search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Generalbody meeting"

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள படகு துறையை திறந்து வைக்கிறார்.
    • பின்னர் ஈச்சனாரி செல்லும் அவர் தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா பேரூரையாற்றுகிறார்.

    பொள்ளாச்சி:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 14-ந்தேதி மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.

    அவருக்கு தி.மு.க.வினர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். இதை தொடர்ந்து கோவை ரெட்பீல்ட்ஸ்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.

    மறுநாள் காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள படகு துறையை திறந்து வைக்கிறார்.

    பின்னர் ஈச்சனாரி செல்லும் அவர் தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா பேரூரையாற்றுகிறார்.

    அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சிக்கு செல்கிறார். அங்கு மாலை 5 மணியளவில் கோவை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் ஓர் ஆண்டு சாதனை விளக்க பொது கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த விழாவின் போது மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கிணத்துக்கடவு, வால்பாறை, பொள்ளாச்சி தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைய உள்ளனர்.

    மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில், பிரமாண்ட பந்தலும் அமைக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட உள்ள ஆச்சிபட்டி தனியார் மைதானத்தில், நேற்று மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, ஏற்பாடுகள் குறித்து கோவை தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜனிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் பொது மக்களுக்கு பாதுகாப்பு வசதிகள், சுகாதார வசதிகள், வாகன நிறுத்தும் இடங்கள், போக்குவரத்து வசதி, பாதுகாப்பு பணிகளுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவகைள் குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

    பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு உடுமலை செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 16-ந் தேதி அமராவதி நகர் சைனிக் பள்ளியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார்.

    • புதிய நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் பொதுக்குழு கூட்டப்படும். வழக்கமாக தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடத்தப்படுவதுண்டு.
    • ஆனால் தற்போது கொரோனா பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் வெளியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    அரசியல் கட்சிகள் உள்கட்சி தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகள் குறித்த தகவல்களை தலைமை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும் என்பது தேர்தல் விதிகளில் ஒன்றாகும்.

    அதன்படி கட்சிகள் சார்பில் உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்த நிர்வாகிகள் பட்டியல் பொதுக்குழு, செயற்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

    பாரம்பரியம் மிக்க தி.மு.க.வில் கடந்த சில மாதங்களாக உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதலில் கிளை கழக அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. பிறகு பேரூர் வாரியாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து ஒன்றிய அமைப்புகளுக்கு புதிய தி.மு.க. நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சில ஒன்றியங்களுக்கு மட்டும் நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இன்னும் சில தினங்களுக்குள் அந்த தேர்தலும் நடத்தப்பட்டு விடும்.

    அடுத்த கட்டமாக மாநகராட்சி பகுதிகளில் உள்ள செயலாளர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். அதன்பிறகு மாவட்ட செயலாளர்கள் தேர்வு நடைபெறும். தி.மு.க.வில் 70-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் பதவி உள்ளன.

    பெரும்பாலும் மாவட்ட செயலாளர்கள் போட்டியின்றி ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடைமுறைகள் அனைத்தும் இன்னும் 20 நாட்களுக்குள் நடந்து முடிந்துவிட வாய்ப்புகள் உள்ளன. உள்கட்சி தேர்தல் முடிந்ததும், புதிய நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்கப்படும்.

    புதிய நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் பொதுக்குழு கூட்டப்படும். வழக்கமாக தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடத்தப்படுவதுண்டு. ஆனால் தற்போது கொரோனா பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் வெளியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி சென்னையில் தி.மு.க. பொதுக்குழுவை எங்கு நடத்துவது என்று மூத்த தலைவர்கள் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். நல்ல இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கும் வகையில் பெரிய இடம் இருந்தால்தான் நன்றாக இருக்கும் என்று மூத்த தலைவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று பார்த்தனர்.

    குறிப்பாக வாகன நெருக்கடி ஏற்படாத வகையில் அதிக பார்க்கிங் வசதியுடன் கூடிய இடமாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    நீண்ட ஆய்வுக்கு பிறகு சென்னை அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜான்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்த பரிந்துரைக்கப்பட்டது. அந்த இடத்தை தி.மு.க. மூத்த தலைவர்கள் பார்வையிட்டனர்.

    எனவே தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அங்கு நடைபெற வாய்ப்பு உள்ளது. உள்கட்சி தேர்தல் விரைவில் நிறைவு பெறுவதால் இந்த மாத இறுதியிலேயே தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையடுத்து விரைவில் கட்சியின் பொதுக்குழு கூட உள்ளதாகவும், அந்த கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #DMK #Karunanidhi #MKStalin
    சென்னை:

    கருணாநிதியின் மரணத்தால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பது போல தி.மு.க. தலைவர் பதவியும் காலியாக உள்ளது.

    தி.மு.க.வின் அடுத்த புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார்.

    தமிழக அரசியலோடு பின்னி பிணைந்த தி.மு.க.வின் நீண்ட நெடிய வரலாற்றில் கருணாநிதிக்கு எந்த அளவுக்கு பங்களிப்பு இருக்கிறதோ அதே போன்ற சிறப்பு மு.க.ஸ்டாலினுக்கும் இருக்கிறது. தற்போது 65 வயதாகும் மு.க.ஸ்டாலின் 1967-ம் ஆண்டே அரசியலில் காலடி எடுத்து வைத்து விட்டார்.

    1975-ல் மிசா சட்டம் காரணமாக சிறையில் அடைக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் மீது அப்போதே அகில இந்திய அளவில் அனைவரது பார்வையும் திரும்பியது. 1980-ல் இளைஞரணி தலைவர் பதவியுடன் தீவிர அரசியலில் ஸ்டாலின் செயல்பட தொடங்கினார்.

    2003-ல் துணை பொதுச்செயலாளர், 2008-ல் தி.மு.க. பொருளாளர் என்று அடுத்தடுத்து கட்சியில் முன்னேற்றம் கண்ட மு.க.ஸ்டாலின் 2015-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் நமக்கு நாமே என்ற பெயரில் நடைபயணம் சென்றதன் மூலம் அனைத்து தரப்பு மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

    2016-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வெற்றிவாய்ப்பை இழந்தாலும் எதிர்க்கட்சி தலைவர் என்ற மிகப்பெரிய பொறுப்பை மு.க.ஸ்டாலின் ஏற்றார். அந்த காலகட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வின் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

    அதன் பிறகு தமிழகம் முழுவதும் கட்சிப் பணிகளை மு.க.ஸ்டாலின் முன்னேடுத்து செயல்பட்டு வருகிறார். 6 தடவை எம்.எல்.ஏ.வாக இருந்து அனுபவம் பெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு தற்போது திராவிட முன்னேற்ற கழகத்துக்கு தலைமை ஏற்கும் மிகப்பெரிய பொறுப்பும் சவாலும் வந்துள்ளது.

    இதற்காக தி.மு.க. பொதுக்குழு விரைவில் கூடுகிறது. வருகிற 19-ந்தேதி தி.மு.க. பொதுக்குழு கூடுவதாக இருந்தது. கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அது தள்ளி வைக்கப்பட்டது.

    வேறொரு நாளில் பொதுக்குழுவை கூட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றிய தகவல் தேர்தல் கமி‌ஷனுக்கும் தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் தி.மு.க. பொதுக்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கருணாநிதி மறைவு காரணமாக தி.மு.க.வில் 7 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இன்று 4-வது நாள் ஆகும். இன்னும் 3 நாள் கழித்து துக்கம் நிறைவு பெறுகிறது.

    எனவே 15-ந்தேதிக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் கட்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத்த உள்ளார். முதல் கட்டமாக நிர்வாக அமைப்பு மாற்றப்பட உள்ளது. அதற்கு வசதியாக பொதுக்குழு கூட்டப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

    பொதுக்குழு கூட்டத்தில் பல புதிய முடிவுகளை எடுக்க தி.மு.க. மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக மூத்த நிர்வாகிகள் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை அனைவருக்கும் புதிய பொறுப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    தி.மு.க. செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராகிறார். பொதுச்செயலாளராக இருக்கும் க.அன்பழகன் வயது முதிர்வு காரணமாக அந்தப் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள விருப்பம் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

    அவருக்கு பதில் முதன்மை செயலாளராக இருக்கும் துரைமுருகன் பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்பார் என்று கூறப்படுகிறது.

    க.அன்பழகனுக்கு தி.மு.க.வில் ஆலோசகர் அல்லது வழிகாட்டும் வகையில் ஏதாவது கவுரவ பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

    தி.மு.க.வின் முக்கிய பொறுப்பான பொருளாளர் பதவியை தற்போது மு.க.ஸ்டாலினே வகித்து வருகிறார். அந்த பொருளாளர் பதவியில் டி.ஆர்.பாலு நியமிக்கப்படுவார் என தெரிகிறது.

    ஆ.ராசா, ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்டோர் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எ.வ.வேலு தி.மு.க. முதன்மை செயலாளராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.


    தி.மு.க. மகளிர் அணி செயலாளராக இருக்கும் கனிமொழிக்கு கட்சியின் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம். இது தவிர தி.மு.க. இளைஞர் அணி உள்பட மற்ற அணி நிர்வாகிகளும் மாற்றி அமைக்கப்படுவார்கள், அவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படக்கூடும்.

    மாவட்ட அளவிலும் மாற்றங்கள் வரக்கூடும் என்று பேசப்படுகிறது. இந்த மாத இறுதியில் இதுபற்றி விவரங்கள் தெரிந்து விடும்.

    தி.மு.க. தலைவராக பொறுப்பு ஏற்க இருக்கும் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளில் இனி புதிய வேகத்தை எதிர்பார்க்கலாம் என்று கட்சிக்காரர்கள் சொல்கிறார்கள். அவரது கட்சி பணிகள் முற்றிலும் மாறுபட்ட பாணியில் அமையும் என்று கூறப்படுகிறது.

    அதற்கேற்ப சில புதிய அதிரடி திட்டங்களை தி.மு.க.வில் ஸ்டாலின் அறிமுகம் செய்ய இருப்பதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. விரைவில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் ஸ்டாலினின் புதிய அதிரடி திட்டங்கள் கட்சிக்கு புத்துயிர் அளித்து வலிமைப்படுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்டாலின் செய்ய இருக்கும் மாற்றங்கள் தமிழக அரசியல் பாதையில் புதிய மாற்றங்களை உருவாக்கக் கூடும். அதன் தொடர்ச்சியாக தேசிய அரசியலிலும் தி.மு.க.வின் பங்களிப்புக்கு முக்கிய இடம் இருக்கும். குறிப்பாக மத்தியில் ஏற்படும் மாற்றங்களுக்கு தி.மு.க. அச்சாணியாக மாறும் என்று வடமாநிலங்களில் இப்போதே பல்வேறு கட்சி தலைவர்களும் கருதுகிறார்கள்.

    அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ஸ்டாலின் எந்த வகையில் பணியாற்ற போகிறார் என்பது தி.மு.க. பொதுக்குழு முடிந்ததும் தெரிந்து விடும். #DMK #Karunanidhi #MKStalin
    ×