search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Flag"

    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அறிவாலயம் அமைக்கப்பட உள்ளது.
    • பணிகளை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே கே.டி.சி. நகர் பகுதியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அறிவாலயம் அமைக்கப்பட உள்ளது. அதற்கு முன்பாக தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை குறிக்கும் வகையில் 100 அடி உயர திமுக கொடி கம்பம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இதில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு தலைமை ஏற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம், செயற்குழு உறுப்பினர்கள் முத்துப்பாண்டி, ஆறுமுக சாமி,சேக் தாவூது, மாவட்ட துணை செயலாளர்கள் தமிழ்ச்செல்வன்,கென்னடி கனிமொழி,பொருளாளர் ஷெரீப், பொதுக்குழு உறுப்பி னர்கள் ரஹீம்,சாமிதுரை, ரவிச்சந்திரன் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை அனைவரையும் வரவேற்றார்.ஒன்றிய செயலாளர்கள் சிவன் பாண்டியன் அழகுசுந்தரம் ரவிசங்கர் சுந்தர பாண்டியபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் பண்டாரம், செல்வகுமார், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன், கீழ போர் ஒன்றிய குழு தலைவர் காவேரி, அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேலு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள் விழா.
    • நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஏற்பாட்டில் நடைபெற்றது.

    ஊட்டி :

    தி.மு.க இளைஞர் அணி மாநில செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள் விழா குன்னூரில் இளைஞர் அணி சார்பில் நகர இளைஞர் அணி அமைப்பாளர் பத்மநாபன் ஏற்பாட்டில் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தலைமைவகித்து கொடியேற்றி, இனிப்புகள் வழங்கினார். நகர செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். நிகழ்சியில் நகர அவை தலைவர் தாஸ், நகர துணை செயலாளர் வினோத்குமார், பொருளாளர் ஜெகநாத், நகர மன்ற உறுப்பினர்கள் நாகராஜ், ஜெகநாதன் ராபர்ட், குமரேசன், கோபிசாந், சந்திரன், வசந்தி, காவேரி, செல்வி, உமா மற்றும் நிர்வாகிகள் சிவா, பாலாஜி, சுரேஷ், ஹரி, விவேக், சதீஷ், மதி, அல்தாப், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மழையையும் பொருட்படுத்தாமல் காரில் இருந்து இறங்கி வந்தார்.
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை பாரதி நகரில் கட்டப்பட்டுள்ள ராணிப்பேட்டை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதற்காக நேற்று இரவு வேலூரில் இருந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூட்டுத்தாக்கு அருகில் கட்டப்பட்டுள்ள சிஎம்சி மருத்துவமனையை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் இரவு ராணிப்பேட்டைக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார்.அவருக்கு அமைச்சர் காந்தி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அப்போது லேசான மழை தூரல் இருந்தது.அதையும் பொருட்படுத்தாமல் காரில் இருந்து இறங்கி வந்து ராணிப்பேட்டை ராஜேஸ்வரி தியேட்டர் அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட கொடி கம்பத்தில் திமுக கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார். அப்போது அங்கு கூடி இருந்த தொண்டர்கள் வாழ்த்து கோ–சங்களை எழுப்பினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான ஆர்.காந்தி, திமுக மாநில சுற்றுலா செயலாளர் வினோத் காந்தி, ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், நகர பொறுப்பாளர் பூங்காவன, நகரமன்ற உறுப்பினர்கள் வினோத், குமார், கிருஷ்ணன், அப்துல்லா மற்றும் திமுக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி கடையம் செல்லப்பிள்ளையார்குளத்தில், தி.மு.க. சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
    கடையம்:

     கடையம் அருகேயுள்ள செல்லப்பிள்ளை யார்குளத்தில், தி.மு.க. சார்பில் முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் நிர்வாகி பழக்கடை நாகராஜன் கட்சி கொடியினை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார். 

    இதில் வக்கீல் மயிலவன், ராஜபூபதி, சாத்தா, ஆறுமுகம், அருணாசலம் என்ற நாகேஷ், சங்கர், முருகன், ரவி, இசக்கி பாண்டி, கடல் மணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று 114 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியை மு.க.ஸ்டாலின் ஏற்றினார். #DMK #MKstalin #DMKFlag
    சென்னை:

    தி.மு.க.வுக்கு இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே உயரமான கொடிக்கம்பம் அண்ணா அறிவாலயத்தில் நடப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    இந்த கொடிக்கம்பத்தை மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்தார்.

    இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் 320 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி பறக்க விடப்பட்டுள்ளது. அந்த கம்பத்தை செய்த நிறுவனத்திடம்தான் இந்த 114 அடி உயர கொடி கம்பம் செய்யும் பணியும் ஒப்படைக்கப்பட்டது.

    2 ஆயிரத்து 430 கிலோ எடை இரும்பினால் கம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. 760 மி.மீ. விட்டம் கொண்டது. இந்த கொடிக்கம்பத்தை நிறுவுவதற்காக 12க்கு 12 அடி ஆழத்தில் அஸ்திவாரம் தோண்டி இயற்கை பேரிடரையும் தாங்கும் வகையில் கான்கிரீட்டினால் அடித்தளம் அமைக்கப்பட்டு கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது.


    20 க்கு 30 அடி அகலத்தில் பிரத்யேகமாக இதற்காக தி.மு.க. கொடி புனேயில் தயாரிக்கப்பட்டது. வெயில், மழை, காற்றில் சேதம் அடையாதபடி நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    கொடிக்கம்பத்தின் உச்சியில் இடிதாங்கி, விமானங்களுக்கான எச்சரிக்கை விளக்கு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. இரவிலும் ஒளிரும் வகையில் கொடிக்கம்பத்தில் ‘ஹைபீம்’ மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் இரவில் தானாக எரிந்து அணையும்படி ‘டைமர்’ வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

    மோட்டார் மூலம் கொடி ஏற்றப்பட்டது. கொடி உச்சியை அடைவதற்கு 12 நிமிடங்கள் ஆனது. அதுவரை பேன்ட்-வாத்தியங்கள் இசைக்கப்பட்டது.

    கொடி மேலே செல்ல செல்ல 5 ஆயிரம் கருப்பு- சிவப்பு நிற பலூன்களும் கூடவே பறக்கவிடப்பட்டன.

    கொடி ஏற்றப்பட்டதும் மு.க.ஸ்டாலின் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள் வாகை சந்திரசேகர், தாயகம் கவி, எழும்பூர் ரவிச்சந்திரன், எம்.ஆர்.ராமச்சந்திரன், பூங்கோதை ஆலடி அருணா உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். #DMK #MKstalin #DMKFlag
    இந்தியாவிலேயே மிக உயரமான கொடி கம்பம் திமுகவிற்கு அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது. 114 அடி உயரம் கொண்ட இந்த கொடி கம்பத்தை மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்துள்ளார். #DMK
    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முழு உருவச்சிலை அண்ணா அறிவாலயத்தில் வருகிற 16-ந் தேதி திறக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய அளவில் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இதையொட்டி பிரமாண்டமான கொடிக் கம்பம் அறிவாலய வளாகத்தில் நடப்படுகிறது. இந்தியாவில் வேறு எந்த கட்சிக்கும் இல்லாத வகையில் 114 அடி உயரத்தில் இந்த கொடி கம்பத்தை மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்துள்ளார்.

    இந்த கம்பத்தில் ஏற்றுவதற்காக 20-க்கு 30 அடி அளவிலான மிகப்பெரிய தி.மு.க. கொடி புனேயில் தயாரிக்கப்படுகிறது. இந்த கொடி காற்றில் கிழியாதபடி ‘லேமினேட்’ முறையில் தயாரிக்கப்படுகிறது. 6 மாதம் வரை பளபளப்பாக இருக்கும். அதன்பிறகு மீண்டும் புது கொடி மாற்றப்படும்.

    இந்த கம்பத்தில் கயிறு மூலம் கொடி ஏற்றப்பட மாட்டாது. கொடி ஏற்றுவதற்காக மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

    இந்த கொடிக் கம்பத்தை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். சிலை திறப்பு விழாவுக்கு முன்னதாகவே கொடி ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. #DMK #DMKFlag
    ×