search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Excavation"

    • 2-ம் கட்ட அகழாய்வில் திமில் காளை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
    • மாணவ மாணவிகள் நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.

    சிவகாசி

    சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல் குளத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 16 குழி தோண்டப் பட்டு தங்கத் தாலி, எடைகற்கள், கண்ணாடி மணிகள், ஏற்றுமதிக்கு பயன்படுத்த கூடிய முத்திரைகள், யானை தந்ததால் செய்யப் பட்ட ஆபரணங்கள், சங்கினால் செய்யப்பட்ட வளையல்கள், ஏராளமான மண்பானை கள், நாயக்கர் காலத்தில் பயன் படுத்தப்பட்ட செப்பு காசுகள், உட்பட 4,500 க்கு மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    நேற்று தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் சுடு மண்னால் செய்யப்பட்ட திமில் உருவம் கொண்ட காளையின் சிற்பம் சேத மடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட அகழாய்வில் திமிழுடைய காளை சிற்பம் கிடைத்தது. அன்றைய கால கட்டத்தில் வாழ்ந்த முன் னர்கள் வீர விளை யாட்டுகளில் பயன்படுத்து வதற்காக இதனை சின்ன மாக பயன்படுத்தி இருக்க லாம் என அகழாய்வு துறையினர் தெரிவித்தனர்.

    மேலும் அகழாய்வு பணிகள் இன்னும் ஒரு வாரம் மட்டுமே நடைபெற இருப்பதால் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருளை ஆவணப் படுத்தும் பணி விறு விறுப் பாக நடைபெற்று வருகிறது.

    வெம்பக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் இருந்து அகழாய்வு மற்றும் முதலாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் வைக்கப்பட்ட கண்காட்சி நடைபெறும் இடம் வரை 2 கிலோ மீட்டர் தூரம் புதிய தார் சாலை போடப்பட்டதால் கூடுதலாக கண்காட்சியும் அகழாய்வியும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் நேரில் பார்வையிட்டு வருகின்ற னர்.

    • அகழாய்வு பகுதியில் 18 குழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வுப்பணி நடைபெற்றது.
    • இரும்பு உருக்கு தொழிற்கூடம் இருந்தமைக்கான ஆதாரங்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டம் துலுக்கர்பட்டியில் நம்பியாற்றங்கரையில் 2-ம் கட்ட அகழாய்வுப் பணியை கடந்த ஏப்ரல் 6-ந் தேதி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

    அகழாய்வு பணிகள்

    சபாநாயகர் அப்பாவு, நிதி மற்றும் மனிதவளம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் மணிவாசகம், தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை ஆணையர் உதயசந்திரன், இணை ஆணையர் சிவானந்தம் ஆகியோர் வழிகாட்டுதலின் படி அகழாய்வு இயக்குனர் வசந்தகுமார், துணை இயக்குனர் காளீஸ்வரன் ஆகியோர் தலைமையில் அகழாய்வுப் பணிகள் நடந்து வந்தது.

    இந்த அகழாய்வு குறித்து அகழாய்வு இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-

    18 குழிகளில் அகழாய்வு பணிகள்

    அகழாய்வு பகுதியில் 18 குழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வுப்பணி நடைபெற்றது. இந்த அகழாய்வில் செம்பினால் ஆன புலி உருவம், மோதிரம், யானை, தந்தத்திலான பொருட்கள், இரும்பிலான ஈட்டி முனை, அம்பு முனை, குறுவாள், வளையம் மற்றும் உளி மற்றும் சுடு மண்ணிலான சில்லுகள், சிறுசக்கரம் மற்றும் சதுரங்க காய்கள் உள்ளிட்ட விளை யாட்டுப் பொ ருட்கள், தக்களி, கார்னி லியன் (சூது பவளம்), மணிகள், நீலக்கல் மணி, கண்ணாடி மணிகள், பளிங்கு கல்மணிகள் என 1,900-த்திற்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளது.

    மேலும் 4 தமிழ் எழுத்து பொறிப்பு கொண்ட பானை ஓடுகள், 1,800-க்கும் மேற்பட்ட குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள், வெள்ளை நிறத்தினால் அலங்கரிக்கப்பட்ட பானை ஓடுகள், கருப்பு நிற பானை ஓடுகள், ஈமத்தாழிகள் என அதிக எண்ணிக்கையில் மண்பாண்ட ஓடுகள் கிடைத்து வருகின்றன.

    இந்த ஆண்டு அகழாய்வில் இரும்பு உருக்கு தொழிற்கூடம் இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதை உறுதிபடுத்தும் விதமாக உருக்கு உலைக்கான தளம், இரும்பு தாதுப்பொருட்கள், இரும்பு கசடு, ஊதுலை குழாய் மற்றும் இரும்பு உளி, வளையம் போன்ற பொருட்கள் கிடைத்துள்ளன. நம்பியாற்றின் கரையில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் மூலம் வளமான, செழிப்பான நாகரீகம் இருந்தது அடையாளம் காணப்பட்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விஜயகரிசல்குளம் அகழாய்வில் தங்கத்தாலியும், செப்பு நாணயங்களும் கிடைத்தன.
    • செப்பு நாணயங்களில் சிங்க உடல், யானை தலை, சங்கு போன்ற அடையாளங்களும் உள்ளன.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் தொல்லியல் துறை சார்பில் 2-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட அகழாய்வில் பல்லாயிரக்கணக்கான பொருட்கள் கிடைத்த நிலையில், 2-வது கட்ட அகழாய்விலும் வித்தியாசமான பொருட்கள், ஆபரணங்கள் கிடைத்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில், நேற்று ஒரு அகழாய்வு குழியை தோண்டியபோது, பழங்காலத்தில் பயன்படுத்திய அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தங்கத்தாலி கிடைத்தது. காண்பதற்கு வித்தியாசமானதாகவும், அதே நேரத்தில் ஆச்சரியப்படுத்தும் வகையிலும் இந்த தாலி உள்ளதாக தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பண்டைய காலத்திலேயே ஆபரணங்களை நேர்த்தியாக வடிவமைப்பதில் நம் முன்னோர் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதற்கு இந்த தாலியே சிறந்த எடுத்துக்காட்டு என்றும் கூறினர்.

    மதுரை நாயக்க மன்னர் ஆட்சி காலத்தில் முத்துவீரநாயக்கர் வெளியிட்ட நாணயம், செஞ்சி நாயக்கர் நாணயம் உள்பட 4 செப்பு நாணயங்களும் அகழாய்வு குழிகளில் இருந்து கிடைத்துள்ளன. இந்த செப்பு நாணயங்களில் சிங்க உடல், யானை தலை, சங்கு போன்ற அடையாளங்களும் உள்ளன.

    இதுவரை 16 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. அதில் 12 குழிகள் 15 அடி ஆழம் வரை முழுமையாக தோண்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2-ம் கட்ட அகழாய்வில் இதுவரை 3,480 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக தொல்லியல் இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.

    • அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளது.
    • கி.மு. 3-ம் நூற்றாண்டு முதல் கி.மு. முதலாம் நூற்றாண்டு வரை தமிழ் பிராமி எழுத்துகளே பயன்படுத்தப்பட்டன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள வடக்குப்பட்டு ஊராட்சி பகுதியில் கடந்த மே மாதம் 19-ந் தேதி 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

    இங்கு நடந்த முதல்கட்ட அகழாய்வில் இந்த பகுதி கற்கால கருவிகளை தயார் செய்யும் இடமாக இருந்திருக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டன. இதனை உறுதிப்படுத்த தற்போது 2-ம் கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன. தொல்லியல் துறை கண்காணிப்பாளர் எம்.காளிமுத்து தலைமையில் இந்த அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த பணியின்போது பல்வேறு தொல் பொருட்கள் கண்டறியப்பட்டு உள்ளன. விளையாட்டு பொருட்கள், பானை ஓடுகள், கூம்பு வடிவ ஜாடிகள் போன்ற பல பொருட்கள் கிடைத்து உள்ளன. இந்த நிலையில் தற்போது அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளது. இதுகுறித்து தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 42 பானை ஓடுகள் பல்வேறு தொல்பொருள் அகழ்வாராய்ச்சி தளங்களில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவைகளில் பெரும்பாலானவை தென் தமிழ்நாட்டை சேர்ந்தவை. வட தமிழ்நாட்டில் தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகள் கிடைப்பது அரிதானது என்றார்.

    மேலும் இதுகுறித்து உதவி தொல்லியல் துறை அதிகாரியான ரமேஷ் கூறும்போது, "காஞ்சீபுரம் மற்றும் பட்டறை பெரும்புதூரில் மட்டுமே எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகள் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

    கி.மு. 3-ம் நூற்றாண்டு முதல் கி.மு. முதலாம் நூற்றாண்டு வரை தமிழ் பிராமி எழுத்துகளே பயன்படுத்தப்பட்டன. எனவே பானை ஓடுகளில் உள்ள கல்வெட்டு இந்த தளத்தின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். தமிழ் மொழியின் தொன்மையை நிரூபிக்க இது முக்கியமானது ஆகும்" என்றார்.

    • தலை அலங்காரத்துடன் கூடிய ஆண் உருவ சூடுமண் கண்டெடுக்கப்பட்டது.
    • தற்போது 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து வருகிறது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் முதற் கட்ட அகழாய்வின் போது பண்டைய கால பொருட்கள் கிடைத்தது. இதை தொடர்ந்து தற்போது 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து வருகிறது.

    இந்த அகழாய்வில் இது வரை தங்க அணிகலன், தங்க பட்டை, சுடு மண்ணால் ஆன பொம்மை, சுடுமண் அகல் விளக்கு, காதணி, எடைக்கல், பதக்கம், கண் ணாடி மணிகள், வணிக முத்திரை, சங்கு வளையல் கள், யானை தந்ததால் ஆன பகடை, தக்களி, செங்கல், சில்லு வட்டம் உள்ளிட்ட ஏராளமான தொல் பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கருப்பு நிறத்துடன் வனை யப்பட்டுள்ள இப்பொம்மை தலை அலங்காரமும் உதட்டுச் சிரிப்பும் மெரு கூட்டுகிறது.

    கயல் வடிவில் கண்களும் அவற்றின் புருவங்களும் கீறல் வடிவில் வரையப்பட்டுள் ளன. வாய், மூக்கு, காதுகள் தடிமனாக உருவாக்கப் பட்டுள்ளன. இவ்வுருவம் 2.28 செ.மீ உயரமும் 2.15 செ.மீ அகலமும் 1.79 செ.மீ தடிமனும் கொண்டுள்ளது. அகழாய்வுக்குழியில் 40 செ. மீட்டர் ஆழத்தில் கிடைக்க பெற்ற இந்த ஆண் உருவ சுடுமண் பொம்மை வரலாற் றுக்காலத்தைச் சார்ந்ததாக கருதப்படுகிறது.

    • பண்டைய கால தமிழர்களின் வரலாற்றுக்கு சான்றாக பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்தன.
    • கீழடி அதனை சுற்றியுள்ள அகரம், கொந்தகை, ஆகிய பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தொல்லியல் துறையினரால் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் பண்டைய கால தமிழர்களின் வரலாற்றுக்கு சான்றாக பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்தன. சிந்து சமவெளிக்கு நிகராக கீழடி வைகை நாகரிகம் விளங்கி இருக்கும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக கீழடி அதனை சுற்றியுள்ள அகரம், கொந்தகை, ஆகிய பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன.

    கடந்த ஏப்ரல் மாதம் கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது.

    9 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அகழாய்வில் தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சூடு மண்ணால் செய்யப்பட்ட விலங்கின் உருவங்கள், ஆட்ட காய்கள், வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனை கள் என 183 தொல்பொருட்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் 4 அகழாய்வு குழிகளில் 35 சென்டிமீட்டர் ஆழத்தில் களிமண் மற்றும் சுண்ணாம்பு கலவை கொண்டு அமைக்கப்பட்ட தரைத்தளமும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தரைத்தளம் 3 செ.மீ. முதல் 6 சென்டி மீட்டர் தடிமனுடன் காணப்படுகிறது.

    9-ம் கட்ட அகழாய்வு பணியில் பானை ஓடுகள், எலும்பு மற்றும் கரி மாதிரிகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு அறிவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த மே மாதம் 19-ந் தேதி 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி இந்த பகுதியில் தொடங்கப்பட்டது.
    • அகழ்வாராய்ச்சி பணி முழுமை அடைந்தால் பல்வேறு பொருட்கள் கிடைக்கப்படுவது தெரிய வரும் என தொல்லியல் துறை சார்பில் தெரிவித்தனர்.

    ஒரகடம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வடக்குப்பட்டு ஊராட்சியில் உள்ள நத்தமேடு பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3-ந்தேதி தொல்லியல் துறை சென்னை வட்டார தொல்லியல் துறை கண் காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் அகழ்வாராய்ச்சி பணியை தொடங்கியது.

    பணி தொடங்கப்பட்டு 3 மாதம் நடைபெற்று வந்தது. தொல்லியல்துறை அகழ்வாராய்ச்சி மேற்கொண்டதில் அரியவகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.

    கண்ணாடி மணிகள். வட்ட சில்கள், இரும்பாலான ஆயுதம், சுடுமண்ணால் ஆன பொம்மைகள், முத்திரை சீல், 0.86 மில்லிகிராம் அளவில் 2 தங்க அணிகலன்கள் மற்றும் பழைய கற்காலத்தில் பயன்படுத்திய கருவிகள் உள்ளிட்டவை கிடைத்தது.

    இந்த நிலையில் கடந்த மே மாதம் 19-ந் தேதி 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி இந்த பகுதியில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து ஒரு மாதமாக நடைபெற்று வந்த அகழ்வாராய்ச்சி பணியில் தங்க ஆபரணத்திலான சிறு தகடு, ராஜராஜ சோழன் காலத்து நாணயங்கள், சுடுமன் கருவி, செப்பு சிறிய கிண்ணம், செப்பு கிண்ண மூடி, சுடுமண் பொம்மைகள், செப்பு வளையங்கள் உள்ளிட்ட அரிய பொருட்கள் கிடைத்துள்ளது. அகழ்வாராய்ச்சி பணி முழுமை அடைந்தால் பல்வேறு பொருட்கள் கிடைக்கப்படுவது தெரிய வரும் என தொல்லியல் துறை சார்பில் தெரிவித்தனர்.

    தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சியின்போது தங்க ஆபரணங்கள் கண்டெடுக்கப்படும் போது சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் தொல்லியல் துறை சார்பில் கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த்துறையினருக்கு எந்த தகவலும் தெரிவிப்பதில்லை என்று வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • சிவகாசி அருகே 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் 200 தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
    • முன்னோர்கள் வெளிநாடுகளில் வாணிபம் செய்ததற்கான சான்றாக தற்போது கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கிடைத்து உள்ளதாக தொல்லியல் துறை இயக்குனர் தெரிவித்தார்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அகழ்வாராய்ச்சி பணிகளின் 9 நாட்கள் முடிவில் இதுவரை சுடுமண் புகைப்பான், கல்லால் ஆன எடைக்கல், செப்பு நாணயம், கண்ணாடி மணிகள், சுடுமண் காதணி உள்ளிட்ட 200 தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு வாழ்ந்த முன்னோர்கள் வெளிநாடுகளில் வாணிபம் செய்ததற்கான சான்றாக தற்போது கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கிடைத்து உள்ளதாக தொல்லியல் துறை இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.

    2-ம் கட்ட அகழாய்வில் இன்னும் பல குழிகள் தோண்ட இருப்பதால் முதல்கட்ட அகழாய்வில் கிடைத்ததை விட, பண்டைய கால பொருட்கள் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    • பட்டறைபெரும்புதூரில் ஏற்கனவே 2 கட்ட அகழாய்வு பணிகள் முடிந்து உள்ளன.
    • அகழ்வாராய்ச்சி வருகிற செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது.

    தமிழகம் 15 லட்சம் ஆண்டுகள் மனிதகுல வரலாற்று தொன்மை கொண்டது. இதன் தொன்மையை கண்டறிய முறையான அகழாய்வுகள் அவசியம் ஆகும். தமிழக அரசின் தொல்லியல் துறை செய்த அகழாய்வில் அறிவியல் அடிப்படையிலான ஆய்வின் முடிவுகள் மூலம் தமிழகத்தின் வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டு உள்ளது. கீழடி அகழாய்வு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து உள்ளது. இந்த அகழாய்வு தொல்லியலாளர்கள் இடையே மட்டும் இல்லாமல் உலக தமிழர்களிடையேயும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழர்கள் 6-ம் நூற்றாண்டில் படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை உறுதியாக நிலைநிறுத்தி இருக்கிறது.

    சமீபகால தொல்லியல்துறையின் சாதனைகள் மூலம் நமது நீண்ட கால வரலாற்றில் காணும் பண்பாடு மற்றும் கால வரிசை இடைவெளிகளை நிரப்புவதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே நிர்ணயித்த இலக்கை அடைய தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல், வரலாற்று காலம் வரையிலான தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வு செய்ய அரசு திட்டமிட்டு உள்ளது.

    அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பட்டறைபெரும்புதூர், கீழடி, அரியலூர் மாவட்டம் கங்கை கொண்டசோழபுரம், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை உள்பட 8 இடங்களில் அகழாய்வு செய்யும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்தார்.

    இதில் பட்டறைபெரும்புதூரில் ஏற்கனவே 2 கட்ட அகழாய்வு பணிகள் முடிந்து உள்ளன. இதைத்தொடர்ந்து தற்போது 3-வது கட்டமாக அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    அகழாய்வு பணி நடைபெறும் பட்டறை பெரும்புதூர் கிராமம் திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொசஸ்தலை ஆற்றுப் படுகையில் இருந்து சிறிது தூரத்தில் உள்ளது. கடந்த 2015-16, 2017-18 ஆகிய 2 ஆண்டுகள் இப்பகுதியில் ஏற்கனவே அகழாய்வுகள் செய்யப்பட்டன. ஆலைமேடு, நத்தமேடு, இருளன்தோப்பு மற்றும் சிவன் கோவில் ஆகிய இடங்களில் தொல்லியல் துறையினர் 33 குழிகள் சுமார் 825 சதுர மீட்டர் பரப்பளவில் அகழாய்வு செய்து 1404 தொல்பொருட்களை கண்டு பிடித்தனர். மனித எலும்புத் துண்டுகள், கல்லாயுதங்கள், செம்பு, இரும்பு ஆகிய உலோகங்கள் கண்ணாடிப் பொருள்கள், சங்கு சார்ந்த வளையல்கள், பவள மணிகள், பச்சை மணிகள், பானை ஓடுகள் முதலியன கிடைத்துள்ளன.

    இதில் சில பழங்கால மண்பானை ஓடுகளில் பிராமி எழுத்துகளும் இடம்பெற்றுள்ளன. இதேபோல் பட்டறை பெரும்புதூரில் பல கோயில் சார்ந்த கல்வெட்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் பல்லவ மன்னன் அபராஜிதவர்மன் காலத்திய கல்வெட்டுகள் முக்கியமானது. இவை தொல்லியல் துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

    தற்போது பட்டறை பெரும்புதூரில் 3-ம்கட்ட அகழாய்வு பணி 3 குழிகளில் நடைபெற்று வருகிறது. கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், விளையாட்டு சில்லுகள், பானை ஓடுகள் உள்ளிட்ட பழைய உபகரணங்கள் கிடைக்கப்பெற்றது. தொடர்ந்து இந்த ஆய்வு பணி நடந்து வருகிறது. இதில் சுமார் 25 பேர் தினமும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த அகழ்வாராய்ச்சி வருகிற செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. 6 மாதங்கள் நடைபெறும் இந்த விரிவான அகழ்வாராய்ச்சி தொல்லியல் துறையை சேர்ந்த பாஸ்கர் தலைமையில் நடந்து வருகிறது. இதில் பழங்கால தமிழர்களின் வாழ்க்கை முறை குறித்த மேலும் பல ஆச்சரியமூட்டும் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

    • அகழ்வாராய்ச்சி வைப்பகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
    • இந்த தகவலை கலெக்டர் மதுசூன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    மானாமதுரை

    சிவகங்கை-மதுரை மாவட்ட எல்லையில் கீழடி, கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகள்உள்ளன. இங்கு தமிழக அரசின் தொல்லியல் துறைமூலம் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியின் முக்கிய திட்டமாக இங்கு கிடைத்த பொருட்களை கொண்டு பிரமாண்ட கட்டிடத்தில் காட்சிப்படுத்தும் வகையில் செட்டிநாடு கட்டிடகலையில் மிகப்பெரிய அகழ்வா ராய்ச்சி காப்பக அரங்கம், கல்மண்டபங்கள், கூடங்கள், குளம் போன்றவை கலை நயத்துடன் அமைக்கும் பணிநிறைவடைந்துள்ளது.

    இந்த பணிகளை இறுதி ஆய்வு செய்யும் பணி நடந்தது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கீழடியில் ஆய்வு செய்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் கீழடிக்கு மார்ச் முதல் வாரத்தில் வருகை தருகிறார். அப்போது கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.

    கீழடி அகழாய்வு பணியில் கிடைத்த தொல்பொருட்களை பார்த்த வகையில் தமிழர்கள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப் படுத்துவதற்கு ஏதுவாகவும் அந்த பொருட்களை உலகத் தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வருகை புரியும் பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலும் செட்டிநாடு கலைநயத்துடன் ரூ11.03கோடி மதிப்பீட்டில் புதிய அகழ் வைப்பக கட்டி டம் கட்டுமான பணிகள் நடந்தது.

    தமிழர்களின் சங்க கால தமிழர்களின் பெருமை களை பறைசாற்றுகின்ற வகையில் உலக அளவில் புகழ்பெற்றுள்ள கீழடி அகழ் வைப்பக கட்டிடத்தில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் வளாகத்தில் நடை பெற்ற விவரம் தொடர்பாக கலெக்டர் ஆய்வு செய்தார்.

    வருகிற மார்ச் முதல் வாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங் கெற்க உள்ளார். அப்போது கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று கலெக்டர் மதுசூன்ரெட்டி தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம், கீழடி கட்டிட மைய செயற பொறியாளர் மணிகண்டன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், சிவகங்கை கோட்டாச்சியர் சுகிதா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கான ஆயத்த பணிகள் தொடக்கங்கப்பட்டது.
    • தமிழகத்தில் இருந்து கடல் வழியாக வாணிபம் செய்ததற்கான சான்றுகளும் இந்த ஆராய்ச்சியில் கிடைத்தன.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட விஜயகரிசல்குளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தன.

    இதில் பழங்கால சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள், சுடுமண்ணால் ஆன தொங்கட்டான், பகடைக்காய் உள்ளிட்ட 3,254 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

    மேலும் விஜயகரிசல் குளத்தில் சங்கு வளையல் தயாரிப்பு கூடம் இருந்த தற்கான சாத்தியக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இருந்து கடல் வழியாக வாணிபம் செய்ததற்கான சான்றுகளும் இந்த ஆராய்ச்சியில் கிடைத்தன. அத்தோடு முதற்கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் முடிவடைந்தன.

    தமிழர்களின் நாகரீகம் மற்றும் பழமைகள் குறித்து மேலும் கண்டறிய வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வுப்பணி நடத்தப்பட வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதன் அடிப்படையில் 2-ம் கட்ட அகழாய்வு பணியை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகள் நேற்று தொடங்கின.

    அகழ்வாரா ய்ச்சிக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சுத்தம் செய்யும் பணியும், குழிகள் தோண்டுவதற்கு அளவீடு செய்யும் பணி போன்றவை நடந்து வருகிறது.

    இரும்பு துண்டுகள், இரும்பை காய்ச்சும் போது மீதமான உருக்கு கழிவுகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 தளங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடந்து வருகின்றன.

    கீழடியில் 5 குழிகளும். கொந்தகை மற்றும் அகரத்தில் தலா 2 குழிகளும் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகளை தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. கடந்த வாரம் இந்த ஆய்வில் கீழடியில் 2 மெகா சைஸ் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன.

    மேலும் சில நாட்களுக்கு முன்பு பழங்காலத்தில் சிறுவர்கள் விளையாட பயன்படுத்திய வட்ட வடிவிலான சில்லு வட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து தற்போது அந்த இடத்தில் இரும்பு துண்டுகள், இரும்பை காய்ச்சும் போது மீதமான உருக்கு கழிவுகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

    2600 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பை காய்ச்சி ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் செய்திருக்கலாம் என்றும், கீழடியில் இரும்பை உருக்கும் தொழிற்சாலை இருந்திருக்க வாய்ப்புள்ளது எனவும் கருதப்படுகிறது.

    6-ம் கட்ட அகழாய்வின் போது இரும்பு ஆயுதம், குத்துவாள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. எனவே 2600 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. தொடர்ந்து நடைபெறும் அகழாய்வின் போது மேலும் பல உறுதியான ஆதாரம் வெளிப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    ×