search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dhanushkodi Athithan"

    • வண்ணார்பேட்டையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் மண்டல மற்றும் வட்டார நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் மண்டல மற்றும் வட்டார நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் பொதுச் செயலாளர்கள் கவி பாண்டியன், சொக்கலிங்க குமார், பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், மண்டல தலைவர்கள் கெங்கராஜ், பி.வி.டி. ராஜேந்திரன், ரசூல் மைதீன், அய்யப்பன், மணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் 1972 முதல் காங்கிரஸ் கட்சிக்காக ஆட்சி வரும் பல்வேறு சேவைகள் மற்றும் அவரது அர்ப்பணிப்பை பாராட்டி பொது வாழ்வில் பொன்விழா என்ற நிகழ்ச்சியை மிகப்பிரமாண்டமாக நடத்த வேண்டும், வாக்குச்சாவடிகளில் பூத் கமிட்டி, உறுப்பினர்கள் சேர்த்தல், மாநகர பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்துவது, சாலைகளை சீரமைக்க வலியுறுத்துவது, நெல்லை மற்றும் பாளை சட்டமன்ற தொகுதிகளில் 200 இடங்களில் கட்சிக்கொடி ஏற்றுதல் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×