search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congress MLA"

    • பாரதியஜனதா மீது கூறிய கருத்துக்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
    • பேச்சு அடங்கிய வீடியோவை பாரதியஜனதா கட்சியினர் எக்ஸ் வலை தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வாக இருந்து வருபவர் பி.ஆர். பாட்டீல். இவர் பாரதியஜனதா மீது கூறிய கருத்துக்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற அவர்கள் (பா.ஜனதா)ராமர் கோவில் மீது குண்டுகள் வீசி முஸ்லீம்கள் மீது பழி சுமத்துவார்கள் என குற்றம் சாட்டி உள்ளார். அவரது பேச்சு அடங்கிய வீடியோவை பாரதியஜனதா கட்சியினர் எக்ஸ் வலை தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

    இது கர்நாடகாவில் பரபரப்பாகி உள்ளது. இது தொடர்பாக பாரதியஜனதாவினர் கூறும் போது இந்து-முஸ்லீம் இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பாட்டீல் கருத்து தெரிவித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    • மரணம் அடைந்த திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. கடந்த 2015-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறையின் தலைவராக பதவி வகித்தார்.
    • தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் திருமகன் ஈவெரா (46). இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மூத்த மகன் ஆவார். இவருக்கு பூர்ணிமா என்ற மனைவியும், சமணா என்ற மகளும் உள்ளனர்.

    திருமகன் ஈவெரா கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள குடியரசு இல்லமான தனது வீட்டில் தங்கி இருந்து தொகுதி பணிகளை செய்து வந்தார்.

    தொகுதி தொடர்பான பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளை நேரில் சந்தித்து நிறைவேற்றி வந்தார். காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி மாற்று கட்சியினர் மற்றும் பொதுமக்களுடன் எளிமையாக பழகி வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்த திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. ஈரோட்டில் உள்ள தனது வீட்டில் தங்கி வழக்கம்போல் தொகுதி பணிகளை செய்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதற்காக தனது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.வுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும் மாரடைப்பும் ஏற்பட்டது. இதையடுத்து அவருடன் இருந்தவர்கள் உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடல் கச்சேரி வீதியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. இறந்த தகவல் கிடைத்ததும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், மாற்று கட்சியினர், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. இறந்த தகவல் கிடைத்ததும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னையில் இருந்து தனது குடும்பத்துடன் ஈரோட்டுக்கு வந்தார். அங்கு தனது மகனின் உடலை பார்த்து இளங்கோவன் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதைப்பார்த்த அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களும் கதறி அழுதனர்.

    திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார். பின்னர் கார் மூலம் ஈரோட்டுக்கு வந்தார். பின்னர் திருமகன் ஈவெரா உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, செந்தில்பாலாஜி, முத்துசாமி, சாமிநாதன், அன்பில்மகேஷ் பொய்யாமொழி, காந்தி, மதிவேந்தன், எம்.பி.க்கள் கனிமொழி, விஜய் வசந்த், அந்தியூர் செல்வராஜ், கணேசமூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் செல்வப்பெருந்தகை, செல்வக்குமார், ஏ.ஜி.வெங்கடாசலம் மற்றும் தி.மு.க. மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

    முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு மற்றும் முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள், தொண்டர்கள் இன்று காலையில் இருந்து திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.வுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    தொகுதி மக்கள் வரிசையில் காத்திருந்து திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்ந்து இறுதி சடங்குகள் நடந்து திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடல் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மின்மயானத்திற்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிற்பகலில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடலுக்கு ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பல்வேறு கட்சியினர், பொதுமக்களும் வழிநெடுக மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    மரணம் அடைந்த திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. கடந்த 2015-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறையின் தலைவராக பதவி வகித்தார். தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தார்.

    • உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    • திருமகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஈ.வெ.ரா.இ.திருமகன். 45 வயதாகும் இவர் தமிழக காங்கிரஸ் கட்சியில் மாநில பொதுச் செயலாளராகவும் இருந்து வந்தார்.

    கடந்த சில தினங்களாக இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இன்று மதியம் அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் ஈரோட்டில் கச்சேரி சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் ஈரோட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

    திருமகன் மரணம் செய்தியை கேட்டதும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவரது வீட்டுக்கு காங்கிரசார் திரண்டு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    ஈரோட்டில் 59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைத்த சிறப்பு திருமகனுக்கு உண்டு. தந்தை பெரியாரின் கொள்ளு பேரனான இவர் முதல் முதலாக சட்டசபைக்கு சென்றதால் ஈரோடு காங்கிரஸ் கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.

    ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்காத அளவுக்கு திருமகன் மரணம் அடைந்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் சுமார் 9 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவருக்கு அந்த தொகுதியில் அனைத்து தரப்பினரும் வாக்களித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    காங்கிரஸ் கட்சியில் 2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராக இருந்தார். 2014ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்தார்.

    2016-ம் ஆண்டு முதல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருந்தார். 2021-ம் ஆண்டு முதல் தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருந்தார்.

    • எம்எல்ஏவின் முன்ஜாமீன் மனு வருகிற 15-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
    • புகாரை வாபஸ் பெற ரூ.30 லட்சம் பேரம் பேசியதாக குற்றச்சாட்டு

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பெரும்பாவூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. எல்தோஸ் மீது திருவனந்தபுரம் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், கோவளம் போலீசில் பாலியல் புகார் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக கோவளம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து எல்தோஸ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவரை போலீசார் விசாரணைக்கு தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது.

    இதற்கிடையில் வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக முன்ஜாமீன் கேட்டு, எல்தோஸ் எம்.எல்.ஏ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வருகிற 15-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

    இந்த நிலையில் புகாரை வாபஸ் பெற, வக்கீல் மூலம் தன்னை எல்தோஸ் அணுகியதாகவும், இதற்காக ரூ.30 லட்சம் பேரம் பேசியதாகவும் தற்போது மற்றொரு குற்றச்சாட்டை ஆசிரியை தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரத்தில் பேட்டியளித்த அவர், 'கடந்த 10 ஆண்டுகளாக எல்தோசுடன் எனக்கு பழக்கம் இருந்தாலும், சில மாதங்களாக தான் நாங்கள் நெருக்கமானோம். அப்போது அவரது நடவடிக்கை பிடிக்காததால் நட்பை துண்டிக்க முயன்றேன்.

    இதனால் அவர் என்னை மிரட்டியதுடன் அடித்து துன்புறுத்தவும் தொடங்கினார். எனவே தான் போலீசில் புகார் அளித்தேன். இந்தநிலையில் தான் புகாரை வாபஸ் பெறுவதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு வக்கீல் அலுவலகத்திற்கு வர வழைத்து ரூ.30 லட்சம் வரை பேரம் பேசினர். ஆனால் நான் ஒத்துக்கொள்ளவில்லை. விரைவில் எல்தோஸ் குறித்த மேலும் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிடுவேன்' என்றார்.

    இதற்கிடையில், புகார் அளித்த பெண், எம்.எல்.ஏ.வின் செல்போனை பறித்து சமூக வலைதளத்தில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, எம்எல்ஏவின் மனைவி மரியம்மா போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • அரியானா மாநிலத்தின் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது.
    • சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மாவுக்கு பாஜக, ஜனாயக் ஜனதா கட்சிகள் ஆதரவளித்தன.

    சண்டிகர்:

    அரியானாவில் மாநிலங்களவை தேர்தலில் ஆதம்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. குல்தீப் பிஷ்னோய் அக்கட்சியின் வேட்பாளர் அஜய் மாக்கானுக்கு வாக்களிக்காமல் சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மாவுக்கு வாக்களித்தார். கார்த்திகேய சர்மாவுக்கு பா.ஜ.க, ஜனாயக் ஜனதா கட்சிகள் ஆதரவளித்துள்ளன.

    அரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெற 31 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டிய நிலையில், குல்தீப் பிஷ்னோய் மாற்றி வாக்களித்துள்ளார். மற்றொருவரது வாக்கு ரத்து செய்யப்பட்டது. இதனால் அரியானாவில் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது.

    இந்நிலையில், அரியானாவில் கட்சி மாறி வாக்களித்த குல்தீப் பிஷ்னோயை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.

    இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர் பதவி உள்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் குல்தீப் பிஷ்னோய் நீக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. வின்சென்ட் திருவனந்தபுரத்தில் உள்ள சட்டசபைக்கு சைக்கிளில் சென்றார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் மாநில அரசு அதன் மீது விதிக்கும் வரியை குறைக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவாக கோவளம் சட்டசபை தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வின்சென்ட் திருவனந்தபுரத்தில் உள்ள சட்டசபைக்கு சைக்கிளில் செல்ல முடிவு செய்தார்.

    இதையடுத்து காலையில் நண்பர் ஒருவரின் சைக்கிளை வாங்கிய அவர் பின்னர் எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் இருந்து சைக்கிளில் சட்டசபைக்கு புறப்பட்டார். சட்டசபைக்கு சைக்கிளில் வந்த அவரை காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றனர்.

    பின்னர் அங்கு இருந்து எம்.எல்.ஏ.க்கள் விடுதிக்கு அவர் மீண்டும் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். எம்.எல்.ஏ.சைக்கிளில் வந்து சென்றதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    இது தொடர்பாக வின்சென்ட் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராடுகிறது. எனவே போராட்டத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் சைக்கிளில் சென்றேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஒருவர், கட்சி அலுவலகத்தில் இருந்து 300 நாற்காலிகளை எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #LokSabhaElections2019
    அவுரங்காபாத்:

    மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து பாராளுமன்றத் தேர்தலை சந்திக்கின்றன. இதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், அவுரங்காபாத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று தேர்தல் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்திற்கு கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கூட்டத்திற்காக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் வந்தவண்ணம் இருந்தனர். அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ அப்துல் சத்தாரின் (சில்லோடு தொகுதி) ஆதரவாளர்கள் சிலர், அங்கிருந்த 300 நாற்காலிகளை எடுத்து வாகனத்தில் ஏற்றினர்.

    அவர்களிடம் விசாரித்தபோது, “இந்த நாற்காலிகள் அனைத்தும், எம்எல்ஏ சத்தார், கட்சி கூட்டங்களுக்காக வாங்கி கொடுத்தவை. அவர் சொன்னதால் இப்போது எடுத்துச் செல்கிறோம்” என்றனர்.



    நாற்காலிகளை சத்தார் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்றதால், ஆலோசனைக் கூட்டம் தேசியவாத காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது.

    இதுபற்றி சத்தார் கூறுகையில், “அந்த நாற்காலிகள் அனைத்தும் நான் கட்சி கூட்டங்களுக்காக வாங்கிக் கொடுத்தவை. இப்போது நான் கட்சியில் இருந்து விலகிவிட்டேன். அதனால் என்னுடைய நாற்காலிகளை நான் திரும்ப எடுத்துக்கொண்டேன். போட்டியிட வாய்ப்பு கிடைத்தவர், பிரசாரத்திற்கான ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும்” என்றார்.

    கட்சியின் முன்னணி தலைவரான சத்தார், தனக்கு அவுரங்காபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், கடைசி நேரத்தில், எம்எல்சி சுபாஷ் ஜாம்பத்துக்கு சீட் வழங்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த சத்தார், கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார்.

    இதுபற்றி கருத்து தெரிவித்த வேட்பாளர் ஜாம்பத், “சத்தாருக்கு நாற்காலிகள் தேவைப்பட்டதால் எடுத்துச் சென்றிருக்கலாம். இதனால் எங்களுக்கு எந்த மனவருத்தமும் இல்லை. அவர் இன்னமும் காங்கிரசில்தான் இருக்கிறார். அவரது ராஜினாமா இதுவரை ஏற்கப்படவில்லை” என்றார். #LokSabhaElections2019 
    கர்நாடக மாநிலம், சொகுசு ஓட்டலில் தாக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங் காயங்களுடன் சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியாகியுள்ளது. #Karnataka #CongressMLA #BengaluruResort #MLAAnandsingh
    பெங்களூரு:
       
    கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாரதீய ஜனதா கட்சி முயற்சிப்பதாக புகார் எழுந்தது.
     
    இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராம்நகர் அருகேயுள்ள தனியார் சொகுசு ஓட்டலில் (ரெசார்ட்) தங்க வைக்கப்பட்டனர். பாரதீய ஜனதாவின் குதிரை பேரத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில்தான் இப்படி செய்திருப்பதாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்திருந்தார்.

    நேற்று முன்தினம் இரவு, ரெசார்ட்டில் உள்ள ஒரு அறையில் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த் சிங், பீமா நாயக், கணேஷ் ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

    பீமா நாயக், கணேஷ் ஆகியோர் ஆனந்த்சிங்கிடம், ‘நாங்கள் பா.ஜனதாவுக்கு செல்ல இருந்த ரகசிய திட்டத்தை நீங்கள் தான் காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் கூறிவிட்டீர்கள்’ என்று குற்றம்சாட்டியதாக தெரிகிறது. 

    இதனால் அவர்களிடையே கடும் வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கணேசும், பீமா நாயக்கும் சேர்ந்து தாக்கியதில் ஆனந்த் சிங் படுகாயம் அடைந்தார். பெங்களூருவில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று நேற்று தகவல்கள் வெளியாகின.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் ஏற்பட்டு, அடிதடியில் முடிந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சிகிச்சை பெறும் ஆனந்த் சிங்கை மந்திரி ஜமீர் அகமதுகான் சந்தித்து நலம் விசாரித்தார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ரெசார்ட்டில் நண்பர்களுக்குள் சிறிய அளவில் தகராறு நடந்துள்ளது. பெரிய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. இதை ஊடகங்கள் தான் பெரிது படுத்துகின்றன’ என்றார்.

    மற்றொரு மந்திரியான டி.கே.சிவக்குமார், ‘எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. ஊடகங்கள் தான் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன’ என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ஆனந்த் சிங் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தலை மற்றும் நெஞ்சு பகுதியில் பலமாக தாக்கப்பட்ட நிலையில் அவர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடபட்டுள்ளது.

    இதற்கிடையில், மருத்துவமனையில் வீங்கிய முகத்துடன் ஆனந்த் சிங் படுத்திருக்கும் புகைப்படம் சில ஊடகங்களில் வெளியாகி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்குள் மோதல் நடந்தது உண்மைதான் என்பதை நிரூபித்துள்ளது. #Karnataka #CongressMLA #BengaluruResort #MLAAnandsingh
    கர்நாடக மாநிலத்தில் சொகுசு ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டு, அடிதடி நடந்துள்ளது. #Karnataka #CongressMLA #FriendlyFight #BengaluruResort
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாரதீய ஜனதா கட்சி முயற்சிப்பதாக புகார் எழுந்தது.

    இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராம்நகர் அருகேயுள்ள தனியார் சொகுசு ஓட்டலில் (ரெசார்ட்) தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாரதீய ஜனதாவின் குதிரை பேரத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில்தான் இப்படி செய்திருப்பதாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.

    நேற்று முன்தினம் இரவு, ரெசார்ட்டில் உள்ள ஒரு அறையில் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த்சிங், பீமாநாயக், கணேஷ் ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

    பீமாநாயக், கணேஷ் ஆகியோர் ஆனந்த்சிங்கிடம், “நாங்கள் பா.ஜனதாவுக்கு செல்ல இருந்த ரகசிய திட்டத்தை நீங்கள் தான் கட்சி தலைவர்களிடம் கூறி இருக்கிறீர்கள்?” என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அது முற்றியபோது, ஆனந்த்சிங்கை கணேசும், பீமாநாயக்கும் சேர்ந்து தாக்கி அவர் படுகாயம் அடைந்து, தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் ஏற்பட்டு, அடிதடியில் முடிந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஆனந்த் சிங்கை மந்திரி ஜமீர்அகமதுகான் சந்தித்து நலம் விசாரித்தார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ரெசார்ட்டில் நண்பர்களுக்குள் சிறிய அளவில் தகராறு நடந்துள்ளது. பெரிய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. இதை ஊடகங்கள் தான் பெரிது படுத்துகின்றன” என்றார்.

    மற்றொரு மந்திரியான டி.கே.சிவக்குமாரோ, “எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. ஊடகங்கள் தான் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன” என்றார்.

    இதுகுறித்து பாரதீய ஜனதா மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறுகையில், “காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சண்டை போட்டுக்கொண்டுள்ளனர். ஒரு எம்.எல்.ஏ. தாக்கப்பட்டுள்ளார். இது எம்.எல்.ஏ.க்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். போலீசார் வழக்கு பதிவு செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து சித்தராமையா பதில் சொல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டார். #Karnataka #CongressMLA #FriendlyFight #BengaluruResort
    புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயவேணி சென்ற கார் மீது மர்ம நபர்கள் இன்று திடீரென தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. #CongressMLA #CarAttack
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நெட்டப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் விஜயவேணி.  இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

    இந்நிலையில், விஜயவேணி இன்று மாலை காரில் தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது இவரது காரை அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் அவரது காரின் கண்ணாடிகள் உடைந்தன.

    இதுகுறித்து தகவலறிந்த பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.எல்.ஏ சென்ற கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #CongressMLA #CarAttack
    கோவா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவசரமாக நேற்று டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் பாஜக-வில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. #BJP #Congress
    பனாஜி:

    கோவா மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்றாலும், ஆட்சி அமைக்கும் அளவிற்கான இடத்தில் வெற்றி பெறவில்லை.

    அதேவேளையில் 2-வது இடம்பிடித்து பாஜக சுயேட்சை உள்பட சில எம்எல்ஏ-க்களுடன் ஆட்சியமைத்தது. தற்போது மனோகர் பாரிக்கர் முதலமைச்சராக இருந்து வருகிறார்.

    விரைவில் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக பாஜக கட்சி முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அதேவேளையில் ஆட்சி செய்யும் மாநிலத்தில் எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களை இழுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில் கோவா மாநிலத்தைச் சேர்ந்த தயானந்த் சோப்தே, சுபாஷ் ஷிரோத்கர் ஆகிய இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் நேற்றிரவு அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.



    அவர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக-வில் இணைவார்கள். இதற்காக அமித் ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளது என்ற மூத்த பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதனால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது. இதில் தயானந்த் மந்த்ரேம் தொகுதியில் முன்னாள் பாஜக முதலமைச்சர் லட்சுமிகாந்த் பர்சேகரை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. #BJP #Congress
    கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்காக பாரதிய ஜனதா கட்சி என்னிடம் ரூ.30 கோடி பேரம் பேசியதாக காங்கிரஸ் எம்.எல்.எ. தெரிவித்துள்ளார். #CongressMLA #LaxmiHebbalkar
    பெங்களூர்:

    கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மதசார் பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி முதல்- அமைச்சராக உள்ளார்.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் பதவி கேட்டு 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

    பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவுக்கு இழுக்க முயற்சி செய்வதாக முதல்வர் குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ., தன்னிடம் பா.ஜனதாவினர் ரூ.30 கோடி பேரம் பேசினர் என்று கூறி உள்ளார்.

    இதுதொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான லட்சுமி ஹெப்பான்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் என்னிடம் போனில் பேசினார். அப்போது காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசை கவிழ்க்க வேண்டும். நான் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தால் ரூ.30 கோடி பணமும், அமைச்சர் பதவியும் தருவதாக தெரிவித்தார். அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டேன்.

    பா.ஜனதா தலைவர் பேசிய போன் அழைப்பை பதிவு செய்து காங்கிரஸ் மேலிடத்துக்கு அனுப்பினேன். என்னிடம் நடத்திய பேரம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன்.

    பா.ஜனதாவின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி காங்கிரசை விட்டு விலக மாட்டேன். ஆட்சியை கவிழ்க்க நடக்கும் சதியை வெளிக்கொண்டு வரவே பேரம் பேசிய விவரத்தை வெளியில் தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #CongressMLA #LaxmiHebbalkar
    ×