search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corona affected"

    • கொரோனா பாதிப்பு அதிகரிப்பதும், குறைவது மாக உள்ளது.
    • தொற்று உறுதியானவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதும், குறைவது மாக உள்ளது. இந்த நிலையில் நேற்று சேலம் மாந கராட்சியில் 3 பேர், ஆத்தூர் சுகா தார மாவட்டத்தில் கெங்க வல்லி, தலைவாசல், பன மரத்துப்பட்டி பகுதிகளில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தொற்று உறுதியானவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 60 பேர் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 1.31 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.30 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    • புதுவையில் கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது.
    • புதுவையில் ஆயிரத்து 785 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    புதுவையில் ஆயிரத்து 785 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 28, காரைக்காலில் 7, ஏனாமில் 9 பேர் என புதிதாக 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 3, ஏனாம், மாகியில் தலா ஒருவர் என 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் 185, காரைக்காலில் 24, ஏனாமில் 26, மாகியில் 7 பேர் என 242 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 30, காரைக்காலில் ஒருவர் என 31 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.

    மாநிலத்தில் கொரோ னாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 40 ஆயிரத்து 693 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    இத்தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோ னா நெறிமுறைகளை தொடரவும், அனைவரும் முக கவசம் அணியவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    ×