search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dakshina mara Nadar Sangam"

    • நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் மும்பை கிளை சங்க நிர்வாகக்குழு தேர்தல் மும்பை தாராவி காமராஜர் மெமோரியல் ஹாலில் நடைபெற்றது.
    • சேர்மன் வேட்பாளர்களாக எம்.எஸ்.காசிலிங்கம் நாடார், பாக்கியநாதன் நாடார், ஆல்பர்ட் நாடார் தலைமையில் 3 அணிகள் போட்டியிட்டன.

    நெல்லை:

    நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் மும்பை கிளை சங்க நிர்வாகக்குழு தேர்தல் மும்பை தாராவி காமராஜர் மெமோரியல் ஹாலில் நடைபெற்றது. இதில் சேர்மன் வேட்பாளர்களாக எம்.எஸ்.காசிலிங்கம் நாடார், பாக்கியநாதன் நாடார், ஆல்பர்ட் நாடார் தலைமையில் 3 அணிகள் போட்டியிட்டன. மேலும் 3 பேர் செயலாளர் பதவிக்கும், 3 பேர் பொருளாளர் பதவிக்கும், 12 பேர் கமிட்டி உறுப்பினர் பதவிக்கும் போட்டியிட்டனர்.

    நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் முன்னிலையில் தேர்தல் நடந்தது. தேர்தலை தலைமை தேர்தல் ஆணையர் ஜான் கென்னடி நடத்தினார். 12 ஆயிரத்து 647 ஓட்டுகளில் 5 ஆயிரத்து 281 வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த தேர்தலில் எம்.எஸ். காசிலிங்கம் நாடார் அணி பொருளாளர் பதவியை தவிர அனைத்து பதவிகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இதில் சேர்மனாக எம்.எஸ். காசிலிங்கம் நாடார், செயலாளராக டபிள்யு. மைக்கிள் ஜார்ஜ், பொருளாளராக கே.பொன்ராஜ் நாடார் மற்றும் கமிட்டி உறுப்பினர்களாக சி.மணிகண்டன் நாடார், டபிள்யு.ஜெயக்குமார் ஜேக்கப் நாடார், வி.எஸ்.பொன் பாண்டி நாடார், பி.பால்ராஜ் நாடார் ஆகியோர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் டி.ராஜகுமார் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார், துணை செயலாளர் வி.பி. ராமநாதன் நாடார் மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் நாடார் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அனைவரும் காமராஜர் பள்ளி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    ×