என் மலர்
நீங்கள் தேடியது "connection"
- கூடுதலாக ரூ.3,500 வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
- தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இடையர்தவணை ஊராட்சி. இதன் தலைவராக லட்சுமி என்பவர் உள்ளார். இங்கு வீடுகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு அரசு சார்பில் ரூ.1000 என நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் கூடுதலாக ரூ.3,500 வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 100-க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறி, ஊராட்சி மன்ற அலுவலகத்தின் வாயிலில் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அறிவிப்பு பேனர் ஒன்று கட்டப்பட்டு உள்ளது. அங்கு தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் பற்றி புதிய தகவல்கள் கிடைத்ததால், உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 8 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு மீண்டும் சோதனை நடத்தியது. இதில் 3 பேர் பிடிபட்டனர். #NIA #ISIS #Punjab
புதுடெல்லி:
சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட சிலர், அதே பாணியில் ‘ஹர்கத் உல் ஹர் இ இஸ்லாம்’ என்ற பயங்கரவாத அமைப்பை உருவாக்கி இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த மாதம் டெல்லி, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் 17 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தியது. அதில், 12 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ராக்கெட் லாஞ்சர், 25 கிலோ வெடி மருந்துகள், தற்கொலைப்படை உடைக்கான மூலப்பொருட்கள், டைம்-பாம் குண்டு தயாரிக்க பயன்படும் 112 அலாரம் கெடிகாரங்கள், 91 செல்போன்கள், 134 சிம்கார்டுகள், 3 லேப்டாப்புகள், கத்தி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இந்த கும்பல், ரிமோட் கண்ட்ரோல் கார்களை கூட வாங்கி இருப்பது தெரியவந்தது.
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்வதற்கும், அரசியல் தலைவர்களை குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கும் அவர்கள் சதித்திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையே, பிடிபட்ட பயங்கரவாதிகளிடம் என்.ஐ.ஏ. நடத்திய விசாரணையில் புதிய திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. மேலும், குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் டெல்லியில் தாக்குதல் நடத்த சில தேசவிரோத சக்திகள் முயன்று வருவதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்தன.
அவற்றின் அடிப்படையில், உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 8 இடங்களில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சோதனையின்போது, உத்தரபிரதேச மாநிலம் ஹாபுர் பகுதியில் 3 இளைஞர்கள் பிடிபட்டனர். அவர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
அத்துடன், மீரட் அருகே ராதானா கிராமத்தில் ஒரு மதகுரு இல்லத்தில் நடந்த சோதனையில் ரகசிய ஆவணங்கள் சிக்கின. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட சிலர், அதே பாணியில் ‘ஹர்கத் உல் ஹர் இ இஸ்லாம்’ என்ற பயங்கரவாத அமைப்பை உருவாக்கி இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த மாதம் டெல்லி, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் 17 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தியது. அதில், 12 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ராக்கெட் லாஞ்சர், 25 கிலோ வெடி மருந்துகள், தற்கொலைப்படை உடைக்கான மூலப்பொருட்கள், டைம்-பாம் குண்டு தயாரிக்க பயன்படும் 112 அலாரம் கெடிகாரங்கள், 91 செல்போன்கள், 134 சிம்கார்டுகள், 3 லேப்டாப்புகள், கத்தி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இந்த கும்பல், ரிமோட் கண்ட்ரோல் கார்களை கூட வாங்கி இருப்பது தெரியவந்தது.
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்வதற்கும், அரசியல் தலைவர்களை குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கும் அவர்கள் சதித்திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையே, பிடிபட்ட பயங்கரவாதிகளிடம் என்.ஐ.ஏ. நடத்திய விசாரணையில் புதிய திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. மேலும், குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் டெல்லியில் தாக்குதல் நடத்த சில தேசவிரோத சக்திகள் முயன்று வருவதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்தன.
அவற்றின் அடிப்படையில், உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 8 இடங்களில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சோதனையின்போது, உத்தரபிரதேச மாநிலம் ஹாபுர் பகுதியில் 3 இளைஞர்கள் பிடிபட்டனர். அவர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
அத்துடன், மீரட் அருகே ராதானா கிராமத்தில் ஒரு மதகுரு இல்லத்தில் நடந்த சோதனையில் ரகசிய ஆவணங்கள் சிக்கின. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
போலி பாஸ்போர்ட் வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் விமான நிலைய ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
பிரான்ஸ் நாட்டில் இருந்து கடந்த மே மாதம் போலி பாஸ்போர்ட் மூலம் சென்னை வந்த தேனியை சேர்ந்த தேவராஜன் என்பவர் குடியுரிமை அதிகாரிகளிடம் சிக்கினார். இதையடுத்து விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப் படுத்தியதில், போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய 5 பேர் அடுத்தடுத்து பிடிபட்டனர்.
அவர்களில் சிலர் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இயங்கி வரும் துருக்கி போன்ற நாடுகளுக்கு சென்றுவந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் போலி பாஸ்போர்ட் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், சென்னை திருவல்லிக்கேணியில் செயல்பட்டு வந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம் போலி பாஸ்போர்ட் சப்ளை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் கடந்த திங்கட்கிழமை மத்திய குற்றப்பிரிவு போலீசார் குறிப்பிட்ட டிராவல்ஸ் நிறுவனத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில் 80 இந்திய போலி பாஸ்போர்ட்களும், 12 இலங்கை போலி பாஸ்போர்ட்களும் சிக்கின. இதையடுத்து போலி பாஸ்போர்ட் கும்பலை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். போலி பாஸ்போர்ட் தயாரிக்க பயன்படுத்திய எந்திரங்கள், அச்சு முத்திரைகள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலி பாஸ்போர்ட் தயாரித்த கும்பலிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ‘தமிழகம் முழுவதும் பயனற்ற, காலாவதியான பாஸ்போர்ட்களை பெற்று, அதில் இருக்கும் புகைப்படத்தை எடுத்துவிட்டு போலி பாஸ்போர்ட் தயாரிக்கப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது.
தற்போது இந்த விவகாரத்தில் விமானநிலைய ஊழியர்கள் உடந்தையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மத்திய குற்றப் பிரிவு போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிவைத்ததாக சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தரகர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது போலி பாஸ்போர்ட் கும்பலுக்கு உடந்தையாக இருந்த சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் ஜெயசிங், ஸ்டீபன், மத்திய ஆயுதப்படை போலீஸ்காரர் கிரிதரபிரசாத், தற்காலிக ஊழியர் மணிவண்ணன் ஆகிய 4 பேர் சிக்கினர்.
தற்போது சிக்கியுள்ள போலி பாஸ்போர்ட் கும்பலிடம் இருந்து இலங்கை தமிழர்கள் அதிகளவில் பாஸ்போர்ட் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. போலி பாஸ்போர்ட் மூலம் பெங்களூரு, ஐதராபாத் போன்ற விமான நிலையங்களில் இருந்து இலங்கைக்கு சென்றுவந்துள்ளனர்.
எனவே இந்த விவாகரத்தில் விமான நிலைய ஊழியர்களும் உடந்தையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள போலி பாஸ்போர்ட் கும்பலிடம் தீவிரமாக விசாரிக்கப்படுகிறது.
வெளிநாடு சினிமா படப் பிடிப்புகளுக்கு சென்றுவர திரைப்பட துறையினர் போலி பாஸ்போர்ட்களை பயன்படுத்தியதாக வெளியான தகவல்கள் தவறானவை.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரான்ஸ் நாட்டில் இருந்து கடந்த மே மாதம் போலி பாஸ்போர்ட் மூலம் சென்னை வந்த தேனியை சேர்ந்த தேவராஜன் என்பவர் குடியுரிமை அதிகாரிகளிடம் சிக்கினார். இதையடுத்து விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப் படுத்தியதில், போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய 5 பேர் அடுத்தடுத்து பிடிபட்டனர்.
அவர்களில் சிலர் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இயங்கி வரும் துருக்கி போன்ற நாடுகளுக்கு சென்றுவந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் போலி பாஸ்போர்ட் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், சென்னை திருவல்லிக்கேணியில் செயல்பட்டு வந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம் போலி பாஸ்போர்ட் சப்ளை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் கடந்த திங்கட்கிழமை மத்திய குற்றப்பிரிவு போலீசார் குறிப்பிட்ட டிராவல்ஸ் நிறுவனத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில் 80 இந்திய போலி பாஸ்போர்ட்களும், 12 இலங்கை போலி பாஸ்போர்ட்களும் சிக்கின. இதையடுத்து போலி பாஸ்போர்ட் கும்பலை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். போலி பாஸ்போர்ட் தயாரிக்க பயன்படுத்திய எந்திரங்கள், அச்சு முத்திரைகள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலி பாஸ்போர்ட் தயாரித்த கும்பலிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ‘தமிழகம் முழுவதும் பயனற்ற, காலாவதியான பாஸ்போர்ட்களை பெற்று, அதில் இருக்கும் புகைப்படத்தை எடுத்துவிட்டு போலி பாஸ்போர்ட் தயாரிக்கப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது.
தற்போது இந்த விவகாரத்தில் விமானநிலைய ஊழியர்கள் உடந்தையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மத்திய குற்றப் பிரிவு போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிவைத்ததாக சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தரகர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது போலி பாஸ்போர்ட் கும்பலுக்கு உடந்தையாக இருந்த சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் ஜெயசிங், ஸ்டீபன், மத்திய ஆயுதப்படை போலீஸ்காரர் கிரிதரபிரசாத், தற்காலிக ஊழியர் மணிவண்ணன் ஆகிய 4 பேர் சிக்கினர்.
தற்போது சிக்கியுள்ள போலி பாஸ்போர்ட் கும்பலிடம் இருந்து இலங்கை தமிழர்கள் அதிகளவில் பாஸ்போர்ட் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. போலி பாஸ்போர்ட் மூலம் பெங்களூரு, ஐதராபாத் போன்ற விமான நிலையங்களில் இருந்து இலங்கைக்கு சென்றுவந்துள்ளனர்.
எனவே இந்த விவாகரத்தில் விமான நிலைய ஊழியர்களும் உடந்தையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள போலி பாஸ்போர்ட் கும்பலிடம் தீவிரமாக விசாரிக்கப்படுகிறது.
வெளிநாடு சினிமா படப் பிடிப்புகளுக்கு சென்றுவர திரைப்பட துறையினர் போலி பாஸ்போர்ட்களை பயன்படுத்தியதாக வெளியான தகவல்கள் தவறானவை.
இவ்வாறு அவர் கூறினார்.