search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dravupathi Murmu"

    • 30ந்தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் குடியரசு தலைவர் பங்கேற்கிறார்.
    • ஸ்ரீசைலம் கோயிலின் மேம்பாட்டு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று முதல் வரும் 30ந் தேதிவரை தெலுங்கானா மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோயிலுக்கு இன்று செல்லும் குடியரசு தலைவர், மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் மேம்பாடு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்குள்ள சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திரத்தையும் பார்வையிடுவார்.

    27ந்தேதி ஐதராபாத்தில் உள்ள கேசவ் நினைவு கல்வி சங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் குடியரசுத் தலைவர் கலந்துரையாடுகிறார். பின்னர் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமிக்கு சென்று பயிற்சியாளர்கள் மத்தியில் உரையாற்றுவார். மேலும் மிஸ்ரா தாது நிகாம் நிறுவனத்தின் வைட் பிளேட் மில்லையும் அவர் திறந்து வைக்கிறார். 

    28ந்தேதி அன்று, பத்ராசலம் சீத்தாராம சந்திர சுவாமிவாரி தேவஸ்தானத்திற்குச் சென்று பிரசாத வழங்கும் திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.மேலும் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் ஏகலைவா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளையும் அவர் திறந்து வைக்கிறார். வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ராமப்பா கோயிலுக்குச் செல்லும் குடியரசுத் தலைவர், புனரமைப்புக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வரவேற்பு நிகழ்ச்சியில் பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பு.
    • திரவுபதி முர்முவை எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்றார்.

    குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 18-ந்தேதி நடைபெறும் நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு சென்னை வந்தார்.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில்,மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், உள்ளிட்டோரும் திரவுபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    மேலும் அதிமுக, பாஜக, பாமக எம்எல்ஏக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அங்கிருந்த மேடைக்கு வந்த திரவுபதி முர்முவை எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் தமிழக பாஜக கூட்டணி கட்சிகள் தமக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று திரவுபதிவு முர்மு கேட்டுக் கொண்டார்.

    முன்னதாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புதுச்சேரி சென்ற திரவுபதி முர்மு, அம்மாநில பாஜக கூட்டணி தலைவர்களிடம் ஆதரவு திரட்டினார்.

    ×