search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "die"

    • விட்டோரியோ இமானுவேல் தெற்கு நகரமான நேபிள்ஸில் பிறந்தார்.
    • விட்டோரியோ இமானுவேல் சுவிட்சர்லாந்தில் இன்று மறைந்தார்.

    இத்தாலியின் கடைசி மன்னரின் மகனும், சவோயின் இளவரசர் விட்டோரியோ இமானுவேல் சுவிட்சர்லாந்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 86.

    இதுதொடர்பாக, சவோய் அரச குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் "இளவரசர் விட்டோரியோ இமானுவேல் தனது குடும்பத்தினரால் சூழப்பட்ட ஜெனீவாவில் காலமானார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    1937ம் ஆண்டு, பிப்ரவரி 12ம் தேதி தெற்கு நகரமான நேபிள்ஸில் பிறந்த விட்டோரியோ இமானுவேல், 1861 முதல் 1945 வரை ஒருங்கிணைந்த இத்தாலியில் ஆட்சி செய்த அரச குடும்பத்தின் தலைவராக ஆனார்.

    அவர் 1946ல் அரியணையை ஆக்கிரமித்த, நாட்டின் கடைசி மன்னரான இரண்டாம் உம்பர்டோவின் மகன் ஆவார்.

    • சென்னை அருகே உள்ள ஒரு கோவில் திருவிழாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றனர். பின்னர் நேற்றிரவு சொந்த ஊருக்கு ஒரு சரக்கு வாகனத்தில் புறப்பட்டனர்
    • காரிப்பட்டி போலீசார் காரை பறிமுதல் செய்து அட்வின்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    கோவை மாவட்டம் செம்மேடு பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (45), இவரது மனைவி பத்மாவதி (40).இவர்களது மகள் மணிமேகலை (21), மகன் அருண்குமார் (19).

    இவர்கள் சென்னை அருகே உள்ள ஒரு கோவில் திருவிழாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றனர். பின்னர் நேற்றிரவு சொந்த ஊருக்கு ஒரு சரக்கு வாகனத்தில் புறப்பட்டனர்.

    அந்த வாகனத்தை கரூர் மாவட்டம் வேடிச்சம்மபாளையம் ஒத்தையூர் பகுதியை சேர்ந்த மணிவேல் என்பவர் ஓட்டினார். இன்று அதிகாலை 2 மணியளவில் காரிப்பட்டி தனியார் பால் நிறுவனம் அருகே வந்த போது பின்னால் வந்த செங்கல்பட்டை சேர்ந்த அட்வின்குமார் (49) என்பவர் ஓட்டி வந்த கார் திடீரென சரக்கு வாகனம் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறிய சரக்கு வாகனம் தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனத்தின் பின் பகுதியில் அமர்ந்து இருந்த பத்மாவதி, தேவராஜ், டிரைவர் மணிவேல் ஆகியோர் காயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். தகவல் அறிந்த காரிப்பட்டி போலிசார் அங்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் பத்மாவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேவராஜ் மற்றும் மணிவேலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து விசாரித்த காரிப்பட்டி போலீசார் காரை பறிமுதல் செய்து அட்வின்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • சேலம் மாவட்டம் தாரமங்கலம் 15-வது வார்டு கோழிக்கட்டானூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (70).
    • படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்த கோவிந்தம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் 15-வது வார்டு கோழிக்கட்டானூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (70). இவர் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு செல்வதற்காக கோழிக்கட்டானூர் கணக்குப்பட்டி பிரிவு ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தாரமங்கலத்தில் இருந்து ஜலகண்டாபுரம் நோக்கி அதிவேகமாக வந்த மோட்டார்சைக்கிள் கோவிந்தம்மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்த கோவிந்தம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த கோவிந்தம்மாள் நேற்று காலை உயிரிழந்தார். இது பற்றி கோவிந்தம்மாளின் மகன் சக்திவேல் (38) கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சிறுமியை நீண்ட நேரம் போராடி மீட்டனர்.

    கடலூர்:

    வேப்பூர் அருகே தரைக் கிணற்றில் தவறி விழுந்து 6வயது குழந்தை பலியானது.கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சித்தேரி காலனியை சேர்ந்தவர் மணி. கூலித் தொழிலாளி. இவரது மகள் கனிஷ்கா(வயது6).இவள் சித்தேரி அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று சிறுமி கனிஷ்காஅப் பகுதியில் உள்ள வயல் வெளியில் நடந்து சென்றார். அப்போது அங்குள்ள200 அடி ஆழ தரைக் கிணற்றில் தவறி விழுந்தாள்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அங்கு ஓடி வந்து சிறுமியை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சிறுமியை நீண்ட நேரம் போராடி மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலே சிறுமி கனிஷ்கா பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • காலை சேகரும், இவரது மனைவி திலகம் வேலைக்கு சென்றுவிட்டனர்.
    • சேகர் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ந்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வளவனூர் குடுமியான்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சேகர். தொழிலாளி இவருக்கு திருமணமாகி ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது முதல் மகள் ஜெயலட்சுமி (வயது 22) பி.எஸ்.சி பட்டதாரி. நேற்று காலை சேகரும், இவரது மனைவி திலகம் வேலைக்கு சென்றுவிட்டனர். 

    வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெயலட்சுமி வீட்டில் உள்ள மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் மாலை வீட்டிற்கு வந்த சேகர் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ந்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தூக்கில் பிணமாக தொங்கிய ஜெயலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து ஜெயலட்சுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முத்துசாமி விவசாய தொழில் செய்து வருகிறார்.
    • அங்கு நின்ற மாடு எதிர்பாராத விதமாக முதியவர் முத்துசாமியை முட்டியது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெரியம்மாள். இவரது கணவர் முத்துசாமி (வயது 70). விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக சென்றார். அப்பொழுது அங்கு நின்ற மாடு எதிர்பாராத விதமாக முதியவர் முத்துசாமியை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த முத்துசாமியை அருகில் இருந்தவர்கள் மேல் நாரியப்பனூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு பொது ஆஸ்ப த்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலன்னிற்றி முத்துசாமி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி பெரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணிகண்டன் தனியார் உணவகத்தில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
    • இறங்கச் சொன்ன போது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள சந்தவாசல்வெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் மணிகண்டன் (வயது 36) இவர் கள்ளக்குறிச்சி அருகே ரிஷிவந்தியம் பகுதியில் தனியார் உணவகத்தில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று தனது உறவினரின் காரி யத்திற்கு திருவண்ணாமலை செல்வ தற்காக ரிஷிவந்தியத்தில் இருந்து தனியார் பஸ் ஏறி தியாகதுருகம் சென்றார். தியாகதுருகம் பஸ் நிலையத்தில் அனைத்து பயணிகளும் இறங்கி சென்றனர். மணிகண்டன் மட்டும் சீட்டில் அமர்ந்திருந்தார். அப்போது சக பயணிகள் அவரை இறங்கச் சொன்ன போது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் கமலகாசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டன் உடலை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தியாகதுருகம் போலீஸ் நிலையத்திற்கு வந்த அவரது உறவினர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய ப்பட்டதாகவும், எனவே மாரடைப்பால் இறந்திரு க்கலாம் என கூறினர். இதனைத் தொடர்ந்து போலீசார் மணிகண்டன் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பஸ்சில் வந்த பயணி இறந்து போன சம்பவம் தியாகதுருகம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • நெஞ்சு வலியால் அரசு விதைப் பண்ணை மேலாளர் உயிரிழந்தார்
    • இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள ஒலகடம் கூனக்காபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வர மூர்த்தி (வயது 42). இவர் நம்பியூர் அரசு விதைப் பண்ணையில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமா கவில்லை. தனது தந்தை மற்றும் தம்பி ஆகியோருடன் வசித்து வந்தார். ஈஸ்வர மூர்த்திக்கு கடந்த ஒரு வருடமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ஈஸ்வர மூர்த்திக்கு திடீரென நெஞ்சு வலி மற்றும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அவரது குடும்பத்தினர் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ஈஸ்வர மூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அளவுக்கு அதிகமாக மது அருந்தியவர் உயிரிழந்தார்
    • புகாரின் பேரில் அறச்சலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் அவ ல்பூந்துறை தெற்கு வீதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 60). இவரது மனைவி கடந்த 9 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இவரது மகன் பூவேந்திரன் (34) மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். குணசேகரன் தனது சகோ தரி கோமதியின் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டு தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து ள்ளது. இந்த நிலையில் கட ந்த 24-ம் தேதி காலையில் வழக்கம் போல தனது சகோ தரியின் வீட்டில் சாப்பிட்டு விட்டு தனது வீட்டுக்குச் சென்ற குணசேகரன், அன்று இரவு சாப்பிடச் செல்லவில்லை என கூற ப்படுகிறது. மது அருந்தும் பழக்கம் உள்ளதால் சில நாட்களில் போதையில் சாப்பிட வராமல் தனது வீட்டிலேயே குணசேகரன் தங்கி விடுவாராம்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று குணசேகரனின் வீட் டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது குணசேகரன் உயிரிழந்த நிலையில் வீட்டினுள் கிட ந்துள்ளார். பின்னர் இதுகு றித்து மகன் பூவேந்திரன் அளித்த புகாரின் பேரில் அறச்சலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மதுரை பழங்காநத்தத்தில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது சிறுவன் தவறி விழுந்து இறந்தான்.
    • கால் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலமாக அடிபட்டது.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகர் மாணிக்கவாசகம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் கோகுலன். இவரது இரண்டு வயது மகன் பிரசின் தேவ். சிறுவனின் தந்தை வேலைக்கு சென்று விட்ட நிலையில் தாயின் பராமரிப்பில் சிறுவன் இருந்தார்.

    இந்த நிலையில் அவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப் போது திடீரென்று கால் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலமாக அடிபட்டது.

    உடனடியாக பெற்றோர் சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பிரசின்தேவ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சிறுவனின் தந்தை பிரசின்தேவ் சுப்ரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேட்டூர் அணையின் இடது கரையின் நீர்த்தேக்க பகுதியில் சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் நீரேற்று நிலையம் உள்ளது.
    • கடந்த சில ஆண்டுகளாக இங்கிருந்து சேலம் மாநகராட்சிக்கு தண்ணீர் எடுப்பதில்லை.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையின் இடது கரையின் நீர்த்தேக்க பகுதியில் சேலம் மாநக ராட்சிக்கு குடிநீர் வினியோ கம் செய்யும் நீரேற்று நிலை யம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இங்கிருந்து சேலம் மாநகராட்சிக்கு தண்ணீர் எடுப்பதில்லை.

    வாலிபர் பிணம்

    இந்த நிலையில் இந்த நீரேற்று நிலையத்தின் அடிப்பகுதியில் தலையில் காயத்துடன் வாலிபரின் பிணம் ஒன்று கிடப்பதாக கருமலைக்கூடல் போலீசா ருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு காவல் துணை கண்காணிப்பாளர் மரியமுத்து தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். வாலிபரின் உடலை கைப்பற்றி விசா ரணை மேற்கொண்டனர்.

    சாவில் சந்தேகம்

    இதில் இறந்த வாலிபர் மேட்டூரை அடுத்த மாசி லாபாளையத்தை சேர்ந்த நடராஜ் (28) என்பதும், இவர் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணி புரிந்து வந்ததும் தெரிய வந்தது. இதனிடையே நடராஜின் உறவினர்கள் அவரது சாவில் சந்தேகம் இருப்ப தாக தெரிவித்து உள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள கருமலைக்கூடல் போலீ சார், அவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென தவறி விழுந்தார்.
    • இந்த சத்தத்தை கேட்ட குடும்பத்தினர் உடனடியாக தினகர்பாபுவை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள காசக்காரனூர் கென்னடி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் தினகர்பாபு (வயது 26).

    இவர் நேற்று மதியம் வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென தவறி விழுந்தார். இந்த சத்தத்தை கேட்ட குடும்பத்தினர் உடனடியாக தினகர்பாபுவை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தினகர்பாபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×