search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Communist Party"

    • காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி.
    • வயநாடு தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி இன்று கேரளாவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 29-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இருந்தபோதிலும் கேரளாவில் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ள தொகுதி வயநாடு. ஏனென்றால் தற்போது அந்த தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.

    அவருடன் அந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா, பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜா பிரசாரத்தை தொடங்கிவிட்டார்.

    இந்நிலையில், வயநாடு தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி இன்று கேரளாவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இவரை தொடர்ந்து, கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆனி ராஜா வேட்புமனு தாக்கல் செய்தார்.

    தற்போதைய வயநாடு எம்பி ராகுல்காந்திக்கு எதிராக களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தலில் இந்தியா கூட்டணி எப்படி சாதிக்கப் போகிறது என்ற எண்ணம் கூட்டணி கட்சிகளிடமும் இருக்கிறது.
    • காங்கிரசுக்கு அசட்டு நம்பிக்கை இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணி தேர்தல் வரையாவது நீடிக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

    இந்த கூட்டணி உருவாக காரணமாக இருந்தவர் நிதிஷ்குமார். அவரே கூட்டணியை உடைத்து விட்டு பா.ஜனதாவோடு ஐக்கியமாகிவிட்டார்.

    டெல்லி, பஞ்சாப், அரியானாவில் காங்கிரசுக்கு கை கொடுக்க அரவிந்த் கெஜ்ரிவால் மறுத்துவிட்டார்.

    மேற்கு வங்கத்திலும் மம்தா பானர்ஜி தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டார். தேர்தலில் இந்தியா கூட்டணி எப்படி சாதிக்கப் போகிறது என்ற எண்ணம் கூட்டணி கட்சிகளிடமும் இருக்கிறது.

    கேரளாவை பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி நடக்கிறது. இருந்தாலும் அங்கு காங்கிரசும் கம்யூனிஸ்டும் எதிரும், புதிருமாக இருக்கிறது.

    தேர்தல் பிரசாரத்தில் சிக்கல் ஏற்படும் என்பதற்காக ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதை கூட கம்யூனிஸ்டு கட்சி விரும்பவில்லை. மற்ற வடமாநிலங்களிலும் மிக குறைந்த தொகுதிகளிலேயே போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.

    இந்தியாவில் பாரம்பரியமான கட்சி. 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்ட கட்சி. இப்போது சீட்டுக்காக மற்ற கட்சிகளி டம் கையேந்தும் அளவுக்கு 'கை' பலவீனமாக உள்ளது.

    இந்த சூழ்நிலையிலும் காங்கிரசுக்கு அசட்டு நம்பிக்கை இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது தென் மாநில 100 தொகுதிகள் என்ற இலக்கை வைத்து உள்ளது. எந்தெந்த மாநிலங்களில எவ்வளவு தொகுதிகள் கிடைக்கும் என்று மேலிட தலைவர்கள் குத்து மதிப்பாக ஒரு கணக்கை போட்டு உள்ளார்கள்.

    தமிழ்நாடு, புதுவையில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. இதில் 40-க்கு 40 என்று திட்டமிட்டுள்ளார்கள்.

    காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் கூட நூறு சதவீதம் வெற்றி பெறுமா என்று கள ஆய்வு நடத்தியே தி.மு.க. வழங்க உள்ளது. வெற்றி தான் முக்கியம் என்ற எண்ணத்தில் தி.மு.க.வின் வேண்டுகோளை காங்கிரசும் ஏற்றுக்கொண்டு உள்ளது.

    முக்கியமாக அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் தனித்து போட்டியிடுவதில் வாக்குகள் பிரியும். அது தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்குத் தான் சாதகமாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

    கேரள மாநிலத்தை பொறுத்தவரை கம்யூனிஸ்டுக்கும், காங்கிரசுக்கும் தான் போட்டி. ஆனால் இரண்டில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் அது இந்தியா கூட்டணிக்கே லாபம் என்று கருதுகிறார்கள்.

    எனவே மொத்தமுள்ள 20 தொகுதிகளும் தங்கள் கைக்கு வரும் என்று கணித்துள்ளார்கள்.

    கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 27 தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. எனவே அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒரு தொகுதிக்கு ஒரு மந்திரி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

    அதே நேரம் பா.ஜனதாவும் பலமாக இருப்பதால் குறைந்தபட்சம் 15 தொகுதி களாவது வெற்றி பெற முடியும் என்று நம்புகிறார்கள்.

    தெலுங்கானாவில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 17. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஏற்கனவே 3 இடங்களில் வெற்றி பெற்றது.

    எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் 11 தொகுதிகள் குறையாமல் வெல்வோம் திட்டமிட்டுள்ளனர்.

    ஆந்திர மாநிலத்தை பொறுத்தவரையில் மொத்தம் 25 தொகுதிகள் அங்கு வலுவான நிலையில் இருப்பது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்தான். ஆனால் சமீபத்தில் அந்த மாநில முதல்-மந்திரி ஜெகனின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரசில் இணைந்தார். இது காங்கிரசுக்கு ஓரளவு வலு சேர்க்கும் என்று கருதுகிறார்கள்.

    எனவே 15 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கணித்துள்ளார்கள். எனவே 90 முதல் 100 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று கருதுகிறார்கள். இந்த கனவு நிறை வேறுமா? என்பது தேர்தலில்தான் தெரியும்.

    • மின் துறை தலைமை பொறியாளர் சண்முகம் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி னார்.
    • போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி மாநில துணை செயலாளர் சேது செல்வம் தலைமை வகித்தார்.

    புதுச்சேரி:

    காமராஜர் நகர் தொகுதி கவிக்குயில் நகரில் 4-வது குறுக்கு தெரு முதல் 9-வது குறுக்கு வீதி வரை சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    தொடர் மின் தடை

    இந்த பகுதியில் 2000-ம் ஆண்டு முதல் தொடர் மின் தடை, குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் படிக்க முடியவில்லை. மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதானது. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடி க்கையும் எடுக்க வில்லை.

    இதைய டுத்து இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி தலைமையில் மின்துறை தலைமை அலுவல கத்தை முற்றுகை யிட்டு பொது மக்கள் இன்று போராட்டம் நடத்தினர். இதையடுத்து மின் துறை தலைமை பொறியாளர் சண்முகம் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி னார்.

    அப்போது, ஒரு வாரத்தி ற்குள் மின் கம்பிகள் பொ ருத்தி மின் இணைப்புகள் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிட ப்பட்டது. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி மாநில துணை செயலாளர் சேது செல்வம் தலைமை வகித்தார்.

    காமராஜர் நகர் தொகுதி செயலாளர் துரை செல்வம், துணை செயலாளர் தயாளன், பொருளாளர் பிரகாஷ், தட்டாஞ்சாவடி தொகுதி செயலாளர் தென்னரசன், கவிக்குயில் நகர் செல்லப்பெருமாள், வேலழகன், முருகேசன், ரமேஷ், கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 100 பேர் கைது
    • அண்ணாசிலை அருகிலிருந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் ரேஷன்கடைகளை திறந்து மளிகை பொருட்களை குறைந்தவிலையில் வழங்கவேண்டும்.

    மத்திய பா.ஜனதா அரசின் தவறான கொள்கையால் உயர்ந்துள்ள விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதன்படி புதுவை அண்ணாசிலை அருகிலிருந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர்.

    ஊர்வலத்துக்கு நகர கமிட்டி செயலாளர் மதிவாணன், உழவர்கரை நகர செயலாளர் ராம்ஜி தலைமை தாங்கினர். மாநில செயலாளர் ராஜாங்கம், மூத்த தலைவர்கள் சுதா சுந்தரராமன், முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், கொளஞ்சியப்பன், சத்தியா, மாநிலக்குழு உறுப்பினர் சஞ்சய் உட்பட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    ஊர்வலம் பில்லுக்கடை சந்திப்பில் ரெயில்வே பாதையை நோக்கி சென்றது. அங்கு போலீசார் அவர்களை மறித்தனர். இதனால் மார்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஊர்வலத்தில் பங்கேற்ற சிலர் சிகப்பு கொடியுடன் தண்டவாளத்தை நோக்கி ஓடினர்.

    மற்றவர்களை போலீசார் தடுத்து கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். இதனிடையே ஊர்வலத்திலிருந்து போலீசாரை மீறி ஓடி யவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தனர்.

    அப்போது சென்னையிலிருந்து புதுவைக்கு வரும் ரெயில் வந்தது. போலீசார் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் ரெயிலின் வேகம் குறைக்கப்பட்டது. தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர்களை போலீசார் கைது செய்தனர். இதன்பின் ரெயில் சென்றது. ஒட்டுமொத்தமாக 15 பெண்கள் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

    • போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையிலும், தலையிலும் ,காலிலும் காயம் அடைந்த வாறு சிகிச்சை பெற்று கட்டு கட்டிக் கொண்டு ஈடுபட்ட னர்.
    • விளையாட்டு மைதானம், அரசு கலைக் கல்லூரி, உள்விளையாட்டு அரங்கம், பேருந்து நிலையம், பாகூர் ஏரியை சுற்று லாத்தலம் ஆகிய திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற கோரி உள்ளனர்.

    புதுச்சேரி:

    பாகூர் நகர கிளை, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நூதன போராட்டம்  நடைபெற்றது.

    இந்த போராட்டத்திற்கு கிளைச் செயலாளர் முருகை யன் தலைமை தாங்கினார். கல்கி, செல்வராசு முன்னிலை வகுத்தார். மாநில செயற்குழு உறுப்பி னர்கள் பெருமாள், பிரபு ராஜ், கொம்யூன் செயலாளர் சரவணன், கொம்யூன் குழு கவுசிகன், மாநில குழு இளவரசி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    இந்தப் போராட்டத்தில் பாகூர் கொம்யூன் முழு வதும் சாலைகள் சவக்குழியாய் மாறி, சாவின் அச்சத்தில் பயணிக்கும் மக்களை காப்பாற்ற கோரி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையிலும், தலையிலும் ,காலிலும் காயம் அடைந்த வாறு சிகிச்சை பெற்று கட்டு கட்டிக் கொண்டு ஈடுபட்ட னர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    மேலும் இப் போராட் டத்தில் அறிவிப்பின்றி தொடர்ந்து மின்தடை ஏற்படுவதை சரி செய்து தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும். பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தி அதிக படுக்கை கொண்ட நல்ல வழி மையமாக மாற்றி தர வேண்டும். விளையாட்டு மைதானம், அரசு கலைக் கல்லூரி, உள்விளையாட்டு அரங்கம், பேருந்து நிலையம், பாகூர் ஏரியை சுற்று லாத்தலம் ஆகிய திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற கோரி உள்ளனர்.

    • பழுதடைந்த சாலைகளை செப்பனிட கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர்.
    • ரெயில்வே பீடர் சாலையில் பதிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையை அகற்றிவிட்டு காங்கிரட் சாலை அமைத்திட வலியுறுத்தப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் பழுதடைந்த சாலைகளை செப்பனிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தென்காசி நெடுஞ்சாலையில் உள்ள சொக்கர் கோவில் முன்பு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்றவர்கள் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பது போல் நடித்துக் காண்பித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர செயலாளர் மாரியப்பன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ராஜபாளையம் பகுதியில் உள்ள மோசமாக உள்ள அனைத்து சாலைகளையும் செப்பனிட வேண்டும். பஞ்சு மார்க்கெட் முதல் சொக்கர் கோவில் வரை பாதாள சாக்கடை தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்டு சேதமடைந்துள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சீர் அமைத்திட வேண்டும். காந்தி சிலை ரவுண்டானாவில் இருந்து ராஜபாளையம் ரயில் நிலையம் நோக்கிச் செல்லும் ரயில்வே பீட்டர் சாலையில் பதிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையை அகற்றிவிட்டு காங்கிரட் சாலை அமைத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    • அதானி குழும மோசடிகளை விசாரிக்க குழு அமைக்க வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகர ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும், அதானி குழுமத்தில் பல்லாயிரம் கோடி பங்கு சந்தை மோசடிகளை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைத்திட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய துணை செயலாளர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வேலாயுதம், ஜீவா, அஷ்ரப்அலி, மகாலிங்கம், தங்கவேலு, மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர ஒன்றிய செயலாளர் டி.ஆனந்தன் சிறப்புரையாற்றினார்.

    தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க தலித்பாஸ்கர் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்த ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது பட்ஜெட்டை போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், ஏழை, எளியவர்கள், மக்களுக்கு எதிராகவும் அமைந்துள்ளதை கண்டித்தும்.

    தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், சிறு குரு நடுத்தர தொழில் முனைவோர், இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோர் வாழ்க்கை நலனுக்கு எவ்வித உத்தரவாதம் தராத பட்ஜெட்டை கண்டித்தும்.

    கிராமப்புற வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட நிதியைகூட ஒதுக்காமல் குறைக்கப்பட்டதை கண்டித்தும்.

    அதானி குழுமத்தின் பல்லாயிரம் கோடி பங்கு சந்தை மோசடிகளை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டு குழுவை அமைக்க வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • குலசேகரன்பட்டினத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடந்தது.
    • மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு மற்றும் பேரணி நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்து தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் நேரு, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரசல், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், கிசான் சங்க மாவட்ட செயலாளர் புவிராஜ், மாவட்ட செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரவேற்பு குழு தலைவர் ஆறுமுகம் வரவேற்றார்.மாநில துணைத் தலைவர் பூங்கோதை தொடக்க உரையாற்றினார்.

    விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பிரச்சினைகள், ஊதியம் குறித்து கலந்துரையாடல் நடந்தது. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது விவசாய தொழிலாளர்களுக்கு தனித்துறையை உருவாக்க வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தை நகர பகுதி மக்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். 60 வயதை கடந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக விவசாய தொழிலாளர்களின் பேரணி நடந்தது.மாநில துணைசெயலாளர் மனைவிளை பாசி நிறைவு உரையாற்றினார்.வரவேற்புக்குழு செயலாளர் கந்தசாமி நன்றி கூறினார்.

    • அந்தியூர் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
    • இதில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், பர்கூர் மலை பகுதி மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் அந்தியூர் தாலுகா செய லாளர் தேவராஜ், பர்கூர் வட்டார குழு செயலாளர் கணேசன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    அந்தியூர் அருகே உள்ள பர்கூர் கோவில் நத்தம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். மாற்றுத்திறனாளி. அவரது வீட்டிற்கு புகுந்து அவரது உறவினர்கள் செல்வத்தை தாக்கி அவரை கொலை செய்ய முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.

    அதை தடுத்த அவரது மனைவி மாதேவியையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    இதில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், பர்கூர் மலை பகுதி மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அருப்புக்கோட்டையில் இன்று கம்யூனிஸ்டு கட்சியினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    • தரமான சாலை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் குண்டும், குழியுமான சாலைகள் உள்ளன. இதனை சீரமைத்து புதிய சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நகராட்சியின் 16-வது வார்டான திருநகரம் பகுதியில் புதிய சாலை அமைக்க நகராட்சி சார்பில் ரூ. 1 கோடியே 16 லட்சம் செலவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. மேற்கண்ட பகுதியில் ஏற்கனவே உள்ள குண்டும், குழியுமான சாலையை அப்புறப்படுத்தாமல் அதன் மேலேயே புதிய சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் தரமற்ற முறையில் சாலைகள் அமைக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

    இதனை கண்டித்தும், தரமான சாலையை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று திருநகரம் விருதுநகர் சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நகரச் செயலாளர் காத்த முத்து தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் நகராட்சிக்கு எதிராக கோஷமிட்டனர். தகவல் அறிந்த அருப்புக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியபின் மறியல் கைவிடப்பட்டது.

    • மின்சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக வண்ணார்பேட்டையில் இருந்து ஊர்வமாக புறப்பட்டனர்.

    நெல்லை:

    மின்சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை தனியார் நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்.

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று நெல்லை வண்ணார்பேட்டையில் மறியல் போராட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் லெட்சுமணன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சடையப்பன், நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், முத்து–கிருஷ்ணன், இசக்கியம்மாள், சரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக வண்ணார்பேட்டையில் இருந்து ஊர்வமாக புறப்பட்டனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் பெண்கள் உள்பட 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • நிழற்கூடை சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகிறது.
    • பயணிகள் பஸ் நிறுத்தத்தில் மழையிலும், வெயிலிலும், நின்று பஸ் ஏறிச்செல்கின்றனர்.

    மடத்துக்குளம்:

    உடுமலைப்பேட்டை - கொழுமம் சாலையில் உள்ளது எஸ்.பி.புரம்.இங்கு இருந்த பயணிகள் நிழற்கூடை சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அங்கு மீண்டும் பயணிகள் நிழற்கூடை அமைக்கும்படி தொடர்ந்து பலமுறை வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் புதியதாக பயணிகள் கூடை அமைக்கப்படவில்லை. அங்கு நிழற்குடை இல்லாததால் பயணிகள் பஸ் நிறுத்தத்தில் மழையிலும், வெயிலிலும், நின்று பஸ் ஏறிச்செல்கின்றனர்.

    அதனால் எஸ்.வி.புரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்கூடை அமைக்க வேண்டும். அங்கிருந்து பழனிசாலைக்குச் சென்று இணையும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் எம்.மூர்த்தி தலைமை தாங்கினார். தொழிற்சங்க மாவட்ட செயலாளர் எம்.குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 1000 பேரிடம் கையெழுத்து வாங்கி மாவட்ட கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பப்பட உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×