search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "down"

    • இன்றைய சூழலில் பெரும்பாலானோர் உபயோகிக்கும் செயலி எதுவென்றால் அது இன்ஸ்டாகிராம் தான்.
    • இன்றைய இளைஞர்களுக்கு பொழுதுபோக்கு தருவதில் இன்ஸ்டாகிராம் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இன்றைய சூழலில் பெரும்பாலானோர் உபயோகிக்கும் செயலி எதுவென்றால் அது இன்ஸ்டாகிராம் தான். இன்றைய இளைஞர்களுக்கு பொழுதுபோக்கு தருவதில் இன்ஸ்டாகிராம் முக்கிய பங்கு வகுக்கிறது.

    தற்போது இரவு 8.30 மணியில் இருந்து உலகில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு இன்ஸ்டாகிராம் மெதுவாக உள்ளதாகவும், பலரும் அப்ளிகேஷனை ஓபன் செய்ய முடியாமலும் திணறிக் கொண்டு இருக்கின்றனர்.

    இதை அந்நிறுவனம் வேகமாக சரி செய்ய வேண்டும் என்று மக்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு தகவல் அனுப்பியவாறு உள்ளனர். 

    • கோவை மாவட்டத்தில் ஏராளமான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.
    • கோவையில் 500-க்கும் மேற்பட்ட பம்ப்செட் தயாரிக்கும் நிறுவனங்களும், ஆயிரத்துக்கும் அதிகமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.

    கோவை 

    தென்னிந்தியாவின் மான்செஸ்டர் மற்றும் தொழில் நகரம் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் ஏராளமான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.

    குறிப்பாக கோவை பம்ப்செட் உற்பத்தியில் உலகளவில் சிறந்து விளங்குகிறது. இந்தியா முழுவதும் வீடு மற்றும் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் பம்ப்செட்டுகளில் 55 சதவீதம் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பம்ப்செட்டுகள் ஆகும்.

    கோவையில் 500-க்கும் மேற்பட்ட பம்ப்செட் தயாரிக்கும் நிறுவனங்களும், ஆயிரத்துக்கும் அதிகமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. ஒரு லட்சம் பேர் இந்த தொழில் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

    0.5 எச்.பி(குதிரை திறன்) முதல் அதிகபட்சமாக 50 எச்.பி மற்றும் அதற்கு மேல் திறன் கொண்ட பம்ப்செட்டுகள் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படுகிறது.

    ரூ.1500 முதல் ரூ.4.5 லட்சம் வரை பம்ப்செட் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பம்ப்செட் விலை அதிகரித்துள்ளதால், விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    தென்னிந்திய என்ஜினீயரிங் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் (சீமா) கூறியதாவது:-

    பம்ப்செட் உற்பத்தி செலவு கடந்த ஒன்றைரை ஆண்டுகளில் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது இந்தியா முழுவதும் போர்வெல் பம்ப்செட் விற்பனை தான் அதிகம் உள்ளது.

    கடந்த ஜூலையில் பம்ப்செட்டுகளுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே விலை 40 சதவீதம் உயர்ந்த நிலையில் தற்போது 6 சதவீதம் சேர்த்து 46 சதவீதமாக விலை உயர்ந்துள்ளது.

    இந்த விலை உயர்வு காரணமாக நாடு முழுவதும் வீடு மற்றும் விவசாய பயன்பாட்டுக்கான பம்ப்செட் விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது. சரக்கு சேவை வரி குறைப்பு, நியாயமான விலையில் உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றை அரசு உறுதி செய்தால், நெருக்கடியில் இருந்து இத்தொழில் மீண்டும் வர உதவும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மூலப்பொருட்கள் விலை உயர்வே காரணம்

    கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனையாளர்கள் கூறுகையில், பம்ப் செட் தொழில், பாதிக்க–ப்பட்டுள்ளதற்கு மூலப்பொ–ருட்கள் விலை உயர்வு முக்கிய காரணமாகும். காப்பர் விலை 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக அதிகரித்தது. தற்போது 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எங்களை போன்ற நிறுவனங்கள் விலை ஏற்றினால், வாடிக்கையாளர்கள் பெரிய நிறுவனங்களின் பம்ப்செட்களை வாங்கி சென்று விடுகின்றனர். மூலப்பொருட்கள் விலையை குறைக்க வேண்டும். ஜி.எஸ்.டி.யை மீண்டும் 12 சதவீதமாக மாற்ற வேண்டும் என்றார்.

    • கோழிப்பண்ணை தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.
    • இதுகுறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த விஜயமங்கலம், கினிபாளையம் அரிஜன காலனியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 53). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கோழி பண்ணையில் கோழி முட்டை ஏற்றும் லோடுமேனாக வேலை செய்து வந்தார்.

    இவர் கடந்த 2 மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும் இவர் மது குடி குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் கண்ணனை ஏன் வேலைக்கு செல்லா மல் குடித்து கொண்டு இருக்கிறீர்கள் என கண்டி த்தனர்.

    இந்த நிலையில் கண்ணன் சம்பவத்தன்று இரவு கினிப்பாளையம் பட்டத்து அரசி அம்மன் கோவிலில் தூங்கிக் கொள்வதாக கூறி விட்டு சென்றார்.

    ஆனால் மறுநாள் காலை வீட்டுக்கு வரவில்லை. அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. அவர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று மதியம் ஒருவர் கிணிப்பாளையம் குமரன் நகரில் உள்ள ஒரு பொது கிணற்றில் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி கிணற்றுக்குள் இருந்த பிணத்தை மீட்டனர்.

    போலீசார் விசாரணையில் அவர் வீட்டை விட்டு வெளியே சென்ற கண்ணன் எறும் கிணற்றின் மீது தூங்கிய போது தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது. இது பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×