என் மலர்
நீங்கள் தேடியது "delivery"
- தஞ்சை கோர்ட்டு ரோட்டில் உள்ள நகர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு மின்சார வாரிய தஞ்சை நகரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை கோர்ட்டு ரோட்டில் உள்ள நகர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேம்பாலம், சிவாஜி நகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன் ரோடு, தென்றல் நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆபிரகாம் பண்டிதர் நகர், திருநகர், ஆண்டாள் நகர், எஸ்.பி.குளம், விக்னேஷ்வர நகர், உமாசிவன் நகர், பி.ஆர்.நகர், ஜெபமாலைபுரம், சுந்தரபாண்டியன் நகர், டிசிடபிள்யூஎஸ் காலனி, களிமேடு-3 மற்றும் 4. மேல வீதி, தெற்கு வீதி, பெரிய கோவில், செக்கடிரோடு, மேல அலங்கம், ரெயிலடி, சாந்தபிள்ளை கேட், மகர்நோன்பு சாவடி, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வெங்கடேச பெருமாள் கோவில், சேவியர் நகர், சோழன் நகர், கல்லணை கால்வாய் ரோடு, திவான் நகர், சின்னையாபாளையம், மிஷன் சர்ச் ரோடு, ஜோதி நகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர், பர்மா பஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், ரஹ்மான் நகர், அரிசிக்கார தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, வாடிவாசல் கடைத்தெரு, பழைய மாரியம்மன் கோவில் ரோடு, ராவுத்தாபளையம், கரம்பை, சாலக்காரத்தெரு, பழைய பஸ் நிலையம், கொண்டிராஜபாளையம், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஏபி சுவிட்ச் வரை மின் வினியோகம் இருக்காது.
இதைப்போல தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள 110 கி.வோ. தொகுப்பு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவக்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, திருவேங்கடம் நகர், கரூப்ஸ் நகர், ஏ.வி.பி. அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜி நகர், மாதாக்கோட்டை, சோழன் நகர், தமிழ்ப் பல்கலைக்கழகம், வஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, ஆலக்குடி, மானோஜிப்பட்டி, ரெட்டிப்பாளையம் ரோடு, காந்திபுரம், வஹாப் நகர், சப்தகிரி நகர், ராஜலிங்கம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருவையாறு மற்றும் மேலத்திருப்பந்துருத்தி துணை மின் நிலையங்களில் வருகிற 21-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
திருவையாறு:
திருவையாறு மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் பாலமுருகன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவையாறு துணை மின்நிலையம் மற்றும் மேலத்திருப்பந்துருத்தி துணை மின் நிலையங்களில் வருகிற 21-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு நடைபெற இருப்பதால் இந்த துணை மின் நிலையங்களுக்குட்பட்ட திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டைகரூர், கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திரு ப்பூந்துருத்தி, திருவாலம்பொழில், நடுக்காவேரி, ஆச்சனூர், வைத்தியநாதன்பேட்டை, பனையூர், கடுவெளி, தில்லைஸ்தானம, பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களுர், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யா ணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் திருவையாறை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மக்களின் குறைகளை கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு குறைதீர்க்கும் கூட்டம்.
- சென்னை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
பொது விநியோகத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதனை களைவதற்கும் மக்களின் குறைகளை கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும் ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களிலும் பொது விநியோகத் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்திட சென்னை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் நாளை (சனிக்கிழமை ) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களை அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஏற்காடு அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
- இதில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
ஏற்காடு:
ஏற்காடு அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் கலந்து கொள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.சித்ரா மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு அழைப்புகள் வழங்கப்பட்டது.
இரு தரப்பினரும் விழாவிற்கு வந்ததால் யாருக்கு முன்னுரிமை கொடுப்பது? யார் சைக்கிள் வழங்குவது? என வாக்குவாதம் ஏற்பட் டது. மேலும் மேடையில் தி.மு.க. மாவட்ட கவுன் சிலர் புஷ்பராணிக்கு பொன் னாடை அணிவித்தனர்.
மேலும் ஏற்காடு டவுன் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்திக்கு பொன்னாடை அணிவிக்கவில்லை. இதனால் கோபமடைந்த அ.தி.மு.க.வினர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து தி.மு.க. வினரும் அவர்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்கவே இருதரப்புக்கும் காரசார விவாதம் ஏற்பட்டது.
இதன் காரணமாக சைக்கிள் பெற மாணவ-மாணவிகள் வெயிலிலேயே காத்திருந்து அவதிப்பட்டனர். இதை தொடர்ந்து சித்ரா எம்.எல்.ஏ. எங்களை ஒரு மணிநேரம் காக்கவைத்து அவமானப்படுத்தும் வகையில் நடப்பதா என பள்ளி தலைமை ஆசிரியை மாலதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் உடனடியாக அங்கிருந்த மாணவர்களை அழைத்து சைக்கிளை கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனைத் தொடர்ந்து தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் தாங்கள் இல்லாமலேயே விழாவை நடத்தி இருக்க லாம் எனவும், தங்களுக்கு அழைப்பு விடுத்து அவமான ப்படுத்தி யதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுப ட்டனர்.
இதனால் பள்ளி வளாகத் தில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இருதரப்பினர் பிரச்சினை காரணமாக பள்ளி மாணவர்கள் அவதிக் குள்ளாகினர்.
- வருவாய்த்துறையின் கண்காணிப்பில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டது.
- ராமநாதபுரம் கலெக்டர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறையில் 2007-ம் ஆண்டின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வருவாய்த்துறைக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு அதில் உள்ள 2007-ம் ஆண்டின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வருவாய்த்துறைக்கு ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து கலெக்டர் தெரிவிக்கையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2007 ம் ஆண்டு உள்ள மின்னணு எந்திரங்களான 771 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 310 கட்டுப்பாட்டு கருவி என மொத்தம் 1081 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வருவாய்த் துறையின் கண்காணிப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கணபதி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பொத்தனூர் பேரூராட்சி தலைவரும், பேரூர் கழக செயலாளருமான கருணாநிதி, பேரூராட்சித் துணைத் தலைவர் அன்பரசன், வழக்கறிஞர் இளங்கோ தி.மு.கவைச் சேர்ந்த சாமிநாதன்,தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கேட்பாரற்று இருந்த இருசக்கர வாகனங்கள் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- ஈரோடு மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்திற்கு பத்து வாகனங்கள் காவல்துறை மூலம் கொண்டு செல்லப்பட்டது.
அந்தியூர்:
அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டஅந்தியூர், தவிட்டுப்பாளையம், அண்ணா மடுவு, பச்சாபாளையம், புது மேட்டூர், சின்னத்தம்பி பாளையம், வெள்ளியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கேட்பாரற்று இருந்த இருசக்கர வாகனங்கள் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்படி அந்த வாகனங்கள்பற்றி விபரம் தெரியாததாலும் வாகனங்களைத் தேடி யாரும் உரிமை கோரி வராததாலும் வழக்கு பதிவு செய்யப்பட்ட வாகனங்களை மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவுப்படி ஈரோடு மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்திற்கு பத்து வாகனங்கள் காவல்துறை மூலம் கொண்டு செல்லப்பட்டது.
கொழிஞ்சாம்பாறை:
பொள்ளாச்சி அருகே உள்ள கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பெருமாட்டியை சேர்ந்தவர் கிரிஷ்குமார் (வயது 30). இவரது மனைவி சினி (25). நிறைமாத கர்ப்பிணியான இவர் பாலக்காட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 20-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. ஆனால் தாயும், குழந்தையும் ஆபத்தான நிலையில் உள்ளது. திருச்சூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லுமாறு டாக்டர்கள் கூறினர். இதனையடுத்து ஆம்புலன்சில் இருவரையும் நேற்று அழைத்துச்சென்றனர். உறவினர்களில் சிலர் தவறாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மீனாட்சிபுரம் போலீசில் புகார் செய்தனர்.
ஆம்புலன்சில் சென்றபோது தாயும், குழந்தையும் அடுத்தடுத்து இறந்தனர். மீனாட்சிபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கையில் சிகிச்சையில் தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஆயிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மனைவி காஞ்சனா (வயது 23). இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காஞ்சனா பிரசவத்துக்காக விஜயமங்கலத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கு கடந்த நவம்பர் 28-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக காஞ்சனாவை விஜயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார்கள்.
அங்கு டாக்டர் விஜயசித்ரா பரிசோதனை செய்தபோது காஞ்சனாவுக்கு லேசான வலி மட்டுமே இருந்தது. எனவே முழுமையான வலி வரும்வரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கும்படி கூறினார். அதன்படி காஞ்சனா அங்கு இருந்தார். மாலையில் காஞ்சனாவுக்கு கடுமையான வலி வந்தது. அப்போது பணி நேரம் முடிந்து டாக்டர் வெளியே சென்றுவிட்டார். செவிலியர் சுகன்யா என்பவர் மட்டுமே பணியில் இருந்தார். அவர் காஞ்சனாவுக்கு பிரசவம் பார்க்கத் தொடங்கினார்.
குழந்தையின் தலை பாதி வெளியேவந்த நிலையில் பின்னர் எந்த அசைவும் இல்லாமல் நின்றுவிட்டது. இதனால் பிரசவம் சிக்கலானதாக மாறியது. செவிலியர் சுகன்யாவுக்கு உதவிக்கு வேறு யாரும் இல்லை. எனவே அருகில் உள்ள வேறு சுகாதார நிலையங்களுக்கு காஞ்சனாவை கொண்டுசெல்ல முயற்சித்தார்.
அருகில் உள்ள திங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு காஞ்சனாவை மிக ஆபத்தான நிலையில் செவிலியர் அனுப்பிவைத்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக அங்கும் டாக்டர்கள் யாரும் இல்லை. உடனே ஆம்புலன்சு மூலம் காஞ்சனா ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டுக்கு கொண்டுசெல்லப்பட்ட சில நிமிடங்களிலேயே காஞ்சனா பரிதாபமாக இறந்தார். பல மணி நேரமாக துடித்துக்கொண்டு இருந்த பச்சிளம் குழந்தையும் பரிதாபமாக பலியானது. தாயும், குழந்தையும் மரணம் அடைந்த தகவல் காஞ்சனாவின் உறவினர்களுக்கு கடுமையான அதிர்ச்சியை அளித்தது.
விஜயமங்கலம் அரசு சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் விஜயசித்ரா, செவிலியர் சுகன்யா ஆகியோர் மீது காஞ்சனாவின் உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். முதலிலேயே ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று இருந்தால்கூட தாயையும், குழந்தையையும் காப்பாற்றி இருக்க முடியும். பணியில் அலட்சியமாக இருந்து தாய் மற்றும் குழந்தை பலிக்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறும்போது, “இதுதொடர்பாக ஆரம்பசுகாதார நிலைய டாக்டர், செவிலியர் மீது துறைரீதியாக விசாரணை நடந்துவருகிறது. விசாரணை அறிக்கை வந்ததும் அதன்பேரில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
கடவூர் ஒன்றியத்தில் தரகம்பட்டி, மாவத்தூர், பாலவிடுதி, கடவூர், ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கஜா புயலினால் பலத்த சேதம் ஏற்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க.சார்பில் நடைபெற்றது.
கடவூர் ஒன்றிய செயலாளர் பிச்சை தலைமையில், மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ்பாபு, மாவட்ட பொருளாளர் கருப்பண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 5 கிலோ அரிசி, போர்வை, குடம் உள்ளிட்ட பொருட்களை நிவாரணமாக வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமலிங்கம், துணைச் செயலாளர் வெங்கட் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உதாரணமாக, பிரசவம் முடிந்த பின் ரத்தப்போக்கு அதிகமாக ஏற்படும். ஒருசில நிமிடங்களில் இரண்டு அல்லது மூன்று லிட்டர் ரத்தம்கூட வெளியேறலாம். மருத்துவமனையில் இருந்தால், ரத்தப்போக்கின் காரணத்தைக் கண்டுபிடித்து அதற்கான தடுப்பு மருந்துகளைக் கொடுத்துவிடலாம். அப்படியும் நிற்காவிட்டால், ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை செய்து சரிசெய்ய முடியும். அதற்கும் ரத்தப்போக்கு கட்டுப்படாவிட்டால் கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை செய்வோம். ஒருபுறம் அவர்களுக்குத் தேவையான ரத்தத்தையும் ஏற்றுவோம். வீட்டில் இருந்தால் இதெல்லாம் சாத்தியமில்லை.
ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தப் பாதிப்புள்ள பெண்களுக்குப் பிரசவ நேரத்தில் பாதிப்பு அதிகமாகும். அதனால் வலிப்புகூட ஏற்படலாம். அதைத் தடுத்து நிறுத்த மருந்துகளோ, கருவிகளோ வீட்டில் இருக்காது. அதுமட்டுமின்றி பிரசவத்தின்போது, கர்ப்பப்பை பாதை , சிறுநீரகப் பாதையில் அடைப்பு அல்லது காயம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. பிறந்த உடனே குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். மருத்துவமனையில் இருந்தால் உடனடியாக வெண்டிலேட்டர், ஆம்புபேக் உதவியுடன் சரிசெய்துவிடலாம் . வீட்டில் அதற்கும் வாய்ப்பில்லை .
ஒருகாலத்தில், வீட்டிலேயே பிரசவம் பார்த்தோம் என்பது உண்மைதான். ஆனால், தற்போது பலவேறுவிதமான பிரச்சனைகள் பிரசவத்தின்போது ஏற்படுகின்றன. தாயையும் குழந்தையையும் பத்திரமாகப் பாதுகாக்க மருத்துவமனைகளை நாடுவதுதான் சிறந்த வழி.