search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Died"

    • திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர் விஜயராஜ் என்ற தன் பெயரை விஜயகாந்த் என மாற்றிக் கொண்டார்.
    • 1999-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    புரட்சிக்கலைஞர் என்ற பட்டத்திற்கு பொருத்தமான விஜயராஜ் என்னும் விஜயகாந்த், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள ராமானுஜபுரம் என்னும் சிறிய கிராமத்தில் அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு 1952-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி மகனாக பிறந்தார். அவர் சிறுவயதாக இருக்கும்போதே அவரது குடும்பம் மதுரைக்கு இடம் பெயர்ந்தது.

    பிரேமலாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.


    சிறு வயது முதலே சினி மாமீதான ஈர்ப்பும், குறிப் பாக எம்.ஜி.ஆரை கலைக்கடவுளாக வழிபட்டு வந்ததன் காரணமாக பல பள்ளிகள் மாறியும் படிப்பு மீதான ஆர்வம் குறைந்தது. 10-ம் வகுப்புடன் பள்ளிப்படிப்புக்கு முடிவு கட்டினார். அதேநேரம், தான் விரும்பிப் பார்க்கும் எம்.ஜி.ஆரின் படங்களை ஒவ்வொரு காட்சிகளாக தன் நண்பர்களிடம் விவரிக்கும் அளவுக்கு சினிமா மீது அவருக்கு ஆர்வம் இருந்தது. படிப்பை நிறுத்திய பிறகு மதுரை கீரைத்துரையில் செயல்பட்டு வந்த தன் தந்தையின் அரிசி ஆலையில் பணிபுரிந்தார்.

    தனது நண்பர்களின் உந்துதலின் பெயரிலும், தனக்கிருந்த ஆர்வத்தாலும் சினிமாவில் நடிப்பது என முடிவுசெய்து சென்னைக்கு வந்தார். பல்வேறு அவமானங்கள், புறக்கணிப்புக ளுக்கு மத்தியில், 1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான `இனிக்கும் இளமை' படத்தில் நடித்து, தன் திரைப்பயணத்தை பல்வேறு சவால்களுடன் தொடங்கினார்.

    திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர் விஜயராஜ் என்ற தன் பெயரை விஜயகாந்த் என மாற்றிக் கொண்டார். `சட்டம் ஒரு இருட்டறை', `தூரத்து இடி முழக்கம்', `அம்மன்கோவில் கிழக்காலே', `உழவன் மகன்', `சிவப்பு மல்லி' என வெற் றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணி கதாநாய கனாக வலம்வந்தார். 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த், 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை புரிந்தார். 1999-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்கக் கடனை சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி வட்டியும் முதலுமாக அடைத்தார். மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.

    • ஆத்திக்கண்ணு என்ற மின் ஊழியர் மின்கம்பத்தை பழுதுபார்க்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
    • மின் ஊழியர் உயிரிழந்த துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    தூத்துக்குடி வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    ஆத்திக்கண்ணு என்ற மின் ஊழியர் மின்கம்பத்தை பழுதுபார்க்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், தூத்துக்குடி பகுதி-1 கிராமம், அம்பேத்கார் நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த ஆத்திக்கண்ணு என்பவர் நேற்று, கனமழையினால் சேதமடைந்த கிருஷ்ணராஜபுரம், ஐந்தாவது தெருவில் உள்ள மின்கம்பத்தினை பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.



     


    • பாலக்கரையில் 3 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானார்
    • பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி,

    திருச்சி கோப்பு மேல தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ், இவரது மகன் மகிழ் மித்திரன் (வயது 3) இவன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருச்சி பாலக்கரை கீழப்புதூர் பகுதியில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்து தங்கி இருந்தான்.

    இந்நிலையில் மகிழ்மித்திரன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது எர்த் வயரை தெரியாமல் தொட்டுவிட்டான். இதனால் திடீரென்று அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து மகிழ் மித்திரன் மயங்கி விழுந்தான். இதை யடுத்து சிறுவனை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    ஆனால் அங்கு சிறுவனை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாத்தா வீட்டிற்கு விருந்தாளியாக வந்த பேரன் திடீரென்று மின்சாரம் தாக்கி பிறந்த சம்பவம் பாலக்கரை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தாழ்வான இடங்களிலும், குட்டைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கவுண்டம்பாளையம்,

    கோவையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஏராளமான குளங்கள் நிரம்பி உள்ளன. தாழ்வான இடங்களிலும், குட்டைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இந்தநிலையில் கோவையில் குட்டையில் குளிக்கச் சென்ற மாணவர் ஒருவர் பலியானார். பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் பாரதி நகரைச் சேர்ந்தவர் மாணிக்கம். கூலித்தொழிலாளி. இவரது மகன் ஜெரிஜோஸ்வான் (வயது 11). அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று அந்த பகுதியில் மழை பெய்ததால் ஜெரி ஜோஸ்வான் பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டில் இருந்தார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் அவரது நண்பர்கள் சிலர் அங்குள்ள குட்டைக்கு குளிக்கச் சென்றனர். அவர்களுடன் ஜெரிஜோஸ்வானும் சென்றார்.

    குட்டையில் இறங்கி அவர் நண்பர்களுடன் குளித்துக் கொண்டு இருந்தார். ஆழமான பகுதிக்கு சென்ற ஜெரிஜோஸ்வான் நீரில் மூழ்கினார். அவரை மீட்க நண்பர்கள் போராடினர். பின்னர் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர். அவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் குட்டையில் இறங்கி தேடினர். அதற்குள் ெஜரிஜோஸ்வான் இறந்து விட்டார். அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான மாணவரின் உடலை பார்த்து அவரது பெற்றோரும், உறவினர்களும் கண்ணீர் விட்டு அழுதது உருக்குவதாக இருந்தது.

    இதற்கிடையே மழை வெள்ளத்தில் சிக்கிய மற்றொரு நபரை தீயணைப்பு வீரர்கள் 3-வது நாளாக தேடி வருகிறார்கள். கோத்தகிரி சுப்பிரமணியம் பாளையத்தை சேர்ந்தவர் பிரதாப் (வயது 18). டிப்ளமோ பட்டதாரி. கார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    பெரியநாயக்கன்பாளை யம், பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட நத்தம்பாளைம் பகுதியில் வசிக்கும் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பிரதாப் குடும்பத்தினருடன் வந்திருந்தார்.

    அங்கு ரெயில்வே பாலத்தின் அடியில் சென்ற மழை வெள்ளத்தை கடக்க முயன்றார். அப்போது வெள்ளம் அவரை இழுத்துச் சென்றது. அவரது கதி என்ன என்று தெரியவில்லை. அவரை தீயணைப்பு வீரர்கள் இன்று 3-வது நாளாக தேடினர்.

    • பின்சக்கரத்தில் துப்பட்டா சிக்கியது
    • கோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு

    கோவை,

    கோவை ராமநாதபுரம் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமாரி (வயது 51). இவர் சம்பவத்தன்று மகன் ராகுல் (25) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் காந்திபுரம் சென்றார். அங்கு அவர்கள் பொருட்கள் வாங்கிக் கொண்டு திரும்பினர்.

    அப்போது சிங்காநல்லூர் திருமண மண்டபம் அருகே சாந்தகுமாரி அணிந்திருந்த சுடிதார் துப்பட்டா இருசக்கர வாகன பின்புற சக்கரத்தில் சிக்கியது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    சாந்தகுமாரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி சாந்தகுமாரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோவை கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்
    • விபத்தில் காயம் அடைந்த ரமேஷ்பாபு, வைபவ் ஆகியோருக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சொக்கம்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவரது மனைவி சுருதி (வயது 30).

    இவர்கள் சொக்கம்பாளையம் பிரிவில் மளிகை மற்றும் பேக்கரி கடை ஆகியவற்றை வைத்து நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் ரமேஷ்பாபு சம்பவத்தன்று இரவு கடையை பூட்டி விட்டு மோட்டார் சைக்கி ளில் மனைவி சுருதி, மகன் வைபவ் ஆகியோருடன் புறப்பட்டு சென்றார். அப்போது அன்னூர்-சோமனூர் ரோட்டில் ரமேஷ் பாபு சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் மோதியது. இந்த விபத்தில் சுருதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் கணவரின் கண்முன்பாகவே சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த ரமேஷ்பாபு, வைபவ் ஆகியோரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து தகவலறிந்த தும் அன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான சுருதி உடலை மீட்டு, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அகரம்சீகூர் அருகே சாலையில் நின்ற லாரி மீது பைக் மோதி என்ஜினீயர் பலியானார்
    • மங்களமேடு போலீசார் வினோத்குமாரின் உடலை கைப்பறறி விசாரணை நடத்தி வருகின்றனர்

    அகரம்சீகூர்,

    விழுப்புரம் மாவட்டம் மண்டகப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாராமன் மகன் வினோத்குமார் (வயது 32).இவை பெரம்பலூர் மாவட்டம் விஜயகோபாலபுரத்தில் இயங்கி வரும் எம்.ஆர்.எப் தொழிற்சாலையில் சேஃப்டி என்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் வினோத்குமார் தனது சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் வாலிகண்டபுரம் சென்றார். அங்கு தனது வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார்.திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தார். அப்போது குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இவர் மோதினார்.இதில் தூக்கி வீசப்பட்ட வினோத்குமார், பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த மங்களமேடு போலீசார் வினோத்குமாரின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தையை வீசி சென்றது யார்
    • ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் வார்டு அருகே பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தையை யாரோ வீசி விட்டு சென்றனர்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் வார்டில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிறந்து 45 நாட்களேயான குழந்தை வீசி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தகாத உறவின் காரணமாக பிறந்ததால் வீசி சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தினர். ஆனால் யாரென கண்டு பிடிக்க முடியவில்லை.

    குழந்தையை டாக்டர்கள் குழந்தைகள் வார்டில் அனுமதித்து கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் குழந்தை திடீரென பரிதாபமாக இறந்தது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தீராத உடல்உபாதையால் அவதி
    • வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தற்கொலை

    கோவை,

    கோவை கீரநத்தம் அருகே உள்ள புதுப்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 36). சி.என்.சி. ஆபரேட்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    வினோத்குமாருக்கு 2 முறை குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக துடியலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    கடந்த சில நாட்களாக அவருக்கு வலி அதிகமாக காணப்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த வினோத்குமார் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு வாட்ஸ்அப் மூலமாக அவரது அக்காவுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார். அதில் நான் இருக்க மாட்டேன். வலி அதிகமாக உள்ளது. எனது குடும்பத்தை பார்த்து கொள்ளவும். இவ்வாறு அதில் அனுப்பி இருந்தார்.

    பின்னர் வினோத்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • பேச்சுமூச்சின்றி அசைவற்று இருந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
    • பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள தீத்திப்பாளையம் அண்ணல் காந்தி வீதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி லட்சுமி (வயது 60).

    தீபாவளியன்று இவர் வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது இவரை நாய் துரத்தியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த லட்சுமிக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது.

    இதற்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினார். இரவு வீட்டில் இருந்த போது அவருக்கு வலி அதிகமானது. வலி தாங்க முடியாமல் லட்சுமி வீட்டில் இருந்த 60-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை சாப்பிட்டார்.

    சிறிது நேரத்தில் மயங்கிய அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் லட்சுமியை அவரது மகன் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க போவதாக கூறி விட்டு வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    வீட்டில் இருந்த போது லட்சுமி மூச்சு பேச்சு இல்லாமல் அசைவற்று இருந்தார். உடனடியாக குடும்பத்தினர் 108 ஆம்புலன்சு ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக அவர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டியை பரிசோதனை செய்தனர். அப்போது மூதாட்டி ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.

    பின்னர் இது குறித்து பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் மோதல் விபத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பலியானார்
    • கல்லக்குடி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்

    டால்மியாபுரம்,

    திருச்சி மாவட்டம் புள்ளம்பட்டி ஒன்றியம் மேலரசூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சுணன்( வயது 58). இவர் திருச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.மேலும் இவர் மேலரசூர் ஊராட்சியில் வார்டு உறுப்பினராக இருந்தார்.

    இவர்  மேலரசூரில் இருந்து திருச்சிக்கு வேலைக்கு செல்வதற்காக தனது மொபட்டில் கல்லக்குடி நோக்கி வந்தார். அப்போது லால்குடி ஒன்றியம் நெய்குப்பை கிராமம் மேலத்தெருவை சேர்ந்த ஜெயகுமார்(53), அவரது மகன் ஜெயநித்தீஸ் (22) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் தங்களது குலதெய்வம் பூமிபாலன் கோவிலுக்கு சாமி கும்பிட கல்லக்குடி தாண்டி மால்வாய் நோக்கி சென்றுள்ளனர்.

    எதிர்பாராதவிதமாக 2 வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மொபட்டில் வந்த அர்ச்சுணன் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். இது குறித்து அவ்வழியாக சென்றவர்கள் கொடுத்ததகவலில் தகவல் அறிந்த அர்ச்சுணன் மனைவி தமிழரசி மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து அர்ச்சுணனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்ததனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயேலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தமிழரசி கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் விரைந்து வந்து அர்ச்சுணனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து உறவினரிடம் உடலை ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • புதுக்கோட்டையில் கோவிலுக்கு சொந்தமான ஜல்லிகட்டு காளை உயிரிழந்தது
    • கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் வடமலைநாடு தெம்மாவூர் முத்து மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமாக ஜல்லிக்கட்டு காளை இருந்தது.

    இந்த காளை புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி திருச்சி , தஞ்சா வூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடு பிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் பல பரிசுகளை வென்றுள்ளது.

    இந்த காளை மாடு பிடி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்து வந்தது.

    இந்நிலையில் அந்த காளைக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்கு றைவு ஏற்பட்டது. கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், காளை உயிரிழந்தது.

    இந்த காளையின் இறப்பு அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து கோவிலுக்கு கிராம மக்கள் மட்டுமின்றி, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஒன்று திரண்டு வந்து காளையின் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி னர். பின்னர் காளையின் உடல் லோடு வேனில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. தாரை தப்பட்டை முழங்க, பட்டாசு வெடித்து கிராமம் முழுவதும் காளையின் இறுதி ஊர்வலம் நடை பெற்றது. இதில் அந்த கிராமத்தினர் ஏராளமா னவர்கள் கண்ணீருடன் கலந்து கொண்டனர். பின்னர் காளையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    ×