search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Entrance exam"

    • மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் உள்ள இளநிலைப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான பொது நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அண்மையில் நடத்தியது.
    • இந்த தேர்வை சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் எழுதியுள்ளனர். இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு ஜூன் 29-ம் தேதி வெளியிடப்பட்டது.

    சேலம்:

    மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் உள்ள இளநிலைப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான பொது நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அண்மையில் நடத்தியது.

    இந்த தேர்வை சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் எழுதியுள்ளனர். இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு ஜூன் 29-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் பல கேள்விகளுக்கான விடைகள் தவறாக குறிக்கப் பட்டுள்ளதாகத் தேர்வர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    குறிப்பிட்ட வினாவுக் கான விடை குறித்து முறையீடு செய்ய விரும்பும் மாணவர்கள், ஒவ்வொரு வினாவுக்கும் தலா ரூ.200 செலுத்த வேண்டும் என்றும் என்டிஏ தெரிவித்துள்ளது.

    இதற்கு தேர்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரி வித்துள்ளனர். கட்டணம் அதிகமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக யுஜிசி தலைவர் ஜகதீஷ் குமார் கூறுகையில், என்டிஏ முறையின்றி கட்டணம் வசூலிப்ப தாகக் கூறுவது தவறான குற்றச்சாட்டு. அந்த அமைப்பு லாப நோக்க மற்று இயங்கும் தன்மை உடையது. வசூலிக்கப்படும் கட்டணமா னது விடையை மறுமதிப்பீடு செய்யும் நிபுணர்களுக்கே வழங்கப்படும்.

    விடைக் குறிப்பில் தவறு கள் காணப்படுவதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. தட்டச்சு செய்வ தில் ஏற்பட்ட பிழையாக அது இருக்கலாம். திருத்தப் பட்ட விடைக்குறிப்பு 2 நாள்களுக்குள் வெளியிடப் படும்.

    விடைக் குறிப்பில் தவறுகள் ஏதேனும் இருந்தால், அது தொடர்பாக என்டிஏ-வுக்கு மின்னஞ்சல் வாயிலாகத் தேர்வர்கள் தெரிவிக்கலாம். அக்கருத்து ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தால், அது நிச்சயமாக பரிசீலிக்கப்படும் என்றார்.

    • 2 ஆயிரத்து 999 விண்ணப்பங்கள் தகுதியானவையாக கண்டறியப்பட்டு உள்ளது.
    • கோவை, ஊட்டி, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய 5 இடங்களில் நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    பாரதியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆராய்ச்சி பட்டம் (பி.எச்.டி.) மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் எம்.பில்) சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வு -2023 நாளை 11-ம்தேதி நடக்கிறது. 51 பாடங்களில் நடைபெறவுள்ள இந்த நுழைவுத்தேர்விற்கு 4 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 2 ஆயிரத்து 999 விண்ணப்பங்கள் தகுதியானவையாக கண்டறியப்பட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தேர்விற்கான நுழைவு ச்சீட்டினை பாரதியார் பல்கலைக்கழக இணையப்பக்கத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    கோவை, ஊட்டி, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய 5 இடங்களில் நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் பிஷப் அப்பாசாமி கல்லூரி, ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளிலும், நீலகிரி மாவட்டத்தில் அரசு கலைக்கல்லூரி, ஈரோடு மாவட்டத்தில் வேளாளர் மகளிர் கலை கல்லூரி, திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி மற்றும் பொள்ளாச்சியில் என்.ஜி.எம்.கல்லூரி ஆகிய 7 கல்லூரிகளில் தேர்வு நடக்கிறது.

    தேர்வு காலை 11மணிக்கு துவங்கி மதியம் 12.30மணிக்கு நிறை வடையும். தேர்வாளர்கள் கடைபிடிக்க ேவண்டிய நெறிமுறைகள் தேர்வு நுழைவுச்சீட்டில் கொடுக்கப்பட்டு உள்ளது. நுழைவுதேர்விற்கான பணிகளை பொது நுழைவுத்தேர்வு ஒருங்கிணைப்பாளரும், தாவரவியல் துறைத்தலை வருமான பரிமேலழகன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர். 

    • டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2024 ஆண்டிற்கான (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) 8-ம் வகுப்பில் சேருவதற்கான ஆர்.ஐ.எம்.சி. தேர்வு வருகிற ஜூன் மாதம் 3-ம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது.
    • இத்தேர்வில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டு கட்டங்கள் கொண்டதாக இருக்கும்.

    ேசலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது-

    டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2024 ஆண்டிற்கான (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) 8-ம் வகுப்பில் சேருவதற்கான ஆர்.ஐ.எம்.சி. தேர்வு வருகிற ஜூன் மாதம் 3-ம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது.

    இத்தேர்வில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டு கட்டங்கள் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வு ஆங்கிலம் கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தாள்கள் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 விழுக்காடு ஆகும்.

    விண்ணப்பதாரர்களின் (சிறுவர்களின்) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 01.06.2024 அன்று 11 1/2 வயது நிரம்பி யவராகவும் 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது அவர்கள் 02.01.2011-க்கு முன்ன தாகவும் 01.07.2012-க்கு பின்னதாகவும் பிறந்திருக்ககூடாது. மேலும் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் 7-ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

    மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை , பூங்கா நகர், சென்னை-600 003 என்ற முகவரிக்கு 15.04.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும், விவரங்களுக்கு ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியின் www.rimc.gov.in என்ற இணையதளத்திலும், முன்னாள் படைவீரர் நல அலுவலக தொலைபேசி எண் 0427-2902903 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • மாநில பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வு-2023 (சி.யு.இ.டி) அறிவிப்பு தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
    • இணையவழி விண்ணப்பப்பதிவு நேற்று இரவு முதல் தொடங்கியுள்ளது.

    சேலம்:

    மத்திய பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு மாநில பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வு-2023 (சி.யு.இ.டி) அறிவிப்பு தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதற்கான இணையவழி விண்ணப்பப்பதிவு நேற்று இரவு முதல் தொடங்கியுள்ளது. வருகிற மார்ச் மாதம் 12-ந்தேதி வரை இணையதள வழியில் விண்ணப்பிக்கலாம்.

    தேர்வு வருகிற மே மாதம் 21-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது. விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு செய்யப்படும் பாடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் 3 ஷிப்டுகளாக தேர்வு நடத்தப்படும்.

    சேலம், நாமக்கல்

    தேர்வு நடைபெறும் நகரங்கள் மற்றும் மையங்கள் குறித்த விபரம் ஏப்ரல் மாதம் 30-ந்தேதி அறிவிக்கப்படும். தேர்வறை நுழைவுச்சீட்டை (ஹால்டிக்கெட்) மே மாதம் 2-வது வாரத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    யு.ஜி.சி. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தன் அடிப்படையில் கடந்த ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிகளில் சேர சி.யு.இ.டி. நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது . கடந்த ஆண்டு இந்த தேர்வை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த பிளஸ்-2 மாணவ- மாணவிகள் ஏராளமானோர் எழுதினர் . இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. 

    • விண்ணப்பதாரர்களின் உடல் தகுதித்தேர்வு முதலில் நடத்தப்பட்டது.
    • நாடு முழுவதும் 200 இடங்களில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும்.

    புதுடெல்லி :

    'அக்னிபாத்' திட்டத்தின் கீழ் ராணுவம் உள்ளிட்ட முப்படைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

    இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போருக்கு முதலில் உடல் தகுதித்தேர்வு, பின்னர் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது. இந்த இரண்டையும் முடித்த பிறகே எழுத்து தேர்வு எனப்படும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் இந்த முறைக்கு பதிலாக, இனிமேல் முதலில் எழுத்து தேர்வு நடத்த ராணுவம் முடிவு செய்து உள்ளது. இது தொடர்பாக பல்வேறு செய்தித்தாள்களில் ராணுவம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

    இது தொடர்பாக ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:-

    அக்னிவீரர் ஆட்சேர்ப்பு நடைமுறையில் இதுவரை, விண்ணப்பதாரர்களின் உடல் தகுதித்தேர்வு முதலில் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.

    ஆனால் இனிமேல் பொதுவான ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வு முதலில் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு பின்னர் உடல் தகுதித்தேர்வும், மருத்துவ பரிசோதனைகளும் நடக்கும். இது தேர்வு நடைமுறைகளை எளிதாக்க உதவும்.

    மேலும் வீரர்களின் அறிவாற்றல் அம்சத்தில் அதிக கவனம் செலுத்துவதை உறுதி செய்யும். மேலும் ஆட்சேர்ப்பு முகாம்களில் காணப்படும் அதிக கூட்டத்தைக் குறைத்து, எளிதாக கையாளக்கூடியதாகவும் மாற்றும்.

    இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த முறையில் வருகிற ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் 200 இடங்களில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் அவர்கள் கூறினர்.

    இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.

    • ஜே.இ.இ. தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் சிபிஎஸ்இ செய்முறை தேர்வை என்ன செய்வது என்று தவிக்கும் நிலை உள்ளது.
    • தேர்வில் பங்கேற்க 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் அடுத்து ஐ.ஐ.டி. என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து என்ஜினீயரிங் படிக்க ஜே.இ.இ. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

    அதன்படி அடுத்த கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வு 2 முறை நடத்தப்படுகிறது.

    அதில் முதல் கட்ட ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வு நாளை (24-ந்தேதி) தொடங்குகிறது. 31-ந்தேதி வரை இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 8 லட்சம் முதல் 9 லட்சம் வரை தேர்வு எழுத வாய்ப்பு உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கு மாணவர்கள் தயாராகி வருகிறார்கள்.

    2-ம் கட்ட ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு ஏப்ரல் மாதம் நடக்கிறது. முதல்கட்ட தேர்வில் பங்கேற்றவர்களும், பங்கேற்காதவர்களும் 2-ம் கட்ட தேர்வை எழுத முடியும்.

    ஜே.இ.இ. நுழைவு தேர்வு நடக்கும் நாட்களில் சில சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் செய்முறை தேர்வுகளுக்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

    எனவே ஜே.இ.இ. தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் செய்முறை தேர்வை என்ன செய்வது என்று தவிக்கும் நிலை உள்ளது.

    சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்ச்சிக்கு மொத்த மதிப்பெண்ணில் செய்முறை தேர்வு மதிப்பெண்ணும் கட்டாயம் என்பதால் இந்த தேர்வில் மாணவர்கள் பங்கேற்பது மிகவும் அவசிய மாகும்.

    எனவே ஜே.இ.இ. மெயின் தேர்வு நடைபெறும் நாட்களில் செய்முறை தேர்வுகளை நடத்தாமல் வேறு நாட்களுக்கு மாற்றும்படி மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் கணினி வழியில் தேர்வு நடைபெறும்.
    • தேர்வு முடிவுகள் https://cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதத்தில் வெளியிடப்படும்

    சென்னை:

    மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழ நுழைவுத் தேர்வுக்கான (கியூட்) தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது.

    மத்திய பல்கலைக்கழகங்களில் 2023-ம் ஆண்டிற்கான இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கியூட் பொதுத்தேர்வை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

    அதன்படி, இளங்கலை படிப்புகளுக்கான கியூட் 2023 தேர்வுகள் அடுத்த ஆண்டு மே 21 முதல் 31-ந்தேதிகள் வரை நடைபெறும் என்றும், விண்ணப்பதிவு வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என்றும், நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 3-வது வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் ஜூன் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் நடைபெறும், நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியாகும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. https://www.nta.ac.in/cuetexam என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    பொது, ஓ.பி.சி., இ.டபுள்யு.எஸ். பிரிவு விண்ணப்பத்தாரர்கள் ரூ. 650, எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ரூ.550. தேர்வு கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் செலுத்தவேண்டும்.

    கியூட் நுழைவுத் தேர்வை இந்தியாவிற்கு உள்ளே 259 நகரங்களில் உள்ள 489 தேர்வு மையங்களிலும், நாட்டிற்கு வெளியே 2 நகரங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் கணினி வழியில் தேர்வு நடைபெறும். தேர்வு முடிவுகள் https://cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதத்தில் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

    • அமராவதி நகா் சைனிக் பள்ளியில் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • முழுமையான விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உடுமலை: 

    திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகா் சைனிக் பள்ளியில் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி நிா்வாகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

    இந்தியா முழுவதும் உள்ள சைனிக் பள்ளிகளில் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான 6ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு அகில இந்திய நுழைவுத் தோ்வு 2023 ஜனவரி 8ந் தேதி நடைபெற உள்ளது. ஆன்லைனில் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசித் தேதி நவம்பா் 30ந் தேதி ஆகும். வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் மேலும் முழுமையான விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்திய அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் தேசிய தேர்வு முகமை இந்திய வேளாண் ஆராய்ச்சி படிப்பில் சேருவதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு ( AIEEA-UG)- 2022 அறிவிப்பு வெளியிட்டது.
    • சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் ஏராள மானோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

    சேலம்:

    இந்திய அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் தேசிய தேர்வு முகமை இந்திய வேளாண் ஆராய்ச்சி படிப்பில் சேருவதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு ( AIEEA-UG)- 2022 அறிவிப்பு வெளியிட்டது. சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் ஏராள மானோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

    இதையடுத்து கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் கணினி வழியாக தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் இடம் பெற்ற கேள்விகளுக்கான பதில்கள் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு ள்ளன.

    பதிவு எண், பாஸ்வேர்டு கொடுத்து தாங்கள் எழுதிய விடைத்தாள் மற்றும் என்.டி.ஏ. வழங்கியுள்ள கேள்விக்குரிய விடைகள் ஆகியவற்றை பார்வை யிடலாம். மேலும் அவற்றை பிரிண்ட் எடுத்து க்கொள்ளலாம். அவை நாளை வரை கிடைக்கும்.

    விடைக்கு றிப்பில் திருப்தி அடையாத விண்ணப்பதாரர்கள் அதையே சவால் செய்யலாம். ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து, கட்டணமாக ஒரு கேள்விக்குரிய விடைக்கு ரூ.200- செலுத்த வேண்டும். தேர்வர்களால் செய்யப்படும் சவால்கள், பாட நிபுணர்கள் குழுவால் சரிபார்க்கப்படும். சரியானவை என கண்டறியப்பட்டதால் விடைகள் அதற்கேற்ப திருத்தப்படும்.

    திருத்தப்பட்ட இறுதி விடை குறிப்பின் அடிப்படையில், முடிவு தயாரிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என என்.டி.ஏ. தெரிவித்துள்ளது.

    • 2-ம் கட்ட ேஜ.இ.இ. நுழைவு தேர்வு விண்ணப்பப்படிவத்தை திருத்தம் செய்ய மாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது.
    • முதற்கட்டமான பகுதி-1 ேஜ.இ.இ. நுழைவு தேர்வு ஏற்கனவே நடைபெற்று விட்டது.

    சேலம்:

    இந்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில், என்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு பகுதி 1, பகுதி 2 என 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதற்கட்டமான பகுதி 1 ேஜ.இ.இ. நுழைவு தேர்வு ஏற்கனவே நடைபெற்று விட்டது.

    இதையடுத்து பகுதி 2 ேஜ.இ.இ. நுழைவு தேர்வு (முதன்மை) 2022 நடத்துவதற்கான ஏற்பாடுகள் மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை சார்பில் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த நிலையில் பகுதி 2 ேஜ.இ.இ. நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தில் திருத்த செய்ய வேண்டி மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை தேசிய தேர்வு முகமை ஏற்று அவர்களில் நலன் கருதி மேலும் ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது.

    அதன்படி விண்ணப்ப தாரர்கள் தங்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் உள்ள விவரங்களில் திருத்தம் செய்ய நாளை (3 ந்தேதி) இரவு 11.50 மணி வரை கால அவகாசம் வழங்கி உள்ளது.

    விண்ணப்பப் படிவத்தில் மாணவ மாணவிகள் கவனமாக திருத்தம் செய்து பயனடையுமாறு என்.டி.ஏ. கேட்டுக்கொண்டுள்ளது. அதன்பிறகு, விவரங்களில் எந்தத் திருத்தமும் செய்ய வாய்ப்பு வழங்கப்படாது என என்.டி.ஏ. தெரிவித்துள்ளது. 

    • இளநிலை பட்டப்படிப்புகளுக்கு ெபாது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது.
    • இதில் 9 லட்சத்து 50 ஆயிரத்து 804 பேர் எழுதுகிறார்கள்.

    சேலம்:

    இந்திய அரசு கல்வித்துறை சார்பாக தேசிய தேர்வு முகமை இளநிலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான பொதுபல்கலைக்கழக நுைழவுத் தேர்வு அறிவிப்பு வெளியிட்டது.

    மாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு இந்த தேர்வுக்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்தநிலையில் மாணவ- மாணவிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களின் நலன் கருதி விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய மேலும் ஒரு வாய்ப்பு வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது-

    இளநிலை பட்டப்படிப்புகளுக்கு பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வு (சி.யு.இ.டி. யு.ஜி) -2022 நாடு முழுவதும் 554 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 13 இடங்களிலும் நடைபெற உள்ளது.

    43 மத்திய பல்கலைக்கழகங்கள், 13 மாநில பல்கலைக்கழகங்கள், 12 நிகர் நிலை பல்கலைக்கழகங்கள், 18 தனியார் பல்கலைக்கழகங்கள் என 86 பல்கலைக்கழங்களில் அட்மிஷனுக்கு 9 லட்சத்து 50 ஆயிரத்து 804 பேர் பதிவு செய்துள்ளனர்.

    வருகிற ஜூலை மாதம் 15-ந்தேதி நுழைவுத் தேர்வு தொடங்குகிறது. தொடர்ந்து 16-ந்தேதி, 19-ந்தேதி மற்றும் 20-ந்தேதியும் மற்றும் ஆகஸ்ட் மாதம் 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை கம்ப்யூட்டர் வழியாக நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் மாணவ- மாணவிகள் தங்களது ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதாவது தவறாக பதிவு செய்து இருந்தால் அதனை இன்று முதல் நாளை நள்ளிரவு 11.50 மணி வரை திருத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    இந்த இறுதி கட்ட வாய்ப்பை மாணவ- மாணவிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி உள்ளது.

    ×