search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electricity supply"

    • தண்ணீரை மோட்டரை பயன்படுத்தி திருடுவது தெரியவந்தால் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று நீா்வளத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.
    • தண்ணீா் திருட்டில் ஈடுபடுபவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

     திருப்பூர்:

    திருமூா்த்தி அணையில் இருந்து நான்காம் மண்டல பாசனத்துக்கு வருகிற 20-ந் தேதி தண்ணீா் திறக்கப்படவுள்ளது. தொகுப்பு அணைகளில் நீா் இருப்பு குறைவாக உள்ளதால் ஒரு சுற்று உயிா் நீா் மட்டுமே திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரை மோட்டரை பயன்படுத்தி திருடுவது தெரியவந்தால் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று நீா்வளத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

    இது குறித்து பல்லடம் நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் எஸ்.ஆனந்த் பாலதண்டபாணி கூறியதாவது:-

    பல்லடம் பகுதியில் 48 கிலோ மீட்டா் தொலைவுக்கு பிஏபி., பாசன வாய்க்கால் உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீா் கடை மடை வரை தடையின்றி செல்வதற்காக வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

    வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீா் கடை மடை பகுதிகளான வெள்ளக்கோவில், குண்டடம் வரை முறையாக செல்வதையும், தண்ணீா் திருட்டையும் அந்தந்தப் பகுதி பாசன சபைத் தலைவா்கள் கண்காணிக்க வேண்டும். வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரைத் திருடுவது தெரியவந்தால் மின்சாரம் துண்டிக்கப்படும். மேலும் தண்ணீா் திருட்டில் ஈடுபடுபவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    தண்ணீா் திருட்டை கண்காணிக்கும் வகையில் காவல் துறை, வருவாய் துறை, நீா்வளத் துறை மற்றும் மின்சாரத் துறை அலுவலா்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்றாா். 

    • எல்லீஸ்நகர், ஆனையூர் பகுதிகளில் மின்வினியோகம் நாளை நிறுத்தப்படுகிறது.
    • மின் செயற்பொறியாளர்கள் மோகன், ராஜா உசேன் ஆகியோர் தெரிவித்துள்ள னர்.

    மதுரை

    மதுரை எல்லீஸ்நகர் மற்றும் ஆனையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (6-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    அதன்படி எல்லீஸ்நகர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட எல்லீஸ் நகர் மெயின் ரோடு, டி.என்.எச்.பி. அபார்ட்மெண்ட்(எம்.எச்.டி, ஆர்.எச். பிளாக்), டி.என்.எஸ்.சி.பி. அபார்ட்மெண்ட்(ஏ முதல் எச் பிளாக்), போடி லைன், கென்னட் கிராஸ்ரோடு, கென்னட் ஆஸ்பத்திரி ரோடு, மஹபூப்பாளையம், அன்சாரி நகர் 1-வது தெரு முதல் 7-வது தெரு வரை, டி.பி. ரோடு, ரெயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், ஹப்பி ஹோம் 1, 2-வது தெரு, எஸ்.டி.சி. ரோடு முழுவதும், பைபாஸ் ரோடு ஒரு பகுதி, பழங்காநத்தம் சில பகுதிகள், சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையம், வசந்த நகர், ஆண்டாள் புரம் அக்ரிணி அபார்ட்மெண்டஸ், பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ்.ரோடு, மேல வெளி வீதி, மேல மாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் ரோடு, காக்கா தோப்பு, மல்லிகை வீதி மற்றும் மேல மாசி வீதி பிள்ளையார் கோவில் வரை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    ஆனையூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பாலமேடு மெயின் ரோடு, சொக்கலிங்க நகர் 1-வது தெரு முதல் 7-வது தெரு வரை, பெரியார் நகர், அசோக் நகர், புது விளாங்குடி, கூடல்நகர், ஆர்.எம்.எஸ். காலனி, சொக்கநாதபுரம், ராஜ்நகர், பாத்திமா கல்லூரி, பழைய விளாங்குடி, சக்தி நகர், துளசி வீதி, திண்டுக்கல் மெயின் ரோடு, விஸ்தார குடியிருப்பு, பரவை சந்தை, கரிசல்குளம், அகில இந்திய வானொலி நிலையம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாகுடி பிரிவு, லெட்சுமி புரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின் செயற்பொறியாளர்கள் மோகன், ராஜா உசேன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    பெரம்பலூரில் உள்ள அன்பு நகர் பகுதிக்கு சீரான மின்சாரம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் நகர விஸ்தரிப்பு பகுதிகளான 4 ரோடு அருகே உள்ள அன்பு நகர், அண்ணாமலையார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதிகளில் சிறு தொழில் நிறுவனங்களும் உள்ளன. அன்புநகர் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. மேலும், அப்பகுதிக்கு சீரான மின்சாரம் வழங்கப்படாமல் குறைவழுத்த மின்சாரமே வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அன்பு நகரில் வசிக்கும் பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று காலை பெரம்பலூர்-அரியலூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், “அன்பு நகர் பகுதிக்கு, சீரான மின்சாரம் வழங்கக்கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது பணியில் இருந்த மின்சார வாரிய அதிகாரிகள், நகரப்பகுதிக்கு வழங்கும் மின்சாரத்தை இந்த பகுதிக்கு மாற்றி கொடுத்தனர். இதனையடுத்து 6 மாதம் சீரான மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென நகரப்பகுதி மின்சாரத்தை நிறுத்தி விட்டு மீண்டும் கிராம பகுதிகளுக்கு செல்லும் மின்சாரம் அன்பு நகர் பகுதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் குறைவழுத்த மின்சாரமே வழங்கப்பட்டு வருகிறது. இதனால், அன்றாட பணிகளை கூட சரியாக செய்ய முடியவில்லை. இதனால் தான் போராட வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம் என்றனர்.

    சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மின்சார வாரிய அதிகாரிகள், சீரான மின்சாரம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதில், உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். 
    ×