search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dinesh Karthik"

    • இந்த ஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி வருகிறார்
    • விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரோலுக்கு இந்திய அணியில் கடும் போட்டி நிலவி வருகிறது

    ஐ.சி.சி. நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். டி20 தொடர் முடிந்ததும் உலகக் கோப்பை தொடர் துவங்க உள்ளது.

    மே 1 ஆம் தேதிக்குள் 15 பேர் அடங்கிய அணி வீரர்கள் பட்டியலை வழங்க ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், "டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி பயணிக்கும் விமானத்தில் இடம்பிடிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். வாழ்க்கையின் தற்போதைய கட்டத்தில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    இந்த ஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி வருகிறார். பெங்களூரு அணியில் கோலி (361) மற்றும் டூ பிளசிஸ்க்கு (232) அடுத்தபடியாக அதிக ரன்களை குவித்தவர் பட்டியலில் தினேஷ் கார்த்திக் (226) 3-ம் இடத்தில் உள்ளார்.

    இந்த சீசனில் சிறந்த பினிஷராக தினேஷ் கார்த்திக் உருவெடுத்துள்ளார். குறிப்பாக பெங்களூரு, ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இக்கட்டான நேரத்தில் களமிறங்கிய அவர், 35 பந்துகளில் 7 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 83 ரன்கள் எடுத்து அசத்தினார்.

    ஆனால் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரோலுக்கு இந்திய அணியில் கடும் போட்டி நிலவி வருகிறது. காயத்திலிருந்து மெதுனு பார்முக்கு திரும்பிய பண்ட், சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், கே.எல். ராகுல் ஆகியோர் அந்த போட்டியில் உள்ளனர்.

    பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா, தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கார் ஆகியோர் என்ன முடிவு எடுத்தாலும் நான் அதை மதித்து நடப்பேன். ஆனால் நான் 100% தயாராக உள்ளேன் என்பதை மட்டும் அவர்களுக்கு சொல்லி கொள்கிறேன் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். 

    • டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து டிகே என ரோகித் கிண்டாலாக கூறினார்.
    • ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் 35 பந்தில் 83 ரன்கள் எடுத்து அசத்தினார்.

    புதுடெல்லி:

    ஐபிஎல் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் மே மாதம் 26-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதனை தொடர்ந்து டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது.

    இந்தப் போட்டியில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. உலகக்கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை மே 1-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்வது தொடர்பாக தேர்வு குழு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. இதற்காக ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் வீரர்களை தேர்வு குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் மும்பை- பெங்களூரு அணிகள் மோதிய ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கை பார்த்து ரோகித், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு இன்னும் சில நாட்கள் தான் உள்ளது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து டிகே என கிண்டாலாக கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த போட்டி மட்டுமல்லாமல் அதற்கு அடுத்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டி முடிந்து விட்டது என நினைத்த நிலையில் தனி ஒருவனாக நின்று ஆட்டத்தை மாற்றினார். இருந்தாலும் அந்த போட்டியில் ஆர்சிபி தோல்வியை தழுவியது. ஆனாலும் அவரது ஆட்டம் அனைவரின் மனதில் இடம் பிடித்தது.

    ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தினேஷ் கார்த்திக்கை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தினேஷ் கார்த்திக் குறித்து ரோகித் சர்மா கூறியதாவது:- உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாட வேண்டும் என எம்எஸ் டோனியை சமாதானப்படுத்துவது கடினமாக இருக்கும். தினேஷ் கார்த்திக்கை சமாதானப்படுத்துவது எளிதாக இருக்கும் என ரோகித் கூறினார்.

    • தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 7 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • 2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக தூரம் சிக்சர் அடித்த வீரர்களில் கிளாசனை முந்தியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 287 ரன்கள் குவித்து புதிய வரலாற்று சாதனை படைத்தது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் சதமும் ஹென்ரிச் கிளாசென் அரை சதமும் விளாசினர்.

    ஹென்ரிச் கிளாசென் 31 பந்துகளில் 7 சிக்ஸ், 2 பவுண்டரி உள்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் போட்டியின் 17-வது ஓவரில் அவர் அடித்த சிக்சர் ஒன்று 106 மீ தூரம் வரை சென்றது. இதன் மூலமாக இந்த சீசனில் அதிக தூரம் சிக்சர் அடித்து வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக வெங்கடேஷ் ஐயர் அடித்த சிக்சர் 106 மீ தூரம் சென்றது. நிக்கோலஸ் பூரன் 106 மீ மற்றும் இஷான் கிஷான் 103 மீ தூரம் வரை சிக்சர் அடித்திருந்தனர்.

    இறுதியாக 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தது. இதையடுத்து கடின இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது தினேஷ் கார்த்தி களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார்.

    அவர், 35 பந்துகளில் 7 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த நிலையில், இந்தப் போட்டியில் தினேஷ் கார்த்திக் அடித்த சிக்சர் ஒன்று அதிக தூரம் வரை சென்று சாதனையை உருவாக்கியுள்ளது. 106 மீ அதிகபட்சமாக இருந்த நிலையில், தினேஷ் கார்த்திக் 108 மீ நீண்ட தூரம் சிக்சர் அடித்து கிளாசெனின் சாதனையை முறியடித்துள்ளார். இறுதியாக ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் குவித்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக ஆர்சிபி விளையாடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

    • வெற்றிக்காக போராடிய தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • சன்ரைசர்ஸ் தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டையும் மயங்க் மார்கண்டே 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டும் ரீஸ் டாப்லே 1 விக்கெட்டும் விழ்த்தினார்.

    இதனையடுத்து கடினமான இலக்குடன் ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக டுபிளிசிஸ்- விராட் கோலி களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் குவித்தது. 20 பந்தில் 42 ரன்கள் குவித்து விராட் கோலி அவுட் ஆனார்.

    அடுத்து வந்த வில் ஜேக் 7, பட்டிதார் 9, சவுரவ் சவுகான் 0, என வெளியேறினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டுபிளிசிஸ் 28 பந்துகள் சந்தித்து 62 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இதனை தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் ருத்ர தாண்டவம் ஆடினார். வெற்றிக்காக போராடிய அவர் 35 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டையும் மயங்க் மார்கண்டே 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    • அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 23 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார்.
    • தினேஷ் கார்த்திக் களத்தில் பேட்டிங் செய்த போது மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோகித் சர்மா அவரை கிண்டலடித்தார்.

    மும்பை:

    ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கோலி 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வில் ஜாக் 8 ரன்கள் என வெளியேறினர். அதனை தொடர்ந்து டுபிளிசிஸ் மற்றும் பட்டித்தார் ஆகிய இருவரும் அரை சதம் விளாசி ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர்.

    இறுதியில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 23 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். இதனால் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முன்னதாக தினேஷ் கார்த்திக் களத்தில் பேட்டிங் செய்த போது மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோகித் சர்மா அவரை கிண்டலடித்தார். அந்த வீடியோவில் சிலிப்பில் நின்று கொண்டிருந்த ரோகித் அதிரடியாக விளையாடி கொண்டிருந்த தினேஷ் கார்த்திக்கை சபாஷ் டிகே, உலகக் கோப்பை அணியில் உன்னை சேர்த்திடலாம் என கிண்டலடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    களத்தில் ரோகித் சர்மா இதுபோன்று நிறைய பேரை கிண்டலடித்துள்ளார். அது தொடர்பான வீடியோ டிரெண்டாகும். அந்த வகையில் இந்த வீடியோவும் டிரெண்டாகி வருகிறது. உலகக் கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக்கை செல்லமாக ரோகித் சர்மா திட்டுவது அந்த நாட்களில் வைரலானது.



    • நான் சென்னையைச் சேர்ந்தவன் என்பதால் சென்னை அணி என்னை வாங்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்
    • டோனியை வாங்கியதால் நான் எப்போதும் சி.எஸ்.கே. அணியில் இடம்பெற போவதில்லை என்பதை உணர்ந்தேன்.

    சென்னை:

    இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். இவர் கடந்த 2004-ல் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அறிமுகமானார். ஆனால் சர்வதேச அரங்கில் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக செயல்பட்டார். மறுபுறம் அதே காலகட்டத்தில் அறிமுகமான டோனி மிகச்சிறப்பாக விளையாடி கேப்டனாக முன்னேறினார்.

    ஐ.பி.எல். தொடரில் 2008 முதல் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக், டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, குஜராத் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். இருப்பினும் தாம் பிறந்து வளர்ந்த சொந்த ஊரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் விளையாடும் வாய்ப்பு கடைசி வரை அவருக்கு கனவாகவே போயுள்ளது.

    இந்நிலையில் 2008 ஐ.பி.எல். ஏலத்தில் டோனியை எடுத்தபோதே தமக்கு எப்போதும் சி.எஸ்.கே. அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது என்பதை புரிந்து கொண்டதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

    இது அவர் பேசியது பின்வருமாறு:-

    நான் சென்னையைச் சேர்ந்தவன் என்பதால் சென்னை அணி என்னை வாங்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் இந்த முட்டாள்தனமான எண்ணத்தை நான் கொண்டிருந்தேன். இந்தியா ஏ அணிக்காகவும், தமிழ்நாடு ரஞ்சி அணிக்காகவும் வி.பி. சந்திரசேகர்தான் என்னை தேர்வு செய்ய முக்கிய காரணமாக இருந்தார். எனவே சி.எஸ்.கே .அணியின் ஒரு அங்கமாக இருந்த அவர் என்னை ஐ.பி.எல். தொடரிலும் தேர்வு செய்வார் என்று நினைத்தேன்.

    இருப்பினும் கடைசியில் அவர் டோனியை வாங்கியதால் நான் எப்போதும் சி.எஸ்.கே. அணியில் இடம்பெற போவதில்லை என்பதை உணர்ந்தேன். ஏனெனில் நாங்கள் இருவரும் இந்திய அணியில் அங்கமாக இருந்தோம். அதில் நான் சற்று தடுமாற்றமாக இருந்தேன். எனவே டோனியுடன் என்னையும் ஒரே அணியில் சி.எஸ்.கே. தேர்வு செய்யாது என்பது எனக்குத் தெரியும். அந்த வகையில் அப்போதுதான் சி.எஸ்.கே. அணியின் ஒரு பகுதியாக நான் எப்போதும் இருக்கப் போவதில்லை என்பது எனக்கு புரிந்தது.

    மேலும் மும்பை அணி கொடுத்த மெகா ஆஃபரை வேண்டாமென்று துறந்து வெளியில் வந்தேன். என்னை பொறுத்தவரை மும்பை அணியில் நீடித்திருந்தால், நான் இன்னும் நல்ல கிரிக்கெட் வீரராக இருந்திருப்பேன். ஏனென்றால் கூக்குபரா பந்தில் பயிற்சி செய்ய முடியும்.

    ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு கூக்குபரா பந்தின் விலை ரூ.15 ஆயிரம். ஒருநாள் பயிற்சிக்கு பந்திற்காக மட்டும் ரூ.4 லட்சம் வரை செலவு செய்ய தயங்க மாட்டார்கள்.

    இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.

    நடப்பு ஐ.பி.எல். தொடருடன் தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்துள்ளார். ஐ.பி.எல். தொடர் தொடங்கி 17 சீசன்களாக தொடர்ந்து விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக், இதுவரை ஐ.பி.எல். வரலாற்றில் 2 போட்டிகளை மட்டுமே தவறவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேசிய அளவில் மிகப்பெரிய கலை மற்றும் விளையாட்டுத் திருவிழா வைப்ரன்ஸ் (VIBRANCE) ஆண்டுதோறும் வி.ஐ.டி சென்னையில் நடைபெற்று வருகிறது.
    • விழாவில் பிரபல திரைப்பட பாடகி ஷ்ரேயா கோஷல், ஜோனிதா காந்தி, ஆண்ட்ரியா, கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

    வி.ஐ.டி சென்னையில் வைப்ரன்ஸ் - VIBRANCE 2024 சர்வதேச அளவிலான கலை மற்றும் விளையாட்டு விழாவில் பிரபல திரைப்பட பாடகி ஷ்ரேயா கோஷல், பின்னணி பாடகி ஆண்ட்ரியா, பின்னணி பாடகி ஜோனிதா காந்தி, கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், பிரபல திரைப்பட நடிகர் சோனு சூத் மற்றும் DJ-க்கள் தனிகா மற்றும் லாஸ்ட் ஸ்டோரிஸ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

    விஐடி சென்னையில் நடைபெறும் சர்வதேச அளவிலான கலை திருவிழாவான வைப்ரஸின் லோகோவினை விஐடி துணைத் தலைவர் முனைவர் சேகர் விசுவநாதன் வெளியிட்டார். கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன், மாணவர் நல இயக்குநர் ராஜசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சேகர் விசுவநாதன், "தேசிய அளவில் மிகப்பெரிய கலை மற்றும் விளையாட்டுத் திருவிழா வைப்ரன்ஸ் (VIBRANCE) ஆண்டுதோறும் வி.ஐ.டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இந்த விழா மார்ச் 6,7,8,9-ம் தேதிகளில் விஐடி சென்னையில் நடைபெறுகிறது.

    இதில், ஐ.ஐ.டி. என்.ஐ டி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும், ஜப்பான், பிரேசில், இலங்கை, மியான்மர், எத்தியோப்பியா, வியட்நாம், கம்போடியா, மலேசியா, இந்தோனேசியா, போலந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

    200 வகையிலான கலை போட்டிகள், கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட 40 வகையான விளையாட்டுப் போட்டிகள் என மொத்தம் 250 போட்டிகள் நடைபெறுகிறது. மொத்தப் பரிசுத் தொகை ரூ.10 லட்சம் ஆகும்.

    முக்கிய நிகழ்வாக வைப்ரன்ஸ் முதல் நாள் நடைபெறும் விழாவில் பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பங்கேற்கிறார். பிரபல பின்னணி பாடகர் ஷ்ரேயா கோஷல் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரண்டாம் நாள் (மார்ச் 7) பிரபல பாடகி ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி, நடைபெறுகிறது.

    மூன்றாம் நாள்(மார்ச் 8) பிரிபல பாடகி ஜோனிதா காந்தியின் இசை நிகழ்ச்சி, புகழ் பெற்ற ஷ்ரே கண்ணா குழுவின் நடனமும் நடைபெறுகிறது. வைப்ரன்ஸ் நிறைவு விழாவில் (மார்ச் 9) பிரபல திரைப்பட நடிகர் சோனு சூத் மற்றும் DJ-க்கள் தனிகா மற்றும் லாஸ்ட் ஸ்டோரிஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் அவர் தெரிவித்தார்.

    • அரையிறுதியில் தமிழ்நாடு இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.
    • டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுதான் தமிழ்நாடு தோல்விக்கு முக்கிய காரணம் என பயிற்சியாளர் கருத்து தெரிவித்திருந்தார்.

    தமிழ்நாடு அணி ஏழு வருடத்திற்கு பிறகு ரஞ்சி டிராபி அரையிறுதிக்கு முன்னேறியது. மும்பை அணிக்கெதிராக கடந்த 2-ந்தேதி மும்பையில் அரையிறுதி போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங் தேர்வு செய்தார்.

    முதல் இன்னிங்சில் தமிழ்நாடு அணி 146 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சில் மும்பை 378 ரன்கள் குவித்துவிட்டது. 106 ரன்னுக்குள் மும்பை 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆனால் 9-வது வீரராக களம் இறங்கிய ஷர்துல் தாகூர் சதம் (109), 10-வது வீரராக களம் இறங்கிய தனுஷ் கோட்டியான் (89 நாட்அவுட்) சிறப்பாக விளையாட மும்பை அணி 378 ரன்கள் குவித்து விட்டது.

    பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு 2-வது இன்னிங்சிலும் 162 ரன்னில் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.

    3 நாளில் போட்டி முடிவடைந்த நிலையில் தமிழ்நாடு அணியின் கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுதான் தோல்விக்கு முக்கிய காரணம். நான் எப்போதும் நேரடியாகவே பேசுவேன். முதல் நாள் 9 மணிக்கே (டாஸ் சுண்டப்பட்ட நேரம்) நாங்கள் தோல்வியடைந்து விட்டோம் என பயிற்சியாளர் குல்கர்னி தெரிவித்திருந்தார்.

    அணி தோல்வியடையும்போது கேப்டன் மற்றும் அணி வீரர்களும் பயிற்சியாளர் நிற்க வேண்டும். ஆனால், கேப்டனை குறை கூறுவது சரியல்ல என பயிற்சியாளர் குல்கர்னிக்கு எதிராக விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழ்நாடு அணியின் முன்னாள் கேப்டனுமான தினேஷ் கார்த்திக் குல்கர்னி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் "இது மிகவும் தவறானது. பயிற்சியாளரிடம் இருந்து மிகவும் ஏமாற்றம் அளிக்கக் கூடியதாக உள்ளது. ஏழு வருடங்களுக்குப் பிறகு அணியை அரையிறுதி வரை கொண்டு சென்ற கேப்டனுக்கு ஆதரவாக இருந்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக விமர்சனம் செய்துள்ளார். ஆனால் பயிற்சியாளர் முற்றிலுமாக கேப்டன் மற்றும் அணியை பஸ்க்கு கீழ் தள்ளி விட்டுள்ளார்" என்றார்.

    • சென்சுரியன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முகமது சமியை அதிகமாக மிஸ் செய்கிறது.
    • முகமது சமி இருந்திருந்தால் சில விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்திருப்பார்.

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடர், ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.

    இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி, 67.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி இன்றைய 3-ம் நாள் உணவு இடைவெளி வரை 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 392 ரன்கள் எடுத்தது.

    இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர்.

    இந்நிலையில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமியை அதிகமாக மிஸ் செய்வதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

    சென்சுரியன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முகமது சமியை அதிகமாக மிஸ் செய்கிறது. பந்து வீச்சு படைக்கு ஒரு தலைவனாக முகமது சமி செயல்படுவார். பும்ராவுக்கு அனைத்து வகையிலும் ஆதரவாக இருப்பார். இந்த பிட்ச் பந்தின் சீம் பகுதியை பிடித்து வீசும் பவுலர்களுக்கு சாதகமானது என்பதை போல் தெரிகிறது.

    முகமது சமி இருந்திருந்தால் சில விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்திருப்பார். இந்திய அணி அவரை அதிகமாக மிஸ் செய்கிறது என்பது உறுதி. ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் 27 ஓவர்கள் வீசி 118 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளனர்.

    இன்னொரு பக்கம் சிராஜ் மற்றும் பும்ரா இருவரும் 31 ஓவர்கள் வீசி 111 ரன்களை தான் விட்டுக் கொடுத்துள்ளனர். சிராஜும் கொஞ்சம் ரன்களை வாரி வழங்கியிருந்தாலும், அவரால் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் வீச முடிந்துள்ளது.

    ஒவ்வொரு பந்தை வீசும் போது சிராஜ் அல்லது பும்ரா ஆகியோர் விக்கெட்டுக்கு அருகில் சென்று வருகின்றனர். அதுபோன்ற உணர்வை களத்தில் அளிக்கிறார்கள். ஆனால் ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் பேட்ஸ்மேன்கள் தவறு செய்வதற்காக காத்திருப்பதை போல் தெரிகிறது.

    என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • நாளைய போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.
    • உலகக் கோப்பை போட்டியில் வர்ணனையாளராக ரவி சாஸ்திரி மற்றும் தினேஷ் கார்த்திக் செயல்படுகிறார்கள்.

    இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி போல தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மிமிக்ரி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. 18 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி முதல் இடத்திலும் 2-வது இடம் முறையே இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அடுத்தடுத்து உள்ளனர்.

    நாளை முதல் இடத்துக்காக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    உலகக் கோப்பை போட்டியில் வர்ணனையாளராக ரவி சாஸ்திரி மற்றும் தினேஷ் கார்த்திக் செயல்படுகிறார்கள். கிரிக்கெட் போட்டியில் டாஸ் போடும்போது மிரட்டலாக ரவி சாஸ்திரி கமெண்ட் கொடுப்பார். அதனை சுட்டிக்காட்டி தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மிமிக்ரி செய்துள்ளார்.

    இந்த வீடியோ உலகக் கோப்பை கிரிக்கெட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. 



    • தினேஷ் கார்த்திக் 2015-ல் ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லிக்கலை திருமணம் செய்து கொண்டார்.
    • திருமணநாளான நேற்று அவரது மனைவிக்கு வேடிக்கையான மற்றும் இனிமையான செய்தி ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக். இவர் 2015-ல் ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லிக்கலை திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணநாளான நேற்று அவர் சமூக ஊடகங்களில் அவரது மனைவிக்கு வேடிக்கையான மற்றும் இனிமையான செய்தி ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

    அதில் "ஆண்டுகள் கடந்தும் நம் இருவரின் முட்டாள்தனத்தால் உண்மையான காதல் வாழ்கிறது டிகே-டிபி தின வாழ்த்துக்கள்," என்று கூறியிருந்தார்.


    இந்த டுவிட் சமூக வலைதளங்களில் டிராண்டாகி வருகிறது. இவர்களது திருமணநாளுக்கு முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படத்திற்கு திரையுலகினர் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், 'ஜெயிலர்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவராஜ் குமார் படக்குழுவிற்கும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் 'உங்கள் அன்பை என் இதயத்தில் வைத்திருப்பேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.





    ×