search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "District President"

    • மேயரின் காரை இடிப்பது போல் நவீன்குமார் தனது காரை நிறுத்தியதாக தெரிகிறது.
    • காரில் இருந்த கத்தியை எடுத்து மேயருக்கும், மணிகண்டனுக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் பகுதியில் மேயர் மகேஷ் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது கார் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது.

    அப்போது மற்றொரு காரில் நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான நவீன்குமார் மற்றும் 2 பேர் வந்தனர். மேயரின் காரை இடிப்பது போல் நவீன்குமார் தனது காரை நிறுத்தியதாக தெரிகிறது.

    இதை பார்த்த மேயரின் தபேதர் மணிகண்டன் (37) தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நவீன்குமார், தபேதர் மணிகண்டனையும், மேயரையும் தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் காரில் இருந்த கத்தியை எடுத்து மேயருக்கும், மணிகண்டனுக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதைத்தொடர்ந்து நவீன்குமார் அங்கிருந்து சென்றுவிட்டார். இதுகுறித்து மணிகண்டன் நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் நவீன்குமார் உள்பட 3 பேர் மீது கொலை மிரட்டல், அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல் உட்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவராக பழனிக்குமார் மீண்டும் பதவியேற்றார்.
    • போகலூர் அருகே உள்ள சத்திரக்குடி தனியார் மஹாலில் நடந்தது.

    போகலூர்

    தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவ லர்கள் சங்க ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் கடந்த 14-ந்தேதி யன்று அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடை பெற்று, அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப் பட்டது.

    இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க ராமநாத புரம் மாவட்ட தலைவராக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் மீண்டும் வெற்றி பெற்றார். அவரது பதவியேற்பு நிகழ்ச்சி இன்று காலை ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் அருகே உள்ள சத்திரக்குடி தனியார் மஹாலில் நடந்தது.

    மீண்டும் மாவட்ட தலைவராக பதவியேற்ற பழனிக்குமாருக்கு போகலூர் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் தொழி லதிபர் ஜே.எஸ்.லோகி தாசன், வருவாய்த்துறை அலுவலர்கள், சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • மதுரையில் பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க கூட்டம் நடந்தது.
    • மாவட்டத்தலைவர் சசிகுமார் முன்னிலை வகித்தார்.

    மதுரை

    மதுரை அனுப்பானடி யில் புறநகர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க கூட்டம் நடந்தது. பொதுக்குழு உறுப்பினர் ேசாலை மணிகண்டன் தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தலைவர் சசிகுமார் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் பேசினார். இதில் மாநில பொருளாதார பிரிவு தலைவரும், அன்னை பாத்திமா கல்லூரி சேர்மனுமான எம்.எஸ்.ஷா, முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம், நிர்வாகிகள் காயத்திரி, ஞானேஸ்வரன், அர்ச்சனா தேவி, சுரேஷ், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • துணைச் செயலாளர்களாக முத்துக்குமார், காளிமுத்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • திருப்பூர் பல்லடம், உடுமலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளை இனைத்து திருப்பூர் தெற்கு மாவட்டமாக அறிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    தமிழக முழுவதும் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் விதமாக மாவட்டத்தை தொகுதி வாரியாக பிரித்து புதிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை நடிகர் விஜய் ஒப்புதலுடன் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நியமனம் செய்து வருகிறார்.

    அதன்படி திருப்பூர் பல்லடம், உடுமலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளை இனைத்து திருப்பூர் தெற்கு மாவட்டமாக அறிவித்துள்ளனர். தெற்கு மாவட்ட தலைவராக ஜி.கே சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தெற்கு மாவட்ட செயலாளராக ராம்குமார், துணைத்தலைவராக மகாதேவன், பொருளாளராக கிருஷ்ணன், இணைச்செயலாளராக கார்த்திக், தெற்கு மாவட்ட அமைப்பாளராக கவுதம், துணைச் செயலாளர்களாக முத்துக்குமார், காளிமுத்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தெற்கு மாவட்ட தலைவர் ஜிகே சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எனது 27 வருட மக்கள் இயக்க பணியை மதித்து என்னை திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராக நியமனம் செய்த தளபதி விஜய் மற்றும் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் மக்கள் இயக்கத்திற்காக என்னுடன் பயணித்த அனைத்து நண்பர்கள் சகோதர சகோதரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • கள்ளக்குறிச்சி மாவட்ட ஐ.ஜே.கே தலைவராக பழனிசாமி நியமனம் செய்யப்பட்டார்.
    • கடந்த காலங்களில் சிறப்பாக கட்சிப் பணி செய்ததற்காக பழனிசாமியை பொறுப்பாளர்கள் பாராட்டினர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே எரவர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி, இவர் விழுப்புரம் (மேற்கு) மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவ ராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 25 -ந் தேதி சென்னையில் இந்திய ஜனநாயக கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் ஐ.ஜே.கே. கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து வின் அறிவுரையின்படியும், பச்சமுத்து எம்.பி. பரிந்துரை யின்படியும், மாநில பொதுச் செயலாளர் ஜெயசீலன், அமைப்புச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோரின் ஆலோசனை படியும் மீண்டும் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த ஐ.ஜே.கே. மாவட்ட தலைவராக பழனிசாமி நியமனம் செய்யப்பட்டார். மேலும் கடந்த காலங்களில் சிறப்பாக கட்சிப் பணி செய்ததற்காக பழனிசாமியை பொறுப்பா ளர்கள் பாராட்டினர். தொடர்ந்து சிறப்பாக பணி யாற்றும்படி ஆலோசனை வழங்கினர். கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த ஐ.ஜே.கே. மாவட்ட தலைவராக மீண்டும் நியமனம் செய்யப்பட்ட பழனிசாமியை மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×