search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DIG"

    • சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி மேட்டூர் துணை சுப்பிரண்டு அலுவ லகத்தில் ஆய்வு செய்தார்.
    • மேட்டூர் போலீஸ் பாய்ஸ் கிளப் உள்விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார்.

    மேட்டூர்:

    சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி மேட்டூர் துணை சுப்பிரண்டு அலுவ லகத்தில் ஆய்வு செய்தார்.

    மேட்டூர் துணை சுப்பி ரண்டு மரியமுத்து கட்டுப்பாட்டில் இருக்கும் மேச்சேரி போலீஸ் நிலையம், கருமலை கூடல் போலீஸ் நிலையம், மேட்டூர் போலீஸ் நிலையம், கொளத்தூர் போலீஸ் நிலையம், மற்றும் மேட்டூர் பெண்கள் போலீஸ் நிலை யம்,ஆகிய போலீஸ் நிலை யங்களில் உள்ள நிலுவை யில் உள்ள வழக்குகள், ஆவணங்கள் பற்றியும் ஆய்வு செய்தார்.மேட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நிலவரங்களை பற்றி கேட்ட றிந்தார். மேலும் மேட்டூர் போலீஸ் பாய்ஸ் கிளப் உள்விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார்.

    பள்ளி மாணவ, மாணவி கள் சிலம்பம் சுற்றி சிறப்பாக வர வேற்றனர். பின்னர் பள்ளி குழந்தைகளுடன் கேரம்போர்ட் விளையாடி மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் மாணவ, மாணவி களுக்கு பரிசு வழங்கி னார். இந்த நிகழ்ச்சியில் மேட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • குற்ற வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது.
    • மொத்தம் 37 மனுக்கள் விசாரிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்–ப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அவினாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம், காங்கயம் ஆகிய 5 உட்கோட்டங்களிலும் காவல்துறை மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் புதன்கிழமைதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து குற்ற வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நேற்று கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மனுக்களை பெற்று அதற்கு உரிய நடவடிக்கை மற்றும் தீர்வு காண வழிவகை செய்யப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உடனிருந்தார். இந்த மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாமில் 22 மனுக்கள் மற்றும் உட்கோட்டங்களில் நடத்தப்பட்ட முகாமில் 15 மனுக்கள் என மொத்தம் 37 மனுக்கள் விசாரிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    • போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
    • குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து, வாழ்க்கையில் முன்னேற பெற்றோர் அரும்பாடுபடுகின்றனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் போலீசார் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாகச்சென்று அங்கு மாணவ, மாணவிகளிடையே போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.அவ்வகையில் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. உடுமலை கல்வி மாவட்ட அலுவலர் பழனிசாமி, தலைமை வகித்தார்.கோவை சரக டி.ஐ.ஜி., முத்துசாமி பேசியதாவது:-

    குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து, அவர்கள் வாழ்க்கையில் முன்னேற பெற்றோர் அரும்பாடுபடுகின்றனர்.ஆனால் பெற்றோர்களின் உழைப்பை சிதைக்கும் வகையில் சமூக விரோத நட்புகள் வாயிலாக போதைக்கு அடிமையாகி இளைஞர்கள் சிலர், தவறான பாதைக்குச்செல்கின்றனர்.போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை இழந்து வருகின்றனர்.

    சமீபகாலமாக இளைஞர்களிடம் கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளது.இத்தகைய போதைப்பொருட்களை உட்கொள்வதால் உடல் பலவீனம் அடைந்து பசியின்மை ஏற்படுவதுடன் எந்தவொரு பணியையும் செய்ய முடியாது. ஞாபக மறதி அதிகரிக்கும்.படிக்கும் காலத்தில் நல்ல நண்பர்களைத்தேர்ந்தெடுங்கள். போதைப்பொருட்கள் பயன்பாட்டை தடுக்க அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு வருகின்றனர். இளைஞர்கள் எச்சரிக்கையாக செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    திருமலை அருகே போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த இன்ஸ்பெக்டரை டிஐஜி சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
    திருமலை:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பீலேரு பகுதியை சேர்ந்தவர் சம்யுக்தா (வயது 27). இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்னை நிலவியது. இதனால் கணவரின் குடும்பத்தார் மீது பீலேரு போலீஸ் நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சம்யுக்தா புகார் அளித்தார்.

    அப்போது அங்கு இன்ஸ்பெக்டர் தேஜோமூர்த்தி இருந்தார். புகாரை பெற்ற இன்ஸ்பெக்டர் இளம்பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கி கொண்டார்.

    அதன் பின்பு இளம்பெண்ணுக்கு போனில் பேசிய இன்ஸ்பெக்டர் உனக்கு சாதகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் என்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று செல்போனில் பேசி வந்தார். வாட்ஸ்- அப்பிலும் தகவல் அனுப்பியுள்ளார். வீட்டுக்கும் சென்று அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட தேஜோமூர்த்தி திருமலை பிரம்மோற்சவ விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளேன். அதனால் எனக்கு இங்கு ரூம் கொடுத்து உள்ளனர். உடனே புறப்பட்டு திருமலைக்கு வரவேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளார்.

    இன்ஸ்பெக்டரின் தொல்லை அதிகரித்ததால் ஆவேசமடைந்த சம்யுக்தா திருப்பதிக்கு வந்து டி.ஐ.ஜி. சீனிவாசராவை சந்தித்து இன்ஸ்பெக்டர் செல்போனில் பேசிய ஆடியோ மற்றும் வாட்ஸ் அப்பில் அனுப்பிய தகவலை கொடுத்து புகார் செய்தார்.

    இதுகுறித்து விசாரணை நடத்திய டி.ஐ.ஜி. சீனிவாசராவ் இன்ஸ்பெக்டர் தேஜோ மூர்த்தியை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் தலைமறைவாகி விட்டார். #tamilnews
    ஊட்டியில் நடுரோட்டில் இடி விழுந்ததில் ரோட்டின் நடுவில் 15 அடி ஆழத்தில், 12 அடி அகலத்தில் ‘திடீர்’ பள்ளம் உண்டானது. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை காரணமாக முக்கிய அணைகள், ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பிய நிலையில் உள்ளது. நேற்று மாலை ஊட்டி அருகே உள்ள எப்பநாடு பகுதியில் மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென எப்பநாடு-கொடரெட்டி ரோட்டில் இடி தாக்கியது. இதில் திடீர் பள்ளம் ஏற்பட்டு அதில் இருந்து நிலத்தடி நீர் பொங்கி வெளியே வந்தது.

    இதனை பார்த்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஆச்சர்யமடைந்தனர். சிறிது நேரத்தில் தண்ணீர் நின்றது. பின்னர் பொதுமக்கள் பார்த்த போது இடி விழுந்ததில் ரோட்டின் நடுவில் 15 அடி ஆழத்தில், 12 அடி அகலத்தில் பள்ளம் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனை பார்த்து பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இரவு நேரம் ஆகிவிட்டதாலும் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வந்ததாலும், உடனடியாக பள்ளத்தை மூட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே பொதுமக்கள் மற்றும் வன விலங்குகள் பள்ளத்தில் விழுந்து விடாதவாறு தடுப்புகள் அமைத்து இரும்பு தகடால் பள்ளத்தை மூடினர்.தொடர்ந்து இன்று காலை முதல் பள்ளத்தை மணல் போட்டு மூடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



    ×