search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driving license"

    • எக்காரணம் கொண்டும் ஓட்டுநர் உரிமம் விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கப்பட மாட்டாது
    • ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி முகவரியை குறிப்பிட்டிருந்தால் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக முடக்கப்படும்

    பிப்ரவரி 28 முதல் ஓட்டுநர் உரிமங்கள், பதிவுச்சான்றுகள் விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும். எக்காரணம் கொண்டும் ஓட்டுநர் உரிமம் விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கப்பட மாட்டாது என்று தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    அதில்,வாகன், சாரதி மென்பொருளில் அலைபேசி எண், முகவரி தவறாக தெரிவித்திருந்தாலும் விரைவு அஞ்சலில் அனுப்பப்படாது. ஓட்டுநர் உரிமம் தபாலில் டெலிவரி செய்யப்படாமல் திரும்ப பெறப்பட்டாலும் நேரில் ஒப்படைக்கப்பட மாட்டாது. விண்ணப்பதாரரிடமிருந்து உரிய ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட தபால் பெறப்பட்டு அதில் தான் அனுப்பப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    மேலும், ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி முகவரியை குறிப்பிட்டிருந்தால் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • நடிகர் சூரஜ் மீது பாலாரிவட்டம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
    • விளக்கம் கேட்டு நடிகர் சூரஜூக்கு மோட்டார் வாகன துறை 3 முறை நோட்டீசு அனுப்பியிருந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சூரஜ் வெஞ்சரமூடு. மலையாள திரைப்பட நடிகரான இவர் தேசிய விருது பெற்றிருக்கிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் சூரஜ் ஓட்டிச்சென்ற கார் மோதி, மஞ்சேரியை சேர்ந்த சரத்(வயது31) என்ற வாலிபர் காயமடைந்தார். இதுகுறித்து நடிகர் சூரஜ் மீது பாலாரிவட்டம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    அவர் மீது வழக்கு பதியப்பட்டதற்கான முதல் தகவல் அறிக்கை மோட்டார் வாகன துறைக்கு அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் விளக்கம் கேட்டு நடிகர் சூரஜூக்கு மோட்டார் வாகன துறை 3 முறை நோட்டீசு அனுப்பியிருந்தது. ஆனால் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. ஆகவே அவரது ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மோட்டார் வாகன துறை முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

    • 25 சேவைகள் நேற்று முதல் முழுக்க முழுக்க இணைய வழியில் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    ஓட்டுநர் உரிமம், வாகனம் சார்ந்த 31 சேவைகளை இனி இணைய வழியில் பெறலாம் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும், 54 வாகன போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்களிலும் பொதுமக்கள் தங்களது சேவைகளை எவ்வித சிரமமும் இன்றி பெறும் வகையில், கணினிமயமாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்ந்த 48 சேவைகளில் முதற்கட்டமாக ஏற்கனவே ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம், பழகுநர் உரிமம் பெறுதல் உள்ளிட்ட 6 சேவைகள் முற்றிலுமாக இணைய வழியில் கொண்டு வரப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.

    மீதமுள்ள 42 சேவைகளும் இணைய வழியில் கொண்டு வரப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவித்தார். அந்த வகையில், 25 சேவைகள் நேற்று முதல் முழுக்க முழுக்க இணைய வழியில் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, நகல் பழகுநர் உரிமம், நகல் ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமத்தில் பெயர் மாற்றம், பன்னாட்டு ஓட்டுநர் உரிமம், வாகனத்துக்கான தற்காலிக பதிவெண், அனுமதி சீட்டில் (பெர்மிட்) பெயர் மாற்றம், அனுமதி சீட்டை ஒப்படைத்தல் போன்ற 25 சேவைகளை முற்றிலும் இணைய வழியில் மட்டுமே பெற முடியும். மீதமுள்ள 17 சேவைகளையும் இணைய வழியில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தேசிய தகவல் மையம் எடுத்து வருகிறது.

    சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும். விவரங்கள் மாறுபட்டிருந்தால் சேவையை பெற இயலாது. தற்போது அமலுக்கு வந்துள்ள 31 சேவைகளையும் https://tnsta.gov.in என்ற போக்குவரத்து ஆணைய இணைய தளத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சனிக்கிழமைகளில் செயல்படும் அலுவலகங்களின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிட்டு, பொதுமக்களும் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்படுகிறது.

    சென்னை:

    வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரம் மோட்டார் வாகன அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மாநகரில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மீனம்பாக்கம் மற்றும் செங்குன்றம் உட்பட) ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு சனிக்கிழமையன்று அனைவரும் பணிபுரிய வேண்டும்.

    அதிக எண்ணிக்கையிலான ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதால், அந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட வேண்டும்.

    சனிக்கிழமைகளில் செயல்படும் அலுவலகங்களின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிட்டு, பொதுமக்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டு, மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விரிவான செய்திக்குறிப்பு வெளியிடப் பட வேண்டும்.

    இது தொடர்பாக ஏதேனும் முறைகேடுகள் மற்றும் புகார்கள் வந்தால், இந்த அறிவுறுத்தல் உடனடியாக திரும்பப் பெறப்படும்.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொன்னிறத்தில் பொறிக்கப்பட்ட அசோக சக்கரம், கருப்பு நிறுத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • புதிய வகை மாற்றம் தமிழகம் முழுவதும் விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சேலம்:

    நாடு முழுவதும் வாகன ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்று ஆகியவை ஒரே மாதிரியாக வழங்கப்படும் என இந்திய அரசு 2019-ல் அறிவித்தது. அதன்படி 12 சரகங்களாக செயல்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 91 வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்.டி.ஓ.), 54 பகுதி அலுவலகங்களில் புதிய வகை ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    முதல் கட்டமாக சென்னை, சோழிங்கநல்லூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து சேலம், வேலூர் சரகத்தை அடுத்து திருப்பூர் சரகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

    சேலம் சரகத்தில் கடந்த 11-ந்தேதி தொடங்கி, 23-ந்தேதி வரை 11 அலுவலகங்களில் மொத்தம் 2,063 புதிய வகை ஸ்மார்ட் கார்டு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    அதாவது, இந்த உரிமத்தில், தமிழ்நாடு அரசு என்பதை டி.என் என ஒரு வட்டத்துக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் பொன்னிறத்தில் பொறிக்கப்பட்ட அசோக சக்கரம், கருப்பு நிறுத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

    யூனியன் ஆப் இந்தியா என்பதை மாற்றி இந்தியன் யூனியன் டிரைவிங் லைசென்ஸ் என்றும், இஸ்யூடு பை கவர்மெண்ட் ஆப் தமிழ்நாடு என தெளிவாக பொறிக்கப்பட்டுள்ளது.

    உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பமா? இல்லையா? என்பதும், அவசர கால தொடர்பு எண் , உரிமம் பெற்றவரின் கையெழுத்து என 16 வகை மாற்றம் இடம்பெற்றுள்ளது.

    அதுபோல் பதிவுச்சான்றிதழில் (ஆர்.சி) சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த புதிய வகை மாற்றம் தமிழகம் முழுவதும் உள்ள மற்ற ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மற்றும்,பகுதி அலுவலகங்களில் விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சாகிர் உசேன் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது.
    • பயிற்சி பெற்றவர்களுக்கு சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற்று தரப்படுகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியருக்கு இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி கல்லூரி நேரத்தில் அளிக்கப்படுகிறது. கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி ஓட்டுநர் உரிமம் பெற்ற 17 மாணவிகளுக்கு ஓட்டுநர் உரிமத்தை வழங்கினார். இதில் ஒருங்கிணைப்பாளர் செய்யது அபுதாஹிர் கலந்து கொண்டார்.

    இந்த திட்டம் தொடங்கிய நாள் முதல் இதுவரை 895 மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் ஓட்டுனர் பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளனர். மிக குறைத்த கட்டணத்தில் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பயிற்சி பெற்றவர்களுக்கு சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற்று தரப்படுகிறது.  

    இந்தியாவிலேயே முதன்முறையாக கேரளாவில் கால்களால் கார் ஓட்டும் இளம்பெண்ணுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கும்படி கேரள ஐகோர்ட் போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. #keralawomandriving #drivinglicense

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜிலுமோல் மரிய தாமஸ் (வயது 26). மாற்றுத்திறனாளியான இவருக்கு இரண்டு கைகளும் இல்லை.

    அப்படி ஒரு குறை இருப்பதை பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் தனது கால் மூலம் கார் ஓட்டக்கற்றுக்கொண்டார். சக மனிதரைப்போல் இயல்பாக கார் ஓட்டினார். ஜிலுமோல் மரிய தாமசின் அபார திறமையை கண்ட அவரது நண்பர்கள் கார் வாங்கி கொடுத்தனர்.

    3 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு டிரைவிங் லை சென்ஸ் வேண்டும் என்று இடுக்கி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ஆனால் மோட்டார் வாகன சட்டப்படி கால் மூலம் வாகனம் ஓட்டுவது குற்றம் என்று அந்த விண்ணப்பதை நிராகரித்தது.

    இதனையடுத்து அவர் கேரள ஐகோர்ட்டில் தனக்கு கார் ஓட்ட லைசென்ஸ் வழங்க உத்தரவிடவேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். ஜிலுமோல் மரிய தாமசின் மனுவை ஏற்ற ஐகோர்ட் அவருக்கு லைசென்ஸ் வழங்கும்படி போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

    சமீபத்தில் அவர் வாகன சோதனை ஓட்டத்தில் பங்கேற்றார். அப்போது ஜிலுமோல் மரிய தாமஸ் கால்கள் மூலம் காரை எளிதில் இயக்குவதை கண்டு பலர் ஆச்சரியம் அடைந்தனர். ஜிலுமோல் மரிய தாமசுக்கு அடுத்த வாரம் டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்பட உள்ளது.

    இது குறித்து ஜிலுமோல் மரிய தாமஸ் கூறும்போது, இந்தியாவிலேயே கால்கள் மூலம் கார் ஓட்டி டிரைவிங் லைசென்ஸ் பெறும் முதல் நபர் நான் தான் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விடா முயற்சி, தன்னம்பிக்கையையும் நான் எப்போதும் இழக்கவில்லை. ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. 

    இவ்வாறு அவர் கூறினார். #keralawomandriving #drivinglicense

    டிரைவிங் லைசென்சு, ஆர்.சி.புத்தகம் போன்றவற்றை ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்க போக்குவரத்து துறை புதிய திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டம் 2 மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. #DrivingLicence #Tamilnadu
    சென்னை:

    போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களையும், வாகன உரிமையாளர்களையும் முறைப்படுத்தும் நடவடிக்கையை தமிழக போக்குவரத்துதுறை மேற்கொண்டு வருகிறது.

    சாலை விபத்துகளை குறைக்கவும், விதிகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து துறை முழுவதும் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சாலை போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் வகையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் படிப்படியாக மேற்கொள்ளப்படுகிறது.

    டிரைவிங் லைசென்சு, ஆர்.சி.புத்தகம் போன்றவற்றை ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

    இதுவரையில் காகிதமாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த 2 முக்கிய ஆவணங்களும் இன்னும் ஓரிரு மாதங்களில் கிரெடிட் கார்டு போன்று கையில் தழுவ உள்ளது.

    கையடக்க இந்த ஸ்மார்ட் கார்டில் வாகனங்கள் குறித்த அனைத்து தகவல்கள் மட்டுமின்றி, அதன் உரிமையாளர் குறித்த முழு விவரங்களும் இடம் பெறும்.

    “லைசென்சு” சஸ்பெண்டு செய்யப்பட்டது, அபராதம் விதிக்கப்பட்டது குறித்த தகவல்களும் குறிப்பிடப்பட்டு இருக்கும். வாகனங்களை புதுப்பிக்கும்போது இக்கார்டினை கொண்டு வந்தால் போதுமானது. அதில் உள்ள ‘ஜிப்’ மூலம் அந்த வாகனத்தின் ஆயுட் காலம் புதுப்பிக்க வேண்டிய காலம் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும்.



    விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஸ்மார்ட் கார்டு குறித்து போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி கூறியதாவது:-

    டிரைவிங் லைசென்சுக்கு ஒரு ஸ்மார்ட் கார்டும். பதிவு ஆவண சான்றிதழுக்கு (ஆர்.சி.) ஒரு ஸ்மார்ட் கார்டும் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

    இந்த கார்டில் எல்லா தகவல்களும் இடம் பெறும். ‘பார்கோடு’, புகைப்படம் போன்றவை கார்டில் இடம்பெறும். பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த ஸ்மார்ட் கார்டை வட்டார போக்குவரத்து அலுவலர்களும் போலீசாரும் ஆய்வு செய்யலாம்.

    ‘பார்கோடினை’ பார்த்தாலே வாகனங்கள் குறித்தும் உரிமையாளர் பற்றிய தகவல்களும் தெரியவரும்.

    இனி புதிதாக டிரைவிங் லைசென்சு மற்றும் வாகனங்கள் பதிவு செய்யக் கூடியவர்கள் நவீன ஸ்மார்ட் கார்டினை பெற முடியும். ஏற்கனவே பழைய முறையில் ஆவணங்களை வைத்திருப்பவர்களும் இதற்கான கட்டணம் செலுத்தி புதிய கார்டினை பெறலாம்.

    நாடு முழுவதும் இந்த ஸ்மார்ட் கார்டினை பயன்படுத்தலாம். முறைகேடு மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை எளிதாக அடையாளம் காண முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DrivingLicence #Tamilnadu
    டெல்லியில் அரசு சான்றிதழ்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கும் சேவையை கெஜ்ரிவால் அரசு தொடங்குகிறது. இந்த புதிய திட்டம் வருகிற ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
    புதுடெல்லி:

    அரசு சான்றிதழ்களான பிறப்பு, இறப்பு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட சான்றிதழ்கள் வாங்க அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும்.

    ஆனால் சான்றிதழ்கள் உடனே கிடைப்பதில்லை. அதற்காக அலைய வேண்டியதுள்ளது.

    இந்த நிலையில் டெல்லியில் அரசு சான்றிதழ்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கும் சேவையை கெஜ்ரிவால் அரசு தொடங்குகிறது.

    அதன்படி சாதி, டிரைவிங் லைசென்ஸ், அரசு சான்றிதழ்கள், மின்சார கட்டணம், குடிநீர் மற்றும் வீட்டு வரி உள்பட 100 வகையான சான்றிதழ்கள் வீட்டுக்கே சென்று வழங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    மொபைல் சகாயக் (மொபைல் நண்பர்) என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திட்டம் வருகிற ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    இந்த திட்டத்தில் அரசு வாடிக்கையாளர் சேவை மையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சான்றிதழ் தேவைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

    பின்னர் பொதுமக்கள் வீடு தேடி அரசு அலுவலர் செல்வார். அவர் டிஜிட்டல் முறையில் தேவையான ஆதாரங்களை பதிவு செய்து கொள்வார். அதன் பின் சான்றிதழ் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.


    டிரைவிங் லைசென்ஸ் வாங்குபவர்கள் வாகன தேர்வுக்காக மட்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு ஒருமுறை செல்ல வேண்டியது இருக்கும்.

    இதுகுறித்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியதாவது:-

    இந்த சேவை விடுமுறை நாட்களிலும் கிடைக்கும். இதனால் லஞ்சம் ஒழிக்கப்படும். இதன் பயன் ஒவ்வொரு பொதுமக்களுக்கும் கிடைக்கும் வகையில் மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்டு வருகிறது.

    இந்த மொபைல் நண்பன் திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அமையும் என்றார்.

    இத்திட்டம் ரூ.50 சேவை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. காணாமல் போன சான்றிதழ்களின் நகல் பெறும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. #ArvindKejriwal
    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய 82 பேரின் வாகன ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் விதிமுறை மீறி வாகனங்கள் ஓட்டப்படுவதால் தொடர்ந்து விபத்துகளும் உயிரிழப்பும் அதிகரித்து வருகின்றன.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு ஏராளமான புகார்கள் வந்தன. கலெக்டரின் உத்தரவுப்படி திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் காவேரி, ரவிக்குமார் ஆகியோர் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    கடந்த ஒரு மாதத்தில் விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய 324 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து அபராத தொகையாக ரூ. 3 லட்சத்து 10 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.

    மேலும் 25 சரக்கு வாகனம், 2 தனியார் பஸ்கள், 2 சுற்றுலா பஸ் உள்ளிட்ட 55 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.அதேபோல் 82 பேரின் வாகன ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    பொன்னேரி உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழவரம், பொன்னேரி, காட்டூர், திருப்பாலைவனம், மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிக வேகம், லைசென்ஸ், ஹெல்மேட் இல்லாமல் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட விதிமுறை மீறி வண்டி ஓட்டிய 239 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ. 23 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டன. #tamilnews
    ஓட்டுனர் உரிமத்திற்கான புதிய விதிமுறையை எதிர்த்து ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    சென்னை:

    தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘5 கி.மீ. தூரத்துக்கு 3 வேகத்தடைகள் மற்றும் 3 திருப்பங்களை கொண்ட பயிற்சி பாதையில் எரிபொருள் சிக்கனத்துடன் வாகனம் ஓட்ட பயிற்சி பெற்றிருப்பவர்களுக்கு மட்டுமே கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும் என புதிய விதிமுறையை உருவாக்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த உத்தரவு இன்று (1-ந்தேதி) முதல் அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் 5 கி.மீ. தூரத்துக்கு 3 வேகத்தடைகள் மற்றும் 3 திருப்பங்களுடன் கூடிய பயிற்சி பாதைகள் இல்லை. எனவே, மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை வருகிற 23-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
    நாட்டில் ஆதார் கார்டுடன், முக்கிய சேவைகள் அனைத்தும் இணைக்கப்பட்டு வருகிறது. அடுத்தக் கட்டமாக டிரைவிங் லைசென்சையும் ஆதார் அட்டையுடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. #AadhaarCard #License
    டேராடூன்:

    மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று டேராடூனில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    கேதர்நாத் மற்றும் பத்ரிநாத்தில் வழிபாடுகள் செய்வதற்காக வந்தேன். நாட்டில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்பட வேண்டும் என்று நான் வழிபாடு செய்தேன்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆர்.எஸ்.எஸ். பற்றி தொடர்ந்து தவறான தகவல்களை சொல்லி வருகிறார். அதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவரது தந்தை, பாட்டி, பெரிய தாத்தா எல்லாரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை அவமதித்தனர். ஆனால் இன்று அந்த இயக்கம் மறுமலர்ச்சி பெற்றுள்ளது.

    நாட்டில் ஆதார் கார்டுடன், முக்கிய சேவைகள் அனைத்தும் இணைக்கப்பட்டு வருகிறது. அடுத்தக் கட்டமாக டிரைவிங் லைசென்சையும் ஆதார் அட்டையுடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து நான் மத்திய போக்குவரத்து மந்திரி நிதின்கட்காரியுடன் பேசி ஆலோசித்து வருகிறேன். எனவே விரைவில் ஆதாருடன் டிரைவிங் லைசென்சையும் இணைக்கும் பணி தொடங்கும்.

    ஆதார் அட்டையுடன் டிரைவிங் லைசென்சை இணைப்பதன் மூலம் தவறு செய்யும் வாகன ஓட்டிகள் யாரும் தப்ப முடியாது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் விபத்துக்குள்ளாகி மக்களை கொன்று விட்டு வேறு மாநிலத்துக்கு சென்று தப்பி விடுகிறார்கள்.

    வேறு வேறு பெயர்களில் உள்ள டிரைவிங் லைசென்சு மூலம் தப்பி விடுகிறார்கள். ஆதாருடன் டிரைவிங் லைசென்சை இணைத்து விட்டால், அத்தகைய குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது.

    தவறு செய்யும் வாகன ஓட்டிகள் தங்கள் பெயரை மாற்றலாம். ஆனால் ஒரு போதும் தங்கள் கைரேகையை மாற்ற இயலாது.

    இவ்வாறு மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார். #AadhaarCard #License
    ×