search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Councilors"

    • பொதுமக்கள் பலரும் தங்கள் புகார்களை தெரிவிப்பதற்காக கூட்ட அரங்கிற்கு வந்திருந்தனர்.
    • போராட்டத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெறும் என்று மாநகராட்சி சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து பொதுமக்கள் பலரும் தங்கள் பகுதிக்கான புகார் களை தெரிவிப்பதற்காக மனுக்களுடன் மாநகராட்சி குறைதீர் கூட்ட அரங்கிற்கு வந்திருந்தனர்.

    ஆனால் மனுக்களை பெற்றுக் கொள்வதற்கு மேயர், துணை மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் என யாரும் அங்கு வரவில்லை. இதனால் சில மணி நேரங்கள் அங்கே பொது மக்கள் காத்திருந்த நிலையில் தி.மு.க. கவுன்சி லர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் கவுன்சிலர்களும் மனு அளிக்க வந்தபோது அவர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • அரியலூர் நகராட்சி அலுவலக கூட்ட மன்றத்தில் நகர்மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் சாந்தி கலைவா ணன் தலைமையில் நடை பெற்றது.
    • பொதுமக்களுக்கு இடையூராக சுற்றிதிரியும் கால்நடைகளை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    அரியலூர்

    அரியலூர் நகராட்சி அலுவலக கூட்ட மன்றத்தில் நகர்மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் சாந்தி கலைவா ணன் தலைமையில் நடை பெற்றது.

    நகராட்சி ஆணையர் (பொறுப்பு), நகராட்சி பொறியாளர்விஜய்கார்த்திக், நகர்மன்ற துணைதலைவர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜேசுமேரி, செல்வராணி, சத்தியன்,கண்ணன்,ரேவதி, மகாலெட்சுமி, இன்பவள்ளி,முகமது இஸ்மாயில், மலர்கொடி,வெங்கடாஜலபதி,ஜெயந்தி,ராணி,ராஜேஸ்,தீபா, புகழேந்தி, சுகாதார ஆய்வாளர் தர்மராஜ், வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன்,நகராட்சி மேற்பார்வையாளர் காசிநாதன், இளநிலை உதவியாளர் நல்லதம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சிக்குட்பட்ட இடங்களில் சரிவர குப்பைகள் அள்ளுவதில்லை. சாக்கடை நீர் தேங்கி நிற்கின்றது. கொள்ளிடம் கூட்டுகுடி நீர் சரிவர விநியோகிப்பதில்லை. பாதாள சாக்கடை திட்டத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு இடையூராக சுற்றிதிரியும் கால்நடைகளை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    இதற்கு ஆணையர் விஜய கார்த்திக் உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நகராட்சி பகுதியில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்க உடனடியாக நட டிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

    • ரூ.13 கோடி செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கூட்டத்தில் 70 பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் சாதாரண நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி தலைைம தாங்கினார். துணைத் தலைவர் தாமா செந்தில்குமார் மற்றும் பொறியாளர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர். இதில் 21 கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வால்பாறை பகுதியில் நீண்ட நாள் கிடப்பில் இருந்த 12 மற்றும் 13-வது வார்டுக்கு உட்பட்ட ஊசிமலை பகுதி மற்றும் வெள்ளமலை பகுதியில் 13 கிலோமீட்டர் தொலைவு வரை ரூ.13 கோடி செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் வால்பாறை பகுதியில் சில தினங்களுக்கு முன்பு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஆற்றில் மூழ்கி இருந்ததை அடுத்து அப்பகுதியில் மக்கள் யாரும் செல்லாதவாறு கம்பி வேலி அமைத்து, அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிப்பது, வால்பாறையில் 20 இடங்களில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் பணிகள் மேற்கொள்ளும் விதமாக மொத்தம் 70 பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதனை தொடர்ந்து பேசிய கவுன்சிலர்கள், வால்பாறை பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் துவங்கியுள்ள நிலையில் குடியிருப்பு பகுதியில் தெரு விளக்கு அமைக்க வேண்டும்.

    பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். 17-வது வார்டு முடிஷ் பகுதியில் புதிய பஸ் நிறுத்தம் கட்டி தர வேண்டும் படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்காவிற்கு குறைந்த கட்டணத்தில் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    • கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலின் அறிவித்துள்ள மாதாந்திர ஊதியத்திற்கு நன்றி தெரிவித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • தங்கள் வார்டு பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைநது வருகின்றனர் என்று கவுன்சிலர்கள் கூறினர்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி மன்ற சாதாரண கூட்டம் நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணை சேர்மன் சங்கரா தேவி முருகேசன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சுகந்தி தீர்மானம் குறித்து விளக்கி கூறி வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் நகராட்சி சேர்மன், துணைச் சேர்மன், கவுன்சிலர்களுக்கு, முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலின் அறிவித்துள்ள மாதாந்திர ஊதியத்திற்கு நன்றி தெரிவித்து தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், கவுன்சிலருமான ஜெயபாலன் தீர்மானம் முன்மொழிந்தார் அதனை தொடர்ந்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பின்னர் தங்கள் வார்டு பகுதியில் குடிநீர் வினியோகம் சீராக வழங்கப்படவில்லை எனவும், சரிவர தண்ணீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைவதாகவும், சாலை வசதி மற்றும் கட்டிட அனுமதி வழங்கப்படாதது குறித்தும், புதிய நகராட்சியான சுரண்டை வளர்ச்சி பெற தடையாக நகராட்சிக்கு நிரந்தர ஆணையாளர், நகராட்சி பொறியாளர், நகர அமைப்பு அலுவலர் நியமிக்கப்படாமல் பொறுப்பு அதிகாரிகள் செயல்படுவதால் பணிகள் சரிவர நடக்கவில்லை எனக் கூறியும் கவுன்சிலர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நகராட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும், கவுன்சிலருமான சக்திவேல், வசந்தன், மாரியப்பன், ராஜேஷ், ராஜ்குமார், பால சுப்பிரமணியன், மாரியப்பன், வெயிலு முத்து, ரமேஷ், வினோத் குமார், பரமசிவன், ஜெயராணி வள்ளிமுருகன், பொன்ராணி ஜெபராஜா, கல்பனா அண்ண பிரகாசம், அம்சா பேகம், அந்தோணி சுதா, செல்வி, பூபதி, முருகேஸ்வரி உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சி சாதாரண கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் கவிதாமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆணையாளர் முத்துசாமி மற்றும் 18 வார்டு கவுன்சிலர்கள் ,அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் துவங்கியதுமே கவுன்சிலர்கள் ஏன் ரகசிய கூட்டம் போல் நடத்துகின்றனர். பத்திரிக்கையாளர்கள், பார்வையாளர்கள் இருந்தால் தானே பொதுமக்கள் பிரச்சனை குறித்து என்ன பேசுகிறோம் , என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது மக்களுக்கு தெரிய வரும். அதை விடுத்து ரகசியமாக கூட்டம் நடத்துவது தேவையா என ஆட்சேபித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் 48 தீர்மானங்கள் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டதாகவும் இதற்கு 3,7,10,11,12,13,17, ஆகிய 7 வார்டு கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்ததாகவும், தீர்மானங்களை எதிர்த்து1,2,4,6,8,9,14,15,16,18, ஆகிய 10 வார்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் எந்த தீர்மானமும் நிறைவேற்றாமல் கூட்டம் முடிவுக்கு வந்தது.

    இவ்வாறு நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ள ரூ. 3.90 லட்சத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • இந்தத்திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நகர்மன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரமூர்த்தி, சௌந்தர்ராஜன், பாலகிருஷ்ணன், ராஜசேகரன், ருக்மணி சேகர், விஜயலட்சுமி, சுகன்யா ஜெகதீஷ், பாமிதா கயாஸ், சசிரேகா ரமேஷ், ஈஸ்வரி உள்ளிட்ட 10 நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி ஆணையாளரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த மே 30ந்தேதி நடைபெற்ற நகர் மன்ற கூட்டத்தில், தீர்மானம் எண் 20ன் படி திடக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் அதன் தொடர்பான பணிகள் மேற்கொள்ள ரூ. 3.90 லட்சத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது தற்போது தெரிய வருகிறது. திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஒப்பந்தம் விடுவதற்கு மிக அவசரம் காட்டியது, ஒப்பந்ததாரரின் உரிய விபரங்கள் இல்லாதது போன்ற குளறுபடிகள் உள்ளதால், இந்தத்திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.

    எனவே நகராட்சி நிர்வாகம் சட்ட விதி 164ன் படி பெரும்பான்மையான நகர் மன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எதிர்க்கிறோம். எனவே அந்த தீர்மானத்தை ரத்து செய்து மீண்டும் நகர் மன்ற கூட்டத்தை நடத்தி அந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தி, உரிய விளக்கம் அளித்து பின்னர் நிறைவேற்றலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடிநீர் பிரச்சனையை சரிசெய்ய 6 மாதமாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.
    • குப்பை எடுப்பவர்களை அந்த பணியைவிட்டு வேறு வேலைக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.

    அவினாசி :

    அவினாசி பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தலைமையில் நடந்தது.துணைத்தலைவர் மோகன், செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மன்ற பொருள்படிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து வார்டு உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர்.

    கோபாலகிருஷ்ணன் (16-வது வார்டு):- கடந்த ஒரு ஆண்டாக சந்தை வசூல் யார் செய்கிறார்கள். இதுவரை எவ்வளவு தொகை உள்ளது. அவினாசி நகரில் புது பஸ் நிலையம் முதல் செங்காடு திடல் வரை ரோட்டோர கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த 3 மாதத்தில் 25 விபத்துகள் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் கை கால்கள் ஊனமடைகின்றனர். இதற்கு பேரூராட்சி நிர்வாகத்துடன் வருவாய்துறை, காவல்துறை, நெடுஞ்சாலைதுறை ஆகியவை இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    தலைவர்:- ரோட்டோர கடைக்காரர்களிடம் சொன்னால் எங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கிறது.நாங்கள் இதை வைத்துதான் ஜீவனம் செய்கிறோம் என்கின்றனர்.

    திருமுருகநாதன்(11-வது வார்டு):- காமராஜ் வீதியில் குடிநீர் பிரச்சனையை சரிசெய்ய 6 மாதமாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. கடந்த 2 வாரத்திற்குள் மட்டும்அவினாசியில் 20 ரோட்டோர கடைகள் அதிகரித்துள்ளது. ரோட்டோர கடைகளால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. ரோட்டோர ஆக்ரமிப்பு கடைகள்குறித்து ஒவ்வொரு கூட்டத்திலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனவே இதை ஒழுங்குபடுத்த வேண்டும். துப்புரவு பணியாளர்கள் குப்பை எடுக்கும் நேரம் என்ன ? வார்டு முழுவதும் சுத்தம் செய்வதில்லை. குப்பை எடுப்பவர்களை அந்த பணியைவிட்டு வேறு வேலைக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

    கருணாம்பாள்( 8-வது வார்டு):- வள்ளுவர் வீதியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் குடிமகன்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அங்கு மது அருந்தாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ஸ்ரீதேவி( 18 -வது வார்டு):- அவினாசி சந்தைபேட்டை பகுதியில் குடியிருப்புகள் நிறைந்துள்ளது. இங்கு மத்தியில் உள்ள குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அதற்கு உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும். அவினாசிலிங்கம்பாளையம் செல்லும் ரோட்டில் 2, 3, 4, 5- வது வீதிகளில் சாக்கடை கால்வாய் மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சாக்கடை நீர் குட்டை போல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கு சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும் என்றார்

    தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி:- நான் பேரூராட்சி தலைவராகிய நாள் முதல் தூய்மை இந்தியா திட்டம் 2.0,கலைஞர் நகர் புற சாலைகள் மேம்படுத்த திட்டம், நமக்கு நாமே திட்டம், இலங்கை தமிழர் வாழ்க்கை தர மேம்பாட்டு நிதி, நபார்டு மூலதன மானிய திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி,சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ,மாநில கட்டமைப்புவளர்ச்சி நிதி, சிறுகனிம வருவாய் மானியம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், தேசியநகர்ப்புற வாழ்வாதார திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் கட்டமைப்பு திட்டம் ஆகிய திட்டங்களின் வாயிலாக 13 கோடியே 23 லட்சத்திற்கும், பேரூராட்சி பகுதியில் ஒரு கோடியே 45 லட்சத்திற்கும் என மொத்தம் 14 கோடியே 68 லட்சத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பேரூராட்சியின் 13.3.2023பொது நிதி இருப்பு விவரம் 3 கோடியே 54 லட்சத்து 18 ஆயிரத்து 342 ரூபாயாக இருந்ததை தற்போது நாளது தேதியில் 48 லட்சத்து 61 ஆயிரத்து 509 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பேரூராட்சியில் தேவையற்ற செலவுகளை குறைத்து பேரூராட்சி நிதி நிலையை பெருக்கியுள்ளோம். பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தும் பட்டியலில் தமிழகத்திலேயே அவினாசி பேரூராட்சி முதல் இடத்தில் உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன் என்றார்.

    • 106 ஆண்டுகள் கடந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • நிதி ஆதாரங்கள் இல்லாமல் திணறி வருகிறது.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி தொடங்கப்பட்டு சுமார் 106 ஆண்டுகள் கடந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் தாராபுரம் நகராட்சி பகுதியில் தற்போதைய மக்கள் தொகை சுமார் 1½ லட்சத்தை கடந்துள்ளது. இதனால் தாராபுரம் நகராட்சி பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட வசதிகள் அமைய போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாமல் திணறி வருகிறது. இந்த நிலையில் தாராபுரம் நகராட்சியை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தக்கோரி நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், நகராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து இருந்தனர்.

    அதனை ஏற்று நேற்று சட்டசபை மானிய கோரிக்கையின் போது தாராபுரம் நகராட்சி தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு,செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலக்குழு தலைவரும், தி.மு.க.திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன் ஆகியோருக்கு தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், நகர செயலாளர் டி.எஸ்.முருகானந்தம், நகராட்சி கவுன்சிலர்கள், தாராபுரம் பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • கிராம சபை கூட்டத்தில் 5 வகையான பழ நாற்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
    • கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் 3 பேர் மட்டுமே பங்கேற்றதாக கூறப்படுகிறது.

    மேட்டுப்பாளையம்

    உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்களை நடத்த அரசு உத்தரவிட்டது.அதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடை பெற்றது. இதையொட்டி கெம்மாரம்பாளையம் ஊராட்சியில் தலைவர் செல்வி நிர்மலா தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் சிறு தானிய ஆண்டை முன்னிட்டு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிறு தானி யங்களின் உற்பத்தியினை பெருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதுகுறித்து பலகட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அனைத்து வீடுகளிலும் இரு உறிஞ்சு குழிகளுடன் கூடிய கழிப்பறை அமைக்க வேண்டும். மேலும் அனைத்து குடிமக்களும் இ - சேவை மையம் தொடங்க பொதுமக்களுக்கு ஊராட்சி வாயிலாக அழைப்பும் விடுக்கப்பட்டது. இக்கூட்டத்தின் போது கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத்துறை மூலமாக 65 பயனாளிகளுக்கு மா, நெல்லி, சீதா, எலுமிச்சை, கொய்யா உள்ளிட்ட 5 வகையான பழ நாற்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

    இதேபோல் பெள்ளேபாளையம் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு தலைவர் சிவக்குமார் மற்றும் ஊராட்சி செயலாளர் லட்சுமணன் ஆகியோர் முறையாக வார்டு உறுப்பினருக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சியில் உள்ள வார்டு உறுப்பினர்கள் 3 பேர் மட்டுமே பங்கேற்றதாக கூறப்படுகிறது. மற்ற உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

    இதேபோல் சிக்காரம்பாளையம் ஊராட்சியில் தலைவர் ஞானசேகரன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.

    • களக்காடு யூனியன் கூட்டம் தலைவர் இந்திரா ஜார்ஜ் கோசல் தலைமையில் நடந்தது.
    • கவுன்சிலர் சத்ய சங்கீதா கூறுகையில், புலியூர்குறிச்சி பஞ்சாயத்தில் பணிபுரியம் 100 நாள் திட்ட ஊழியர்களுக்கு ரூ.230 வரை தான் அதிகபட்சமாக சம்பளம் வழங்கப்படுகிறது. இது ஏன்? என்று கேள்வி விடுத்தார்.

    களக்காடு:

    களக்காடு யூனியன் கூட்டம் தலைவர் இந்திரா ஜார்ஜ் கோசல் தலைமையில் நடந்தது.

    ஆணையாளர்கள் அப்துல்லா, மணி, துணை தலைவர் விசுவாசம் ஆகியோர் முன்னிலை வகித்த னர். கவுன்சிலர்கள் ஜார்ஜ் கோசல், தமிழ்செல்வன், சத்ய சங்கீதா, சங்கீதா, விஜய லெட்சுமி, வனிதா, தளவாய் பாண்டியன், மேலாளர் சங்கரன் மற்றும் யூனியன் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    யூனியன் ஊழியர் முத்தரசன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் செங்களாகுறிச்சி, கோவிலம்மாள்புரம், புலியூர்குறிச்சி, வடுகச்சி மதில், படலையார்குளம், தேவநல்லூர், செங்களா குறிச்சி, சிங்கிகுளம் பஞ்சாயத்துகளில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், கல்லடிசிதம்பரபுரத்தில் தடுப்பு சுவர் கட்டுவது உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    அதனைதொடர்ந்து கவுன்சிலர் தமிழ்செல்வன் பேசுகையில், டெங்கு பணியாளர்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் செலவு செய்யப்படுகிறது. அவர்களை கண்காணிப்பது யார்? ஜெ.ஜெ.நகர், படலையார்குளம் மக்களுக்கு பட்டா வழங்கவும், சத்திரம் கள்ளிகுளத்தில் புதிய ரேசன் கடை கட்டிடத்தை திறக்கவும், 16 குளங்கள் பாசன வசதி பெறும் வகையில் களக்காடு சிதம்பரபுரம் மலையடிவாரத்தில் புதிய அணை கட்டவும், சில் ஓடை, பெரிய ஓடைகளை அளவீடு செய்து, பாதை அமைக்கவும், சிதம்பராபுரம் வழியாக அரசு பஸ்கள் இயக்கவும், தலையணையில் உள்ள தென்வீதிக்காலை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதுபோல கவுன்சிலர் சத்ய சங்கீதா கூறுகையில், புலியூர்குறிச்சி பஞ்சாயத்தில் பணிபுரியம் 100 நாள் திட்ட ஊழியர்களுக்கு ரூ.230 வரை தான் அதிகபட்சமாக சம்பளம் வழங்கப்படுகிறது. இது ஏன்? என்று கேள்வி விடுத்தார்.

    இதற்கு பதிலளித்த ஆணையாளர் மணி, அவர்கள் பணி செய்ததற்கு ஏற்றாற் போல் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அந்தந்த துறைகளுக்கு அனுப்பி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • தென்காசி நகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் சரிவர குப்பைகள் சேகரிக்க ஆள் வரவில்லை என கூறினார்கள்.

    தென்காசி:

    தென்காசி நகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் சுப்பையா, ஆணையாளர் பாரி ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 7 தீர்மானங்கள் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. மேலும் நகராட்சியில் செயல்படுத்தப்பட இருக்கும் அடிப்படை வசதிகள் மற்றும் தூய்மை பணிகள் குறித்தும் விவாதம் செய்யப்பட்டது.

    கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் சரிவர குப்பைகள் சேகரிக்க ஆள் வரவில்லை என கூறினார்கள். இதற்கு பதில் அளித்த நகர் மன்ற தலைவர் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை பொதுமக்கள் பிரித்துக் கொடுக்காத சூழ்நிலையில் அவற்றை தூய்மை பணியாளர்களே பிரித்து குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்வதால் நேர விரையம் ஏற்படுகிறது. பொதுமக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே தூய்மை பணியாளர்கள் தங்களது பணியை திறம்பட செய்ய முடியும் எனவே அனைத்து கவுன்சிலர்களும் தங்களது பகுதி பொதுமக்களிடம் குப்பைகளை தனித்தனியாக பிரித்து வழங்க ஆலோசனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் காதர் மைதீன், ஆசிக் முபினா ,சையது சுலைமான் ரபிக், வசந்தி வெங்கடேஸ்வரன், சுப்பிரமணியன், சங்கர சுப்பிரமணியன், ராசப்பா, நாகூர் மீரான் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மயிலாடுதுறையில் நடந்த நகராட்சி கூட்டத்தில் முறைகேடுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்திய தற்காக தொடரப்பட்ட வழக்கீல் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இழப்பீடாக நகராட்சி நிதியில் இருந்து ரூ.9 லட்சம் செலுத்த நகர மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் ஒப்பந்ததாரர் அபராதம் செலுத்த நடவடிக்கை எடுக்க நகரமன்றத்தில் கோரிக்கை வைத்து தி.மு.க. ம.தி.மு.க. கட்சியை சேர்ந்த இரு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    மயிலாடுதுறை நகராட்சி நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு செயல் திட்டங்களுக்கும் செலவினங்களுக்கும் ஒப்புதல் கோரப்பட்டது. இதில் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட நீர்நிலைகள் குப்பைகள் கொட்டி மாசுபடுதல் நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது மற்றும் ஆக்கிரமிப்புகள் தொட ர்பாக விஜயகுமார் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 2018ம் ஆண்டு தொடுத்த வழக்கில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தியதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இழப்பீடாக ரூ.9 லட்சம் செலுத்த ஆணையிடப்பட்டது.

    9 லட்சம் இழப்பீட்டு தொகை கட்டுவதற்கு நகராட்சிக்கூட்டத்தில் ஒப்புதல் கோரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நகரமன்ற உறுப்பினர்கள் நிர்வாக சீர்கேட்டால் சுற்றுசூழல் பாதிப்படைந்ததற்கு அப்போதை அதிகாரிகளும், பாதாளசாக்கடையை பராமரித்த ஒப்பந்தக்கா ரர்கள்தான் இழப்பீடு வழங்க வேண்டும் ஒப்புதல் தரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மயிலாடுதுறை நகரில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் பாதாளசாக்கடை திட்ட பணியை முறையாக பராமரிக்காத வெர்சடைல் நிறுவனத்திற்கு மீண்டும் ஒப்பந்த பணி வழங்கி காலநீட்டிப்பு செய்வதற்கு அனுமதியளிக்க எதிர்ப்பு தெரிவித்து நகரமன்ற உறுப்பினர்கள் ம.தி.மு.க.வை சேர்ந்த கணேசன், தி.மு.க.வை சேர்ந்த கல்யாணிரகு ஆகிய இருவர் வெளிடப்பு செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×