ந்து கண்கள் சிவப்பாக மாறி, பார்வைக் கோளாறுக்கு வழி வகுக்கிறது.

    இதை தவிர்க்க கண்ணுக்கு பயிற்சி அவசியம். கண்களில் கோளாறு ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுகி கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். கண்களில் மருந்திட்டு பிரச்சினையை சரி செய்து கொள்ள வேண்டும்.புத்தகம் படிக்கும்போது இந்தப் பிரச்சினை வராது. கம்ப்யூட்டரை பார்க்கும்போது ‘பிக்சர் இமேஜ்’ தெளிவாக இருக்காது. கண் அழுத்தத்துடன் பார்க்கும்போது கோளாறு ஏற்படுகிறது. ஆகவே கண்களை சிமிட்டுங்கள்.குழந்தைகள் தூரப்பார்வை, கிட்டப்பார்வை கோளாறு காரணமாக கண்ணாடி அணிந்து கொண்டு உள்ளனர். அதற்காக கவலைப்பட வேண்டாம். 20 வயதில் ‘லாசிக்’ சிகிச்சை மூலம் கண்ணாடியை அகற்றி விடலாம்.
    மனித உறுப்புகளில் தலைசிறந்தது கண். கண் இல்லாவிட்டால் உலகமே இல்லை. சர்க்கரை வியாதி அதிகமானால் கண்கள் கடுமையாக பாதிக்கும்.
    இன்று(அக்டோபர் 11-ந்தேதி) உலக கண்பார்வை தினம்

    மனித உறுப்புகளில் தலைசிறந்தது கண். கண் இல்லாவிட்டால் உலகமே இல்லை. ‘எண்ணும், எழுத்தும் கண்ணென தகும்’ கண்ணுடையர் என்பவர் கற்றோர் என்று கண்களின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வலியுறுத்துகிறார். குழந்தைகளிடம் அன்பு காட்டும் போது எந்த உறுப்புகளையும் அடைமொழியிட்டு அழைக்காமல் ‘கண்ணே மணியே’ என்று கூறி தான் கொஞ்சி மகிழ்கிறோம்.

    தற்போது குழந்தைகளுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் கணிசமான அளவில் கண்ணாடி அணிந்து கொண்டு செல்வதைப் பார்க்கிறோம். பொதுவாக குழந்தைகளுக்கு கண் உறுப்பின் வளர்ச்சி 18 வயது வரை இருக்கும். தூரப்பார்வை, கிட்டப்பார்வை மாறிக்கொண்டே இருக்கும். நீண்ட நேரம் டி.வி. பார்ப்பதும், கம்ப்யூட்டர், செல்போன் உபயோகிப்பதும் கண் பார்வையை அதிகம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

    முன்பெல்லாம் குழந்தை அழுதால் தாலாட்டு பாடல்களை பாடியோ, விளையாட்டுப் பொருட்களை காட்டியோ சமாதானப்படுத்துவார்கள். ஆனால் தற்போது செல்போனில் கார்ட்டூன் படத்தை போட்டும் அதை குழந்தைகளின் பார்வையில் படும்படி வைத்து விடுகிறார்கள். அதை குழந்தை ஊன்றி கவனிக்கும் போது கண்களில் அழுத்தம் ஏற்பட்டு கண் பாதிப்பு வர அதிகம் வாய்ப்பு உள்ளது.

    இந்த பழக்கத்தை பெற்றோர்கள் கைவிட வேண்டும். அது மட்டுமின்றி குழந்தைகளை வருடத்திற்கு ஒருமுறை கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பல குழந்தைகளுக்கு மாறு கண் இருக்கிறது. அதை 2 வழிகளில் சரி செய்யலாம்.ஒன்று கண்ணாடி அணிந்து கண் பயிற்சி செய்ய வேண்டும். அது சரியாகா விட்டால் கண் அறுவை சிகிச்சை மேற் கொள்ளலாம். அதன் மூலம் கண்களை சரி செய்யலாம்.

    வீட்டில் குழந்தைகள் டி.வி. பார்ப்பதாலும், கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் அமர்ந்து இருப்பதாலும் கண் எரிச்சல், கண் சிவப்பு, பார்வைக் கோளாறு ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம்? கம்ப்யூட்டரை உபயோகிக்கும்போது கண்களை சிமிட்டிக்கொண்டே இருக்கவேண்டும். கண்களை சிமிட்ட மறந்து விடுகிறார்கள். இதனால் கண்ணீர் வரண்டு விடுகிறது. தொடர்ந்து கண்கள் சிவப்பாக மாறி, பார்வைக் கோளாறுக்கு வழி வகுக்கிறது.

    இதை தவிர்க்க கண்ணுக்கு பயிற்சி அவசியம். கண்களில் கோளாறு ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுகி கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். கண்களில் மருந்திட்டு பிரச்சினையை சரி செய்து கொள்ள வேண்டும்.புத்தகம் படிக்கும்போது இந்தப் பிரச்சினை வராது. கம்ப்யூட்டரை பார்க்கும்போது ‘பிக்சர் இமேஜ்’ தெளிவாக இருக்காது. கண் அழுத்தத்துடன் பார்க்கும்போது கோளாறு ஏற்படுகிறது. ஆகவே கண்களை சிமிட்டுங்கள்.குழந்தைகள் தூரப்பார்வை, கிட்டப்பார்வை கோளாறு காரணமாக கண்ணாடி அணிந்து கொண்டு உள்ளனர். அதற்காக கவலைப்பட வேண்டாம். 20 வயதில் ‘லாசிக்’ சிகிச்சை மூலம் கண்ணாடியை அகற்றி விடலாம்.

    இன்னொரு பொதுவான பிரச்சினையாக சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களை குறிப்பிடலாம். இன்னும் 5 வருடத்தில் 5 பேரில் ஒருவர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்லி இருக்கிறது. சர்க்கரை வியாதி அதிகமானால் கண்கள் கடுமையாக பாதிக்கும். கண்ணில் புரை ஏற்படும். கண் நரம்புகளை பாதிக்கும். ‘காட்ராக்ட்’ முறை அறுவை சிகிச்சை மூலம் கண் புரையை எளிதாக அகற்றி விடலாம்.

    புதிதாக ‘பிளேடுலெஸ் அறுவை சிகிச்சை’ என்ற முறை அறிமுகமாகி உள்ளது. இந்த அறுவை சிகிச்சை மூலம் கண் புரையை ஊசி இல்லாமல், தையல் போடாமல் அகற்றி விடலாம். 15 நிமிடத்தில் அறுவை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்று விடலாம்.

    சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு கண் நரம்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் ஆக்சிஜன் குறைந்து புது ரத்தக் குழாய்கள் உருவாகிறது. இதனால் ரத்தம் கசிந்து பார்வை இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை கண் மருத்துவரை அணுகி விழித்திரை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    இன்னொரு முக்கியமான கண் பிரச்சினை ‘குவாகோமா’. கண்களில் அழுத்தம் அதிகமாகி நீண்ட நாட்கள் கவனிக்காமல் விட்டால் கண் பார்வை இழக்கக்கூடும். இந்த நோய் கண் புரைக்குப் பிறகு பார்வை இழப்புக்கு இரண்டாவது காரணம். இதை ‘அமைதியான திருடன்’ என்று கூறுவார்கள். இதை நோயாளி அறியாமலேயே கண் பார்வை இழக்க வாய்ப்பு உள்ளது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிவில் நடு பார்வை மட்டும் இருக்கும். ‘சைடு’ பார்வை இருக்காது. இதற்கு கண் சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும்.

    அது சரியாகாத பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.மது அதிகம் அருந்தினால் கண்களில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு கண் பார்வை குறையக்கூடும். நம் நாட்டில் அதிகம் பேருக்கு கருவிழி படல பிரச்சினைகளால் கண் பார்வை பாதிக்கப்படுகிறது. அதற்கு இறந்தவரின் கண்களை பொருத்தினால் பார்வை கொடுக்க முடியும். யார் இறந்தாலும் கண் தானம் செய்யலாம். இதில் உடல் முழுவதும் புற்று நோய் பரவி இறந்தவர்கள், ‘எய்ட்ஸ்’ நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் தவிர மற்றவர்கள் கண் தானம் செய்யலாம்.

    ‘தானத்தில் சிறந்தது கண் தானம்.’ கண் தானம் செய்து உங்களால் ஒருவர் உலகத்தை காண வழி செய்யுங்கள்.

    டாக்டர் விஜய் சங்கர்
    நீண்ட நேரம் டி.வி., கணினியின் நீல ஒளியில் இருப்பது கண்களை எப்படி பாதிக்கிறது? என்று புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    நாம் பெரும்பாலும் கணினியில் பணி செய்கிறோம், டி.வி.யில் பொழுது போக்குகிறோம். அல்லது ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவிடுகிறோம். எல்லாவிதமான எலக்ட்ரானிக் கருவிகளின் திரைக் காட்சிகளும் நீல நிற ஒளியை உமிழ்கின்றன. இருட்டில் இந்த நீல ஒளியை நேரடியாக பார்க்கலாம். நீண்ட நேரம் இந்த நீல ஒளியில் இருப்பது கண்களை எப்படி பாதிக்கிறது? என்று புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் உள்ள டோலிடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியளார்கள் இது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். ஆய்வின் பயனாக, எலக்ட்ரானிக் கருவிகளின் நீல ஒளி கருவிழியை பாதிப்பதோடு, அதன் லென்ஸ் பகுதியை நிறங்களை எதிரொளிக்க முடியாமல் செய்துவிடுகிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.

    பொதுவாக நமது விழித்திரையே ஒளியை உணரும் பகுதியாக உள்ளது. இதுவே காட்சி தகவல்களை மூளைக்கு கடத்தி காட்சியைக் காணவும் துணை செய்கிறது. விழித்திரை செல்கள் தொடர்ந்து ஒளி சமிக்ஞைகளை மூளைக்கு அனுப்பினால்தான் நம்மால் காட்சிகளை காண முடியும். விழித்திரை இல்லாமல் அதனுடன் தொடர்புடைய ஏற்பி செல்கள் இணைந்து செயல்படாது.

    எலக்ட்ரானிக் கருவிகளின் நீல ஒளியானது ஏற்பி செல்களை அழியச் செய்வதோடு, சில வேதிப்பொருட்களை சுரந்து விழித்திரையை பாதிப்படையச் செய்கின்றன. இந்த ஏற்பி செல்கள் மறுபடியும் உற்பத்தி ஆகாத செல்கள் என்பதால் ஒருமுறை இழந்தால் பார்வையை இழந்ததற்கு சமம்தான்.

    வழக்கமாக வயதாகும்போது இந்த ஏற்பி செல்கள் மெதுவாக அழிந்து கொண்டே வருவதுதான், முதியவர்களின் பார்வை குறைபாட்டிற்கு காரணமாகும். எலக்ட்ரானிக் கருவிகளின் நீல ஒளியானது வயது மூப்பு செயலைவிட வேகமாக ஏற்பி செல்களை அழித்துவிடுகிறது. ஆனால் இந்த பாதிப்பு உடனடியாக நிகழ்வதில்லை. தொடர்ந்து தொலைக்காட்சி மற்றும் கணினி பார்க்கும் பழக்கமுடையவர்களுக்கே விரைவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    அதிர்ஷ்டவசமாக நீல ஒளியைப்போல வேறு நிறங்களான பச்சை, மஞ்சள், சிவப்பு போன்ற ஒளியலைகள் விழிசெல்களை இவ்வளவு தீவிரமாக பாதிக்கவில்லை என்றும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இந்த ஆராய்ச்சி கணினி மற்றும் டி.வி. ஒளிகளை வைத்து மேற்கொள்ளப்பட்டதாகும். இருந்தாலும் செல்போன்களும், டேப்லட்களும் இதே வகையில் பாதிப்பை உருவாக்கும் என்றே அவர்கள் கருது கிறார்கள். அது பற்றிய ஆராய்ச்சியைத் தொடரவும் முடிவு செய்துள்ளனர்.

    இந்த பாதிப்புகளில் இருந்து கண்களைக் காத்துக் கொள்ள ஆராய்ச்சியாளர்கள் 2 எளிய வழிகளையும் சொல்கிறார்கள். முதலாவது வழி குறைந்த வெளிச்சத்தில் எலக்ட்ரானிக் திரைகளை பார்க்காமல் இருப்பது. அதாவது பகல் வெளிச்சத்தில் இந்த கருவிகளை பார்ப்பதால் அவ்வளவு தீவிரமாக கண்கள் பாதிப்படையாது என்கிறார்கள். இரண்டாவதாக ‘வைட்டமின்-இ’ உருவாக்கும் ஒருவகை நோய் எதிர்பொருளான ஆல்பா டோகோபெரல் இந்த செல்கள் பாதிப்படைவதை கட்டுப்படுத்தும். எனவே ‘வைட்டமின்-இ’ நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். இவ்விரு வழிகளில் நீலநிற ஒளியில் இருந்து கண்களை காப்பாற்றலாம்! 
    ×